சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

crime

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைப்பு. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா திவ்யா ஆகிய இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும் கார்த்திக் ஆனந்த் ஆகிய இருவர் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பதற்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஷோ நீதிமன்றத்திற்கு கார்த்திக் ,ஆனந்த் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையில் அழைத்து வந்தனர். திவ்யா ,சித்ரா ஆகிய இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திவ்யா ஆனந்த் கார்த்திக் ஆகிய மூவரின் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்துள்ள நிலையில் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் திவ்யா கார்த்திக் ஆக இருவரிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்வதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சித்ராவின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி!

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் ஜெயசுதா திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் சீதாலட்சுமி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (35).
இவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரை நிறுவன மேற்பார்வையாளர் ஜெயசுதா அடிக்கடி திட்டுவாராம். இதனால் அவர் மனமுடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். காலை பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே கொண்டு வந்த சாணி பவுடரை மருத்துவமனையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories