December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

ஹிந்து தெய்வங்கள் முன் உறுதி எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி வழக்கு!

hrnce office - 2025

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை பணியில் சேரும் முன் சட்டப்படி உறுதிமொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரிய மனுவில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் அத்துறையின் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன்பு தெய்வத்தின் முன்னிலையில், தாம் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தைத் தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டப் பிரிவின் படி தற்போதுள்ள அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன், அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரி சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி, தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் நவம்பர் 28ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

courtallam hrnce - 2025

இந்து சமய அறநிலையத்துறையில், கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், கிறிப்டோ கிறிஸ்துவர்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, இதற்காக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா ஒரு போராட்டமே நடத்தினார். ஆனால் அவருக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் கோயில்களுக்கு வெளியே வந்து வேலை நிறுத்தம், போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories