நான் தயார்; ஸ்டாலின் தயாரா?: தமிழிசை கிளப்பினார் ‘பட்டியல்’ அரசியல்!

tamilisai 2 - 2026

மதுரை: தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார். திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் விடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக.,வினர் கருப்புக்கொடி காட்டியது தவறு மட்டுமல்ல கண்டனத்துக்கு உரியதும்கூட!

நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தங்கள் தவறை மறைக்கவே திமுக கருப்புக்கொடி காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார்; ஸ்டாலின் தயாரா? என கேட்டார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டன. இதனால் பரபரப்பு நிலவியது.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, இது மத்திய அரசால் தன்னிச்சையாக எடுக்கக் கூடிய முடிவு அல்ல, மாநில அரசுகளுடனும் ஆலோசித்து ஒருமித்த கருத்துடன் எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியிருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன் அலட்சியமாகப் பேசினார் என்று செய்தி ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது.

இதை அடுத்து, பரமக்குடி அருகே கள்ளிக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தின் திமுக.,வினர் ஈடுபட்டனர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி பெற்று, செருப்பு வீச்சு கல்வீச்சு என வன்முறையிலும் இறங்கினர் திமுக.,வினர்.

திமுக.,வினரின் இத்தகைய நடவடிக்கை குறித்து இதுவரை திமுக., தரப்பில் கண்டனமோ, தங்கள் கட்சிக் காரர்கள் செய்த தவறு குறித்து கண்டிப்போ திமுக., தலைமையிடம் இருந்து வரவில்லை. எனவே, திமுக., தலைமையின் தூண்டுதலின் பேரிலேயே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளில் திமுக., குண்டர்களை ஏவி விட்டிருக்கிறது என்று பரவலாகப் பேசப் படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories