வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை…!

theruttu - 2026ஜோலார்பேட்டை அருகே வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் பகுதியைச் சேர்ந்த முதியவர் கண்ணன். யசோதா தம்பதியினா்.

இவர்களின் பிள்ளைகள் வேலைநிமித்தமாக வெளியுா்களில் இருந்து வருவதால் வீட்டில் இவா்கள் இருவா் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். வயதான தம்பதியினா் தனியாக இருப்பதை நோட்டமிட்ட திருடா்கள் சம்பவத்தன்று

இளம்பெண்ணும் ஒரு ஆணும் தம்பதியனா் போல கண்ணனின் வீட்டுக்கு வந்தனா். இருவரும் கண்ணனின் உறவினா்கள் போல பேசி உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தனா்.

மேலும் அவா்கள் கண்ணனுக்கு பழம், பிஸ்கட் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனா். இருவரையும் நம்பிய யசோதா நான் குளிக்க செல்கிறேன் எனக் கூறிவிட்டு குளியலறைக்கு சென்று விட்டார்.

இதற்காக காத்திருந்த ஜோடிகள் இருவரும் பீரோவில் முதியவர் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும், அவருடைய மருமகளுக்கு சொந்தமான 10 சவரன் தங்க நகையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதனிடையே குளித்து விட்டு வெளியே வந்த யசோதா பீரோ திறந்திருப்பதையும் அதில் வைத்திருந்த ரொக்க பணமும், நகையும் காணதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து இது குறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆனால் புகார் கொடுத்து ஒரு மாதங்கள் ஆனநிலையில்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என குற்றம் சாட்டினார்.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது திருட்டு இது எனவும், போலீஸாரின் மெத்தனப் போக்கே இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. ஆகவே இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories