பாலுக்கும் தோழன்; பூனைக்கும் காவல்!: பழமொழியை சரியாகச் சொல்லி துரை.முருகன் மறைமுக கிண்டல்!

duraimurugan - 2026

இப்போதெல்லாம் பழமொழிகள்தான் மக்களின் அதிகபட்ச கேலிப்பொருளாக விவாதிக்கப்படுகிறது. இதைத் தொடங்கி வைத்தவர் திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலின்.

தொடர்ச்சியாக பாழமொழிகளை பதம் பார்த்து வரும் அவர், அண்மையில் பூனை மேல் மதிலாக என்றார். அதைக் கேட்டு சிரிப்பதற்கு பதிலாக பலரும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் எடப்பாடி என்பதற்கு பதிலாக, வாழப்பாடி என்றார். அப்போது அருகில் இருந்து செய்தியாளர் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வந்த துரை. முருகன், சற்றே ஷாக் ஆனார். உடனே ஸ்டாலின் பக்கம் திரும்பி முகம் சுளித்தார்.

இதை அடுத்து, சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலின் பழமொழிகள் கேலிப் பொருளாக மாறிப் போனது. பலரும் பழமொழிகளை ஸ்டாலின் ஸ்டைலில் மாற்றிச் சொல்லி கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் என்னால் பழமொழியை சரியாகச் சொல்ல முடியும் என்று ஸ்டாலினுக்குக் காட்டுவது போல், இன்று துரை.முருகன் பழமொழியை சரியாகச் சொல்லி ஒரு பிட் போட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களை போலீஸார் ஆங்காங்கே கைது செய்து விடுவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை.முருகன்,  காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதலமைச்சர் என்று  குறிப்பிட்டார்.

நல்லவேளை பழமொழியை சரியாச் சொல்லி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி என்று ஒரு பெருமூச்சு விட்டிருப்பார் துரை.முருகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories