Home Blog Page 163

தெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா;  மாணவர்களையே முகவராக்கும் அவலம்; அரசுக்கு பொறுப்பு வருமா?

drug addiction - 2026
  • மருத்துவர் ராமதாஸ், நிறுவுனர் பாமக.,

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடமிருந்த கஞ்சா போதைப் பழக்கம் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்ட நிலையில் அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும், போதைப் பொருட்களின் விற்பனைக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதனால் ஏற்படும் கேடுகள், சீரழிவுகள் குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால், அதைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறையும், பொறுப்பும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இல்லாததால் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கஞ்சா, போதைப் பாக்கு, அபின் போன்ற போதைப் பொருட்கள் தான் இதுவரை கிடைத்து வந்தன. அதுவும் கூட கஞ்சா புகைக்க வேண்டுமானால் குறைந்தது 30, 40 கி.மீ பயணித்து ரகசியமாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் தான் இருந்து வந்தது. ஆனால், இப்போது கஞ்சா, அபின் மட்டுமின்றி கூல் லிப், எல்.எஸ்.டி ஸ்டாம்ப், ஆசிட் போன்ற போதைப்பொருட்கள் தெருக்கள்தோறும் தடையின்றி தாராளமாக கிடைக்கின்றன.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கூட, சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டும்; கடை உரிமையாளர் மனசாட்சியுடன் செயல்படுவர்  என்றால், சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்க மாட்டார்; அதுமட்டுமின்றி பெற்றோரிடம் புகார் செய்வார் என்பதால் சிறுவர்களுக்கு அச்சம் இருக்கும்; அதுவே அவர்களை புகையிலைப் பக்கத்தின் கூட திரும்ப விடாமல் தடுத்து விடும். ஆனால், இந்த இலக்கணங்களையெல்லாம் இன்றைய போதைக் கலாச்சாரம் தகர்த்து விட்டது. கஞ்சா, அபின், ஆசிட், எல்.எஸ்.டி ஸ்டாம்ப், கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை வாங்க கடைகளுக்குக் கூட செல்லத் தேவையில்லை. தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கு அருகில் வந்து போதைப் பொருட்களை விற்கும் அளவுக்கு போதைப்பொருள் வணிகக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு சந்தைகளில் மட்டுமே கிடைத்து வந்த போதைப்பொருட்கள் கூட இப்போது குக்கிராமங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்களுக்கு போதைப்பொருட்க¬ளை விற்பனை செய்யும் போதை மருந்து விற்பனை கும்பல்கள், இப்போது மாணவர்களையே தங்களின் முகவர்களாக மாற்றியுள்ளனர். அதனால் போதை மருந்துகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் எந்த தடையுமின்றி மிகவும் எளிதாக வலம் வருகின்றன. அதன் விளைவாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 வயது சிறுவர்கள் கூட  போதைப்பொருட்களுக்கு அடிமையாகி அவற்றிலிருந்து மீள முடியாமல் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழக அரசும், காவல்துறையும் நினைத்தால் ஒரே வாரத்தில் கஞ்சா வணிகக் கட்டமைப்பை தகர்த்தெறிய முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து கிராமங்களில் விற்பனை செய்யும் திமிங்கலங்கள் யார், யார்? என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களால் கிடைக்கும் வெகுமதிக்காக அவர்களை காவல்துறை கண்டுகொள்வதே இல்லை. பாமக சார்பில் அறிக்கை வெளியாகும் போது மட்டும் கஞ்சா வேட்டை 1.0, கஞ்சா வேட்டை 2.0 என நடத்தி பத்தாயிரம் பேரை கைது செய்வதும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அடுத்த சில நாட்களில் பிணையில் வெளிவந்து மீண்டும் கஞ்சா விற்பதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

காவல்துறையில் அதிகபட்சமாக 5 முதல் 10 விழுக்காட்டினர் மட்டும் தான் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுகின்றனர். ஆனால், காவல்துறையின் இதயம் 90% கெட்டு விட்ட நிலையில், மீதமுள்ளவர்களால் கஞ்சா உள்ளிட்ட போதை அரக்கனை கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டற்ற கஞ்சா வணிகம் மற்றும் பயன்பாடு காரணமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன. பாலியல் குற்றங்களும் அதிகரித்து விட்டதால் தமிழ்நாட்டில் பெண்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை.

வருங்காலத் தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், கஞ்சா கட்டமைப்பை தகர்ப்பது தான் முதன்மைத் தேவை ஆகும். ஆனால், இதுகுறித்த புரிதல் தமிழக அரசுக்கு சற்றும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை நேரில் சந்தித்து போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா பயன்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இவை எதுவும் தமிழக அரசின் கேளாக் காதில் விழவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

தமிழ்நாட்டை கஞ்சா போதை எனும் பெரும் ஆபத்து சுற்றி வளைத்திருக்கும் நிலையில், காவல்துறையும், அரசும் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டை கஞ்சா போதை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்.

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு பேஜாராகிப் போன ‘பேஜர்’! இஸ்ரேல் ‘கை’?

pagers blast in lebenoin - 2026
#image_title

இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதல். லெபனானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை “முடித்துவிட” இஸ்ரேல் திட்டமிட்டது. ஹிஸ்புல்லா ஆட்கள் மொபைல் ஃபோன் வைத்துக் கொண்டால் ஹேக்கிங், வைரஸ், ஸ்மார்ட் ஃபோன் கண்காணிப்பு என்று இஸ்ரேல் இறங்கி அடிக்கும் என்று பயத்து பழைய தொழில்நுட்பமான பேஜர் மூலம் தகவல் பரிமாறி வந்தனர். இதற்கென படு ரகசிய பேஜர் நெட்வொர்க் வைத்திருந்தனர்.

இஸ்மாயில் ஹனியா சாவுக்குப் பிறகு ஈரான் கமேனி உள்ளிட்ட தலைவர்களுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. காரணம் தலைவர்களை இஸ்ரேல் குறி வைக்கிறது என்று கணித்தனர். ஆனால் இஸ்ரேல் தலைவர்களோடு சேர்த்து களத்தில் இறங்கும் பயங்கரவாதிகளையும் இம்முறை குறு வைத்து அடித்துள்ளது.

பேஜர் நெட்வொர்க்கை ஊடுருவி அதில் செய்தி அனுப்புவதன் மூலம் ஒரு codeஐ சேர்த்து அனுப்பி ஏறத்தாழ 3000 பேஜர்களை இரண்டு நிமிடங்களுக்குள் பேட்டரி வெடிக்குமளவு சூடாக்கி வெடிக்க வைத்துள்ளது இஸ்ரேல். இதனால் 4000 பேருக்கு மேல் இடுப்புக்குக் கீழே காயம்பட்டு ஏறத்தாழ 2800 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். 20-25 பேர் இறந்திருக்கலாம் என்று வெவ்வேறு தகவல்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புண்டு என்று செய்திகள் வருகின்றன.

ஹிஸ்புல்லா ஆட்கள் தனியான ரகசிய ரேடியோ நெட்வொர்க் மூலம் இஸ்ரேலுக்குத் தெரியாமல் பேசிவந்தனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு ஹிஸ்புல்லா தளங்களில் இஸ்ரேலின் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் இனி தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கும் என்று கேள்வி எழுகிறது.

இந்நிலையில் ஏறத்தாழ 500க்கும் அதிகமான ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தலைமாட்டில் பேஜரை வைத்துக்கொணனு உறங்கிய நேரத்தில் பேஜர் வெடித்ததால் மூளை, கண், காது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் சொல்கிறார்கள்.

மேலும் விவரங்களை ஆராய்ந்த அமெரிக்க ஐரோப்பிய உளவு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் கருவிகள் தைவானின் Gold Apollo என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டவை என்று தெரிவித்தனர். Gold Apollo நிறுவனத்தலைவர் சூ சிங் குவாங் இது தங்களது தயாரிப்பு அல்ல என்றும் BACK என்ற நிறுவனம் தங்களிடம் உரிமம் பெற்றுத் தயாரித்த AR-924 மாடல் பேஜர் என்றும் இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு விசாரிக்கையில் ஹிஸ்புல்லாவுக்குப் பேஜர் விற்ற கம்பெனியே இஸ்ரேலிய மொசாத் கட்டமைத்த நிறுவனம் என்றும் ஐரோப்பாவில் வியாபாரம் பேசி தைவானில் பேஜர் வாங்கி வெடிக்கும் குறு கருவி ஒன்றை பேட்டரியில் சேர்த்து அதைப் புரோகிராம் செய்து வைத்து ஹிஸ்புல்லாவுக்கு விற்றுவிட்டனர் என்கிறார்கள். அதனால் தான் இத்தனை விரைவாக வெடிக்க வைத்து இத்தனை பேரை இனி படுத்த படுக்கை தான் என்றாக்கிவிட்டனர் என்று தெரிய வருகிறது. சம்பவத்தில் லெபனானுக்கான ஈரான் தூதரும் காயமடைந்துள்ளாராம். “மிலிட்டரி! நீ எங்கய்யா அங்க போனே?” என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இஸ்ரேல் இதுவரை சம்பவம் பற்றி வாயே திறக்கவில்லை. ஈரானும்.

  • அருண்பிரபு

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் செல் போன் பயனடுத்தினால் இஸ்ரேல் ‘ஹேக்’ செய்து விடுகிறது என்பதால் பழைய தொழில்நுட்பமான ‘பேஜர்’ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள்.

நேற்றிரவு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் லெபனான் மக்களிடம் இருந்த பேஜர்கள் திடீரென பயங்கர சூடாகி ஒரே சமயத்தில் வெடித்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். பல ஆயிரம் பேர் காயம். ஆம்புலன்ஸ்களில் ஒலியால் லெபனானே அதிரத் தொடங்கியது.

எலக்ட்ரோ மேக்னட்டிக் பல்ஸஸ் பயன்படுத்தி தெர்மல் ரன் அவே (Thermal run away) எனும் அதீத சூட்டினை உருவாக்கி, ஒரு மெஸ்ஸேஜ் மூலம் அதை ட்ரிக்கர் செய்து, லெபனான் மக்கள் கையிகிருந்த ஒவ்வொரு பேஜரையுமே ஒரு குட்டி டைம் பாமாக இஸ்ரேல் மாற்றி இருக்கக் கூடும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

பேஜரின் தம்மாத்துண்டு குட்டி பேட்டரியே இத்தனை வேலை செய்யும் போது, சீனாவில் இருந்து இறங்கும் கோடிக்கணக்கான மிகப்பெரிய செல் பேட்டரிகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் ? நினைத்தாலே தலை சுற்றுகிறது.

அமெரிக்க-ஜப்பான் போர் அணுகுண்டை அறிமுகப்படுத்தியது, ஈரான்-ஈராக் போர் ரசாயன யுத்தத்தை அறிமுகப்படுத்தியது, ரஷ்ய-உக்ரைன் போர் ட்ரோன் போரை அறிமுகப்படுத்தியது, தற்போது அதன் அடுத்த கட்டமாக வீட்டு எலக்ட்ரானிக் பொருட்களையே ஆயுதமாக்கும் போரை உருவாக்கி உள்ளது இஸ்ரேல்-லெபனான் போர். போரின் தன்மையும், தொழில்நுட்பமும் மாறிக் கொண்டே வருகிறது. இந்தியா இவற்றில் இருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

  • பி.எஸ். நரேந்திரன்

யோ இஸ்ரேல்… என்னய்யா இதெல்லாம்???

லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பேஜர் (pager) மூலம் குழுவுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். இன்று அந்த பேஜர்கள் வெ*டித்து நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லாக்கள் மர்கயா.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளை நிரப்பி வருகிறார்கள். (அத்தனை பயங்கரவாதிகள்)!!

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் சிகிச்சையளிக்க முடியாமல் திணறுகிறார்கள்!

பேஜர்களை கைகளில் வைத்திருந்த்வர்கள் கைகள் போச்!

பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தவர்களுக்கு இனி வாரிசுகள் கிடையாது!

இந்த மாதிரி அவர்கள் உபயோகிக்கும் பேஜர்களை வெ*டி*க்க வைத்து அவர்களை முடிப்பது என்ன டெக்னிக் டியர் நேத்தன்யாஹூ ஜி??

  • செல்வநாயகம்

case against Dr Kantaraj for making defamatory comments on actresses calling them ‘casting couch’

0
dr kantharaj comments about actress - 2026
#image_title

Police books case against Dr Kantaraj for making defamatory comments on actresses calling them ‘casting couch’

Tamil Nadu police which had arrested and slapped Goondas act against you tuber SAvukku Shankar for making comments on women police, did not bother to act on the you tuber Mukthar’s interview with Dr Kanatharaj, who made obscene and disparaging comments on the charactors of film actresses who were ready to sleep with anyone for money and fame.

You tuber Savukku Shankar was arrested by the Tamil Nadu Police for allegedly making derogatory and objectionable remarks about senior cops and women police personnel of the southern state. After the arrest, the stringent Goondas Act was also invoked in the case. The HC revoked his detention.

For the same police machinery Dr Kantharaj’s comments did not deserve any action.  Following a video of his giving interview to one you controversial tuber Mukhar Ahmed.  In that Dr Kantharaj, brother of former Assembly Speaker K Rajaram – a staunch Dravidianist has made abusive and objectifying comments on women, actres. Kantharaj, a sex doctor, dabbles as a political analyst, his commentaries have been peddling hate against Brahmins and Hinds while attacking opposition parties like the BJP, RSS and AIADMK. His recent statements have crossed beyond all permissible limits,  saying the sexual harassment faced by women in the film industry as  they willingly agreed to be  ‘casting couch’.

 In that video, it can be seen, Mukthar Ahmed started with the question, “Have you heard of ‘Adjustment’?” To which Dr. Kantharaj responded that he was indeed familiar with the term. Mukthar then asked if he had been approached for an adjustment, to which Kantharaj replied that it wasn’t necessary as the matter was settled by mutual consent, thus no adjustment was needed. Mukthar countered, questioning whether this was not wrong, and Kantharaj suggested that Mukthar’s criticism stemmed from his own lack of opportunity.

Dr. Kantharaj said, “It’s all part of life; is this really an issue? It’s like the saying, ‘The stork that waits patiently at the sluice head leaves the small sprats alone and waits for the larger fish.’ We weren’t like that stork; we pursued the small sprats until the larger fish arrived.”

Dr. Kantharaj said  “They are claiming after 30 years that they have been ruined (sexually abused)… So, shall I not claim that 30 years ago, I also ruined some?” Mukthar interjected, “All are field out.” Dr. Kantharaj replied, “Yes, all are expired.” Mukthar continued, “Now they are speaking up.” To which Dr. Kantharaj retorted, “All these rusty goods are now sitting and claiming they have been abused. Is this even a topic? I find it laughable.”

Dr. Kantharaj said that the medical profession also has its own “adjustments,” comparable to those in the film industry, suggesting that the nature of adjustments in both fields is similar.  He also mocked the film actresses who had voiced their experiences of sexual harassment. He claimed that their allegations of being asked to “adjust” were not instances of sexual harassment but rather reinterpreted the abuse in a more favourable light.

He said, “You share  bed and get paid for it, only to later don a chastity mask. What’s fair in that?”.. Actresses who now complain of sexual harassment are merely trying to regain their lost market iamge”.

Mukthar Ahmed the anchor also equally provoked Kantharaj with his own inflammatory remarks, expressing personal satisfaction as he shared his unfiltered views.   Kantharaj claimed that actresses entering the film industry must comply with various forms of “adjustments” related to the “casting couch.”

He asked, “Why are you shooting a rain drenching scene in a white dress, only to show the body right. In a bathing scene in the river, when she comes out of the river the body will be transparent”.  He said he had never seen Jayalalitha with dress and Jyothika, wife of act Surya, plunged into obscenity for film opportunities. They specifically targeted former chief ministers MGR and J. Jayalalitha from the AIADMK and Radhika Sarath Kumar,

They also targeted actress Shakeela, pointing out that she had acted in adult only films in the past and was now complaining about sexual harassment in the industry. They criticized MGR and Shivaji Ganesan with Kantharaj specifically targeting MGR. He claimed that MGR had included the most explicit content in his films, yet all the women voted for him and actresses performed glamorous roles in his movies..

 He said that the difference between a sex worker and an actress is that while sex workers are considered inferior, actresses are seen as superior and are treated as leaders.

The story of Sabarimala Ayyappan is mentioned, with the claim that he was born from a homosexual union. The Tamil New Year, celebrated in April, is framed as a celebration of homosexuality, allegedly initiated by Vishnu and Naratha, who are said to have given birth to 60 babies. Kantharaj said  Diwali, the tale of Satyabhama killing Narakasura is cited as its origin. Narakasura, according to this account, was the son of Satyabhama and Lord Krishna. However, since Satyabhama and Krishna had no children, the question arises, Who was Narakasura’s true father?

Muthar is seen with CM MK Stalin and his son cum Minister Udhaya Nidhi Stain in various pictures.

Neither Mukthar nor the Kantharaj had no guts to talk about the marriage of EV Ramaswamy naicker with his step daughter Maniammai , half of his age and his sexual life in his earlier life.

On 13 September 2024, Actress Rohini Molleti has filed a criminal complaint with the City Police Commissioner’s office  against Dr. Kantharaj, accusing him of making inappropriate and insulting remarks about actresses

Rohini has requested legal action against Dr. Kantharaj and the removal of the video from YouTube. Police has filed an FIR based on her complaint.

Church built on water body in Villupuram Dist., demolished following court orders!

0
Church built on water body in Villupuram Dist - 2026
#image_title
  • By TS Venkatesan

The two incidents on demolition of a Church and taking back the possession of encroached Christian school made possible with the court intervention.  In the first case, church built on Raghavan Canal at Parugampattu near Thiruvennainallur in Villupuram district was finally razed down on 16th despite stiff opposition from Christian community who thronged the area in large numbers and occupied the entire building that was to be pulled down by bulldozers.

Exactly 21 days ago, authorities face resistance from the local Christians in removing the church structure, Hindu Munnani accused the Tamil Nadu government of applying different standards to religious structures.  It  said  DMK government has a history of demolishing Hindu temples- some say over 250 after it came to power in 2021 , claiming that they were built on public land. However, these officials are reluctant to act against an illegal church built on a canal and illegal mosques in the light of courts.  Supreme Court y affirmed a Madras High Court directive ordering the demolition of Chennai’s famous mosque in Koyambedu, deeming the structure “completely illegally constructed” in the case of Masjid-e-Hidayah and Madarassa vs  N Dinakaran. In fact a large number of government buildings were built on Hindu Temple lands.

In the case on hand is pertains to Villupuram, on August 18th  local Christian community had staged protests at the district collector’s office, demanding that the church not be demolished. This protest resulted in delays from the Villupuram district administration in addressing the issue.

The situation has sparked criticism, especially in light of the Tamil Nadu government’s earlier actions to demolish Hindu temples located in public spaces under the guise of enforcing regulations. However, there seems to be a reluctance to apply the same standards to Christian churches. This disparity has raised questions about fairness and consistency in the government’s approach.

Hindu Munnani has questioned the government’s double standards in dealing with encroachments. It said  “The Tamil Nadu government, which demolished Hindu temples in many places claiming they were in government land, refuses to dispose of the Church now. Why is the government refusing to demolish the church illegally built on a canal?”  The HC has in an order in August ordered the district administration to pull down illegal structure that was built on a water body and submit a report following a petition from a resident of the village.

On Monday (16th September) police, fire and rescue, revenue authorities  came to carry out the court orders armed with giant bulldozers, again the local Christians tried to prevent them from razing down the illegal church.  The officials told them in plain language that the HC has ordered demolition of the church as it was built  on water canal and the 21days time given to them was over. The dissatisfied and angered Christian locals blocked the road lead to the church and offered mass prayers to prevent officials from demolishing. A heavy posse of police detained them and released the after the demolition drive in the evening.

In another action, the government armed with court orders reclaimed the  leased 5 acres and encroached 20 acres of land from St. John’s Educational Trust in Pazhanjure near Chennai.  According to media reports,  the St. John’s International Residency School , affiliated to CBSE pattern in Poonamallee, had originally got 5 acres of land ( survey no. 371/1) on lease in 1993 for a period of 20 years. The  lease had expired in 2013. The school had 630 students and over 60 teaching plus a  dozen of non teaching staff.  After the expiry the lease period, the school refused to vacate and handover possession of the land in question. The district collector issued a lease cancellation notice which was contested in the High Court by the school management.  After the pandemic days, the school ceased its activities at the Poonamallee site and students were transferred to another school in Thiruvallur district.

When the Commissionerate of Land Adminstration (CLA) surveyed the site, they found the school had taken over 20 acres of government land illegally in addition to the five acres of leased land.  The land, according data,  is classified as Anadheenam ( not occupied – a government poramboke land.  They had built hostel, swimming pools, staff quarters, office, schools and other structures. The inspection also revealed the trust had built structures on the entire 25 acres of land and a case of pending lease amount of nearly Rs 22crore.  Following this, CLA in June 3rd  last issued a notice to the trust asking them to hand over the entire 25 acres of land worth several crores ( some nearly  Rs.500 crores).  Acting on the orders, the revenue, police department officials on 16th September took possession of the land.   Poonamallee Tehasildar led team has sealed the buildings in Pazhanjur village.

The government plans to use the entire building and other structures like class rooms after repairs and renovation to run a model school or a hospital instead of demolition that needs high cost.  The buildings have been lying unoccupied since 2021.

பிரதமர் மோடி பிறந்த நாள்; இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

modiji birthday celeb in madurai - 2026
#image_title

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பாரத பிரதமர் மோடியின்
74- வது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கியும், புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கியும் கொண்டாடினர்.

இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி , தனது 74வது பிறந்த நாளை கொண்டி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில்., பாஜகவினரும் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மதுரை பெருங்கோட்ட பொருப்பாளர் கதளிநரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கோசங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர். புதிதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கி கொண்டாடினர்.

பயணிகள் கவனத்திற்கு…. நாளை முதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

railway news - 2026
#image_title

மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, செப். 18-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் விவரம் :

பகுதியாக ரத்து…

ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப். 18-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை (செப். 24, அக். 1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் – செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை – ஈரோடு விரைவு ரயில் (16846) செப். 19-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக்கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு செல்லும்.

மாற்றுப் பாதையில்…

செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப். 19 முதல் அக். 7 வரை (செப். 25, அக். 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.

குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் – சென்னை விரைவு ரயில் (16128) செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் (16352) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹௌரா அதிவிரைவு ரயில் (12666) செப். 28-ஆம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி,திருச்சி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் – கச்சேகுடா விரைவு ரயில் (16354) செப். 28-ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.

சோழவந்தான்: ஆயுத பூஜை போல கொண்டாடப்பட்ட விஸ்வகர்ம விழா!

viswakarma pooja in cholavanthan madurai - 2026
#image_title

மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் வருடம் தோறும் ஆயுத பூஜை கொண்டாடுவது போல் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா பூஜை செய்து வருகின்றனர்.

இந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் விரதம் இருந்து விஸ்வகர்ம சுவாமி படத்தை வைத்து அலங்கரித்து, வண்ண மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை தாங்கள் வேலை பார்ப்பதற்கு அருகில் உள்ள வைகை ஆற்றுக்குச் சென்று மண்பானையில் தண்ணீர் நிரப்பி வைத்து பூஜைகள் செய்து பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்தனர்.

பின்பு விஸ்வகர்மா படத்தின் முன்பாக மண்பானையில் கொண்டு வந்த தண்ணீரை வைத்து விஸ்வகர்மா சுவாமி வரைந்த பொம்மையை வைத்து ஆடைகள் அணிவித்து பூமாலையால் அலங்கரித்தனர்.

இவர்கள் வேலை செய்யக்கூடிய ஆயுதங்கள் அனைத்தையும் அலங்காரம் செய்யப்பட்ட இடத்தின் முன்பு வைத்து சந்தனம் குங்குமம் வைத்து பூ மாலை அணிவித்து வங்காள மொழியில் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

இதுகுறித்து இங்கு வேலை செய்யும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஷ்துதேவ் கூறும்பொழுது… “ இந்த தமிழ்நாட்டில் ஆயுத பூஜை எப்படி கொண்டாடுவார்களோ இதே போல் எங்கள் மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியில் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்ம பூஜா வருடந்தோறும் நடத்துவோம். சுமார் பத்து ஆண்டுகளாக ராமநாதபுரம், பாலமேடு இதைத் தொடர்ந்து இங்கு வேலை செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் இங்கு பணி புரியக்கூடிய கம்பெனியில் சுமார் 50 பேர் வேலை செய்து வருகிறோம். எங்கள் நாட்டின் வழக்கப்படி நாங்களும் எங்களை சுற்றி உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் விஸ்வகர்மாவை வணங்கி தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்தோம். இது எங்கள் நாட்டில் விழா எடுத்து செய்வதுபோல் நாங்கள் உணர்கிறோம். இப்பகுதி மக்கள் எங்களோடு நல்லுறவாக பழகி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி அனைத்தும் நேரடியாக எங்கள் செல்போன் மூலம் உறவினருக்கு வீடியோ அனுப்பினோம். இதைப் பார்த்த உறவினர்கள் நம் நாட்டில் நடப்பதை காட்டிலும் அங்கு சிறப்பாக நடத்துகிறீர்கள் என்று எங்களிடம் கூறினார்கள். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இது குறித்து இன்ஜினியர் சாமிவேல் மற்றும் மேற்பார்வையாளர் சிவா ஆகியோர் கூறும் போது…. “இவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கல்கத்தா பகுதியை சேர்ந்தவர்கள். எங்களிடம் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர். செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா பூஜை செய்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாது, நாங்களும் இங்கு பணிபுரியும் மற்ற மாநிலம் சேர்ந்த வர்களும், நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். இது இந்திய நாட்டின் இறையாண்மையையும் மற்றும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

நீ…. உன்னை அறி! உள்ளம் தெளிவடையும்!

write thoughts - 2026
#image_title

சிந்திக்க சில நொடிகள்

–K.G. ராமலிங்கம் ,

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் வாழ்த்துக்கள்….

ஒவ்வொருவரும் அவரவர்களை அறிமுகம் செய்து கண்டு கொண்ட பின்னர் தான் அவரின் திறமையும், புலமையும் வெளிப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் வந்த பாடல் தான் நாம் சிறிய வயதில் பள்ளியில் படித்த பாலபாடம்.

கொழு கொழு கன்றே என் பெயரென்ன?
கன்றின் தாயே என் பெயரென்ன?
தாயை மேய்க்கும் இடையனே என்பெயரென்ன?
இடையன் கையிலிருக்கும் கோலே என் பெயரென்ன?
கோலிருக்கும் மரமே என் பெயரென்ன?
மரத்திலுள்ள கொக்கே என் பெயரென்ன?
கொக்கு வாழும் குளமே என் பெயரென்ன?
குளத்தில் இருக்கும் மீனே என் பெயரென்ன?
மீனைப் பிடிக்கும் வலையனே என் பெயரென்ன?
வலையன் கைச் சட்டியே என் பெயரென்ன?
சட்டி செய்யும் குயவனே என் பெயரென்ன?
குயவன் கை மண்ணே என் பெயரென்ன?
மண்ணில் விளையும் புல்லே என் பெயரென்ன?
புல்லைத் தின்னும் குதிரையே என் பெயரென்ன?
உன் பெயரா….. ஈஈஈஈஈஈஈஈஈ
என்றதாம் குதிரை
பெயரை அறிந்த களிப்பில் பறந்ததால் அந்த ஈ…

ஈக்கு விடம் தலையில் எய்தும் இருந் தேளுக்கு
வாய்த்த விடம் கொடுக்கில் வாழுமே- நோக்கரிய
பைங்கண ரவுக்குவிடம் பல்லளவே துர்ச்சனர்க்கு
அங்கமுழு தும்விடமே யாம் –

                               - - நீதி வெண்பா

ஈக்கு தலையிலும், தேளுக்குக் கொடுக்கிலும், பாம்புக்குப் பல்லிலும், தீயவர்க்கு உடல் முழுதும் விஷம். மனம் மயக்கும்விஷ வலையில் விழாதீர்கள்….

ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. “மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்.” அந்த ஈயும் தாயின் அறிவுரை கேட்டு பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.

ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சினை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாயின் பயம் அனாவசியமாகத் தோன்றியது.

அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

அந்த ஈ தனக்குள் ஒரு இனம் புரியாத துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெல்ல மெல்ல அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று பார்த்தது, அங்கு அந்த ஈ க்கு எந்தவித பிரச்சினையும் தெரியவில்லை அறிவதற்கு அதுக்கு எதுவுமில்லை.

சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடி வர மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.

அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்கு தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட அந்த ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த பளபளப்பு காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும். அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை.

நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த
ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான்.

அந்த அவசியம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அது ஆபத்தானது, அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் அது முன்பே அறிந்து இருந்தது.

ஆனால் அந்த பளபளப்பு, ஓரிரு முறை சென்று வர சென்று வர அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து விட்டது, ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.

உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் போன்ற எத்தனையோ வலைகள் வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்றவையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.

அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.

வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது.

அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்க வில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை.

இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்” என்கிறது திருக்குறள்.

தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவைகள் இருக்கின்றன என்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்கிறது திருக்குறள்.

கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்.
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்.
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்.
போக- வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல்-தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா!
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?
கவியரசரின் யதார்த்த உண்மை வரிகள் தான் ஞாபகம் வருது……

ஆசை வெட்கமறியாது
அன்பு நிலை அறியாது
பாசம் பண்பறியாது
நேசம் நினைவறியாது…
நீ…. உன்னை…. அறி….. உள்ளம் தெளிவடையும்…….

Police arrests professor for harassing student to join for drinking session with an amorous intent, while other is on run!

0
xaviers college palayamkottai - 2026
#image_title
  • By TS Venkatesan

Following pressure from Hindu Munnani, Tirunelveli police arrested a professor of government aided St. Xavier’s College in Palayamkottai, St. Xavier’s College Palayamkottai, on 14th for allegedly talking a girl student in an obscene manner over phone and inviting her over for drinking liquor with him late at night a week ago.

According to media reports, 40 years old professor S Jebsastin from Tiruchendur and T Palraj from Thoothukudi both of Sociology department made the calls to the student in an inebriated stage on the night of 4th September.

Palraj spoke to the girl student obscenely before handing over the phone to Jebastin who also made inappropriate comments and invited her to join them for drinks.  The student did not know how to react to their behaviour and made up her mind to inform her parents. She approached the police with a complaint. On Saturday , a special team arrested Jebastin in Thoothukudi while Palraj is on the run.

The story has a surprising twist. The parents of student informed the police they did not want to pursue the case and asked them to drop it , citing concerns that pursuing the matter might negatively impact their daughter’s studies. Accepting their request police has kept the complaint aside.  But following the news went viral in Social media and Hindu Munnani taking it up. police had to reopen the case. Hindu Munnani had threatened legal action if the professors were not arrested. Tirunelveli City Commissioner Rupesh Meena personally oversaw the investigation, which confirmed that both professors had indeed made inappropriate calls to the student.

The college was set up in 1923 by Rev. Fr. Jesuit, Madurai . The St. Xavier’s,  a Jesuit college of arts and science, and autonomous since June 1987, is an affiliated First Grade College of the Manonmaniam Sundaranar University which will award degrees with the name of St. Xavier’s College mentioned on them.This college, which has  over 4,000 students in its rolls, is known for its long-standing reputation and attracts students from various districts. The Palayamkottai campus, often called the Oxford of the South, is the main campus of this historic institution.

Palayamkottai police have charged the two professors under sections 74, 75, and 79(5) of the Bharatiya Nyaya Sanhita (BNS) for their obscene behavior towards the student. The scandal has shocked both the academic community and students, given the college’s esteemed reputation. Additionally, there have been reports of previous complaints against some professors at Saint Xavier College, raising concerns that further revelations may emerge as the investigation continues.

Only last week, Police arrested two male teachers Robert (48) and Nelson (55) on 11th September on charges of sexually harassing boy students at an government aided  St John’s Higher Secondary school in Palayamkottai in Tirunelveli. The arrested teachers were taking classes for 7th Standard students.

Police team spoke to the boys in the school , parents, staff and the accused teachers.  Police said the school management has placed Nelson , permanent staff, under suspension. Robert , a contract staff member has been sacked.

உசிலம்பட்டி, தாராப்பட்டி பகுதி கோயில்களில் கும்பாபிஷேகம்!

IMG 20240916 WA0000 - 2026
#image_title

உசிலம்பட்டி அருகே கோயில் மகா கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சாமி திருக்கோவில்.,இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

முன்னதாக கடந்த 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி மூன்று கால யாக பூஜைகளை செய்த சிவாச்சாரியார்கள், இன்று கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,

பின்னர் கருவறையில் உள்ள பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

,இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்.,


தாராப்பட்டி அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்:

மதுரை மாவட்டம் தாராப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .

தாராப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை நாயக்கரால் வெயிலான் காணி என்று செம்பு பட்டையும் வழங்கப்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.

கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் இதற்கான கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் வெயிலான் வகையறா பங்காளிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கடந்த 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசை உடன் விநாயகர் பூஜை லட்சுமிஹோமம் சுதர்சன ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் ஆரம்பமாகியது தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தீர்த்த சங்கமம் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ,14 ஆம் தேதி காலை வேத பாராயணம் மூல மந்திர ஹோமம் மற்றும் முதல் கால பூர்ணாஹதி பூஜையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களின் மூல மந்திர ஹோமம் வஸ்திரம் பிரதிஷ்டையுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

கும்பாபிஷேகத்தை அர்ச்சகர் சந்தோஷ் குமார் சர்மா முன்னின்று நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை, வெயிலான் வகையறா பங்காளிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.