குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!

murder - 2026

குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!

திருமணமான 5 மாதத்தில் குழந்தை வேண்டாம் என கூறி மகளிடம் தகராறு செய்த மருமகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தலைச்சங்காட்டை சேர்ந்த ராஜாராமன் மகன் சதீஷ்குமார்(30). இவர் அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை(25) காதலித்து வந்தார். சதீஷ்குமார் 10ம் வகுப்பு வரை படித்தவர். ஆனால் கலைமதி எம்எஸ்சி, எம்பில் முடித்துவிட்டு தில்லையாடி பகுதி தனியார் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார்.

இவர்களது காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். திருமணத்துக்கு முன்பே சதீஷ்குமார், கலைமதி வேலைக்கு போகக்கூடாது என கட்டளையிட்டதுடன் அந்த பள்ளிக்கே சென்று தகராறு செய்துள்ளார்.

இதனால் சதீஷ்குமார் குடும்பத்தினர் திருமணம் நடத்தும் நாட்களை தள்ளி போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கலைமதி வீட்டார் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தலைச்சங்காட்டில் உள்ள சதீஷ்குமார் வீட்டில் வசித்து வந்தனர்.

மழை வி்ட்டும் துாறல் விடவில்லை என்பதை போல திருமணம் முடிந்தாலும் தகராறு முடியவில்லை என்ற நிலையில் திருமணம் ஆனதிலிருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்போது குழந்தை வேண்டாம் என சதீஷ்குமார் தகராறு செய்துள்ளார். இவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இதில் விரக்தியடைந்த கலைமதி 20 நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்

. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இருகுடும்பத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு திருமணமாகி 5 மாதமே ஆனதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் கலைமதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் சதீஷ்குமார் தனது தாய்மாமன் பன்னீரை பார்ப்பதற்கு அப்பராசபுத்தூருக்கு வந்தார்.

அப்போது வழியில் மாமனார் நாகராஜை பார்த்த சதீஷ்குமார் மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், தன்னிடம் இருந்த கத்தியால் சதீஷ்குமாரின் தொடைப்பகுதியில் ஓங்கி குத்தினார். மேலும், அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொறையார் போலீசார் கொலை வழக்குப் பதிவுசெய்து நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories