December 6, 2025, 6:03 PM
26.8 C
Chennai

நெல்லை மாவட்டத்தில் மாடு மேய்க்க சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரழப்பு….!

MENNAL 1 - 2025திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர இடி, மின்னல், சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியை அடுத்த நடுமலையடிபட்டியைச் சேர்ந்தவர் சமுத்திரகனி (வயது 65) விவசாயி. இவருடைய மனைவி மூக்கம்மாள் (60).

இவர் நேற்று தனது தோட்டத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது மாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததால் உடனே மூக்கம்மாள் அங்குள்ள தென்னை மரத்தின் அடியில் மழைக்காக ஒதுங்கி நின்றார்.

அப்போது அந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

மேலும் தென்னை மரத்தின் அடியில் நின்ற மூக்கம்மாளின் மீதும் மின்னல் தாக்கியது.

இதில் மூக்கம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலையில் நீண்ட நேரமாகியும் மூக்கம்மாள் தனது வீட்டுக்கு திரும்பி வராததால், சமுத்திரகனி மற்றும் உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.

அப்போது மூக்கம்மாள் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திரை கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மின்னல் தாக்கி பலியான மூக்கம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னல் தாக்கி பலியான மூக்கம்மாளுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதேபோல் கலிங்கப்பட்டி, அடைக்கலாபுரம், ரெங்கசமுத்திரம், ஒத்தக்கடை, மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு கடையில் மேற்கூரை சூறைக்காற்றில் பறந்தது. மலையடிப்பட்டி காலனியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவற்றை மின்ஊழியர்கள் சரிசெய்தனர்.

மாடு மேய்க்க சென்ற மூக்கம்மாள் மின்னல் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories