மாணவி அஸ்வினி உடல் தகனம்; அழகேசன் புழல் சிறையில் அடைப்பு!

aswini - 2026

சென்னை:
ஒருதலைக் காதலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலியை அடுத்து தகனம் செய்யப் பட்டது. அவரைக் கொன்ற அழகேசன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி மோகனா உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மோகன், சங்கரி தம்பதியின் மகள் அஸ்வினி, சென்னை கேகே நகரில் உள்ள கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்த அழகேசன் என்ற இளைஞர் இவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அஸ்வினி இவரின் தொந்தரவு தாங்காமல், மதுரவாயல் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எச்சரிக்கை செய்து அனுப்பினர் போலீஸார். இதனால் ஆத்திரமடைந்த அழகேசன், அஸ்வினியை கொலை செய்யும் நோக்கில் கையில் கத்தியுடன் அஸ்வினி பயிலும் கல்லூரிக்கு வந்தான்.

அஸ்வினி கல்லூரி முடிந்து வி.டி.லோகநாதன் தெருவில் வந்த போது அழகேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தான். இதைக் கண்டு அலறிய கல்லூரி மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அழகேசனை மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடம் இருந்து அழகேசனை மீட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அழகேசனை போலீசார் நேற்று மதியம் 1.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்று சைதாப்பேட்டையில் உள்ள 18வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா கல்லூரி மாணவியை கொலை செய்த அழகேசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்தார். மீண்டும் அவனை 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அழகேசனை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலைப் பெற மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸாருக்கு எதிராகவும், அழகேசன் குடும்பத்துக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘அழகேசனை மக்கள் முன்னிலையில் தூக்கில் போட வேண்டும். இது குற்றம் செய்யும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். அஸ்வினிக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. அழகேசன் குடும்பத்தினர் நேரில் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து, கே.கே.நகர் ஆய்வாளர் பாலமுரளி, கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் பாலன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தர சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், போராட்டத்தைக் கைவிட்டனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

பின்னர் அஸ்வினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அஸ்வினியின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுக் செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட என நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories