December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 42 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி; ஒருவர் கைது….!

kithau - 2025வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 42 பேர்களிடம் ரூ.51 லட்சத்தை சுருட்டிய வேலை வாய்ப்பு நிறுவன அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூரை சேர்ந்தவர் பெரியண்ணபாபு (வயது 31). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

பட்டப்படிப்பு படித்துள்ள நான் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கு முயற்சித்து வந்தேன்.

வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த அருள் (38) என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் சாய்பாபா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை அருள் நடத்தி வந்தார்.

தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்துடன் எனக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக ரூ.4.70 லட்சம் பணம் என்னிடம் வாங்கினார். நான் உள்பட 11 பேர் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.

தாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிறகு தான் சுற்றுலா விசாவில் நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

நாங்கள் ஏமாற்றப்பட்டோம். சுற்றுலா விசா முடியும்வரை தாய்லாந்து நாட்டில் கூலி வேலைசெய்தோம்.

நாங்கள் அங்கிருந்தபடியே அருளிடம் தொடர்புகொண்டோம். தாய்லாந்து நாட்டில் இருந்து மெக்காவிற்கு எங்களை வேலைக்கு அனுப்புவதாக அருள் கூறினார்.

அதையும் அவர் செய்யவில்லை.

நாங்கள் கடும் போராட்டம் நடத்தி தமிழகம் வந்து சேர்ந்தோம்.

அருள் ஒரு மோசடி பேர்வழி. வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 42 பேர்களிடம் ரூ.51 லட்சம் வரை சுருட்டி மோசடி செய்துள்ளார்.

தற்போது மேற்கு மாம்பலத்தில் செயல்பட்ட தனது வேலைவாய்ப்பு நிறுவனத்தை மூடிவிட்டு அருள் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

பி.எஸ்சி. பட்டதாரியான அருள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருந்து வரும் இளைஞா்கள் இப்படிப்பட்ட மோசடி பேர்வழிகளிடம் சிக்கி ஏமாறுவது தொடா் கதையாகவே இருந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories