மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

Published:

சென்னை:

மது ஒழிப்புக்காக “டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன் திரைப் படத்துக்காக தமக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

“மூடு டாஸ்மாக்கை..!” என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்து வரும் ம.க.இ.க., வின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதில், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு” எனும் பாடலை வெளியிட்டு, திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், இந்தக் குழுவைச் சேர்ந்த கோவனை, திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது..

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அருண்மொழி.

அவரின் இந்த அறிவிப்பு, கோவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக கலைஞர்களிடமிருந்து கிளம்பி உள்ள முதல் எதிர்ப்பு என்று கருதப் படுகிறது. அவரின் இந்த அறிவிப்புக்கு சில எழுத்தாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவன் கைதுக்கு எதிரான போராட்டத்திற்கு இது ஒரு முன்னெடுப்பு என்று பலர் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img