December 5, 2025, 6:39 PM
26.7 C
Chennai

அரசியலுக்கு அவசியம் வாருங்கள்: ‘லயோலா’ மாணவர்களிடையே கமல் அறைகூவல்!

kamal - 2025

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இளைஞர்கள் அதிக அளவில் சமூக வலை தளங்களை பயன்படுத்துவது குறித்த என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, ;சினிமாவில் டிஜிட்டல் மயம் வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூவிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பலரின் சுய லாபத்துக்காக அது தாமதமாகி வந்தது. இப்படியே பல தொழில்நுட்பங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறிவிட்டது.

அந்தச் சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்துச் சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. நான் பேசுவது அரசியல் என்று பலருக்கு சந்தேகம் வருகிறது. சந்தேகமே அல்ல அது அரசியல்தான். அரசியல் இல்லாமல் அரசு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட எந்த அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடையாது. எதிலும் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல், பன்மைத்துவமாக இருக்க வேண்டும்.

kamal 1 - 2025

‘மாணவர்கள் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கி நிற்க கூடாது கரைவேட்டி அசிங்கம் என்று மாணவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதால்தான் இன்று அரசியலில் கறை படிந்திருக்கிறது” என்றார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு புதிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு, வாரிசு அரசியல் என்பது சரியானது அல்ல.. வாரிசு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பு இருந்தாலும் பின்பு இருந்தாலும் அது தவறுதான். தமிழக அரசியலிலிருந்து குடும்பத்தைப் பிரிக்க முடியாது என்பது உண்மையாக இருந்தால்,

kamal 2 - 2025

என்னுடைய குடும்பத்தை நான் பெரிதுபடுத்திக் கொள்கிறேன் இந்த இளைஞர்களே என்னுடைய குடும்பம். இளைஞர்களே நாளைய தலைவர்கள். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. மொழி என்பது குழந்தைகளின் டயபர் போன்றது. மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். எனவே அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அதனால் தான் உங்களையும் சேர்த்து என் குடும்பத்தை பெரிதாக்கினேன் என்று கூறினார்..

வெறும் கடப்பாரையை வைத்துக்கொண்டு அண்ணாந்து பார்க்கும் கட்சியல்ல நாங்கள். கடப்பாரையை வைத்து உங்களுக்கான பாதையை வகுத்து வருகிறோம். அதில் நீங்கள் நடந்து வரவேண்டியது மட்டுமே பாக்கி

உணவகத்தில் நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை உணவகத்தினர் முடிவு செய்யக் கூடாது. மெனுக்கார்டின் மூலம் அதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். என் மொழியை நீங்கள் முடிவு செய்யாதீர்கள் என்றார், சமூக வலைதளத்தில் நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் உயரத்தில் இருப்பவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் சொன்னால் அது அதிகம் நபரை சென்று சேரும். அந்த உயரத்தில் ஒரு சரியான ஆளைத்தான் நிறுத்தி வைக்க வேண்டும்.தமிழகத்தில் அனைத்துத் திட்டங்களும் கமிஷன் சார்ந்து இயங்குகிறது.

kamal 3 - 2025

படித்த, அறிவுள்ள நபர்களைக் கைகுலுக்கி அழைத்து அருகில் வைத்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு திட்டங்களை இயற்ற வேண்டும். ஆனால், இன்று யாரும் படித்தவர்களைக் கண்டுகொள்வது இல்லை. தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும்.

காதலைக்கூட நாம் `ஐ லவ் யூ’ என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உணர்வு உள்ள வரை தமிழ் வாழும். அதை அசைக்க முடியாது. தமிழர்களின் கர்ஜனை உள்ளவரை தமிழ் எனும் காடு பெருகி வளர்ந்துகொண்டே இருக்கும்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories