January 19, 2025, 8:53 AM
23.5 C
Chennai

இறக்குமதி மணலை யாரும் விற்கக் கூடாது! பொதுப்பணித் துறைக்கே உரிமை உண்டு! அரசாணை வெளியீடு!

இறக்குமதி மணலை விற்பனை செய்யும் உரிமை பொதுப்பணித் துறைக்கே உண்டு என்று புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

இறக்குமதி மணல் விவகாரத்தில் விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சிறு கனிமச் சலுகை விதிகளைத் திருத்தி வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுப்பணித் துறை தவிர வேறு யாருக்கும் பிற நாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க உரிமை இல்லை. மணல் விற்பனை உரிமை மாநில அரசின் பொதுப்பணித்துறையிடமே இருக்கும். பொதுப்பணித் துறையின் குறிப்பீடுகளை நிறைவு செய்யாத மணலைத் தமிழகத்தில் இருந்து கடல்வழியாகவே அப்புறப்படுத்த வேண்டும்.

எவரும் இறக்குமதி மணலை அவருடைய சொந்தப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது, அல்லது வேறு மாநிலத்தில் விற்கக் கூடாது. இறக்குமதி மணலை இருப்பு வைக்கும் உரிமை பொதுப்பணித்துறையிடமே இருக்கும்.

ALSO READ:  பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

இறக்குமதி மணல் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். யார் மணலை இறக்குமதி செய்தாலும் அதைப் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

பொதுப் பணித் துறையின் அனுமதியின்றி இறக்குமதி மணலை துறைமுகத்தில் இருந்து கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது. இந்த விதிகளை மீறுவோருக்கு இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

– என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.