மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

சென்னை:

மது ஒழிப்புக்காக “டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன் திரைப் படத்துக்காக தமக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

“மூடு டாஸ்மாக்கை..!” என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்து வரும் ம.க.இ.க., வின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதில், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு” எனும் பாடலை வெளியிட்டு, திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், இந்தக் குழுவைச் சேர்ந்த கோவனை, திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது..

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அருண்மொழி.

அவரின் இந்த அறிவிப்பு, கோவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக கலைஞர்களிடமிருந்து கிளம்பி உள்ள முதல் எதிர்ப்பு என்று கருதப் படுகிறது. அவரின் இந்த அறிவிப்புக்கு சில எழுத்தாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவன் கைதுக்கு எதிரான போராட்டத்திற்கு இது ஒரு முன்னெடுப்பு என்று பலர் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories