காங். கோபண்ணாவுடன் கராத்தே இல்லை… கத்தி சண்டை போடும் தியாகராஜன்!

karathe thyagarajan2 - 2026

காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜனுக்கும் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான கோபண்ணவுக்கும் இப்போது வாய்த்தகராறு முற்றி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்

முன்னதாக காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் இன்று ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தினார்

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கருத்து கூறியதால் கராத்தே தியாகராஜன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் என்றார்.

கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ..ஶ்ரீ நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன் என்று ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்கு பின், காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கூறினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

மேலும் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா குறித்து கராத்தே தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்

என் மீது கராத்தே தியாகராஜன் கூறிய அவதூறு குற்றச்சாட்டில் உண்மையில்லை; எனது தந்தை கொடுத்த நிலத்தை தவிர எனக்கு எந்த சொத்தும் இல்லை.என்று கூறியுள்ளார் கோபண்ணா.

காங்கிரஸில், கராத்தே தியாகராஜனுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால், அதிமுக – பாஜக தூண்டுதலின் பேரில், காங். – திமுக கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டிய கோபண்ணா, கராத்தே தியாகராஜன், இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவின் அழுத்தம் காரணமல்ல என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரீதியில் விளக்கம் அளித்தார் கோபண்ணா.

மேலும் காங்கிரஸ் சொத்துக்களை கொள்ளை அடித்ததாக என்மீது கராத்தே தியாகராஜன் கூறும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்றும், என் தந்தை என்னிடம் வழங்கிய விவசாய நிலத்தை தவிர, என்னிடம் எந்த சொத்துக்களும் இல்லை என்றும் கைையை விரித்தார் கோபண்ணா.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories