நெல்லை மாவட்டத்தில் மாடு மேய்க்க சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரழப்பு….!

MENNAL 1 - 2026திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர இடி, மின்னல், சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியை அடுத்த நடுமலையடிபட்டியைச் சேர்ந்தவர் சமுத்திரகனி (வயது 65) விவசாயி. இவருடைய மனைவி மூக்கம்மாள் (60).

இவர் நேற்று தனது தோட்டத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது மாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததால் உடனே மூக்கம்மாள் அங்குள்ள தென்னை மரத்தின் அடியில் மழைக்காக ஒதுங்கி நின்றார்.

அப்போது அந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

மேலும் தென்னை மரத்தின் அடியில் நின்ற மூக்கம்மாளின் மீதும் மின்னல் தாக்கியது.

இதில் மூக்கம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலையில் நீண்ட நேரமாகியும் மூக்கம்மாள் தனது வீட்டுக்கு திரும்பி வராததால், சமுத்திரகனி மற்றும் உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

அப்போது மூக்கம்மாள் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திரை கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மின்னல் தாக்கி பலியான மூக்கம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னல் தாக்கி பலியான மூக்கம்மாளுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதேபோல் கலிங்கப்பட்டி, அடைக்கலாபுரம், ரெங்கசமுத்திரம், ஒத்தக்கடை, மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு கடையில் மேற்கூரை சூறைக்காற்றில் பறந்தது. மலையடிப்பட்டி காலனியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவற்றை மின்ஊழியர்கள் சரிசெய்தனர்.

மாடு மேய்க்க சென்ற மூக்கம்மாள் மின்னல் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories