Home Blog Page 181

பாரீஸ் ஒலிம்பிக் 2024 : ஒன்பதாம் நாளில் இந்திய அணி …!

paris olympics 2024 - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

படகோட்டம்

இந்திய வீராங்கனை நேத்ராகுமணன் 25ஆவது இடம் பெற்றா. மற்றொர்ய் இந்திய வீரர் விஷ்ணுசரவணன் 18ஆவது இடம் பெற்றார்.

கோல்ஃப்

ஆண்களுக்கான தனிநபர் ஸ்ட்ரோக் ஆட்டம் – ககன்ஜீத்  டி40ஆவது இடத்தையும் சுபங்கர் டி45ஆவது இடத்தையும் பிடித்தனர்.

டென்னிஸ்

        ஆண்கள் டென்னிஸில் நோவக் ஜோகோவிச் தங்கப் பதக்கம் வென்றார். அவர் இப்போது செரீனா வில்லியம்ஸ், ரஃபேல் நடால், ஆண்ட்ரே அகாஸி மற்றும் ஸ்டெஃபி கிராஃப் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவில் நான்கு கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே வீரராக இணைகிறார்.

துப்பாக்கி சுடுதல்- மகளிர்ஸ்கீட்

         மகளிர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றில் மகேஸ்வரி, ரைசா வெளியேறினர்

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய்வீர், அனிஷ் ஆகியோர் தகுதி பெறவில்லை.

இறகுப்பந்து லக்ஷ்யா சென்

லக்ஷ்யாசென் 20-22, 14-21 என்ற கணக்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் அரையிறுதி ஆட்டத்தில் தோற்றார்.

குத்துச்சண்டை

  லோவ்லினா போர்கோஹைன் நாக் அவுட்

ஆண்கள் ஹாக்கி

   ஷூட்அவுட் முறையில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்

பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஹீட் 1ல் பாரூல் சவுத்ரி 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

IND VS SL ODI 2024: சுழலுக்கு சரிந்த இந்திய பேட்ஸ்மென்கள்

ind vs sl odi - 2026

இலங்கை-இந்தியா இரண்டாவது ஒருநாள் ஆட்டம் – கொழும்பு – 04.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

       இலங்கை அணி (9 விக்கெட்டுக்கு 240, அவிஷ்கா 40, கமிந்து 40, வாஷிங்டன் 3-30, குல்தீப் 2-33) இந்திய அணியை (42.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையிம் இழந்து 208, ரோஹித் 64, அக்சர் 44, வான்டர்சே 6-33, அசலங்கா 3-20) 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இலங்கை, முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை நிறுத்தவும், பிடிக்கவும், சில சமயங்களில் விறுவிறுப்பாகத் பந்து திரும்பவும் பெற்றனர், மேலும் ஆறு விக்கட்டுகளுக்கு 150 ரன்களுக்கு கீழே இருந்து அனியின் ஸ்கோரை இலங்கை அணி வீரர்கள் அற்புதமாக மீட்டனர். துனித்வெல்லலகே ஆட்டக்களத்தின் நிலையை மீறி, ஒரு சிறப்பான பங்களிப்பைச் செய்தார். ஒரு பந்திற்கு மேல் ஒரு ரன் கணக்கில் ரன் எடுத்தார்.

இரண்டாவதாக விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் ரோஹித் சர்மா ஆடிய அபராமன ஆட்டட்டால் ஒரு நல்ல ரன் ரேட்டுடன் அனியை முன்னோக்கி வைத்தார். பின்னர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியா சரிந்தது, மேலும் அவர்கள் 140 ரன்களை எடுப்பதற்குள் பாதி பேர் ஆட்டமிழந்து திரும்பினர்.

வெள்ளியன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும்  இவை அனைத்தும் நடந்தன, மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று இந்தியாவின் இந்த வெள்ளைப் பந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை தனது முதல் வெற்றியைத் துரத்தியதால் அவை மீண்டும் நடந்தன. அவர்கள் மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஐ சமன் செய்திருந்தனர், இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றனர். முதல் ஒருநாள் போட்டியையும் டை செய்திருந்தனர்.

       இலங்கை ஒரு சிறப்பாகச் செல்ல ஆசைப்பட்டது, இறுதியாக அவர்கள் அதற்கான பணியைச் செய்தார்கள், மேலும் அவர்களின் ஹீரோ அவர்களின் அசல் அணியில் கூட இல்லை. 2015 டிசம்பரில் அறிமுகமான ஜெஃப்ரி வான்டர்சே, இதற்கு முன்பு 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர், நீண்ட காலமாக அண்டர்ஸ்டடி அந்தஸ்துக்கு அனுப்பப்பட்ட லெக் ஸ்பின்னர், வனிந்து ஹசரங்காவின் தொடை எலும்புகளுக்கு நன்றி, இந்த போட்டிக்கு முன்னதாக அணியில் மட்டுமே அழைக்கப்பட்டார். ரோஹித், ஷுப்மான் கில், ஷிவம் துபே, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை 29 பந்துகளில் அவுட்டாக்கி இந்தியாவின் பேட்டிங்கின் இதயத்தை வான்டர்சே கிழித்தெறிந்தார், அவர் முடிவில் 29 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார்.

வெள்ளியன்று இந்தியா ஒரு வித்தியாசமான சரிவில் இருந்து மீண்டு வந்த நிலையில், இந்த முறை அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தங்கள் இலக்கை 56 ரன்களுக்குள் கொண்டு வந்தனர், இந்த நேரத்தில் வாண்டர்சே பெரும்பாலும் தாக்குதலில் இருந்து வெளியேறினார், ஆனால் இந்தியா முன்னேற அச்சுறுத்தியபோது, சரித் அசலங்கா தனது பகுதி நேர ஆஃப்ஸ்பின் மூலம் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார், இப்போது அவர் தன்னை மீண்டும் அழைத்து வந்து அக்சர் மற்றும் வாஷிங்டன் இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் எடுத்தார்,

         ஜூலை 2021க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் 32 ரன் வெற்றி இதுவாகும். வெள்ளிக் கிழமை சமன் செய்வதற்கு முன்பு அவர்கள் தொடர்ந்து ஏழு சந்திப்புகளில் தோல்வியடைந்தனர். வான்டர்சேயின் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் ஒரு பெருமைமிக்க பாரம்பரியத்தைத் தொடர்ந்தன: முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் அகிலா தனஞ்சய ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆறு விக்கட்டுகள் எடுத்த ஐந்தாவது இலங்கை பந்துவீச்சாளர் ஆனார்.

ஆடி அமாவாசை : சதுரகிரியில் லட்சக் கணக்கில் பக்தர்கள் தரிசனம்!

sathuragiri adi amavasai - 2026
#image_title

மதுரை விருதுநகர் மாவட்டங்களை இணைத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் , மதுரை ,சென்னை ,திருச்சி ,கோவை , நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகாலை முதலிலே பக்தர்கள் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,11 காவல் துணை கண்காணிப்பாளர்கள் ,25 காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் உட்பட 1420 காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றச்சம்பங் வகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அடிவாரப் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டது.

தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து 60 பேரிடர் மீட்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமிக்கும் சுந்தரமூர்த்தி மற்றும் பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அமாவாசை பூஜைகள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நடந்தது. பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

219வது நினைவு நாள்; தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை!

deeran chinnamalai anniversary - 2026
#image_title

தீரன் சின்னமலை 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு வெங்கடேசன் எம்எல்ஏ., உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சங்க தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன் , பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், உள்ளிட்ட நிர்வாகிகள்இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திமுக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீத மணிமாறன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் அருண் விளையாட்டு மேம்பாட்டு அணிய பிரதாப், சமூக ஆர்வலர் சங்கர் கணேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர்கள் பேரவை சார்பாக அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள நினைவு தூனில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீரன் சின்னமலை சிலைக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாநில பொருளாளர் திலகபாமா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, கிழக்கு மாவட்ட தலைவர் குரு பாலமுருகன், மாவட்ட செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர் விஜயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன், மதுரை மேற்கு மண்டல செயலாளர் சிவானந்தம், மதுரை மண்டல பொறுப்பாளர்கள் ஹக்கிம், திருநாவுக்கரசு, சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், தொகுதி செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் சதீஷ், நிர்வாகிகள் மயில்வாகனம், ராணுவ பிரிவு தனபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர். முக்குலத்தோர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் சார்பாக சார்லஸ் ,செந்தில்குமார் ஆதி முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் அழகர், சோழவந்தான் மாவட்டச் செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் யோகநாதன், அழகாபுரி ரவி, பேரூர் செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாலமேடு கவுண்டர்கள் உறவின்முறை சங்கம் சார்பாக பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

15 பி மேட்டுப்பட்டி கிராம கவுண்டர்கள் உறவின்முறை சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வநது தீரன் சின்னமலை சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஆடி அமாவாசை; வைகைக் கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

tharpanam in thiruvedagam vaigai river - 2026
#image_title

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில், இறந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும். குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக அதிகாலையிலே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இங்குள்ள போத்திகள் மற்றும் விற்பனர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தொடர்ந்துஇங்குள்ள அருள்மிகு ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் திருவேடகம் சாய்பாபா கோவில் அருகில் உள்ளவைகை ஆற்றில் சோழவந்தான் வைகை ஆற்றில், அணைப்பட்டி வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.

மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம்,வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் ஆடி அமாவாசை தர்பணம் நடைபெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: எட்டாம் நாளில் இந்திய அணி!

paris olympics 2024 - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்

      துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஆகஸ்டு 3ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் 4ஆவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். மனு பாகக்ரும், ஹங்கேரியின் வெரோனிகாவும் தலா 28 புள்ளிகளை சேர்த்து 3ஆவது இடத்தில் இருந்தனர்.

        இதனால் வெண்கலப் பதக்கம் யாருக்கு என்பதை தீர்மானிக்க ஷுட் ஆஃப் சுற்று நடத்தப்பட்டது. இதில் வெரோனிகா 3 புள்ளிகளை சேர்த்த நிலையில் மனு பாகர் சிறப்பாக செயல்படத் தவறினார். இதனால் வெரோனிகா வெண்கலப் பதக்கம் வென்றார்.

         4ஆவது இடம் பிடித்ததன் மூலம் ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைக்க நினைத்த மனு பாகரின் எண்ணம் நிறைவேறாமல் போனது. அவர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

கொரியாவின் ஜின் யங், பிரான்ஸின் கமிலி ஜெட்ரிஜெவ்ஸ்கி ஆகியோர் தலா 37 புள்ளிகள் சேர்த்து முதலிடத்தில் இருந்தனர். இதையடுத்து ஷுட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜின் யங் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். கமிலி ஜெட்ரிஜெவ்ஸ்கி வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

  பதக்கத்தை தவறவிட்டது குறித்து மனு பாக்கர் கூறும்போது, இறுதிப் போட்டியின் போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஒவ்வொரு ஷாட்டிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க முயற்சித்தேன். ஆனால், அது நினைத்தபடி நடக்கவில்லை. இருப்பினும் அடுத்த வாய்ப்பு என்பது எப்போதும் இருக்கும். ஆகவே அடுத்த முறை என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன்” என்றார்.

வில்வித்தை – கால் இறுதியில் தீபிகா தோல்வி மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பன் உடன் மோதினார். இதில் தீபிகா குமாரி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

         கால் இறுதி சுற்றில் தீபிகா குமாரி, கொரியாவின் சுஹ்யோன் நாம் உடன் மோதினார். இதில் தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். 4 செட்களின் முடிவில் போட்டி 4-4 என சமநிலையில் இருந்தது. ஆனால் கடைசி செட்டில் தீபிகா குமாரி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினார்.

ஹாக்கி கால் இறுதியில்

‘இந்தியா – இங்கிலாந்து’ பலப்பரீட்சை: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கிஅணி லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் 2-வது இடம் பிடித்திருந்தது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் 52 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.

இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்திருந்தது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அந்த அணி இந்தியாவுக்கு கடும் சவாலாக திகழக்கூடும். இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

வில்வித்தை – பஜன் கவுர் ஏமாற்றம்

மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பஜன் கவுர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேஷியாவின் தியானந்த கொய்ருனிசாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷுட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தியானந்த கொய்ருனிசா சிறப்பாக செயல்பட்டு 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதி சுற்றில் கால்பதிப்பாரா லக்‌ஷயா சென்?

பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்று ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. இதில் உலகத் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்‌ஷயா சென், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள வரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இந்த ஆட்டம் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக விளையாடி வரும் லக்‌ஷயா சென் தனது கால் இறுதி சுற்றில் 12ஆம் நிலை வீரரான சீனதைபேவின் தியன் ஷென்னை 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்திருந்தார். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர், படைத்திருந்தார். இன்றைய ஆட்டம் லக்‌ஷயா சென்னுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். ஏனெனில் 30 வயதான விக்டர் ஆக்சல்சென் நடப்பு சாம்பியனாக திகழ்கிறார்.

         விக்டர் ஆக்சல்சென்னுடன், லக்‌ஷயா சென் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளார். இதில் விக்டர் ஆக்சல்சென் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். லக்‌ஷயா சென் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளார். எனினும் இந்த சீசனில் விக்டர் ஆக்சல்சென் ஒரே ஒரு பட்டம் மட்டுமே வென்றிருந்தார். ஜூன் மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஓபன் போட்டியின் போது கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட விக்டர் ஆக்சல்சென் இந்தோனேசியா ஓபனில் இருந்து விலகியிருந்தார்.

ஆடி-18 நாளில் சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான காலண்டர் பூஜை போட்டு வெளியீடு!

sivakasi calender
#image_title
  • சிவகாசியில், ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில், ‘2025’ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் வெளியீடு… QR கோடுடன் காலண்டர் அறிமுகம்…
  • 234 சட்டமன்ற தொகுதிகளின் சிறப்பம்சங்கள் குறித்து மெகா சைஸ் காலண்டர் அறிமுகம்…..

‘2025’ ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க, சிவகாசியின் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளான இன்று, புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் முக்கியமான தொழில்களில் முதன்மையானதாக அச்சகங்கள் இருந்து வருகிறது. இங்குள்ள அச்சகங்களில், 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளில் மட்டும் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றன.

சிவகாசி அச்சகங்களில் வழக்கமான தினசரி காலண்டர்களுடன் பல வடிவங்களில் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

டை கட்டிங் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், சில்வர் கோட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், யூவி காலண்டர், கையடக்க காலண்டர் முதல் மெகா சைஸ் வரையிலான காலண்டர்கள், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், பல வடிவங்களில் சுவாமி படங்களுடன், அழகிய போட்டோ பிரேம்களுடன் கூடிய காலண்டர்கள், இந்து கடவுள்கள், கிறிஸ்து மற்றும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள், தமிழக பிரபல அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தமிழகத்தின் பிரபலமான இடங்கள், இந்தியாவின் முக்கிய இடங்கள், உலக நாடுகளில் பிரபலமான இடங்கள் என கண்கவரும் வகையில் அச்சிடப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களிலான காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் புது ரகம் மற்றும் புது வடிவங்களில் காலண்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்களில் காலண்டர்கள் தயாராகும்.

தற்போது, வரும் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளன்று காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்படும்.

தயாராகியுள்ள காலண்டர் ஆல்பங்கள், காலண்டர்கள் ஆர்டர்கள் எடுக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆல்பங்களில் இருக்கும் மாதிரிகளை வாடிக்கையாளர் களிடம் காண்பித்து, அவர்கள் விரும்பும் ரக காலண்டர்களை ஆர்டர்கள் பெற்று காலண்டர் நிறுவனத்திற்கு முகவர்கள் தருவார்கள்.

முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ரக காலண்டர்களை தயார் செய்து அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும். ஆடி 18ம் பெருக்கு நாளிலிருந்தே வரும் புத்தாண்டிற்கான காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிடும்.

ஆடிப் பெருக்கு நாளில், புத்தாண்டு காலண்டர் சீசன் தொடங்கினாலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தான் காலண்டர் சீசன் உச்சகட்ட விறுவிறுப்பில் இருக்கும்.

தற்போது, முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலண்டர் ஆல்பங்கள் இன்று, ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறும்போது, ஒவ்வோர் ஆண்டும் தினசரி காலண்டர்களில் புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வரும் ‘2025’ ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெகா சைஸிலான ‘மரகத காலம்’ காலண்டரும், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் புதுமையான வகையிலான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், அன்றைய காலண்டர் தாளில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த சட்டமன்ற தொகுதியின் சிறப்பம்சங்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், கடிகாரத்துடன் கூடிய மெகா சைஸ் காலண்டர் உட்பட பல ரகங்களிலான வழக்கமான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் மூலப்பொருட்கள், தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின் கட்டணம் போன்ற விலை உயர்வால் காலண்டரின் விலை 10 சதவீதம் உயரும் – என தெரிவித்தார், தமிழ்நாடு தினசரி காலண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – ஏழாம் நாளில் இந்திய அணி

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – ஏழாம் நாள் – 02.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மனுபாக்கருக்கு மேலும் ஒரு பதக்கம் வருமா?

         பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நேற்று தகுதி சுற்று நடைபெற்றது. துல்லியம், ரேப்பிடு ஆகிய இரு பிரிவுகளை உள்ளடக்கிய இந்த போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் 590 புள்ளிகளை குவித்து 2ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர், இரு பிரிவுகளிலும் முறையே 294 மற்றும் 296 புள்ளிகள் சேர்த்தார்.

         இந்த போட்டியில் 40 பேர் கலந்து கொண்ட நிலையில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் தகுதி சுற்றில் 581 புள்ளிகள் சேர்த்து 18-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

         பாரிஸ் ஒலிம்பிக்கில் 22 வயதான மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். தற்போது 3-வது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். இறுதிப் போட்டி இன்று பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.

படகுப் போட்டி – பால்ராஜ் பன்வார்

       பால்ராஜ் பன்வார் 23-வது இடம்: படகு போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 13 முதல் 24-வது இடங்களுக்கான பந்தயத்தில் கலந்து கொண்ட அவர், தனது பிரிவில் 5-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர், 23-வது இடத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.

வில்வித்தையில் பதக்கம் நழுவியது 

வில்வித்தையில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவாரா ஜோடி, இந்தோனேஷியாவின் தியானந்தா சோய்ருனிசா, ஆரிஃப் பங்கஸ்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் அங்கிதா பகத், தீரஜ் பொம்பதேவாரா ஜோடி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

         கால் இறுதி சுற்றில் இந்திய ஜோடி ஸ்பெயினின் கேனல்ஸ் எலியா, அச்சா கோன்சலஸ் பப்லோ ஜோடியுடன் மோதியது. இதில் அங்கிதா பகத், தீரஜ் பொம்பதேவாரா ஜோடி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் வரலாற்றில் அரை இறுதி சுற்றில் இந்திய ஜோடி, கொரியாவின் லிம் சிஹ்யோன், கிம் வூஜின் ஜோடியை எதிர்கொண்டது.

         இதில் அங்கிதா பகத், தீரஜ் பொம்பதேவாரா ஜோடி 2-6 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி அமெரிக்காவின் கேசி காஃப்ஹோல்ட், பிராடி ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

ஜூடோ -துலிகா மான் வெளியேற்றம் 

  ஜூடோவில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் துலிகா மான் தனது முதல் சுற்றில் 4 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள கியூபாவின் இடாலிஸ் ஓர்டிஸுடன் மோதினார். இதில் துலிகா மான் 0-10 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

1952-க்கு பிறகு ஆஸி.யை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி 

         ஆடவர் ஹாக்கியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 12-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் பீல்டு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றுக்கொடுத்தார். அடுத்த நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

         25-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் தாமஸ் கிரெய்க், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். 32- வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் கிடைத்தது. இதை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணியின் முன்னிலை 3-1 என அதிகரித்தது. 56-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் பிளேக் குரோவர்ஸ், பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 2-3 என நெருங்கி வந்தது. எனினும் எஞ்சிய 5 நிமிடங்களில் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. கடைசியாக 1972-ம் ஆண்டு முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்திருந்தது. அதன் பின்னர் 52 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது இந்திய அணி.

         ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணிக்கு இது 3ஆவது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதன் பின்னர் அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்தது. தொடர்ந்து அயர்லாந்து அணியை 2-0 என வீழ்த்தியது. அதேவேளையில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஆடிப் பெருக்கில் காவிரிக்குச் சீதனம் கொடுக்கும் விழா!

srirangam cauvery - 2026

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
(ஆசிரியர் கலை மகள்)

ஆடிபெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18 ஆம் நாள் ஆகும். ஆதாவது,ஆடி 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். ஆடிப்பெருக்கு தமிழக நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் பண்டிகை ஆகும். பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் கொங்கு நாட்டுக்காரர்கள் ஆடி நோம்பி என்றும் கூறுவார்கள்….

ஆடிப் பட்டம் தேடி விதை – விளை நிலங்களில் முதல் மழையை கொண்டு வரும் மாதம் ஆடி. கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.

விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆறு, ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளைப் போற்றும் விதமாக நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் ஆடிப்பெருக்கு.

சரபோஜி மன்னர்கள் ( மராட்டியர்கள்) தஞ்சை பூமியை ஆட்சி செய்த காலத்தில், ஷாஜி ராஜா எனும் மன்னர், ஆடிப்பெருக்கு வைபவத்தை ‘காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடி மகிழ்ந்தார் என்றும் அதையொட்டி மக்களும் அதை அப்படியே பின்பற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

சிலப்பதிகாரத்திலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதாக செய்திகள் உள்ளன.திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது! ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும்,மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். காவேரியை மகளாகப் பாவித்து இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் நீராடியும், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம். இதற்காக ஏராளமான புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
இதனால் குடும்பம் மற்றும் விவசாயம், தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.

தமிழ் வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்து உள்ளார்கள். ஒன்று தட்சணாயணம், மற்றொன்று உத்தராயணம். தை மாத தொடக்கம் உத்திராயணப் புண்ணிய காலம். ஆடி மாதம் தொடக்கம் தட்சணாயப் புண்ணிய காலம். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தட்சணாயன காலம் என்பது தேவர்களின் மாலைப்பொழுதாகும். எனவே தான் மாலை நேரத்தில் வீட்டில் சித்ரா அன்னங்களைத் தயார் செய்து கொண்டு நதிக்கரைக்கு போய் குழந்தை குட்டிகளுடன் உண்டு மகிழ்கிறோம். ஆடல் பாடல் நிகழ்ச்சியும் சில இடங்களில் உண்டு! கடனா நதி தாமிரபரணி நதி வைகை ஆறு காவிரி ஆறு போன்ற நதிகளில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடி பதினெட்டு: நடந்தாய் வாழி காவேரி…!

srirangam cauvery - 2026

ஆடி பதினெட்டு… வாழி காவேரி

– நங்கநல்லூர் J K SIVAN

இன்று காலை வாக்கிங் போகலாம் என்று ஐந்தரை மணிக்கு கதவைத் திறந்தபோது இரவு பெய்த மழையின் ஈரம் தெருவில் இருந்தது. காற்றில் ஒரு இன்ப குளிர்ச்சி. ஒன்றிரண்டு தூற்றல் பன்னீர் தெளித்தது. மகிழ்ச்சி தேகத்தோடு சேர்த்து மனத்தையும் குளிர்வித்தது.

ஆஷாட மாசம் எனப்படும் ஆடி தெய்வீக மாசம். லௌகீகம் ரொம்ப கலக்காதது. கடை வியாபாரிகள் மட்டும் கவனத்தை ஈர்க்க ”ஆடி விசேஷ தள்ளுபடி” கொடுப்பதாக தங்கள் பக்கம் இழுப்பார்கள்.

இந்த ஆடியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நாள் , எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் நாள் ஆடிப்பெருக்கு எனும் 18ம் பெருக்கு. அது இன்று. பொன்னியின் செல்வனில் முதல் அத்யாயத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் குதிரை மேல் வீராணம் ஏரிக்கரையில் சென்று கொண்டிருக்கும் போது சோழநாட்டு மக்கள் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதை ரசித்துக்கொண்டே சென்றது ஞாபகம் வருகிறது.

இந்த ஒரு பண்டிகைதான் நக்ஷத்ரம் திதி எல்லாம் பார்க்காமல் வெறும் தமிழ் தேதியை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கொண்டாடுவது. பஞ்சாங்கம் இதற்கு தேவையில்லை. எல்லா வீடுகளிலும் பலவித சித்ரான்னம், வாசலில் வண்ண கோலங்கள் காணப்படும் நாள்.

தண்ணீர் பங்கீட்டில் நமக்கும் கர்நாடகவாவுக்கும் ஒரு தகராறு இருந்து கொண்டே தான் இருக்கும். நல்லவேளை வருணபகவான் கருணையால் உபரி மழை பெயது, மேற்கு தொடர்ச்சி மலையில் காவிரியில் நீர் கரை புரண்டு யார் திறந்து விடுவதற்கும் காத்திராமல் தானே நமக்கு வந்தடைந்துள்ளது.

ஆங்கில மாதம் ஜூன்-ஜூலை முதல் தென்னகத்தின் மேற்கே மலைகளில் தென்மேற்கு பருவக் காற்றால் உந்தப்பட்டு பொழியும் மழைநீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பெருகி ஆறுகளாக ஓடும். இருக்கும் அத்தனை ஆற்றிலும் நீரின் வரத்து அதிகமாகும். பதினெட்டு தேதிகளில் அணைக்கட்டு நிரம்பி காவிரிக்கு நீர் திறந்து விடுவார்கள். தஞ்சை ஜில்லா டெல்டா பிரதேசங்களில் கொண்டாட்டம்.

அந்த ஏரி கடல் போல் விரிந்து பரந்து காணப்படுவது. தமிழகத்துக்கு முக்கியமாக சென்னை மாநகரத்துக்கு இப்போது நீர் தரும் வள்ளல்.

ஆடிப்பெருக்கின் போது சோழ நாட்டு நதிகளில் எல்லாம் தண்ணீர் வெள்ளமாக நிரம்பி, கொள்ளிடம் வழியாக வீராணம் ஏரிக்குள் நீர் குபுகுபு என்று புகும். அழகே தனி. விவசாயிகளுக்கு குதூகலம், ஆடிப்பட்டம் தேடி விதைப்பவர்கள் அல்லவா? ஆறுமாதத்தில் தைமாதத்தில் அறுவடை, பொங்கல் விழா நடக்கும்.

ஆடிப்பெருக்கு அன்று கிராமத்தில் குழந்தைகள் தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு விளையாடுவதை மக்கள் கும்பலாக ரசிப்பார்கள். பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங் எல்லோரும் புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். 

தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அவர்கள் சிரங்களை அலங்கரிக்கும். வட்டமாக முட்டு முட்டாக குடும்பத்தினர், நண்பர்களோடு, கரையோரங்களில் பாக்கு மட்டைகளில், வாழை இலைகளில், வித வித சித்திரான்னம் உண்பார்கள். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால் சோழ நாட்டு வயல்கள் செழிக்கும், தமிழக மக்கள் வயிறு நிரம்பும். நடந்தாய் நீ, இப்போது ஓடம்மா, வாழி காவேரி என்று பாட தோன்றும்.

ஆடிப்பெருக்கு தான் ஆரம்பம். இனிமே மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டி தீர்க்கபோகிறது என்று எல்லோரும் மகிழும் நாள் ஆடி பதினெட்டு.

தட்சணாயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான ஆடி மாதத்தில் பூமா தேவி அம்மனாக அவதரித்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. இதனால் இம்மாதம் ‘அம்மன் மாதமாக’ போற்றப்படுகிறது.

பெண்கள் தாலி மாற்றி புதுத்தாலி கயிறு அணிவது வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

ஆடி மாதம் விவசாயிகளுக்கு உகந்தமாதம். ஆடி பதினெட்டாம் தேதி விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவானது.

காவிரியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி, காவிரி பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை காவிரி டெல்டா மக்கள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அப்போது காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை, ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகு மணி மாலை, வளையல், அரிசி, பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.

ஆடிப்பெருக்கன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப்பொருட்கள் ஆற்றில் விடப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி காவிரிக்கு மலர் தூவி வணங்குவார்கள்.

காவிரி தேவி என அழைக்கப்படும் லோபா முத்திரை அகஸ்தியரின் மனைவி ஆவார். 18 தத்துவங்களை கடந்து யோகினியாக திகழும் நாள் இந்த ஆடிப்பெருக்காகும்.

அனைவரும் குடும்பத்தோடு காவிரி அம்மனுக்கு சித்ரான்னம் படைத்து காதோலை கருகுமணியை ஆற்றில் விட்டு ஜீவநாடியாக விளங்கும் காவிரி புது நீரை வரவேற்கும் விழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப் படுகிறது.

வடக்கே எப்படி கங்கை முக்கியமோ அந்த அளவு தென்னிந்தியாவில் காவேரி நமக்கு ஜீவாதாரமான நதி. தஞ்சை ஜில்லா டெல்டா தான் நமது நெற்களஞ்சியம். காவிரியின் பங்கு நமக்கு பசி தீர்ப்பதில் மிகப் பெரியது. வெகு ஆவலாக விவசாயிகள் பயிர்த் தொழிலாளர்கள்,

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும், கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.

உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.

இன்று சோழநாட்டு மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். 

வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

 சென்னைப்பட்டணத்தில் குழாயில் குளித்துவிட்டு நாமும் கொண்டாடுகிறோம்.நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம்.

 பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.