December 6, 2025, 3:17 PM
29.4 C
Chennai

குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!

murder - 2025

குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!

திருமணமான 5 மாதத்தில் குழந்தை வேண்டாம் என கூறி மகளிடம் தகராறு செய்த மருமகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தலைச்சங்காட்டை சேர்ந்த ராஜாராமன் மகன் சதீஷ்குமார்(30). இவர் அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை(25) காதலித்து வந்தார். சதீஷ்குமார் 10ம் வகுப்பு வரை படித்தவர். ஆனால் கலைமதி எம்எஸ்சி, எம்பில் முடித்துவிட்டு தில்லையாடி பகுதி தனியார் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார்.

இவர்களது காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். திருமணத்துக்கு முன்பே சதீஷ்குமார், கலைமதி வேலைக்கு போகக்கூடாது என கட்டளையிட்டதுடன் அந்த பள்ளிக்கே சென்று தகராறு செய்துள்ளார்.

இதனால் சதீஷ்குமார் குடும்பத்தினர் திருமணம் நடத்தும் நாட்களை தள்ளி போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கலைமதி வீட்டார் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தலைச்சங்காட்டில் உள்ள சதீஷ்குமார் வீட்டில் வசித்து வந்தனர்.

மழை வி்ட்டும் துாறல் விடவில்லை என்பதை போல திருமணம் முடிந்தாலும் தகராறு முடியவில்லை என்ற நிலையில் திருமணம் ஆனதிலிருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தற்போது குழந்தை வேண்டாம் என சதீஷ்குமார் தகராறு செய்துள்ளார். இவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இதில் விரக்தியடைந்த கலைமதி 20 நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்

. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இருகுடும்பத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு திருமணமாகி 5 மாதமே ஆனதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் கலைமதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் சதீஷ்குமார் தனது தாய்மாமன் பன்னீரை பார்ப்பதற்கு அப்பராசபுத்தூருக்கு வந்தார்.

அப்போது வழியில் மாமனார் நாகராஜை பார்த்த சதீஷ்குமார் மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், தன்னிடம் இருந்த கத்தியால் சதீஷ்குமாரின் தொடைப்பகுதியில் ஓங்கி குத்தினார். மேலும், அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொறையார் போலீசார் கொலை வழக்குப் பதிவுசெய்து நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories