December 6, 2025, 1:02 AM
26 C
Chennai

புழல் சிறையில்… அல்உம்மா பன்னா இஸ்மாயில் – எஸ்.பி. மோதல்! பரபரப்பு!

puzhal prison - 2025
file pic

புழல் சிறையில் பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இருவருக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புழல் சிறையில் கைதிகளாக உள்ள ‘அல் உம்மா’ இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவருக்கும், சிறை அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இசுலாமிய அடிப்படைவாத இயக்கமான அல் உம்மா – அமைப்பைச் சேர்ந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இருவரும் புழல் சிறை – எண் 1ல் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கே சிறைக் கைதிகளுக்கு ஒவ்வொரு வாரமும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும். சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் மனு அளிக்கவில்லையாம்.

ஆனால், அவர்கள் சார்பில் சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், உயர் பாதுகாப்புப் பிரிவுக்கு சிறை காவலர்களுடன் சென்ற கண்காணிப்பாளர் செந்தில்குமார், தன்னிடம் ஏன் மனு கொடுக்கவில்லை என்று கேட்டதாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செந்தில்குமாரை பிலால் மாலிக் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கீழே தள்ளியதாகவும், இதனால் மற்ற காவலர்கள் பிலால் மாலிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories