இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மனு பாக்கர் – 10 மீட்டர் ஏர் பிஸ்டல் – வெண்கலப் பதக்கம்
இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கணை மனுபாக்கர் இன்று, ஞாயிற்றுக்கிழமை பாரீஸ் ஒலிம்பிக் 2024இல் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று அவர் வரலாறு படைத்தார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற பாக்கரின் சாதனை மகத்தானது, இதன் மூலம் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பதக்கத்திற்காக இந்தியாவின் 13 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
22 வயதான பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், கொரியாவின் கிம் யெஜி 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், அவரது சகநாட்டவரான ஜின் யே ஓ 243.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த வெண்கலப் பதக்கம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். பாக்கரின் உறுதியான செயல்திறன் இந்த பதக்கமில்லா வறட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன், இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லாமல் இருந்தது.
குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி முதல் ரவுண்டில் வெற்றி
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஹரியானாவைச் சேர்ந்த பிரீத்தி பாவார் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 20 வயதான பிரீத்தி, கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வரும் 31ஆம் தேதி நடக்கிறது.
இகட் ஜரின் தன்னோடு குத்துச்சண்டைப் போட்டியில் விளையாடிய ஜெர்மனி நாடு வீராங்கனையைத் தோற்கடித்து R16சுற்றுக்குள் நுழைந்தார்.
துப்பாக்கி சுடுதலில் இறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ரமிதா – இளவேனில் வாலறிவன் தேர்ச்சி பெறவில்லை
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், ரமிதா ஆகியோர் விளையாடினர். மொத்தம் 43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் இந்திய வீராங்கனை ரமிதா சிறப்பாக ஆடி 631.5 புள்ளிகளோடு 5ஆம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10ஆவது இடம்பிடித்திருந்தார். 8ஆவது இடம்பிடித்த பிரான்ஸ் வீராங்கனைக்கும் இளவேனிலுக்கும் 0.7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும் என்ற நிலையில் நூலிழையில் தோற்றார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்.
தகுதிச் சுற்றில் ஏழாம் இடத்தைபிடித்ததால் அர்ஜுன்சிங் பபுதா ஆண்கள் 100 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் இறுதிச் சுற்றிற்குச் சென்றார்.
இறகுப் பந்து ஆட்டத்தில் பி.வி.சிந்து, எச்.எஸ். பிரணாய் வெற்றி
தனது முதல் போட்டியில் ஆடிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மாலத்தீவு வீராங்கனை ரசாக்கை 21-6, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
அதே சமயம் ஆண்கள் பாட்மிண்டன் ஆட்டத்தில் எச்.எஸ். பிரணாய் ஜெர்மனியின் ஃபேபியன் ரோத் என்பவரை எதிர்த்து விளையாடி 21-18, 21-12 என்ற நேர் செட்டுகளில் வெற்றிபெற்றார்.
துடுப்புப் படகு பன்வர் பால்ராஜ் முன்னேற்றம்
ஆண்களுக்கான துடுப்புப்படகு போட்டியில் ரீப்பேஜ் சுற்றில் இந்திய வீரர் பன்வர் பால்ராஜ் இரண்டாம் இடம்பிடித்தார். இதன்மூலம் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
டேபிள் டென்னிஸ்
(அ) மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா இரண்டாம் சுற்றில் கிறிஸ்டியானா கில்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டு வீராங்கணையைத் தோற்கடித்து அடுத்த சுற்றான R32க்குள் நுழைந்தார்.
(ஆ) மற்றொரு ஆட்டத்தில் மணிகா பத்ராவும் இங்கிலாந்தின் அன்னா ஹுர்சியத் தோற்கடித்து அடுத்த சுற்றான R32க்குள் நுழைந்தார்.
(இ) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரத் கமல் ஸ்லோவேனியாவின் டெனி கோசுல் என்ற வீரரிடம் 4-2 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.
நீச்சல் போட்டி
ஆண்கள் பேக்ஸ்ட்ரோக் 100 மீட்டர் போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ் தோல்வியடைந்தார். மகளிர் 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் தினிதி (டெ)ஸிங்கு தோல்வியடைந்தார்.
வில்வித்தை
மகளிர் குழு போட்டியில் அங்கிதா பக்த், பஜன் கவுர், தீபிகா குமாரி ஆகியோரைக் கொண்ட இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.
இருப்பினும் கால் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய மகளிர் அணி அர்ஜெண்டைனாவிற்கு எதிராக 0-6 என்ற புள்ளி கணக்கில் தோற்றதால் போட்டியில் இருந்து வெளியேறியது.
டென்னிஸ்
சுமித் நாகல் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஃப்ரான்சின் கொரெண்டின் மௌடெட் என்ற வீரரிடம் முதல் சுற்றில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
பானையில் கொதிக்கும் அரிசிச் சோறு வெந்துவிட்டதா இல்லையா என்று பார்ப்பதற்கு சமைப்பவர் அதிலிருந்து கையால் ஒரு பருக்கையை எடுத்து விரல்களால் நசுக்கிப் பார்ப்பார். அரிசி வெந்ததா என்று பார்க்கும் சோதனை இது. ஒரு பருக்கையைப் பார்த்தால், பானையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பருக்கைகளின் நிலைமையை அறிந்து கொள்ளும் விஞ்ஞானப் பூர்வமான முறை இந்த ‘ஸ்தாலீ புலாக நியாயம்’.
இக்காலத் தலைமுறையினருக்கு இது புதிய சொல்லாகத் தோன்றலாம். கொஞ்சம் மரபு சார்ந்த நியம நிஷ்டைகளை அறிந்தவர்களுக்கு, ‘ஸ்தாலீபுலாகம்’ என்ற சொல் பரிச்சயமானதே.
ஆவக்காய் ஊறுகாய் போடுவதற்காக மாங்காய் பறிக்க ஒருவர் மாந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கு மாமரங்களில் மாங்காய் நிறைய காய்த்திருந்தது. ஊறுகாய் போடுவதற்கு புளிப்பு மாங்காய் வேண்டுமென்று தோட்டக்காரரிடம் கேட்டார். அவர் ஒரு மரத்திடம் அழைத்துச் சென்று அதிலிருந்து ஒரு காயைப் பறித்து கத்தியால் ஒரு துண்டு வெட்டி அவரிடம் கொடுத்தார். அதைக் கடித்துப் பார்த்துவிட்டு, “நல்ல புளிப்பாக இருக்கிறது. நூறு காய்கள் பறித்துத் தாருங்கள்” என்று கேட்டார்.
மரத்துக் காயில் ஒன்றை ருசி பார்த்தால் அந்த மரத்தின் காய்கள் எல்லாம் அதே ருசியில் இருக்கும் என்பது அனுபவம். இதே முறை இனிப்பு மாம்பழம் வேண்டுமென்றாலும் பயன்படும். ஒரு பழத்தின் ஜூசைப் பிழிந்து கொடுப்பார்கள். அந்த மரத்தின் பழங்கள் எல்லாம் ஒரே வித ருசியில் இருக்கும். இதுவே ‘ஸ்தாலீ புலாக நியாயம்’
ஒரு நூலுக்கு விமரிசனம் எழுதுபவர், “இந்தப் புத்தகத்தில் உள்ள நூறு கவிதைகளும் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளன. ‘ஸ்தாலீ புலாகமாக’ இரண்டு கவிதைகளை எடுத்துக் கொள்வோம்” என்று எழுதுவார். அப்படியென்றால் என்ன? ஒரு கவிதையின் மதிப்புரையைப் பொறுத்து மீதி உள்ளவற்றை யூகித்துக் கொள்ளலாம் என்று வாசகர்களுக்குக் கூறுகிறார். இதுவே ஸ்தாலீ புலாக நியாயத்தின் சிறப்பு,
பானையில் இருந்து எடுத்துப் பார்த்த பருக்கை சரியாக வேகவில்லை என்றால் என்ன செய்வோம்? பானை சாதமும் இன்னும் வேகவில்லை என்று தீர்மானிப்போம். தேவையானால் சிறிது நீர் சேர்ப்போம். இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைப்போம். வேண்டுமென்றால் அடுப்பின் எரிபொருளை சரிசெய்து ஏற்றுவோம்.
ஒரு வெந்த பருக்கையானது, மீதி உள்ள அரிசிகள் எல்லாம் வெந்து விட்டன என்று சான்றிதழ் அளிக்கிறது. இதுவே இந்த நியாயத்திலுள்ள சிறப்பு. நம் கைக்குக் கிடைத்த பருக்கையைப் பொறுத்து நாம் எடுக்கும் தீர்மானம் அது.
இந்த நியாயத்தின் ஆழமான அர்த்தத்தை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஒரு மனிதன் செய்யும் நல்ல செயல் அந்த குடும்பத்திற்கே கௌரவத்தை அளிக்கிறது. அதற்கு மாறாக ஒரு மனிதன் செய்யும் மோசம் அந்த குடும்பதிற்கே கெட்ட பெயரை வாங்கிக் தருகிறது. தீய செயல் செய்தவனின் குடும்பத்தைப் பற்றி, “அந்த குடும்பமே அப்படிப்பட்டது. மோசமானது” என்று சமுதாயம் முத்திரை குத்திவிடும். நல்லவற்றை விட கெட்ட செயல்களே விரைவாகப் பரவும்.
இளைஞர்களில் ஒரு சிலர் ஒழுக்கமின்றி கிளப்புகளிலும் பப்புகளிலும் காலம் கழிக்கிறார்கள் அந்தத் தீமை இளைய சமுதாயத்தில் அனைவரின் மீதும் சுமத்தப்படுவதைப் பார்க்கிறோம். இளைய சமுதாயமே கெட்டுப் போய் விட்டது என்று அங்கலாய்க்கிறோம்.
மறுபுறம், ஆன்மீக குருமார்களின் நிறுவனங்களிலும், தன்னார்வு நிறுவனங்களிலும் மிகவும் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ளும் இளைஞர்களும் இல்லாமல் இல்லை. நமக்குத் தட்டுப்படுபவரின் நடத்தையைப் பொறுத்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். இதுவே இந்த நியாயத்தின் உட்பொருள்.
சில மனிதர்களோடு நமக்கு ஏற்படும் அனுபவத்தை, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி, அவர் வசிக்கும் பகுதிக்கும், அந்த மாவட்டத்திற்கும் கூட பொருத்திப் பேசுகிறோம். அந்த மாவட்டத்துக்காரர்களே அப்படித்தான். அவர்களை நம்பக் கூடாது என்றோ, அந்த குலத்தவர் கஞ்சக் கருமிகள். பூனைக்குக் கூட பிச்சை போடமாட்டர்கள். தானம் செய்யும் குணமே அவர்களிடம் கிடையாது என்றோ விமரிசனம் செய்வதைப் பார்க்கிறோம். சிலருக்கு நல்ல பெயர் சூட்டப்படுவதும் நடக்கிறது. நமக்குக் கிடைக்கும் தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்து இப்படிப்பட்ட அபிப்பிராயங்களுக்கு வருகிறோம்.
எனக்குத் தெரிந்த சிலர் குறிப்பிட்ட மாவட்டத்தின் பெயரைச் சொல்லி, “இந்த மாவட்டக்காரர்களுக்கு இங்கிதம் கிடையாது. அந்த நதி நீரின் பாதிப்பு அப்படி” என்று நிந்திப்பதைக் கேட்டிருக்கிறேன். மானுட அகங்காரமும், மனதின் பலவீனமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
“ஸ்டூவர்ட்புரம் எதற்குப் புகழ் பெற்றது?” என்று கூகுளில் தேடிப் பாருங்கள். “ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள இந்த கிராமம், திருடர்கள், பிக்பாகெட்காரர்கள், அரசியல் ஊழல்வாதிகள் ஆகியவற்றுக்குக் புகழ்பெற்றது” என்று பதில் வரும். எப்போதோ அந்தப் பிரதேசத்தில் இருந்த மூதாதையர்களின் நடத்தை அப்படிப்பட்டதாய் இருந்ததால் அந்தப் பெயர் வந்து விட்டது. ஸ்தாலீபுலாக நியாயம் என்றால் இதுவே அல்லவா.
நம் அண்டை தேசமான பாகிஸ்தான், 1948 முதல் நம் தேசத்தின் மீது செய்யும் அராஜகத்தின் காரணமாக பயங்கரவாத தேசமாக முத்திரையிடப்பட்டது.
இந்தியர்கள் தம்தம் வேலை காரணமாக பலவேறு தேசங்களில் நிலைபெற்றுள்ளார்கள். மிக அதிகமான, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தம் சிறந்த நடத்தை காரணமாக நல்ல ஒழுக்கம் நிறைந்தவர்களாகப் பெயர் எடுத்துள்ளார்கள். இந்தியர்கள் நல்லவர்கள் என்ற பெயர் நிலைத்து விட்டது.
இதற்கு மாறாக, மியான்மாரில் (பர்மா) உள்ளூர்வாசிகளான பௌத்தர்களின் மீது கொடுமைகள் செய்து வரும் ரோஹிங்காக்கள், சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம், பசுக்கள் மற்றும் மனிதர்களின் சட்டவிரோதமான கடத்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசிக்கத் தொடங்கினார்கள். தேச விரோத சக்திகள் இவர்களுக்கு உடந்தையாக நிற்கிறார்கள். மதத் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குவதில் இவர்கள் நிபுணர்கள். அதன் காரணமாக ரோஹிங்காக்கள் என்றாலே எப்படிப்பட்ட அபிப்பிராயம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
என் நண்பர்களில் ஒருவர் அண்மையில் ஈரான் தேசத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு எதிர்ப்பட்ட மூன்று, நான்கு கார் டிரைவர்கள் மிகவும் கௌரவமாக நடந்து கொண்டார்களாம். அது குறித்து முகநூலில் பதிவிட்டு, “அந்த ஏரியாவில் இருக்கும் டிரைவர்கள் நேர்மையானவர்கள்” என்று தன் அபிப்பிராயத்தை வெளியிட்டார். நமக்கு எதிர்ப்பட்ட பருக்கை வெந்தால், பானை சோறும் வெந்தாற்போலத்தான் என்று எண்ணுவது சகஜமே அல்லவா.
ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு வர்க்கத்திலும் எடுத்துக்காட்டான மனிதர்கள் இருப்பார்கள். அதற்கு எதிரான மனிதர்களும் இருப்பார்கள். சுவாமி விவேகானந்தரும் ஸ்ரீஅரவிந்தரும் பிறந்த வங்காளத்தில் தோன்றியவர்கள் அனைவரும் சாதுக்கள் அல்ல அல்லவா. அப்துல்கலாம் ஐயாவைக் கொண்டு தமிழ்நாட்டவர்கள் எல்லோரும் அவரைப் போன்றவர் என்று கூற இயலாதல்லவா.
ஒரு சிறந்த தந்தை தன் புதல்வனுக்கு இவ்விதம் அறிவுரை கூறுவார். “மகனே, சரியாக நடந்து கொள். நம் குடும்பத்தில் யார் சிறிய தவறு செய்தாலும் குடும்பத்திற்கே கெட்டபெயர் வந்துவிடும். ஜனங்கள், பெற்றவர்களையும் மூதாதையரையும் கூட இகழ்வார்கள். கவனமாக இரு” என்பார்.
ஒவ்வொரு மனிதரும் சரியாக நடந்து கொண்டால், ஊருக்கும் தேசத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நியாயம். யாரோ ஒருவர் தவறு செய்தால் எல்லோரையும் ஏன் குறை கூற வேண்டும் என்று கேட்டால், அது அப்படித்தான். அதுதான் உலகத்தின் வழி. கௌரவர்கள் நூறு பேரில் துரியோதனனின் தீய நடத்தையால் மீதி தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கெட்ட பெயர் வந்ததல்லவா.
ஸ்தாலீ புலாக நியாயத்தில் சில வரைமுறைகளும் இல்லாமல் இல்லை. குக்கர் வருவதற்கு முன், சமையலோடு அறிமுகம் உள்ளவர்களுக்கு, ‘பானை நடுவில் வேகாத சோறு’ என்ற அனுபவம் இருக்கும். அதாவது பானையில் சோதித்த ஒரு பருக்கை வெந்திருக்கும். ஆனால் சில பருக்கைகள் வேகாமல் இருந்து விடும். அவை பானையின் நடுவில் இருக்கும்.
இந்த அனுபவத்தை நினைக்கும் போது அண்மையில் நடந்த ‘எக்சிட் போல்’ முடிவுகள் நினைவுக்கு வருகிறது. நிருபர்கள் சந்திக்கும் குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு எல்லோருடைய அபிப்பிராயமும் இதுதான் என்று முடிவுக்கு வருவது. ஓரொரு முறை சர்வே செய்தவர்களின் முடிவுகள் செல்லாது போய் விடும். பானை நடுவில் வேகாத பருக்கைகள் போல.
“ஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் ஒரே ரகம். ஒரு கொடியில் மலரும் பூக்கள் ஒரே ரகம். ஆனால் ஒரு தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகள் ஏன் ஆளுக்கொரு ரகம்?” என்று பாடினார் ஒரு கவிஞர்.
ஒரு மரத்தில் காய்க்கும் ஒரு காயின் ருசி எல்லா காய்களுக்கும் இருப்பது போல, ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவறோ, சரியோ அனைவருக்கும் பொருத்துமா? இது அநியாயம் இல்லையா?
மனதின் குரல், 112ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 28.07.2024 ஒலிபரப்பு : சென்னை வானொலி நிலையம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!
நண்பர்களே, விளையாட்டு உலகத்தில் இந்த ஒலிம்பிக்ஸிலிருந்து சற்று விலகி, சில நாட்கள் முன்பாக கணித உலகிலும் கூட ஒரு ஒலிம்பிக் நடந்தேறியது. சர்வதேச கணித ஒலிம்பியாட். இந்த ஒலிம்பியாடிலே பாரதத்தின் மாணவர்கள், மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதிலே நமது அணியின் மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக நான்கு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன. சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், மொத்த பதக்கப் பட்டியலில் நமது அணியானது, தலைசிறந்த ஐந்து அணிகளில் ஒன்றாக வெற்றிகரமாக இடத்தைப் பிடித்தது. தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்த்த இந்த மாணவர்களின் பெயர்கள் –
புணேயில் வசிக்கும் ஆதித்ய வேங்கட் கணேஷ், புணேவைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரான சித்தார்த் சோப்டா, தில்லியின் அர்ஜுன் குப்தா, கிரேட்டர் நொய்டாவின் கனவ் தல்வார், மும்பையின் ருஷீல் மாதுர், தவிர குவாஹாடியைச் சேர்ந்த ஆனந்தோ பாதுரி ஆகியோர்.
#image_title
நண்பர்களே, இன்று மனதின் குரலில் நான் இந்த இளைய வெற்றியாளர்களுக்குச் சிறப்பு வரவேற்பு நல்கியிருக்கிறேன். இவர்கள் அனைவரும் இப்போது தொலைபேசியில் நம்மோடு இணைந்திருக்கிறார்கள்.
பிரதமர் – வணக்கம் நண்பர்களே! மனதின் குரலில் நண்பர்கள் உங்களனைவரையும் வரவேற்கிறேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?
மாணவர்கள் – நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் சார்.
பிரதமர் – நல்லது நண்பர்களே, மனதின் குரல் வாயிலா, நாட்டுமக்கள் எல்லாரும் உங்க எல்லாரோட அனுபவங்களையும் கேட்க ரொம்ப ஆவலா இருக்காங்க. நான் முதல்ல ஆதித்யா, சித்தார்த் இவங்க கிட்டேர்ந்து ஆரம்பிக்கறேன். நீங்க புணேயில இருக்கீங்க, இந்த ஒலிம்பியாட் காலகட்டத்தில நீங்க சந்திச்ச அனுபவங்களை எல்லார் கூடவும் பகிர்ந்துக்கங்களேன்.
ஆதித்யா – எனக்கு கணிதத்தில கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க. 6ஆம் வகுப்பு கணிதத்தை என் ஆசிரியர், ஓம்பிரகாஷ் சார் தான் கத்துக் குடுத்தாங்க, பிறகு அவங்க தான் கணிதம் மேல எனக்கு ஆர்வத்தை வளர்த்தாங்க, என்னால நல்லா கத்துக்க முடிஞ்சுது, எனக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சுது.
பிரதமர் – உங்க நண்பர் என்ன சொல்றாரு?
சித்தார்த் – சார் என் பேரு சித்தார்த், நான் புணேலேர்ந்து வரேன். நானும் கூட இப்ப 12ஆம் வகுப்புல தேர்ச்சி பெற்றிருக்கேன். ஐ.எம்.ஓவுல 2ஆவது முறையா பங்கேற்கறேன். எனக்கும் கணிதத்தில ஏகப்பட்ட ஆர்வம் இருக்கு. நான் 6ஆம் வகுப்பு படிக்கறப்ப ஆதித்யாவைப் போலவே ஓம்பிரகாஷ் சார் எனக்கும் பயிற்சி குடுத்தாரு, ரொம்ப உதவி பண்ணாரு. இப்ப நான் கல்லூரிக்காக சி.எம்.ஐ. போறேன், மேலும் கணிதம் மற்றும் சி.எஸ். படிச்சுக்கிட்டு இருக்கேன்.
பிரதமர் – நல்லது. இப்ப அர்ஜுன் காந்திநகர்ல இருக்காருன்னும், கனவ் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவருன்னும் சொன்னாங்க. அர்ஜுன், கனவ், நாங்க இப்ப ஒலிம்பியாட் பத்தித் தான் பேசினோம், ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்க தயாரிப்புக்கள் தொடர்பான விஷயமோ, விசேஷமான அனுபவமோ இருந்தா, அதை சொன்னீங்கன்னா, நேயர்கள் ரொம்ப விரும்புவாங்க.
அர்ஜுன் – வணக்கம் சார், ஜய் ஹிந்த்!! நான் தான் அர்ஜுன் பேசறேன்.
பிரதமர் – ஜய் ஹிந்த் அர்ஜுன்!!
அர்ஜுன் – நான் தில்லியில வசிக்கறேன், எங்கம்மா திருமதி ஆஷா குப்தா தில்லி பல்கலைக்கழகத்தில இயற்பியல் பேராசிரியரா இருக்காங்க, எங்கப்பா திரு. அமித் குப்தா பட்டயக் கணக்காளரா இருக்காரு. நான் என் தேசத்தோட பிரதமரோட பேசிக்கிட்டு இருக்கேங்கறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார். முதன்மையா என் வெற்றிக்கான முழுப் பாராட்டும் எங்கப்பா அம்மாவுக்குத் தான் போய் சேரும். குடும்பத்தில ஒருத்தர் இப்படிப்பட்ட ஒரு போட்டிக்குத் தயார் செய்யறாருங்கற போது, அது அந்த ஒருத்தர் மட்டுமே பங்கெடுக்கற போட்டி கிடையாது, மொத்த குடும்பமுமே இந்தப் போட்டியில பங்கெடுக்குது. முக்கியமா எங்களோட வினாத்தாள்ல 3 கணிதச் சிக்கல்கள் முன்வைக்கப்படுது, அதுக்கு நாலரை மணிநேரத்தில விடை கண்டு பிடிச்சாகணும். அதாவது ஒரு சிக்கலுக்கு விடையை ஒண்ணரை மணி நேரத்தில கண்டுபிடிக்கணும். இதுக்கு நாங்க வீட்டில நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சிக்கல்களோட மணிக்கணக்கா போராட வேண்டியிருக்கும், சில சமயத்தில ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கே கூட ஒரு நாள், ஏன் 3 நாள் கூட ஆயிடும். இதுக்காகவே நாங்க இணையத்தில ப்ராப்ளம்களைத் தேடுவோம். கடந்த ஆண்டு தரப்பட்ட சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்வோம், இப்படியே, மெல்லமெல்ல முயற்சி செய்யும் போது எங்க அனுபவம் அதிகரிக்குது, எங்களுக்கு முக்கியமான தேவையான சிக்கலைத் தீர்க்கும் திறன், அது அதிகரிக்குது. இது எங்களுக்கு கணிதத்தில மட்டுமில்லை, வாழ்க்கையிலயும் ஒவ்வொரு துறையிலயும் உதவிகரமா இருக்கு.
பிரதமர் – நல்லது, ஏதும் விசேஷமான அனுபவம் இருக்கான்னு கனவ் சொல்ல முடியுமா? இந்தத் தயாரிப்புகள் எல்லாத்திலயும் ஏதும் சிறப்பா, நம்ம இளைஞர்களுக்கு சுவாரசியமான ஏதாவது உண்டா?
கனவ் தல்வார் – என் பேரு கனவ் தல்வார், நான் உத்தர பிரதேசத்தின் க்ரேட்டர் நோய்டாவில வசிக்கறேன், 11ஆம் வகுப்பு படிக்கறேன். கணிதம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு கணக்குன்னா உசிரு. எங்கப்பா எனக்கு நிறைய புதிர்களைத் தீர்க்க வைப்பாரு. இது எனக்கு ஆர்வத்தை அதிகரிச்சுது. நான் என் 7ஆம் வகுப்பிலேர்ந்தே ஒலிம்பியாடுக்கான தயாரிப்புகள்ல ஈடுபட ஆரம்பிச்சேன். இதில என் சகோதரியோட பங்களிப்பு ரொம்ப அதிகம். எங்கப்பா அம்மாவும் கூட எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க. இந்த ஒலிம்பியாட் போட்டியை HBCSE நடத்தாறாங்க. இது ஒரு ஐந்து கட்டச் செயல்முறை. கடந்த ஆண்டு எங்க அணியில நான் இருந்தேன், ரொம்ப நெருங்கிட்டேன், ஆனா கிடைக்காம போனது ரொம்ப வருத்தமா இருந்திச்சு. அப்ப எங்கப்பா அம்மா ஒண்ணு சொன்னாங்க, ஒண்ணு நாம ஜெயிக்கறோம், இல்லை கத்துக்கறோம்னு. பயணம் ரொம்ப முக்கியமானதே தவிர, வெற்றிதோல்வி இல்லைன்னாங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, நாம செய்யறதை நாம விரும்பி செய்யணும், அதே போல நாம விரும்பறதை நாம செய்யணும். நாம பயணிக்கறோம்ங்கறது தான் முக்கியமே தவிர, வெற்றி ஒன்று மட்டுமே முக்கியம் என்பதில்லை. நாம ஒரு விஷயத்தை நேசிச்சோம்னா, நமக்கு வெற்றி கண்டிப்பா கிடைக்கும். பயணத்தை ரசிக்கணும்.
பிரதமர் – சரி கனவ், நீங்க கணிதத்திலயும் ஆர்வத்தோட இருக்கீங்க, நீங்க பேசறதைப் பார்த்தா உங்களுக்கு இலக்கியத்திலயும் ஆர்வம் இருக்கா மாதிரி இருக்கே.
கனவ் தல்வார் – ஆமாம் சார்!! என் சின்ன வயசுல நான் பேச்சுப் போட்டி, விவாதங்கள், இதில எல்லாம் நிறைய பங்கெடுப்பேன்.
பிரதமர் – நல்லது, ஆனந்தோ, நீங்க இப்ப குவஹாட்டியில இருக்கீங்க, உங்க நண்பரான ருஷீல் அவரு மும்பையில இருக்காரு. உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் என்ன கேட்க விரும்பறேன்னா, நான் பரீக்ஷா பே சர்ச்சா – தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சில பங்கெடுக்கறேன், இதைத் தவிர வேற நிகழ்ச்சிகள்லயும் மாணவர்களோட உரையாடறேன். நிறைய மாணவர்களுக்கு கணிதம்னு பேரைக் கேட்டாலே உதறல் ஏற்படுதே, ஆனா உங்க ரெண்டு பேருக்கும் கணிதத்தோட எப்படி நட்பு ஏற்பட்டிச்சு?
ருஷீல் மாதுர் – சார், நான் ருஷீல் மாதுர் பேசறேன். சின்ன வயசுல, முத முறையா கூட்டல் கத்துக் குடுக்கறப்ப, கேரி ஃபார்வர்ட் புரிய வைப்பாங்க. ஆனா இந்த கேரி ஃபார்வர்ட் ஏன் செய்யணும்னு சொல்ல மாட்டாங்க. நாம கூட்டு வட்டி பத்தி படிக்கும் போது, இந்தக் கூட்டு வட்டிக்கான ஃபார்முலா எங்கிருந்து வந்திச்சுன்னு நாம யாரும் கேட்க மாட்டோம். என்னைப் பொறுத்த மட்டில கணிதம்ங்கறது சிந்திக்கற, சிக்கல்களைத் தீர்க்கற ஒரு கலையே தான். அதனால நாம கணிதத்தில ஒரு புது வினாவை, அதாவது, இதை நாம ஏன் செய்யறோம்ங்கறதை இணைக்கணும். இப்படி ஏன் ஆகுது? அப்ப, கணிதத்தில அதிக ஆர்வம் ஏற்பட வாய்ப்பிருக்கு. ஏன்னா, எந்த ஒரு விஷயத்தையும் நம்மால புரிஞ்சுக்க முடியலைன்னா, நமக்கு பயம் ஏற்படுறது இயல்பு தானே!! மேலும் எனக்கு என்ன தோணுதுன்னா, நாம எல்லாரும் கணிதம் ஒரு லாஜிக்கான படிப்புன்னு நினைச்சுக்கறோம். ஆனா இதைத் தாண்டி கணிதத்தில நிறைய படைப்புத் திறனும் ரொம்ப அவசியமா தேவைப்படும். ஏன்னா படைப்பாற்றல் இருந்தாத்தான் நம்மால out of the box solutions – வழக்கத்துக்கு மாறான புதுமையான தீர்வுகளைச் சிந்திக்க முடியும், இது ஒலிம்பியாட்ல ரொம்ப பயனுடையதா இருக்கும். ஆகையால தான் கணிதத்தில ஆர்வத்தை அதிகரிக்கறதுல, கணித ஒலிம்பியாடுக்கு ரொம்ப முக்கியமான சம்பந்தம் இருக்கு.
பிரதமர் – ஆனந்தோ, நீங்க ஏதும் சொல்ல விரும்பறீங்களா?
ஆனந்தோ பாதுரி – வணக்கம் பிரதமர் அவர்களே!! நான் குவஹாட்டிலேர்ந்து ஆனந்தோ பாதுரி பேசறேன். நான் இப்பத் தான் 12ஆம் வகுப்பு பாஸ் செஞ்சிருக்கேன். இங்க இருக்கற உள்ளூர் ஒலிம்பியாட்ல நான் 6ஆவது, 7ஆவதுல பங்கெடுத்தேன். அதிலேர்ந்து ஆர்வம் அதிகமாயிருச்சு, இது என்னோட ரெண்டாவது ஐ.எம்.ஓ. ரெண்டு IMOவும் நல்லாவே இருந்திச்சு. ருஷீல் சொல்றதுல எனக்கு முழுச் சம்மதம். மேலும் நான் என்ன சொல்ல விரும்பறேன்னா, யாருக்கு கணிதம்னா பயமோ, அவங்களுக்கு பொறுமை ரொம்ப அவசியம். ஏன்னா நமக்கு கணக்கு எப்படி சொல்லிக் குடுக்கப்படுதுன்னா, ஒரு ஃபார்முலாவை குடுத்து அதை நெட்ரு பண்ண வைப்பாங்க, பிறகு அந்த ஃபார்முலாலேர்ந்து 100 கேள்வியை படிக்க வைப்பாங்க. ஆனா, நீங்க ஃபார்முலாவை புரிஞ்சுக்கறீங்களா இல்லையான்னு யாருக்கும் கவலை இல்லை. ஃபார்முலாவை நெட்ரு பண்ணிட்டுப் போன பிறகு தேர்வுல ஃபார்முலா மறந்து போச்சுன்னா என்ன செய்ய? அதனால தான் சொல்றேன், ஃபார்முலாவை புரிஞ்சுக்குங்க. ருஷீல் சொல்றா மாதிரி, பொறுமையா அதை புரிஞ்சுக்குங்க. ஃபார்முலாவை சரியா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, 100 வினாக்களை தீர்க்க வேண்டியதே இல்லை. ஒண்ணுரெண்டு வினாக்களே போதுமானது, கணிதம் ஒண்ணும் பயப்படற விஷயமே இல்லை.
பிரதமர் – ஆதித்யா, சித்தார்த். நீங்க ஆரம்பத்தில பேசினப்ப சரியா உங்ககூட பேச முடியலை, இப்ப இவங்க எல்லார் சொல்றதையும் கேட்ட பிறகு, உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோணுதா? உங்க அனுபவங்களை சிறப்பான வகையில பகிர விரும்பறீங்களா?
சித்தார்த் – மத்த நாடுகளைச் சேர்ந்தவங்க பலரோட கலந்து பேசியிருக்கேன், நிறைய கலாச்சாரங்கள், நிறைய விஷயம் நல்லா இருந்திச்சு, மத்த மாணவர்களோட தொடர்பு கொண்டு, புரிதலை ஏற்படுத்தறது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் புகழ்மிக்க பல கணிதவியலார்களும் இருந்தாங்க.
பிரதமர் – சரி ஆதித்யா.
ஆதித்யா – ரொம்ப நல்ல அனுபவமா இருந்திச்சு, எங்களை எல்லாம் அவங்க Bath cityல சுத்திக் காமிச்சாங்க, ரொம்ப நல்லநல்ல காட்சிகளைப் பார்த்தோம், பூங்காக்களுக்குக் கூட்டிக்கிட்டு போனாங்க, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கும் கூட்டிக்கிட்டு போனாங்க. ரொம்ப நல்ல அனுபவமா இருந்திச்சு.
பிரதமர் – சரி நண்பர்களே, உங்ககூட பேசறது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு. உங்க எல்லாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த மாதிரியான போட்டிகள்னா அதுக்கு நிறைய கருத்தூன்றிய செயல்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும், மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட சில சமயம் எரிச்சலா இருக்கும். என்னடா இது, இவன் எப்பப்பாரு கூட்டல் கழித்தல்னே காலத்தைக் கடத்தறானேன்னு. ஆனா என் தரப்பிலேர்ந்து உங்க எல்லாருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். நீங்க தேசத்துக்குப் பெருமை சேர்த்திருக்கீங்க, நன்றி நண்பர்களே!!
மாணவர்கள் – நன்றி சார், தேங்க்யூ.
பிரதமர் – தேங்க்யூ,
மாணவர்கள் – தேங்க்யூ சார், ஜய் ஹிந்த்!!
பிரதமர் – ஜய் ஹிந்த்! ஜய் ஹிந்த்!!
மாணவர்களாகிய உங்களனைவரோடும் உரையாடியது மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது. மனதின் குரலில் இணைந்தமைக்கு நான் உங்களனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணிதத்தின் இந்த இளைய ஜாம்பவான்கள் கூறுவதைக் கேட்ட பிறகு, கணிதத்தை ரசிக்கவும் அனுபவிக்கவும் ஒரு உத்வேகம் மற்ற இளைஞர்களுக்கு உண்டாகும் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது நான் கூறவிருக்கும் விஷயத்தைக் கேட்டு பாரதவாசிகள் அனைவரின் தலைகளும், பெருமிதம் பொங்க நிமிர்ந்து நோக்கும். ஆனால் அதற்கு முன்பாக அனைவரிடமும் ஒரு வினாவை முன்வைக்க நான் விரும்புகிறேன். நீங்கள் சராயிதேவு மைதாம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? கேள்விப்பட்டதில்லை என்றால், இனி நீங்கள் இந்தப் பெயரை மீண்டும்மீண்டும் கேட்பீர்கள், பெரும் உற்சாகத்தோடு மற்றவர்களுக்கும் இதைப் பற்றிச் சொல்வீர்கள். அசாமின் சராயிதேவு மைதாம், யுனெஸ்கோ உலக மரபுச் சின்ன இடங்கள் வரிசையில் இடம் பெற இருக்கிறது. இந்தப் பட்டியலில் பாரதத்தின் இது 43ஆவது இடமாகும். ஆனால் வடகிழக்குப் பகுதியைப் பொறுத்த மட்டில், இதுவே முதல் இடமாகும்.
நண்பர்களே, இந்த சராயிதேவு மைதாம் என்றால் என்ன, இதிலே அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்ற வினா உங்கள் உள்ளத்தில் எழலாம். சராயிதேவு என்பதன் பொருள், மலைகளில் இருக்கும் பிரகாசமான நகரம் என்பதே. இது அஹோம் அரசப் பரம்பரையின் முதல் தலைநகரமாக இருந்தது. அஹோம் ராஜவம்சத்தவர்கள், தங்கள் முன்னோர்களின் பூதவுடல்களையும், அவர்களுடைய விலைமதிப்புமிக்க பொருட்களையும் பாரம்பரியமான முறையிலே மைதாமிலே வைத்தார்கள். மைதாம் என்பது சிறப்பான பெரிய மேடான ஒரு அமைப்பு, இதன் மேற்பரப்பில் மண்ணால் மூடி வைக்கப்பட்டிருக்கும், அடிப்பகுதியில் ஒன்று அல்லது மேற்பட்ட அறைகள் இருக்கும். இந்த மைதாமானது, அஹோம் சாம்ராஜ்ஜியத்தின் காலஞ்சென்ற அரசர்கள் மற்றும் பிரபலஸ்தர்கள் மத்தியில் சிரத்தையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தங்களுடைய முன்னோர்களிடத்தில் மரியாதையை வெளிப்படுத்தும் இந்த வழிமுறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த இடத்திலே சமூக அளவிலான வழிபாடுகளும் நடந்தப்படுகின்றன.
