Home Blog Page 156

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

medical shop - 2026
#image_title

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்த மாத்திரையை உட்கொள்வதால், தலைவலி, வயிற்றுப் போக்கு, ரத்தம் உறைதல், கண் பார்வை இழப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதனால், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், ‘நிமுசுலைடு’ மாத்திரையை, 2000ம் ஆண்டில் தடை செய்தன.

இந்தியாவில் இவ்வகை மாத்திரை பயன்பாட்டில் இருந்தாலும், 2011 முதல், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பரிந்துரைக்க, மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், டெங்கு போன்ற தீவிர காய்ச்சல் பாதிப்பின் போது, காய்ச்சலை குறைக்கும் வகையில், ‘நிமுசுலைடு’ மாத்திரை, சிறார்களுக்கு பரிந்துரைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குழந்தைகள், சிறார்களுக்கு, ‘நிமுசுலைடு’ மாத்திரை பரிந்துரை செய்யப்படுவதில்லை; அது குறித்த புகாரும் வரவில்லை. அவ்வாறு, 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, ‘நிமுசுலைடு’ மாத்திரை பரிந்துரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், டாக்டர் பரிந்துரையின்றி மருந்தகங்களில், ‘நிமுசுலைடு’ போன்ற எந்த வகை மருந்து, மாத்திரையும் வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இந்திய விமானப் படை தினம் இன்று!

chennai air show - 2026
#image_title

— ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்

இந்திய விமானப் படை தினம் இன்று.

அக்டோபர் 8, 1932 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. அப்பொழுது அதன் பெயர் ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ். RIAF. இன்று 92 ஆம் ஆண்டு தினம்.

இந்தியர்கள் முதலாம் உலகப் போரிலேயே பிரிட்டன் சார்பில் கலந்து கொண்டு போர் விமானங்களை இயக்கி அசத்தி இருக்கிறார்கள். அப்போது அப்படி அவர்கள் இயக்கிய போர் விமானத்தின் பெயர் பிரிஸ்டோல் டைப் 22 என்பதாகும் என்பர்.

(இதன் தரவுகளை தற்சமயம் சரி பார்க்க  இயலவில்லை)

ஆனால் ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் ஆக மலர்ந்த தருணத்தில் வெஸ்ட் லேண்ட் வாபிட்டி எனும் பெயர் கொண்ட போர் விமானத்தை  இயக்கி இருக்கிறார்கள். ஐந்து நபர் கொண்டு ஒரு குழுவாக ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களுக்கு சீருடை வழங்கி தொடங்கப்பட்ட நாள் தான் அக்டோபர் 8, 1932. அந்நாளையே இன்றளவும் இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது இந்திய அணி விமானப் படை வீரர்கள் அதிக அளவில் பயன்படுத்தியது வெஸ்ட் லேண்ட் லைஸாண்டர் என்கிற விமானம்.

ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்கிற பெயரில் கடைசியாக கலந்து கொண்டது சுதந்திர இந்தியாவின் காஷ்மீர் விஷயத்தில் தான்.

அப்போது நம் விமானப் படை இயக்கிய விமானத்திற்கு பெயர் டக்கோட்டா. காஷ்மீர் மாநிலத்தின் உள்ள ஸ்ரீ நகரில் தரையிறங்கிய சாகஸம் ஓர் உன்னத காவியம். தனித்த பதிவாக விரிவாகவே பிரிதொரு சமயத்தில் பார்த்து விடுவோம்.

💓 இந்தியா தனது நவீன கால தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்கள், இதன் ஒரு பகுதியாக சொந்தமாகவே இலகு ரக ஒற்றை இஞ்சின் கொண்ட போர் விமானத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்து தற்போது அதில் மேம்படுத்தல்களை மேற்கொண்டும் வருகிறார்கள்.

இது இன்றைய தேதியில் அதி நவீன அதி உயர் தொழில்நுட்ப தரத்திலான அதிக எடை சுமந்து செல்லும் ஒற்றை இஞ்சின் கொண்ட உலகின் முதலாவது அதி வேகமான போர் விமானம் ஆகும். இது நம்மில் பலருக்குமே சரியாக தெரியவில்லை. அதுபோலவே இது தான் உலகிலேயே மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் ஆகும்.

இதன் திறனை அறிந்து அமெரிக்கா சுமார் 400 விமானங்களை வாங்க முன் வந்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறது. அவர்களின் ஒற்றை இஞ்சின் போர் விமானங்களை காட்டிலும் இது செயல் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்டு விமானமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் 17,..  #F35 விமானங்களுக்கு நம்முடைய தேஜாஸ் இலகுரக மாக்-2, … 400 விமானங்களை வாங்க முடியும் என்கிறார்கள்.

இந்த இடத்திற்கு இந்தியா வெறுமே முன்னேறி வந்துவிடவில்லை.

இதன் பின்னணியில் பலரது தியாகங்கள், சிலரின் துரோகங்கள் என பலதும் இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் இப்போது தான் கடந்த இருபது ஆண்டுகளாக தான் போர் விமானங்களை தயாரிக்கிறார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அது தவறு.

1952 ஆம் ஆண்டு முதல் இந்த பணியில் இருந்து வருகிறோம். இன்னமும் சரியாக சொன்னால் தேஜாஸ் நமது முதல் போர் விமானம் அல்ல.

இந்திய சூறாவளி என்று செல்லப் பெயரிட்டப்பட்ட #HF_24_MARUT தான் நமது நாட்டின் முதல் போர் விமானம் ஆகும். இது முழுக்க முழுக்க நமது சொந்த தயாரிப்பு. இது முதன் முதலில் ஜூன் 17 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்தது.

ஒரு சுவாரஸ்யம் உண்டு……

அன்றைய காலகட்டத்தில் அதாவது 1950களின் இறுதியில் அமெரிக்க தயாரிப்பு B-24 லிபரேட்டர் என்ற பெயர் கொண்ட போர் விமானத்திற்கு இணையாக இந்த இந்திய தயாரிப்பு HF 24 மரூத் இருந்ததாக சொல்வர்.

இதனை வடிவமைத்தவர் ஜெர்மனியரான குர்த் தாங் என்பவர். 1,127 வேகத்தில் பயணித்த இது அக்காலத்தில் மிக ஆச்சர்யகரமாக பார்க்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்கல் லிமிடெட் சுருக்கமாக #HAL தான் இதனை தயாரித்தது. HF 24 Marut என்று பெயர் இடப்பட்டிருந்தது. இதில் #மரூத் என்பது சமஸ்கிருத பெயர், அதன் அர்த்தம் சூறாவளி.

அந்நாளில் இதற்கு பாகிஸ்தானில் மிகப்பெரிய அளவில் பயம் இருந்தது. 1949 பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு இந்தியா பக்கம் தலை வைத்து படுக்க வில்லை அவர்கள். என்னென்னவோ செய்தும் அவர்களால் இது போன்ற விமானங்களை சொந்தமாக தயாரிக்க முடியவில்லை. முடிவில் தகிடுதத்தங்களில் இறங்கி விட்டனர்.

இந்தியா இந்த விமானத்தை மாக் 1.5 வேகத்தில் இயங்கும் விதமாக வடிவமைத்து தர சொல்லி கேட்டிருந்தார்கள். ஆனால் இந்த விமானம் 1.2 எட்டிப் பிடிக்கவே முனங்கியது.

ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது எருமை மாடு மாதிரி உழைத்தது., ஓடுபாதை இல்லாத இடங்களிலும் அநாயாசமாக தரை இறக்கி மேலேறியது. என்ன செய்தாலும், எப்படி உபயோக்கித்தாலும் அதன் உறுதி தன்மை கட்டுக்குலையாமல் இருந்தது. வேகம் தான் மாக் 1.2 தாண்டவில்லை.

இதில் பயன் படுத்த பட்ட இஞ்சின் ஆர்பியஸ் ரகம். இதனை கொண்டு மற்ற வெளிநாடுகளில் இருந்த விமான ரகங்கள் மாக் 1.5 வேகத்தில் பறக்க இந்திய விமானம் மட்டும் மாக் 1.2 வேகத்தை தொடவே இல்லை. இதனால் இந்த விமானம் மீது தொழில்நுட்ப ரீதியாக சந்தேகம் கொண்டனர். இதற்கு குர்த் தாங் மட்டும் ஒன்றும் பாதகமில்லை விமான எடையோ அல்லது உடல் அமைப்போ பாதகமில்லை என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் இத்திட்டத்தையே நிறுத்தி விட முடிவு செய்தது இந்திய அரசு.

தவறு செய்கிறீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். இதற்கு தீர்வாக சொந்தமாக விமான இஞ்சினை தயாரிக்கும் படி ஆலோசனை சொன்னார். யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

சரி என்ன நடந்தது இதன் பின்னணியில் என்று பார்த்தால்….,

விமான இஞ்சினை நமக்கு கொடுத்த நிறுவனம் அதன் இயக்கத் திறனில் #கை வைத்திருக்கிறார்கள். எரிபொருள் சிக்கனம் என்ற பெயரில் இதனை நுட்பமாக செய்து இருக்கிறார்கள்.

இது பின்னாளில் தான் அதாவது 1985 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்திய தொழில்நுட்பக் பிரிவினருக்கு தெரிய வந்தது. அதன் ஒரிஜினல் தரத்திலான இஞ்சினை தேடிப்பிடித்து கொண்டு வந்து இதில் பொருத்தி இயக்கி பார்த்த போது அது 1.8 மாக் வேகத்தில் பறந்திருக்கிறது. ஆடிப் போனார்கள் இந்திய ராணுவத்தினர் மற்றும் HAL நிறுவனத்தார்.

இப்பொழுது என்ன செய்ய முடியும் நிரம்ப தூரத்திற்கு வந்துவிட்டு இருந்தார்கள். அந்த விமானமும் காலாவதியாகி விட்டிருந்தது.

மிகப் பெரிய சோகம் ஆட்கொண்டது. நயவஞ்சகமாக தங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அன்று தான் தீர்மானம் செய்தது இந்தியா. அனைத்தும் தனித்தனியாக பிரித்து கொடுப்பது …… வேலை செய்வது… என்கிற நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டனர். புதியதாக கட்டமைக்க நிதி ஆதாரங்கள் இல்லை என்கிற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு இந்தியா வாங்கி வந்த விமானங்களை அதன் தொழில்நுட்ப கட்டமைப்புடனே விற்பனை செய்ய சொல்லி நிர்பந்தம் கொடுத்து வாங்கி வந்தனர்.  அப்படி வாங்கி வந்த முதல் விமான ரகம் தான் மிக்21.

ரஷ்ய தயாரிப்பு. மிக்கியான் குரிவிக் சுருக்கமாக மிக்,  அதில் 21 யோராவது ரகம். முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1959. அதனை இந்திய தொழில்நுட்பக் பிரிவினர் பிரித்து மேய்ந்தனர். மறு கட்டுமானம் செய்தனர். காலாவதியான விமான ரகம் என்று பெயர் எடுத்த விமானங்களை மூன்றாம் தலைமுறை விமானங்களுக்கு ஈடாக தொழில்நுட்ப பண்புகளை கொண்டு மாற்றீடு செய்தனர்.

இதனை கொண்டு தான் நம் அபிநந்தன் அமெரிக்க தயாரிப்பு #F16  ரக போர் விமானத்தை அடித்து வீழ்த்தினார்.

அப்படி ஒரு அற்புதமான விஷயத்தை நம் இந்திய தொழில்நுட்பக் பிரிவினர் சாதித்திருந்தனர். காரணம் கடந்த காலத்தில் ஏற்பட்ட அவமானகரமான ஏமாற்றம் மற்றும் தோல்வி.

இன்றளவும் HF 24 தான் இவர்களது ராஜா.

அந்த திட்டம் தோல்வி அடைய காரணமாக இருந்தவர்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு 1990 களில் சோவியத் யூனியன் என்கிற தேசம் உடைந்த சமயத்தில் கண்டு பிடித்தனர்.

இதனிடையே HF 36 என்கிற பெயரில் சொந்த தயாரிப்பில் பேகஸஸ் இஞ்சின் கொண்டு தயாரித்து அசத்தி இருந்தனர். இதன் ஏரோடைனமிக்ஸ் அசாத்தியமானது. டால்பின் போன்ற வடிவமைப்பில் இது காணப்பட்டது. ஆனால் போர் விமானமாக மாற்றீடு செய்யும் வகையில் நிதி ஆதாரங்கள் இதற்கும் கிடைக்கவில்லை.

போராடி தொன்னூறு சதவிகிதம் முடித்த ஒருவன் தோல்வியை தழுவும் மனநிலையில் தான் இந்திய தொழில்நுட்பக் பிரிவினர் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் உருவாக்க பட்ட விமானங்கள் தான் தேஜாஸ் ரூபத்தில் தற்போது நாம் பார்ப்பது.

இன்று இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்க நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா தயாரித்து வைத்துக் கொண்டு இருக்கும் ப்ரோடோடைப் அதி அற்புதமான ஏரோ டைனமிக் பண்புகளை கொண்டு இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.

இன்று உலகிலேயே மிக மிக குறைந்த விலையில் அதிக அளவிலான செயல் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு என்று சொல்லி அடித்து கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள் இந்த பிரிவில்.

இந்திய பாணிக்கு பல உலகளாவிய விமான வர்த்தக நிறுவனங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது. தனித்தனியாக தயாரிக்க … விற்க… முன்வந்து இருக்கிறார்கள்.

விமான உடல் பாகங்கள்….

அதில் பயன் படுத்தும் மின்னணு உபகரணங்கள்…..

இஞ்சின் அமைப்பு….. என்று பிரித்து விற்பனை செய்ய முன்வந்திருப்பது நம் இந்திய பாதிப்பால் தான்.

பிரபலமான ரோஸ் ராய்ஸ் விமான இஞ்சின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விமான இஞ்சின் தயாரிப்பாளர்கள் இந்திய பாணிக்கு மாறி இருக்கிறார்கள். இந்தியாவில் வைத்து தயாரிக்க ஆலைகளை உருவாக்கி வருகிறீர்கள். ஏற்கனவே போயிங் நிறுவனத்தின் 60% சதவிகித விமான உதிரி பாகங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இங்கு நம் நாட்டில் தான் தயாராகி வருகிறது.

அவர்களின் அப்பாச்சி ஹெலிகாப்டர் முற்று முழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கும் வண்ணம் டாட்டா குழுமத்திற்கு கொடுத்து இருக்கிறார்கள்.

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

crackers - 2026

கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் வர்த்தகம் அனைத்து வணிகர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களால் அரசிற்கு எவ்வித வருவாயும் கிடையாது.

உச்சநீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஆன்லைன் பட்டாசு வணிகத்துக்கு தடை விதித்துள்ளது. ஆனால் குறைந்த முதலீட்டில் பலர் சட்டவிரோதமாக ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

இதனை தடுக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஏராளமான பொதுமக்கள் ஏமாந்து, மோசடி செய்யப்பட்டதாக கூறி பணத்தை இழந்து வருகின்றனர். இதுகுறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதனை சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 90 சதவீதம் வரை தள்ளுபடியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது.

எனவே கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். பல இடங்களில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு பட்டாசுகளை அனுப்பாமல் இருப்பதாக புகார்கள் வருகிறது – இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை: வளர்பிறை பஞ்சமி; அறிவுத் திருக்கோயில் திறப்பு!

madurai muthurmariamman temple - 2026
#image_title

வளர்பிறை பஞ்சமி : சிறப்பு பூஜை

மதுரை அண்ணா நகர் யானை குழாய் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மன் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில், அமைந்துள்ள வராகி அம்மனுக்கு மாதந்தோறும் பஞ்சமி நாளன்று சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம். வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, திருக்கோவில் அமைந்துள்ள வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது. வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் பூஜைகள் நடைபெற்றன. இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜை ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் மணிகண்ட பட்டர் செய்திருந்தார்.

இதேபோல, மதுரை தாசில்தா நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், அம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை பக்தர்கள் கண்டு தரிசித்து சென்றனர். கோவில் சார்பில் பக்தருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


வாடிப்பட்டியில் அறிவு திருக்கோயில் திறப்பு விழா!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி ஆர்.வி.நகரில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோயில் திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலை மை தாங்கி திறந்து வைத்தார். நிர்வாகிகள்
வி.ஏ.ஜெயசந்திரன், சீனியார் ரவி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற அறங்காவலர் மணவாளன் வரவேற்றார். இதில், ஏராளமான பொதுமக்கள் அறிவு திருக்கோயில் பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், செயலாளர் ஏ.பி.வெள்ளை நன்றி கூறினார்.


அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களில் 48 வது நாள் மண்டல பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளி அம்மன், முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் யாகபூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள பாலமரத்தம்மன் மற்றும் முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மரியாதைகாரர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா – பறவை காவடி எடுத்தும் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் :

மதுரை, சோழவந்தான் அருகே, மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாற்றுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு கோவில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இன்று காலை ஆறு மணி அளவில் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றுக்கு சென்று அங்கிருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பக்தர் ஒருவர் உடல் முழுவதும் அழகு குத்தி பறவை காவடி எடுத்து நேர்த்திக்
கடன் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு, பாலாபிஷேகம் நடைபெற்றது. மேல கால் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள்  செய்திருந்தனர்.

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு

chennai air show - 2026
#image_title

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு என இபிஎஸ் கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும்,
கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் ,
மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.


ென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும், உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன.

விமானப்படை சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும், அதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட இருப்பதாகவும் விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதைக் கருத்தில் கொண்டு 15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவானவர்களே நிகழ்ச்சியைக் காண வந்தாலும் கூட அவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து 7 முதல் 8 லட்சம் பேர் திரும்பும் போது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலையில் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், தேவையான போக்குவரத்து வசதிகளில் 10% கூட செய்யப்படாததால் இரவு 10 மணிக்குப் பிறகும் கூட பேருந்து நிறுத்தங்களிலும், மெட்ரோ மற்றும் பறக்கும் தொடர்வண்டி நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதை காண முடிந்தது. காலையில் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலும், அதன்பின் சாலைகளிலும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றது தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.

லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது.

நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் எவ்வளவு பேர் வருவார்கள்? அவர்கள் எந்த பாதிப்பும், இடையூறுமின்றி திரும்பிச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறி விட்ட தமிழக அரசு தான் இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.

சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

chennai air show - 2026
#image_title

உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை. திறனற்ற திமுக அரசின் அலட்சியப் போக்கே இதற்கெல்லாம் காரணமாகும் என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து வெளியான அறிக்கை:

சென்னை மெரினா கடற்கரை வான்பரப்பில் நம் நாட்டின் விமானப்படை அகிலமே வியக்கும் வகையிலான விமான சாகச நிகழ்ச்சியை கடந்த 06/10/2024 அன்று நடத்தியது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு சண்டிகர் நகரிலும், 2023 ஆம் ஆண்டு பிரக்யராஜ் நகரிலும் இந்த போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை நம் விமானப்படை நடத்தியுள்ளது.

நம் மாநிலத்தில் தலைநகரில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதைய நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் ஆவலும் இருந்தது. அதுவும் நிகழ்ச்சி நடந்த நாள் ஞாயிற்றுகிழமை என்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை ஆவலுடன் விமான சாகச நிகழ்ச்சியை காண திரண்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து கடந்த 26/09/2024 அன்று ஊடகங்களை சந்தித்த விமானபடை துணைத் தளபதி பிரேம் குமார் அவர்கள் ஏறத்தாழ 15 லட்சம் மக்கள் விமானபடை சாகச நிகழ்ச்சியை காண வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண திரண்ட மக்களின் எண்ணிக்கையை வைத்து 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணித்தது போலவே மக்கள் திரண்டு வந்தனர். லிம்கா சாதனைப் புத்தகத்தில் கூட இந்நிகழ்ச்சி இடம்பெற்று விட்டது.
ஆனால் திமுக தலைமையிலான மாநில அரசு மக்களுக்கு விளம்பரப் படுத்தியதே தவிர மக்களுக்கான போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடம், குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் என எந்தவொரு ஏற்பாடும் செய்யவில்லை.

வாகன நிறுத்துமிடத்தில் இடமில்லை. வாகனத்தை நிறுத்திவிட்டு நெடுந்தூரம் மக்கள் நடக்க வேண்டியிருந்தது‌.

அதனால் முதியவர்கள் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
15 லட்சம் மக்கள் வந்து செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து திட்டமிடப்படவில்லை.

நிகழ்ச்சி முடிந்தும் மக்கள் கலைந்து செல்ல பலமணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் வந்து செல்ல மாநகர போக்குவரத்து துறை பேருந்து வசதி செய்யவில்லை, மெட்ரோ ரயில் மற்றும் மாநகர ரயில்வே துறைக்கு உரிய தகவலை மாநில அரசு அளிக்கவில்லை.

அந்த நேரத்தில் மாநில அரசின் மாநகர போக்குவரத்து துறையும் தயார் நிலையில் இல்லை. இப்படியாக ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் திமுக அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் கூட்டத்தை பார்த்த பின்னரே அதிகாரிகள் அவசர ஏற்பாடுகள் செய்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள். சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்களால், மக்கள் அனைவருக்கும் எங்கு செல்வது என்றே தெரியாமல் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்ற அவலம் எல்லாம் நடந்தேறியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் இதுவரையில் 5 பேர் மரணித்துள்ளனர், பலர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்படாத காரணத்தினால்தான் ஐந்து நபர்களின் உயிர் அநியாயமாக பறி போயுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யாமல், மக்களால் தூக்கி எறியப்பட்ட மேற்கத்திய நாடுகளின் மன்னராட்சியைப்போல் தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது குடும்பத்தோடு நிகழ்ச்சியை கண்டு களிக்க வந்தாரே தவிர, பொதுமக்கள் பற்றி துளியும் சிந்திக்கவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

காவல்துறையும், மாநகராட்சி அதிகாரிகளும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சேவை செய்வது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்பது போல அவர்களுக்கு மட்டும் தேவையானதை செய்து விட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதிலும் தவற விட்டுள்ளனர்

இப்போதும் கூட தமிழக அரசு தனது தவறை உணர்ந்து கொள்ளாமல் தனக்கு விசுவாசமான ஊடகங்களை வைத்து நீர்ச்சத்து குறைபாட்டால் இறந்தனர், வெயில் தாக்கத்தால் இறந்தனர். கூட்ட நெரிசல் இல்லை என்று சப்பைக்கட்டு கட்ட வைக்கின்றனர்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் 15 லட்சம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 15 லட்சம் பேருக்கும் காவல்துறை அதிகாரிகளா போட முடியும் என்று கூறுவதெல்லாம் ஆணவத்தின் உச்சம்.

இச்சம்பவத்தின் மூலம் திறனற்ற திமுக அரசு திருந்த போவதுமில்லை தன்னை தவறிலிருந்து திருத்திக் கொள்ள போவதும் இல்லை.
மக்களாகிய நாம் தான் விழிப்போடு செயல்பட வேண்டும். திமுகவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்..

விமான சாகச நிகழ்ச்சி ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

chennai air show - 2026
#image_title

இந்திய விமானப்படை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் பலர் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம்.. அவர் செய்தியாளர்களிடம் பேசியது…

சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: அண்ணாமலை!

chennai air show - 2026
#image_title

திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று விமான படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் !

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை: இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது.

5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு.

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Ind Vs Ban T20: தூள் கிளப்பிய பாண்ட்யா; இளம் இந்திய அணியின் வெற்றி!

ind vs ban t20 - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம் முதல் டி20- குவாலியர்- 06.10.2024

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          வங்கதேச அணியை (19.5 ஓவர்களில் 127, மெஹிதிமிராஸ் 35, ஷண்டோ 27, அர்ஷதீப் சிங் 3/14, வருண் சக்ரவர்த்தி 3/31) இந்திய அணி (11.5ஓவர்களில் 132/3, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 39, சூர்யகுமார் யாதவ் 29, சஞ்சுசாம்சன் 29) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.

          மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்தியஅணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

          இந்திய அணியின் ஆடும் லெவனில், அபிஷேக் சர்மா,சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக்பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நிதிஷ் ரெட்டி மற்றும்  மயங்க் யாதவ் இருவரும் இன்று முதன் முறையாக டி20ஆட்டத்தில் ஆடுகின்றனர்.

          வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் பர்வேஸ்ஹொசைன் 8 ரன்னும், லிட்டன் தாஸ் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க சிறிது நேரம்தாக்குப் பிடித்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் 27 ரன்கள் எடுத்தார்.

          தவ்ஹித் ஹிருதாய் 12 ரன்களும், ரிசாத்ஹொசைன் 11 ரன்களும், தஸ்கின் அகமது 12 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில்மெஹிதி ஹசன் மட்டும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார்.

32பந்துகளை எதிர்கொண்ட அவர் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.

          இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி,அர்ஷ்தீப்சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜேக்கர் அலியை ஆட்டமிழக்கச்செய்த வருணின் பந்து ஒரு அற்புதமான பந்து. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

          இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக்சர்மா 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இரண்டாவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 15 ரன் எடுத்த அவர் கடைசி பந்தில் ஒரு துரதிர்ஷ்டவசமானரன் அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5.3ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடிக்க நினைத்துஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே முறையில் சிக்சர் அடிக்க நினைத்துசஞ்சு சாம்சனும் 29 ரன்னுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ரன்கள் குவித்தஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க,11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருப்பதிக்குச் செல்லும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை!

andal temple mariyathai - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 8ம் தேதி கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது~!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மச்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவின் கருடசேவை வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

கருட சேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாள் சாற்றிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது.

முன்னதாக 7 ஆம் தேதி அன்று மாலை, தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.

இதனை முன்னிட்டு இன்று ஆண்டாள் கோவிலில் காலையில் இருந்தே ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்று வந்தன. திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை முதல் நடைபெற்று பிற்பகலில் நிறைவுபெற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகள் திருகோயிலின் சார்பில் ஸ்தானிகர் கிச்சப்பன் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைசார்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.