Home Blog Page 182

ஆடிப் பெருக்கில் காவிரிக்கு சீதனம் கொடுக்கும் விழா!

adiperukku cauvery seer - 2026
#image_title

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்

ஆடிபெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18 ஆம் நாள் ஆகும். ஆதாவது,ஆடி 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு என்று கூறுகிறோம். ஆடிப்பெருக்கு தமிழக நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் பண்டிகை ஆகும்.

பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் கொங்கு நாட்டுக்காரர்கள் ஆடி நோம்பி என்றும் கூறுவார்கள்.

ஆடிப் பட்டம் தேடி விதை – விளை நிலங்களில் முதல் மழையை கொண்டு வரும் மாதம் ஆடி. கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.

விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆறு, ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளைப் போற்றும் விதமாக நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் ஆடிப்பெருக்கு..

சரபோஜி மன்னர்கள் ( மராட்டியர்கள்) தஞ்சை பூமியை ஆட்சி செய்த காலத்தில், ஷாஜி ராஜா எனும் மன்னர், ஆடிப்பெருக்கு வைபவத்தை ‘காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடி மகிழ்ந்தார் என்றும் அதையொட்டி மக்களும் அதை அப்படியே பின்பற்றி கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

சிலப்பதிகாரத்திலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதாக செய்திகள் உள்ளன.திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது!

ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும்,மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். காவேரியை மகளாகப் பாவித்து இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் நீராடியும், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம். இதற்காக ஏராளமான புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் குடும்பம் மற்றும் விவசாயம், தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.

தமிழ் வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்து உள்ளார்கள். ஒன்று தட்சணாயணம், மற்றொன்று உத்தராயணம். தை மாத தொடக்கம் உத்திராயணப் புண்ணிய காலம். ஆடி மாதம் தொடக்கம் தட்சணாயப் புண்ணிய காலம். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தட்சணாயன காலம் என்பது தேவர்களின் மாலைப்பொழுதாகும். எனவே தான் மாலை நேரத்தில் வீட்டில் சித்ரா அன்னங்களைத் தயார் செய்து கொண்டு நதிக்கரைக்கு போய் குழந்தை குட்டிகளுடன் உண்டு மகிழ்கிறோம்.

ஆடல் பாடல் நிகழ்ச்சியும் சில இடங்களில் உண்டு! கடனா நதி தாமிரபரணி நதி வைகை ஆறு காவிரி ஆறு போன்ற நதிகளில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மூன்று தலைமுறையினர் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சி!

ilakkiyacharal chennai - 2026
#image_title

கவிமாமணி இளையவன் அவர்களால் தொடங்கப்பட்ட இலக்கியச் சாரல் அமைப்பு சென்னையில் பல அருமையான நிகழ்ச்சிகளை 25 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல பள்ளிகளிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இலக்கியச் சாரலின் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழாவானது சமீபத்தில் மயிலை ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா பள்ளி, மயிலாப்பூரில், நடந்தது. மூன்று தலைமுறையினர் பங்குக்கொண்ட முத்தாய்ப்பான விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

மாணவி சசி த்ருஷிக்கா பாடிய ‘திருப்புகழ்’ இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. கா. குமரேசன், தலைவர் (பொறுப்பு), இலக்கியச் சாரல், வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சிறார்கள் பங்கெடுத்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. ஆ. ப்ரீனு ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக்கையை வைத்து மழலைப் பாடல் ஒன்றை பாடினார்.

தா.பிராம்பிகா குடும்ப உறவுகளின் முக்கியவத்தை உணர்த்தும் ஒரு பாடலை பாடினார். ரா. அதிதி கவிமாமணி இளையவன் எழுதிய இராமாயணத்தை அழகாக பாடினார். ரா. அத்வைத் பாரதியாரின் யாதுமாகி நின்றாய்
மற்றும் கஜனனா எனத் தொடங்கும் பாடலையும் பாடினார்.

நிகழ்ச்சியில் அடுத்ததாக கவிமாமணி இளையவன் அவர்களை பாராட்டும் விதமாக ஒரு கவியரங்கமும் நடைபெற்றது. சொல்லருவி நாவரசர் ஆர். சீனிவாசன், தலைவர், நிறை இலக்கிய வட்டம், ஹைதரபாத், தலமையில் நடந்த கவியரங்கத்தில் ஜெயந்தி தளபதி, ஜெயஸ்ரீ சாரி, சுப. சந்திரசேகரன், ஜானகி குமரேசன் மற்றும் சீதாலெட்சுமி ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், கவிச்சுடர் கார்முகிலோன், கே.டி.ஹேமா, முன்னாள் தமிழ் துறை பேராசிரியர், டி.எஸ்,என் கல்லூரி,
நல்லப்பெருமாள், மூத்த உறுப்பினர், இலக்கியச் சாரல், சிறப்பித்தார்கள். கவிமாமணி இளையவன் அவர்களின் உயர்ந்த பண்புகளையும், இலக்கிய வட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளையும், அனைவரின் திறமைகளை ஊக்கப்படுத்தும் அவரின் நற்குணத்தையும் அனைவரும் புகழ்ந்து பாராட்டினர்.

சிறப்பு விருந்தினர்கள் கலைமாமணி டி. கே. எஸ். கலைவாணன் மற்றும் முனைவர் கவிச்சுடர் கார்மு கிலோன் அவர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

விஜயலெட்சுமி நாராயணன், நாகராஜன், முன்னாள் இலக்கியச் சாரல், சுவாமிநாதன், தா. சத்திய பிரியா, கு. பரமேஸ்வரி, விநாயகம் மற்றும் உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

புகழ் பெற்ற இந்த மயிலை ஸ்ரீ கற்பக வித்யாலயா பள்ளியில் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி, முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் அவர்களின் சகோதரருடைய பிள்ளைகள், சமூக சேவகி சரோஜினி வரதப்பன் போன்ற பிரபலங்கள் இந்த பள்ளியில் படித்ததை இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ. முரளி அவர்கள் தனது நன்றி உரையில் குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024 : ஐந்தாம் நாளில் இந்திய குழு…

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – ஐந்தாம் நாள் – 31.07.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 இன் 5 ஆம் நாளில், இந்தியக் குழுவிற்கான கவனம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலிருந்து இருந்து மற்ற விளையாட்டுகளுக்கு மாறுகிறது.

இன்று பதக்கப் போட்டிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை, இறகுப்பந்து நட்சத்திர ஷட்லர்களான பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட போட்டிகளின் காலிறுதியில் தங்கள் இடங்களை பதிவு செய்தனர்.

சிந்து எஸ்டோனியாவின் குயூபாவை 21-5, 21-10 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார். லக்ஷ்யாசென், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜொனாடன் கிறிஸ்டியை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் நேர் செட்டுகளில் கடுமையாகப் போராடி வென்றார்.

குத்துச்சண்டை – லவ்லினா காலிறுதிக்குச் சென்றார் பெண்களுக்கான 75 கிலோ குத்துச்சண்டை போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்னும் தனது வெற்றியின் மூலம் தகுதி பெற்றார். வில்வித்தை – தீபிகா குமாரி வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பெண்களுக்கான தனிநபர் போட்டியில் R16ஆவது சுற்றுக்கு தகுதி பெற்று பஜன் கவுருடன் இணைந்தார்.

துப்பாக்கி சுடுதல் துப்பாக்கி சுடும் வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் மற்றும் ஸ்வப்னில் குசலே ஆகியோர் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3ஆம் நிலை தகுதி நிகழ்வில் அதிரடியாக விளையாடினர்,

அங்கு ஸ்வப்னில் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கான டிக்கெட்டைப் பதிவு செய்தார்.டேபிள் டென்னிஸில், ஸ்ரீஜா அகுலா டேபிள் டென்னிஸில், ஸ்ரீஜா அகுலா தனது 32வது சுற்றில் வெற்றி பெற்று மகளிர் தனிநபர் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மீதமுள்ள போட்டிகள் இதற்கிடையில், எச்.எஸ். பிரணாய் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் தனது இறுதிக் குழு நிலை ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறும் நோக்கத்தில் களமிறங்குவார்.

நிஷாந்த் தேவ் ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய நேரப்படி 12:30 AMக்கு ஆண்களுக்கான 71 கிலோ குத்துச்சண்டை சுற்றில் போட்டியிடுகிறார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: மனு பாக்கரின் சாதனை!

paris olympics 2024 - 2026
#image_title
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஒலிம்பிக்ஸ் 2024 – நான்காம் நாள் – 30.07.2024

துப்பாக்கி சுடுதல் போட்டி – மனு பாக்கர் சாதனை

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கின் நாலாம் நாளான இன்று மனு பாக்கர், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தினார். இதன் மூலம், 22 வயதான மனு, கோடைகால ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மனு மற்றும் சரப்ஜோத் ஆகியோர் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றனர், ஆனால் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய இணை 13வது தொடரில் தென் கொரியர்களைக் காட்டிலும் விரைவாக 16 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.

          பிருத்விராஜ் தொண்டைமான் 22-வது இடத்தைப் பிடித்தார் மற்றும் ஆடவர் ட்ராப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார்.

படகு வலித்தல்

          ரோயிங் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பாலராஜ் பன்வார் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் மற்றும் அரையிறுதி A/B (பதக்கங்களுக்கு) தகுதி பெறத் தவறினார்.

ஆடவர் ஹாக்கி

          இந்திய ஆடவர் ஹாக்கி 2024 ஒலிம்பிக்கில் தோற்கடிக்கப்படாத ஓட்டத்தைத் தொடர அயர்லாந்தை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதன் பின்னர் ஆடவர் ஹாக்கி பூல் பி போட்டியில், அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தற்போது இந்திய ஹாக்கி அணி 7 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அதிகபட்சமாக 6 புள்ளிகளைப் பெறலாம், இது இந்தியாவை விஞ்சுவதற்கு போதாது.

இறகுப் பந்துப் போட்டி

          பாட்மிண்டனில், சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-13 மற்றும் 21-13 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது,

அதே நேரத்தில் பெண்கள் இரட்டையர் ஜோடியான அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ தங்கள் இறுதிப் போட்டியில் 15-21 மற்றும் தோல்வியடைந்து வெற்றியின்றி பிரச்சாரத்தை முடித்தனர்.

வில்வித்தை

          வில்வித்தையில், இந்தியாவின் பஜன் கவுர் பெண்களுக்கான தனிநபர் 1/8 சுற்றுக்கு தகுதி பெற்றார், அங்கிதா பகத் 1/32 சுற்றில் வெளியேறினார்.

குத்துச்சண்டை

          அமித் பங்கால் தனது ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பேட்ரிக் சின்யெம்பாவுக்கு எதிராக தோல்வியடைந்து இப்போது போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பயணம் பிலிப்பைன்ஸின் நெஸ்தி பெட்சியோவுக்கு எதிராக 0 க்கு 5 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம் 32ஆவது சுற்றில் தோல்வியடைந்தது.

IND Vs SL T20: பரபரப்பான சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

india vs srilanka t20 - 2026
#image_title

மூன்றாவது மற்றும் இறுதி டி20 ஆட்டம் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி

தொடரை வெற்றியுடன் தொடங்கிய பயிற்சியாளர் காம்பிர்!

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

          இந்திய அணி (9 விக்கெட்டுக்கு 137, கில் 39, பராக் 26, தீக்ஷனா 3-28, ஹசரங்க 2-29) இலங்கை அணியை ( 8 விக்கெட்டுக்கு 137, பெரேரா 46, குசல் மெண்டிஸ் 43, ரிங்கு 2-3, சூர்யகுமார் 2-5) சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.

ஒரு T20I இன் மிகவும் வினோதமான முடிவுகளில் ஒன்றில், பல்லேகலேவில் நடந்த சூப்பர் ஓவரில் இந்தியா இலங்கையை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். 50 ரன்களை கடப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க தடுமாறியது. இறுதியில் வாஷிங்டன் சுந்தர் ரியான் பராக் அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 137 ரன் எடுத்தது.

இந்திய அணி விக்கெட் வீழ்ச்சி

11/1 (ஓய் ஜெய்ஸ்வால், 1.6 ஓவர்கள்) 12/2 (எஸ். சாம்சன், 2.5 ஓவர்கள்) -14/3 (ஆர் சிங், 31 ஓவர்கள்) 30/4 (எஸ் யாதவ், 5.4 ஓவர்கள்) 48/5 (எஸ். துபே.8.4 ஓவர்கள்) 102/6 (எஸ். கில், 15.2 ஓவர்கள்) 105/7 (ஆர் பராக், 15.5 ஓவர்கள்) 137/8 (டபிள்யூ சுந்தர், 19.5 ஓவர்கள்) 137/9 (எம். சிராஜ், 19.6 ஓவர்கள்)

          போட்டியின் பெரும்பகுதிக்கு, இலங்கை மூன்று துறைகளிலும் இந்தியாவை விஞ்சியது, ஆனால் இறுதியில் அவர்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க அவர்களுக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

டி20 போட்டிகளில் இதுவரை பந்து வீசாத ரின்கு சிங், 19வது ஓவரை வீசி, வெறும் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20ஆவது தொடக்கத்தில் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு 85%ஆஅக இருந்தது. நாலாவது பந்தில் 55% ஆக மாறியது.

          இதனால் இலங்கைக்கு ஆறு பந்துகளில் ஆறு ரன் தேவைப்பட்டது. முகமது சிராஜுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது, ஆனால் பந்து நன்றாக ஸ்விங் ஆனாதால் சூர்யகுமார் யாதவ் தானே பந்துவீச முடிவு செய்தார். அவரும் முதல்முறையாக டி20யில் பந்துவீசினார். மேலும், இந்தியா ஓவர்-ரேட்டிற்கு பின்தங்கியிருந்தது மற்றும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும்.

ஆனால் சூர்யகுமார் ஐந்து ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை சமன் செய்தார்.

இலங்கை அணியின் விக்கெட் வீழ்ச்சி

58/1 (பி. நிசங்க, 8.5 ஓவர்கள்) 110/2 (கே. மெண்டிசு. 15.2 ஓவர்கள்) 117/3 (டபிள்யூ ஹசரங்கா, 16.3 ஓவர்கள்) 117/4 (சி. அசலன்க, 16.4 ஓவர்கள்) 129/5 (கே) பெரேரா, 18.2 ஓவர்கள்) 132/6 (ஆர் மென்டிஸ், 18.6 ஓவர்கள்) 132/7 (கே மென்டிஸ், 19.2 ஓவர்கள்) 132/8 (எம். தீக்சன. 19.3 ஓவர்கள்)

          சூப்பர் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வைட் மூலம் தொடங்கினார். ஆனால் குசல் பெரேரா மற்றும் பதும் நிஸ்ஸங்க ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் எல்லையில் கேட்ச் செய்தார்.

இந்தியாவிற்கு அவர்களின் சூப்பர் ஓவரில் மூன்று ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், மஹீஷ் தீக்ஷனாவின் முதல் பந்தை ஷார்ட் ஃபைன் லெக் நோக்கி சூர்யகுமார் ஸ்வீப் செய்தார், அங்கு அசித்த பெர்னாண்டோ தனது கால்கள் வழியாக பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அனுப்பினார். இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றொயும் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு கிடைத்தது.

          வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாகவும் சூரியகுமார் யாதவ்தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

கீழடி அகழாய்வில் கிடைத்த சுவாரஸ்யமான பொருள்!

kizhadi excavations - 2026
#image_title

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் கொண்ட வடிகால் கண்டுபிடிப்பு !

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு, வருகிறது.

இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்து வருகிறது. கீழடியில், நகர நாகரிகம் நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது. கி. மு 6 ஆம் நூற்றாண்டளவில், எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது என்பதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நிறுவி, இதனை நூலாக வெளியிட்டது.

நகர நாகரிகம் என்பதற்குப் பல்வேறு கூறுகள் உண்டு. வாழ்விடப் பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்
கூடங்கள், நீர்மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள், போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல் பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

கீழடியில், நீர் மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலானக் குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறைகிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மையின் சிறப்பினை அறிகிறோம்.

இன்று கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில், உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் மற்றும் அகலம் முறையே 36 செ.மீ, 18 செ.மீ ஆகும். தற்பொழுது, வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளம் கொண்டுள்ளது.

இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக் குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும்.

வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 107-ஆக உயர்வு!

vayanad flood and landslide - 2026
#image_title

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளத. இதன் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனமழையின் காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 70 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிலச்சரிவில் உடல்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
இந்த நிலச்சரிவில் சூரல்பாறை, வேளரிமலை, முண்டகயில், பொத்துகலு உள்ளிட்ட பகுதிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளின் பல பகுதிகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொத்துகலுவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட, கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு நடைபெற்ற இடம்நிலச்சரிவு நடைபெற்ற இடம்
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூருவிலிருந்து வயநாடு விரைந்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்கக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர்.மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர்.
இந்த நிலையில், கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் இன்று(ஜூலை 30) மிகக் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய உள்மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. நிலச்சரிவு தொடர்பாக 96569 38689 மற்றும் 80860 10833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு. மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

srivilliputhur adipuram kodiyertam - 2026
#image_title

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில்‌ பிரபலமான திருவிழா ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா இன்று வேத மந்திரங்கள் முழங்க காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் ஆக. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 9 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் – ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.

ஆக. 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பக தோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம்  நடைபெறுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: மூன்றாவது நாளில்!

paris olympics 2024 - 2026
#image_title

ஒலிம்பிக்ஸ் 2024 – மூன்றாம் நாள் – 29.07.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

துப்பாக்கி சுடுதல் – மனு பாக்கருக்கு இரண்டாவது பதக்கம் கிடைக்குமா?

10 மீட்டர் மகளிர் ஏர் ரைஃபில் – ரமிதா ஜிண்டால் 7ஆம் இடம் பிடித்து தோவி அடைந்தார்.

10 மீட்டர் ஆண்கள் ஏர் ரைஃபில் – அர்ஜுன் பபுதா நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்,

மனு பாக்கர் மற்றும் அவரது சக வீரர் சரப்ஜோத் சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதலில் சிறப்பாகச் செயல்பட்டனர். இவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை இந்திய நேரப்படி 1300 மணிக்கு இப்போட்டி நடைபெறும்.

இறகுப் பந்து – லக்ஷ்யா சென் வெற்றி

     அஷ்வினி பொன்னப்பா, தனிஷா க்ராஸ்டோ இணை மகளிர் டென்னிஸ் போட்டியில் 11-21, 12.21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மத்சுயமா, சிகாரு ஷிதா இணையிடம் தோல்வியடைந்தது.

         இடது முழங்கை காயம் காரணமாக குவாத்தமாலா வீரர் போட்டியில் இருந்து விலகியதால், பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடக்க ஆண்கள் ஒற்றையர் பிரிவு L போட்டியில் கெவின் கார்டனை வீழ்த்திய நட்சத்திர, இந்திய இறகுப் பந்து பாட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் முதல் வெற்றியை கணக்கிட முடியாது என்று உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது. அவர் இன்று ஆடவர் ஒற்றையர் குழு நிலை ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியை 2-0 (21-19, 21-14) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வரலாற்றை எழுதி, ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றது. குரூப் சி பிரிவில் இந்தோனேசியாவின் முஹம்மது ரியான் ஆர்டியான்டோ-ஃபஜர் அல்ஃபியனுக்கு எதிராக பிரான்சின் லூகாஸ் கோர்வி-ரோனான் லாபார் தோல்வியை ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்களன்று சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் காலிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தினர்.

(வில்வித்தை) – ஆடவர் ரிகர்வ் அணி

         இந்திய வில்வித்தை  ஆடவர் ரிகர்வ் அணி காலிறுதியில் 2-6 என்ற கணக்கில் துருக்கியிடம் தோற்றது. நான்காவது செட்டை 54-57 என இந்தியா இழந்தது. இதனால் ஆடவர் ரீகர்வ் அணி காலிறுதியில் துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று, அணி நிகழ்வுகளில் தன்னுடைய வெற்றிக்கான வாய்ப்பை இழந்து, வெளியேறியது.

டென்னிஸ் – ரபேல் நாடால் தோல்வி

         நோவக் ஜோகோவிச் இரண்டாவது சுற்று மோதலில் ரஃபேல் நடாலை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஹாக்கி

இந்திய அணி இரண்டாவது சுற்றில் அர்ஜெண்டைனாவை ட்ரா செய்தது. ஹர்மன்ப்ரீத்தின் தாமதமான ஸ்டிரைக்கால் இந்திய ஹாக்கி அணி 1-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிராக டிரா செய்தது. இதற்கு முன்னர் 27ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.

ஒலிம்பிக்ஸ் 2024 – மூன்றாம் நாள் – 29.07.2024

ஒலிம்பிக்ஸ் 2024 – மூன்றாம் நாள் – 29.07.2024

 

துப்பாக்கி சுடுதல் – மனு பாக்கருக்கு இரண்டாவது பதக்கம் கிடைக்குமா?

10 மீட்டர் மகளிர் ஏர் ரைஃபில் – ரமிதா ஜிண்டால் 7ஆம் இடம் பிடித்து தோவி அடைந்தார்.

10 மீட்டர் ஆண்கள் ஏர் ரைஃபில் – அர்ஜுன் பபுதா நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்,

மனு பாக்கர் மற்றும் அவரது சக வீரர் சரப்ஜோத் சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதலில் சிறப்பாகச் செயல்பட்டனர். இவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை இந்திய நேரப்படி 1300 மணிக்கு இப்போட்டி நடைபெறும்.

 

இறகுப் பந்து – லக்ஷ்யா சென் வெற்றி

          அஷ்வினி பொன்னப்பா, தனிஷா க்ராஸ்டோ இணை மகளிர் டென்னிஸ் போட்டியில் 11-21, 12.21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மத்சுயமா, சிகாரு ஷிதா இணையிடம் தோல்வியடைந்தது.

          இடது முழங்கை காயம் காரணமாக குவாத்தமாலா வீரர் போட்டியில் இருந்து விலகியதால், பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடக்க ஆண்கள் ஒற்றையர் பிரிவு L போட்டியில் கெவின் கார்டனை வீழ்த்திய நட்சத்திர, இந்திய இறகுப் பந்து பாட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் முதல் வெற்றியை கணக்கிட முடியாது என்று உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது. அவர் இன்று ஆடவர் ஒற்றையர் குழு நிலை ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியை 2-0 (21-19, 21-14) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வரலாற்றை எழுதி, ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றது. குரூப் சி பிரிவில் இந்தோனேசியாவின் முஹம்மது ரியான் ஆர்டியான்டோ-ஃபஜர் அல்ஃபியனுக்கு எதிராக பிரான்சின் லூகாஸ் கோர்வி-ரோனான் லாபார் தோல்வியை ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்களன்று சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் காலிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தினர்.

(வில்வித்தை) – ஆடவர் ரிகர்வ் அணி

          இந்திய வில்வித்தை  ஆடவர் ரிகர்வ் அணி காலிறுதியில் 2-6 என்ற கணக்கில் துருக்கியிடம் தோற்றது. நான்காவது செட்டை 54-57 என இந்தியா இழந்தது. இதனால் ஆடவர் ரீகர்வ் அணி காலிறுதியில் துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று, அணி நிகழ்வுகளில் தன்னுடைய வெற்றிக்கான வாய்ப்பை இழந்து, வெளியேறியது.

டென்னிஸ் – ரபேல் நாடால் தோல்வி

          நோவக் ஜோகோவிச் இரண்டாவது சுற்று மோதலில் ரஃபேல் நடாலை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஹாக்கி

இந்திய அணி இரண்டாவது சுற்றில் அர்ஜெண்டைனாவை ட்ரா செய்தது. ஹர்மன்ப்ரீத்தின் தாமதமான ஸ்டிரைக்கால் இந்திய ஹாக்கி அணி 1-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிராக டிரா செய்தது. இதற்கு முன்னர் 27ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.