December 6, 2025, 7:37 AM
23.8 C
Chennai

பிடிபட்டது ‘அரிசி ராஜா’.. அட.. அதாங்க… அந்த யானை!

arisi raja elephant - 2025

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மொத்தம் எட்டு பேரை மிதித்துக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். வீடுகளை சூறையாடி, ரேசன் அரிசியை விரும்பி உண்டு வந்ததால் அதற்கு அரிசி ராஜா என்ற பெயர் வந்தது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜா இதுவரை 8 பேரை தாக்கிக் கொன்றுள்ளது. 7 பேர் அரிசி ராஜாவிடம் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த யானை ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வந்தது. அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடந்த சனிக்கிழமை கும்கி யானையைக் கொண்டு அரிசி ராஜாவைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கும்கி யானை சலீமுடன் யானையைப் பிடிக்கும் பணியில் இறங்கினர். அர்த்தநாரிப் பாளையம் சுற்று வட்டார வனப்பகுதிக்குள் பல்வேறு திசைகளில் பிரிந்து 3 நாட்கள் இரவு பகலாக காத்திருந்த வனத்துறையினரிடம் பருத்தியூர் வனப்பகுதி அருகே சிக்கிய அரிசி ராஜா மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

அரை மயக்கத்தில் இருந்த அரிசி ராஜா, அதனைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமுடன் வர மறுத்து முரண்டு பிடித்தது. ஆனால், கும்கி யானை கலீம் அதனை விடாமல் முட்டி சமதளத்துக்கு இழுத்து வந்தது. ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அதில் லாரியை இறக்கி, யானை அரிசி ராஜா பெரும் போராட்டத்துக்குப் பின் ஏற்றப்பட்டது.

பிடிபட்ட அரிசி ராஜா யானை, வரகளியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அதை வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே, அரிசி ராஜாவைப் பிடிக்க உதவிய கலீம் என்ற கும்கிக்கு பாராட்டு குவிகிறது. எட்டரை அடி உயரம் கொண்ட கலீமின் எடை 5.5 டன். 1972 ஆம் ஆண்டில் ஏழு வயதாக இருந்த போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிடிபட்ட கலீம், கும்கியாக மாற்றப்பட்டது.

இதுவரை 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் கலீம் ஈடுபட்டுள்ளது. இதில் எந்த ஒரு பணியிலும் கலீம் தோற்றதில்லை என்று வனத்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பதற்றமின்மை, நிதானம், எப்படிப்பட்ட காட்டு யானைகளையும் அடக்கும் வல்லமை, பணியின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பது என மற்ற கும்கிகளை விட கலீமுக்கு சிறப்பு பண்புகள் இருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories