December 6, 2025, 1:50 AM
26 C
Chennai

மகாத்மா காந்தி சங்கல்ப யாத்திரை: தொடங்கியது பாஜக.,!

mahatma gandhi pathayathirai - 2025

காந்தியடிகளின் கொள்கைகளையும், மத்திய அரசின் திட்டங்களையும், மக்களிடம் எடுத்துச் சொல்ல இன்று முதல் 2020 ஜன.30 வரை பாஜக., சார்பில் ‘காந்தி சங்கல்ப யாத்திரை’ நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையை பல்வேறு இடங்களில் பாஜக., தலைவர்கள் தொடங்கி வைத்தனர். கோவையில் வானதி சீனிவாசன் பங்கேற்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.

அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காந்தி சங்கல்ப யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையில் பாஜக., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். ஒவ்வொருவரும் 15 நாட்கள் தங்கள் மக்களவைத் தொகுதியில் நடைபயணம் செல்கின்றனர்.

இந்தப் பாதயாத்திரையின் போது காந்திஜியின் கொள்கைகள், போதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லப் படும். மேலும், மத்திய, மாநில பாஜக., அரசுகள் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் பலவும், காந்திய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும், ஒவ்வொரு திட்டமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக அமைந்தவை எனவும் அவர்கள் விளக்கவுள்ளனர்.

amitsha flag off - 2025

இன்று காலை பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, இந்த யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இந்த யாத்திரை பொறுப்பாளராக மாநில பாஜக., துணைத் தலைவர் அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு யாத்திரை தொடங்கியது.

சென்னையில் இந்த யாத்திரையை பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருந்த போது… மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் அக்டோபர் 2 தொடங்கி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியிலும் 150 கிமீ தூரம் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த பிரதமர் திரு நரேந்திர மோதி @NarendraModi அறிவுறுத்தினார்.

பாரதப் பிரதமரின் அறிவுறுத்தலின் படி அக் 2 காலை 7 மணிக்கு மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளில் தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தென்சென்னை தொகுதி விழிப்புணர்வு பாத யாத்திரையைத் தியாகராய நகரில் தொடங்குகிறேன்.. என்று குறிப்பிட்டிருந்தார்.

இது போல், கோவையில் பாஜக.,வின் வானதி சீனிவாசன் காந்தி சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார். இது குறித்த வீடியோ பதிவையும் தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் வானதி சீனிவாசன்.

https://twitter.com/VanathiBJP/status/1179259972875669505

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories