மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு தோட்ட உரிமையாளர் கைது.

elephant died2 - 2026

கடையநல்லூரில் மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு தோட்ட உரிமையார் கைது செய்யப் பட்டார். கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது! இந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேலகடையநல்லூர் அருகே உள்ள முந்தல்காடு அங்கே உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த மாதோப்புக்குள் நேற்று இரவு ஒரு வயதுடைய குட்டி யானை ஒன்று புகுந்தது! அப்போது சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது!

subbaiya arrest - 2026கடந்த ஒரு மாதமாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, கடைய நல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், தென்னை, வாழை, பலா,மா உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து வந்தது!

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடும் வறட்சி ஏற்பட்டு அடவி நயினார், கருப்பா நதி உள்ளிட்ட அணைகள் முற்றிலும் வறண்டன. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் நீர் தேடி வன விலங்கான யானை விளை நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

இந்நிலையில் முந்தல் காட்டில் நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கு புகுந்த காட்டு யானைக் கூட்டம் மா மரங்களில் உள்ள மாங்காய்களை பிடுங்கி தின்று விட்டு வாய்காலில் சென்ற தண்ணீரை குடிக்கச் சென்றபோது அந்த வழியாக சென்ற சோலார் கம்பியின் மின்சாரம் குட்டி யானையின் மீது பாய்ந்தது! இதில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டியானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தலைமை வனக்காப்பாளர் சிங்கர்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் திருமால் ஆலோசனையின் பேரில் கடையநல்லூர் வனச்சரகர் செந்தில் குமார் , தலைமையில் வனவர் சரவணன், மேக்கரை வனவர் அருமைக்கொடி மற்றும் வன காவலர்கள் சசிக்குமார், ஆறுமுகம், ராமச்சந்திரன், பால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் யானை இறந்து கிடந்த தோட்ட உரிமையாளர் குத்துக்கல் வலசை நேருஜி தெருவை சேர்ந்த சுப்பையா (55) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் சூரிய மின் வேலியில் மின் கம்பத்திலிருந்து சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்துள்ளது தெரியவந்தது!

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories