ஹிந்து தெய்வங்கள் முன் உறுதி எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி வழக்கு!

hrnce office - 2026

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை பணியில் சேரும் முன் சட்டப்படி உறுதிமொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரிய மனுவில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் அத்துறையின் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன்பு தெய்வத்தின் முன்னிலையில், தாம் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தைத் தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டப் பிரிவின் படி தற்போதுள்ள அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன், அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரி சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி, தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் நவம்பர் 28ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

courtallam hrnce - 2026

இந்து சமய அறநிலையத்துறையில், கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், கிறிப்டோ கிறிஸ்துவர்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, இதற்காக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா ஒரு போராட்டமே நடத்தினார். ஆனால் அவருக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் கோயில்களுக்கு வெளியே வந்து வேலை நிறுத்தம், போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories