அம்பை வனப் பகுதியில் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

IMG 20190513 154131 - 2026நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டன்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட சிங்கம்பட்டி 3 ஆவது பீட் பகுதியில் வன ஊழியர்கள் கடந்த 10 -ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுத்தை இறந்து பல நாள்களாகி உருக்குலைந்த நிலையில் கிடந்தது.

இதையடுத்து, புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் ஓம் காரம் கொம்மு அறிவுறுத்தலின்பேரில், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், வனவர் முருகேசன் மற்றும் கிராம வனக் குழுத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் வனத் துறை கால்நடை மருத்துவர் சுகுமாரன் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் வன கால்நடை மருத்துவர், வனச்சரக அலுவலர், வனவர், வனப்பணியாளர்கள், கிராம வனக் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் எரியூட்டப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் முண்டன்துறை வனப் பகுதியில் ஒரு யானை, இரண்டு சிறுத்தைகள் மர்மமான வகையில் உயிரிழந்துள்ளன. வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகளுக்கு உணவு, நீர் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், வனப் பகுதியில் நிலவும் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமலும் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories