ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கடத்திக் கொலை; 4 பேருக்கு இரட்டை ஆயுள்!

thiruvannamalai court - 2026

போளூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கட்டிபூண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 65), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

இவருக்கு அந்த பகுதியில் சுமார் 4½ ஏக்கர் நிலம் உள்ளது. இவரது நிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காசி என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். காசி போலி பத்திரம் தயார் செய்து ராஜகோபாலின் நிலத்தை அவரது பெயரில் எழுதி உள்ளார்.

இதையறிந்த ராஜகோபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ராஜகோபாலின் கையெழுத்து தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ராஜகோபால் நீதிமன்றத்திற்கு வராமல் தடுக்க அவரை கடத்த காசி திட்டமிட்டார்.

இதையடுத்து காசி, அவரது மகன் பாலமுருகன், ரெண்டேரிபட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஏழுமலை, மாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி சீனு என்ற சீனுவாசன் ஆகியோருடன் இணைந்து ராஜகோபாலை கடத்தி சென்று கொலை செய்தனர்.

அப்போது அதை அறியாத ராஜகோபாலின் குடும்பத்தினர் போளூர் போலீஸ் நிலையத்தில் ராஜகோபாலை காணவில்லை என்று புகார் செய்தனர். போலீசாரின் விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டதால் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டி மனு அளித்தனர்.

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் செஞ்சி அருகில் மைலத்தை அடுத்த கூட்ரோடு பாலத்தின் அடியில் ராஜகோபால், காசியின் தரப்பினரால் கடத்தி சென்று கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜகோபாலின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார்.

அதில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக காசி, அவரது மகன் பாலமுருகன், ஏழுமலை, சீனு என்ற சீனுவாசன் ஆகிய 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், பாலமுருகனுக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.16 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • செய்தி: திருவண்ணாமலை பாலா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories