குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!

murder - 2026

குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!

திருமணமான 5 மாதத்தில் குழந்தை வேண்டாம் என கூறி மகளிடம் தகராறு செய்த மருமகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தலைச்சங்காட்டை சேர்ந்த ராஜாராமன் மகன் சதீஷ்குமார்(30). இவர் அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை(25) காதலித்து வந்தார். சதீஷ்குமார் 10ம் வகுப்பு வரை படித்தவர். ஆனால் கலைமதி எம்எஸ்சி, எம்பில் முடித்துவிட்டு தில்லையாடி பகுதி தனியார் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார்.

இவர்களது காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். திருமணத்துக்கு முன்பே சதீஷ்குமார், கலைமதி வேலைக்கு போகக்கூடாது என கட்டளையிட்டதுடன் அந்த பள்ளிக்கே சென்று தகராறு செய்துள்ளார்.

இதனால் சதீஷ்குமார் குடும்பத்தினர் திருமணம் நடத்தும் நாட்களை தள்ளி போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கலைமதி வீட்டார் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தலைச்சங்காட்டில் உள்ள சதீஷ்குமார் வீட்டில் வசித்து வந்தனர்.

மழை வி்ட்டும் துாறல் விடவில்லை என்பதை போல திருமணம் முடிந்தாலும் தகராறு முடியவில்லை என்ற நிலையில் திருமணம் ஆனதிலிருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்போது குழந்தை வேண்டாம் என சதீஷ்குமார் தகராறு செய்துள்ளார். இவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இதில் விரக்தியடைந்த கலைமதி 20 நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்

. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இருகுடும்பத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு திருமணமாகி 5 மாதமே ஆனதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் கலைமதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் சதீஷ்குமார் தனது தாய்மாமன் பன்னீரை பார்ப்பதற்கு அப்பராசபுத்தூருக்கு வந்தார்.

அப்போது வழியில் மாமனார் நாகராஜை பார்த்த சதீஷ்குமார் மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், தன்னிடம் இருந்த கத்தியால் சதீஷ்குமாரின் தொடைப்பகுதியில் ஓங்கி குத்தினார். மேலும், அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொறையார் போலீசார் கொலை வழக்குப் பதிவுசெய்து நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories