December 6, 2025, 6:33 AM
23.8 C
Chennai

குடற்புழு நோய் தாக்கி பெண் யானை உயிரிழப்பு!

yani death - 2025

பர்கூா் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கி பெண் யானை பாிதாபமாக இறந்தது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் வனச்சரகர் பழனிச்சாமி வன ஊழியர் களுடன் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் மணியாட்சி பள்ளம் என்ற இடம் அருகே சென்றபோது அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசியது.

நாற்றம் வந்த திசை அருகே வனத்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு யானை செத்துக்கிடப்பது தெரிந்ய வந்தது. .இதனையடுத்து இது குறித்த தகவல்களை உடனே மாவட்ட வன அதிகாரிக்கும், சத்தி புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகனுக்கும் தெரிவித்தனா்.

அதன் பேரில் டாக்டர் அசோகன் அங்கு சென்று, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பிறகு அவர் கூறும்போது, ‘இறந்தது 20 வயதுடைய பெண் யானையாகும். இந்த யானையை குடற்புழு நோய் தாக்கியுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக தீவனம், தண்ணீர் குடிக்க முடியாமல் யானை அவதிப்பட்டு இருக்கலாம். இந்தநிலையில் நோய் முற்றி மயங்கிவிழுந்து இறந்துள்ளது‘ என்றார்.

இதைத்தொடர்ந்து யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

யானைகள் தண்ணீர் குடிக்கும் நீர்நிலைகள் மற்றும் இயற்கை–செயற்கை வனக்குட்டைகளில் உப்பு கரைசலை போட்டுவைத்தால், அந்த தண்ணீரை குடிக்கும் யானைகளை குடற்புழு நோய் தாக்காது

எனவே வனத்துறையினர் உடனே யானைகள் நடமாடும் இடங்களில் உப்பு கரைசல்களை போட்டு வைக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories