கூவத்தூர்ல 122 பேர பிடிச்சி வெச்சிருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைச்சிருக்கு: தினகரன் வாக்குமூலம்!

 

சென்னை:

கூவத்தூர் சொகுசு விடுதியில் அன்று 122 எம்.எல்.ஏ.க்களைப் பிடித்து வைத்திருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைத்திருக்கிறது என்று டிடிவி தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் இன்று திராவிட இயக்கத் தொண்டர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. இன்று காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஈ.வே.ரா., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஈ.வே.ரா., சிலைக்கு மலர் தூவி டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். ஈ.வே.ரா.,வின் 139 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் ஆதரவாளர்களும் சென்று மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அனைத்து அமைச்சர்களும் ரத்த அழுத்தம் அதிகரித்தது போல் கோபப்படுகின்றனர் என்று கூறியவர், கூவத்தூர் விடுதியில் 122 பேரை பிடித்து வைத்ததால் தான் ஆட்சி நிலைத்துள்ளது என்றார். மேலும், அவர்கள், தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போது சுய நினைவு இல்லையா? என்று கேட்டவர், மூன்றாம் தர மேடைப் பேச்சாளர் போல் முதலமைச்சர் பேசியதைக் கேட்டு வேதனைப்படுகிறேன்; முதல்வராக இருப்பவர் மிரட்டும் தொனியில் பேசுவது அழகல்ல என்று கூறினார்.

சசிகலாவை முதல்வராகுமாறு காலில் விழுந்து வலியுறுத்தியவர்தான் திண்டுக்கல் சீனிவாசன் என்று கூறிய தினகரன், ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா காரணம் எனக் கூறியவர்களுக்கு மானமுள்ளதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

எப்படியோ, முதல்வர் என்ற பதவிக்கு ஒருவரை முன்னிறுத்தி, முதல்வராக்கி, அவரை மூன்றாந்தர மேடைப் பேச்சாளர் போல் பேசவும் வைத்து, இன்று அதை நினைத்தே வேதனைப் படும் உயரிய மரியாதைக்கு உரியவராகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார் தினகரன் என்பது மட்டும் அரசியலை உற்று நோக்கும் எவருக்குமே எளிதில் விளங்கிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories