அதிர்ச்சி… மதுரை ஆட்சியரகத்தில் குவிந்த வியாபாரிகள் கூட்டம்! கொரோனா பரவும் அச்சம்!

madurai shopkeepers1
madurai shopkeepers1

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த சிறு வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சத்தில் தவிக்கும் மதுரையில் இப்படி ஒன்றாகக் குவிந்து, எந்தக் காரணத்துக்காக சமூக விலகலைக் கடைப்பிடிக்கச் சொன்னார்களோ அதற்காகவே மீறி மக்கள் குவிந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று காலை சிறு வியாபாரிகள் சூழ்ந்து கொண்டனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மதுரை மாவட்டத்தை கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப் படுத்த போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

madurai shopkeepers
madurai shopkeepers

இதனால், மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த சனிக்கிழமை நாளை முதல் இரு சக்கர வாகனங்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பணை செய்வோர் அணைவரும் அனுமதி அட்டை இருந்தால் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இதை அடுத்து வெள்ளிக்கிழமை இன்று காலை ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு தொழில் செய்வோர் அனுமதி அட்டையை பெற, மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்குக்கு படையெடுத்தனர். இதனால் கூட்டம் மிகுந்து சலசலப்பு அதிகம் ஏற்பட்டது.

இதனால் அட்டை வழங்கும் திட்டம் தள்ளிப்போகுமா எனத் தெரிகிறது. இத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கிராமங்களில் சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள் என பால் வியாபாரி அய்யனார் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும், மதுரை நகரில் பல தெருக்களில் மாஸ்க் அணியாமல் நடமாடும் மக்களையும் .தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் நபர்களையும் கட்டுப்படுத்தினாலே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சமூக ஆர்வலர்கள் பெரும் கவலையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

madurai shopkeepers2
madurai shopkeepers2

முன்னதாக, மதுரையில் 25ம் தேதி, நாளை முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் 25ம் தேதி முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மற்ற வாகனங்களில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும், இது குறித்து தகவல் அறிய 1077, 0452-2547160, 9597176061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

  • செய்தியாளர்: ரவிசந்திரன், மதுரை
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories