மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு தோட்ட உரிமையாளர் கைது.

elephant died2 - 2026

கடையநல்லூரில் மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு தோட்ட உரிமையார் கைது செய்யப் பட்டார். கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது! இந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேலகடையநல்லூர் அருகே உள்ள முந்தல்காடு அங்கே உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த மாதோப்புக்குள் நேற்று இரவு ஒரு வயதுடைய குட்டி யானை ஒன்று புகுந்தது! அப்போது சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது!

subbaiya arrest - 2026கடந்த ஒரு மாதமாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, கடைய நல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், தென்னை, வாழை, பலா,மா உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்து வந்தது!

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடும் வறட்சி ஏற்பட்டு அடவி நயினார், கருப்பா நதி உள்ளிட்ட அணைகள் முற்றிலும் வறண்டன. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் நீர் தேடி வன விலங்கான யானை விளை நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது

இந்நிலையில் முந்தல் காட்டில் நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கு புகுந்த காட்டு யானைக் கூட்டம் மா மரங்களில் உள்ள மாங்காய்களை பிடுங்கி தின்று விட்டு வாய்காலில் சென்ற தண்ணீரை குடிக்கச் சென்றபோது அந்த வழியாக சென்ற சோலார் கம்பியின் மின்சாரம் குட்டி யானையின் மீது பாய்ந்தது! இதில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டியானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தலைமை வனக்காப்பாளர் சிங்கர்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் திருமால் ஆலோசனையின் பேரில் கடையநல்லூர் வனச்சரகர் செந்தில் குமார் , தலைமையில் வனவர் சரவணன், மேக்கரை வனவர் அருமைக்கொடி மற்றும் வன காவலர்கள் சசிக்குமார், ஆறுமுகம், ராமச்சந்திரன், பால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் யானை இறந்து கிடந்த தோட்ட உரிமையாளர் குத்துக்கல் வலசை நேருஜி தெருவை சேர்ந்த சுப்பையா (55) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் சூரிய மின் வேலியில் மின் கம்பத்திலிருந்து சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்துள்ளது தெரியவந்தது!

இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories