December 5, 2025, 3:19 PM
27.9 C
Chennai

நான் தயார்; ஸ்டாலின் தயாரா?: தமிழிசை கிளப்பினார் ‘பட்டியல்’ அரசியல்!

tamilisai 2 - 2025

மதுரை: தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார். திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் விடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக.,வினர் கருப்புக்கொடி காட்டியது தவறு மட்டுமல்ல கண்டனத்துக்கு உரியதும்கூட!

நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தங்கள் தவறை மறைக்கவே திமுக கருப்புக்கொடி காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார்; ஸ்டாலின் தயாரா? என கேட்டார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டன. இதனால் பரபரப்பு நிலவியது.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, இது மத்திய அரசால் தன்னிச்சையாக எடுக்கக் கூடிய முடிவு அல்ல, மாநில அரசுகளுடனும் ஆலோசித்து ஒருமித்த கருத்துடன் எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியிருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன் அலட்சியமாகப் பேசினார் என்று செய்தி ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது.

இதை அடுத்து, பரமக்குடி அருகே கள்ளிக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தின் திமுக.,வினர் ஈடுபட்டனர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி பெற்று, செருப்பு வீச்சு கல்வீச்சு என வன்முறையிலும் இறங்கினர் திமுக.,வினர்.

திமுக.,வினரின் இத்தகைய நடவடிக்கை குறித்து இதுவரை திமுக., தரப்பில் கண்டனமோ, தங்கள் கட்சிக் காரர்கள் செய்த தவறு குறித்து கண்டிப்போ திமுக., தலைமையிடம் இருந்து வரவில்லை. எனவே, திமுக., தலைமையின் தூண்டுதலின் பேரிலேயே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளில் திமுக., குண்டர்களை ஏவி விட்டிருக்கிறது என்று பரவலாகப் பேசப் படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories