22-03-2023 6:54 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்மகாத்மா காந்தி சங்கல்ப யாத்திரை: தொடங்கியது பாஜக.,!

    To Read in other Indian Languages…

    மகாத்மா காந்தி சங்கல்ப யாத்திரை: தொடங்கியது பாஜக.,!

    mahatma gandhi pathayathirai - Dhinasari Tamil

    காந்தியடிகளின் கொள்கைகளையும், மத்திய அரசின் திட்டங்களையும், மக்களிடம் எடுத்துச் சொல்ல இன்று முதல் 2020 ஜன.30 வரை பாஜக., சார்பில் ‘காந்தி சங்கல்ப யாத்திரை’ நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையை பல்வேறு இடங்களில் பாஜக., தலைவர்கள் தொடங்கி வைத்தனர். கோவையில் வானதி சீனிவாசன் பங்கேற்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காந்தி சங்கல்ப யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையில் பாஜக., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். ஒவ்வொருவரும் 15 நாட்கள் தங்கள் மக்களவைத் தொகுதியில் நடைபயணம் செல்கின்றனர்.

    இந்தப் பாதயாத்திரையின் போது காந்திஜியின் கொள்கைகள், போதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லப் படும். மேலும், மத்திய, மாநில பாஜக., அரசுகள் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் பலவும், காந்திய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும், ஒவ்வொரு திட்டமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக அமைந்தவை எனவும் அவர்கள் விளக்கவுள்ளனர்.

    amitsha flag off - Dhinasari Tamil

    இன்று காலை பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, இந்த யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் இந்த யாத்திரை பொறுப்பாளராக மாநில பாஜக., துணைத் தலைவர் அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு யாத்திரை தொடங்கியது.

    சென்னையில் இந்த யாத்திரையை பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்திருந்த போது… மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 2 தொடங்கி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியிலும் 150 கிமீ தூரம் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த பிரதமர் திரு நரேந்திர மோதி @NarendraModi அறிவுறுத்தினார்.

    பாரதப் பிரதமரின் அறிவுறுத்தலின் படி அக் 2 காலை 7 மணிக்கு மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளில் தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தென்சென்னை தொகுதி விழிப்புணர்வு பாத யாத்திரையைத் தியாகராய நகரில் தொடங்குகிறேன்.. என்று குறிப்பிட்டிருந்தார்.

    இது போல், கோவையில் பாஜக.,வின் வானதி சீனிவாசன் காந்தி சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார். இது குறித்த வீடியோ பதிவையும் தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் வானதி சீனிவாசன்.

    https://twitter.com/VanathiBJP/status/1179259972875669505

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    17 − 11 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,627FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...