வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை…!

theruttu - 2026ஜோலார்பேட்டை அருகே வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் பகுதியைச் சேர்ந்த முதியவர் கண்ணன். யசோதா தம்பதியினா்.

இவர்களின் பிள்ளைகள் வேலைநிமித்தமாக வெளியுா்களில் இருந்து வருவதால் வீட்டில் இவா்கள் இருவா் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். வயதான தம்பதியினா் தனியாக இருப்பதை நோட்டமிட்ட திருடா்கள் சம்பவத்தன்று

இளம்பெண்ணும் ஒரு ஆணும் தம்பதியனா் போல கண்ணனின் வீட்டுக்கு வந்தனா். இருவரும் கண்ணனின் உறவினா்கள் போல பேசி உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தனா்.

மேலும் அவா்கள் கண்ணனுக்கு பழம், பிஸ்கட் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனா். இருவரையும் நம்பிய யசோதா நான் குளிக்க செல்கிறேன் எனக் கூறிவிட்டு குளியலறைக்கு சென்று விட்டார்.

இதற்காக காத்திருந்த ஜோடிகள் இருவரும் பீரோவில் முதியவர் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும், அவருடைய மருமகளுக்கு சொந்தமான 10 சவரன் தங்க நகையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதனிடையே குளித்து விட்டு வெளியே வந்த யசோதா பீரோ திறந்திருப்பதையும் அதில் வைத்திருந்த ரொக்க பணமும், நகையும் காணதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து இது குறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆனால் புகார் கொடுத்து ஒரு மாதங்கள் ஆனநிலையில்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என குற்றம் சாட்டினார்.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது திருட்டு இது எனவும், போலீஸாரின் மெத்தனப் போக்கே இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. ஆகவே இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories