ரஜினியின் இமயமலை பயணத்தை கேலி செய்யும் அமைச்சர் ஜெயக்குமார்

Published:

jayakumar - 2026

ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்த், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தனது வழக்கமான இமய மலைப் பயணத்தை தொடங்கியுள்ளார். வருடந்தோறும் ஆன்மிக பயணமாக இமயமலைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ரஜினி காந்த். தனது அரசியல் பாதையையும் ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினியை குறிவைத்து கேலி செய்யும் விதமாக,  ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img