December 6, 2025, 11:09 AM
26.8 C
Chennai

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

crime

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைப்பு. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா திவ்யா ஆகிய இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும் கார்த்திக் ஆனந்த் ஆகிய இருவர் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பதற்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஷோ நீதிமன்றத்திற்கு கார்த்திக் ,ஆனந்த் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையில் அழைத்து வந்தனர். திவ்யா ,சித்ரா ஆகிய இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திவ்யா ஆனந்த் கார்த்திக் ஆகிய மூவரின் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்துள்ள நிலையில் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் திவ்யா கார்த்திக் ஆக இருவரிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்வதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சித்ராவின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி!

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்பார்வையாளர் ஜெயசுதா திட்டியதால் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர் சீதாலட்சுமி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (35).
இவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரை நிறுவன மேற்பார்வையாளர் ஜெயசுதா அடிக்கடி திட்டுவாராம். இதனால் அவர் மனமுடைந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். காலை பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே கொண்டு வந்த சாணி பவுடரை மருத்துவமனையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories