January 26, 2025, 6:11 PM
26.6 C
Chennai

தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

சென்னை : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய வைரவிழாக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைரவிழா கட்டிடம், செவிலியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட நான்கு புதிய கட்டிடங்களை பிரதமர் திறந்துவைத்தார். அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து தமிழர்களுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறித் தனது பேச்சைத் தொடங்கிய மோடி, தேசிய சுகாதாரத் திட்டத்தில் நோய்களை வரும் முன் காக்கும் பணி நடந்து வருகிறது என்றும், 10 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் அளவுக்கு தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு அருகிலேயே நோய் தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் கொள்கை. 14 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

டாக்டர் சாந்தா விடுத்த கோரிக்கைகளை பரிந்துரை செய்யும்படி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அரசின் நிதியுதவில் செயல்படும் உலகின் பெரிய காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட உள்ளது. நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெருமை கொள்ளும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறிய மோடி, 15ஆவது நிதி ஆணையத்தின் மூலம்,மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படும் என அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவ மையங்கள் மூலம், கடந்த 6 வருடங்களில், ஒரு கோடியே 71 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும், 2 கோடியே 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் நடைபெற்றிருப்பதாக கூறினார்.

விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று