நண்பர்களே, அஹோம் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய வேறு பல தகவல்கள் உங்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கும். 13ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த சாம்ராஜ்ஜியம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தது. இத்தனை நீண்ட காலகட்டம் வரை இந்த சாம்ராஜ்ஜியம் நீடித்தது என்பது மிகப்பெரிய விஷயம். அஹோம் சாம்ராஜ்ஜியத்தின் சித்தாந்தமும், நம்பிக்கைகளும் மிகவும் பலமானவையாக இருந்ததால் ஒருவேளை இந்த ராஜவம்ஸம் இத்தனை ஆண்டுக்காலமாக நீடித்திருக்க முடிந்திருக்கலாம். இதே ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதியன்று, அசாத்தியமான சாகஸம், வீரம் ஆகியவற்றின் சின்னமான மகத்தான அஹோம் வீரரான லசித் போர்ஃபுகனுடைய மிகப்பெரிய உருவச்சிலையைத் திறந்து வைக்கும் பெரும்பேறானது எனக்குக் கிடைத்தது என் நினைவில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது, அஹோம் சமூகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் போது எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் உண்டானது. லசித் மைதாமிலே அஹோம் சமூகத்தின் முன்னோர்களுக்கு மரியாதை அளிக்கும் பாக்கியம் கிடைப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். இப்போது சராயிதேவு மைதாமினை உலக மரபுச் சின்ன இடங்களில் ஒன்றாக ஆக்குவதன் பொருள் என்னவென்றால், இங்கே மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். நீங்களும் வருங்காலத்தில் உங்களுடைய பயணத் திட்டங்களில் இந்த இடத்தையும் கண்டிப்பாக இணைத்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களே, தன்னுடைய கலாச்சாரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் தேசத்தால் மட்டுமே முன்னேற முடியும். பாரதத்திலும் கூட இதுபோன்ற பல முயற்சிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் ப்ராஜக்ட் பரி. பரி மண்ணை சுவர்க்கமாக ஆக்கக் கூடியது. பரி அதாவது Public Art of India. இந்தத் திட்டமான பரி, பொதுக்கலையை வெகுஜனங்களுக்குப் பிரியமானதாக ஆக்க, வளர்ந்துவரும் கலைஞர்களை ஒரே மேடையில் நிறுத்துவதற்கான ஒரு பெரிய ஊடகமாக ஆகி வருகிறது. நீங்களே கூட கவனித்திருக்கலாம், சாலையோரங்களில், சுவர்களின் மீது, சுரங்கப் பாதைகளில் மிக அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள், இந்தக் கலைப்படைப்புகளை பரியோடு தொடர்புடைய இந்தக் கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள். இதன் காரணமாக நமது பொதுவிடங்களின் அழகு அதிகரிக்கிறது, அதே வேளையில் நமது கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதிலும் உதவிகரமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தில்லியின் பாரத் மண்டபத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இங்கே தேசமெங்கிலுமிருந்தும் அற்புதமான கலைப்படைப்புகளை நீங்கள் பார்க்கலாம். தில்லியின் சில சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றிலும் கூட நீங்கள் அழகான பொதுக்கலைப்படைப்புக்களைப் பார்க்கலாம். பொதுமக்கள் கலை தொடர்பாக மேலும் பணியாற்ற, நான் கலை மற்றும் கலாச்சார பிரியர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இவை நம்மிடத்திலே நமது வேர்களின் மீது சுகமான பெருமைஉணர்வை ஏற்படுத்தும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது வண்ணங்களைப் பற்றிப் பேசலாம். இவை எப்படிப்பட்ட வண்ணங்கள்? ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தின் 250க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் வளங்களென்ற வண்ணங்களை நிரப்பியவை. கைவினைப் பொருள் தயாரித்தலோடு தொடர்புடைய பெண்கள் முதலில் சின்னச்சின்ன கடைகள் மற்றும் சிறிய வேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனால் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் அவசியம் இருக்கும். ஆகையால் இவர்கள் உன்னதி சுயவுதவிக் குழுவோடு தங்களை இணைத்துக் கொள்ள முடிவெடுத்தார்கள், இணைத்துக் கொண்டு, ப்ளாக் ப்ரிண்டிங் மற்றும் சாயமிடலில் பயிற்சி பெற்றார்கள். துணிகளில் வண்ணங்களின் ஜாலம் செய்யும் இந்தப் பெண்கள் இன்று இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் தயாரித்த படுக்கை விரிப்பு, புடவைகள், துப்பட்டாக்கள் ஆகியவற்றுக்குச் சந்தையில் பெரும் தேவை இருக்கிறது.
நண்பர்களே, ரோஹ்தக்கின் இந்தப் பெண்களைப் போலவே பல்வேறு பாகங்களில் கைவினைஞர்கள், நெசவினை வெகுஜனங்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதில் இணைந்திருக்கிறார்கள். அது ஒடிஷாவின் சம்பல்புரி புடவைகளாகட்டும், மத்திய பிரதேசத்தின் மாஹேஷ்வரி புடவைகளாகட்டும், மஹாராஷ்டிரத்தின் பைட்டாணீ அல்லது விதர்ப்பத்தின் ஹேண்ட் ப்ளாக் ப்ரிண்டுகளாகட்டும், ஹிமாச்சலத்தின் பூட்டிகோ கம்பளிப் போர்வை, கம்பளி ஆடைகள் அல்லது ஜம்மு கஷ்மீரத்தின் கனி மேற்போர்வை ஆகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலும் நெசவு புரியும் வேலை பரந்திருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போதெல்லாம், கைத்தறிப் பொருட்கள் மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருப்பதைக் காணும் போது, இது மிகவும் பலமானதாக, ஆழமானதாக இருக்கிறது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் கைத்தறி உற்பத்தி மற்றும் நீடித்த பாணிக்கு ஊக்கமளித்து வருகின்றன. கோஷா AI, ஹேண்ட்லூம் இண்டியா, டி-ஜன்க், நோவாடேக்ஸ், ப்ரும்மபுத்ரா ஃபேபிள்ஸ் போன்ற பல ஸ்டார்ட் அப்புகளும் கூட கைத்தறிப் பொருட்களை வெகுஜனப்பிரியமானவையாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கின்றன. பலர் தங்களிடங்களில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்களை மேலும் பிரபலமானவையாக ஆக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்ற தகவல் பிடித்த விஷயமாக இருக்கிறது. நீங்களும் கூட ஹேஷ்டேக் மை ப்ராடக்ட் மை ப்ரைட் என்ற பெயரில் சமூக ஊடகத்தில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்கள் பற்றி தரவேற்றம் செய்யுங்கள். உங்களுடைய இந்த முயற்சி, பலரின் வாழ்க்கையையே கூட மாற்ற வல்லது.
நண்பர்களே, கைத்தறியோடு கூடவே நான் காதி பற்றியும் பேச விரும்புகிறேன். உங்களில் பலர் கதராடைகளை முன்பு பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போதெல்லாம் மிகப் பெருமையோடு கதராடைகளை உடுத்தி வருவீர்கள். காதி கிராமோத்யோக் பவனத்தின் வியாபாரம் முதன்முறையாக ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்!! ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய்!! காதிப்பொருட்களின் விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா? 400 சதவீதம். காதிப் பொருட்களின், கைத்தறி ஆடைகளின், இந்த வளர்ந்துவரும் விற்பனை, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பின் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தத் தொழிலோடு மிக அதிக அளவில் பெண்கள் இணைந்திருக்கிறார்கள் எனும் போது, மிகப்பெரிய ஆதாயமும் கூட அவர்களுக்குத் தானே ஏற்படுகிறது!! நான் மீண்டும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்களிடத்திலே வகைவகையான ஆடைகள் இருக்கலாம், நீங்கள் இதுவரை கதராடைகளை வாங்காமலும் கூட இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டு தொடங்குங்கள். ஆகஸ்ட் மாதம் வந்தே விட்டது, இது நாடு சுதந்திரம் அடைந்த மாதம், புரட்சிக்கான மாதம். கதராடைகளை வாங்க, இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் வேறு என்ன இருக்க முடியும்?
என் மனம் நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நான் அடிக்கடி போதைப் பொருட்கள் சவாலைப் பற்றிப் பேசியிருக்கிறேன். தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்களோ என்ற கவலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது. ஆனால் அப்படி அடிமையாகிவிட்டவர்களின் உதவிக்காக, அரசாங்கம் ஒரு சிறப்பான மையத்தைத் திறந்திருக்கிறது, இதன் பெயர் மானஸ். போதைப்பொருட்களுக்கு எதிரான போரிலே இது மிகப்பெரிய முன்னெடுப்பு. சில நாட்கள் முன்பாகத் தான் மானஸின் உதவி எண்ணும், இணைய முகப்பும் துவக்கப்பட்டன. அரசாங்கம் ஒரு இலவச உதவி எண்ணான 1933 என்பதை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதோடு தொடர்பு கொண்டால் கண்டிப்பாகத் தேவையான ஆலோசனைகள் அளிக்கப்படும் அல்லது மறுவாழ்வோடு தொடர்புடைய தகவல்களைப் பெறலாம். யாரிடமாவது போதைப் பொருட்களோடு தொடர்புடைய வேறு தகவல்களும் இருந்தால், அவர்கள் இதே எண்ணோடு தொடர்பு கொண்டு Narcotics Control Bureau – போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடமும் தெரிவிக்கலாம். மானஸ் அமைப்பிடம் தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இரகசியமானவையாக பாதுகாக்கப்படும். பாரதத்தைப் போதைப்பொருட்கள் இல்லாத நாடாக ஆக்குவதில் இணைந்திருக்கும் அனைவரிடத்திலும், அனைத்துக் குடும்பங்களிடத்தாரிடமும், அனைத்து அமைப்புக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், மானஸ் உதவி எண்ணை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
எனதருமை நாட்டுமக்களே, நாளை உலகெங்கும் புலிகள் தினம் கொண்டாடப்படும். பாரதத்திலே புலிகள் என்பவை நமது கலாச்சாரத்தோடு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. நாமனைவரும் புலிகளோடு தொடர்புடைய கதைகள்-சம்பவங்களைக் கேட்டுக்கேட்டுத் தான் பெரியவர்களாகி இருக்கிறோம். எப்படி புலிகளுக்கு இசைவாக வாழ வேண்டும் என்பது, காடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் கிராமவாசிகளுக்கு நன்கு தெரியும். மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே எப்போதும் மோதலுக்கான சந்தர்ப்பமே வராத பல கிராமங்கள் நம்முடைய தேசத்திலே உண்டு. ஆனால், இப்படிப்பட்ட மோதல் நிலை எங்கே வருகிறதோ, அங்கேயும் கூட புலிகளின் பாதுகாப்பிற்காக இதுவரை இல்லாத அளவுக்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் பங்களிப்பின் மூலம் செய்யப்படும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் குல்ஹாடி பந்த் பஞ்சாயத்து – கோடாரிக்குத் தடை விதித்த பஞ்சாயத்து. ராஜஸ்தானின் ரண்தம்போரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த குல்ஹாடி பந்த் பஞ்சாயத்து இயக்கம் மிகவும் சுவாரசியமானது. காடுகளுக்குக் கோடாரிகளைக் கொண்டு செல்ல மாட்டோம், மரங்களை வெட்ட மாட்டோம் என்று உள்ளூர் சமுதாயங்கள், இந்த விஷயம் தொடர்பாக தாமே சபதமேற்றிருக்கிறார்கள். இந்த ஒரு முடிவு காரணமாக இங்கே இருக்கும் வனங்கள், மீண்டுமொரு முறை பசுமையானவையாக ஆகி வருகிறது, புலிகளுக்கும் சிறப்பான ஒரு சூழல் தயாராகி வருகிறது.
நண்பர்களே, மஹாராஷ்டிரத்தின் தடோபா-அந்தரி புலிகள் காப்பிடமானது, புலிகளின் முக்கியமான இருப்பிடங்களில் ஒன்று. இங்கிருக்கும் உள்ளூர் சமூகங்கள், குறிப்பாக கோண்ட் மற்றும் மானா பழங்குடியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், சூழல் சுற்றுலாவை மிகுந்த வேகத்தோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள். இங்கே புலிகள் தழைக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் காடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தின் நல்லமலையில் வசிக்கும் செஞ்சு பழங்குடிகளின் முயற்சியும் உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும். இவர்கள் Tiger Trackers என்ற வகையிலே, காடுகளின் உயிரினங்களின் இயக்கங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்திருக்கிறார்கள். இது தவிர, இவர்கள் அந்தப் பகுதியில் சட்டவிரோதமான செயல்பாடுகளின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இதைப் போலவே உத்தரப் பிரதேசத்திலே பீலிபீத்தில் நடைபெறும் புலிகளின் நேசன் நிகழ்ச்சியும் பேசுபொருளாகி இருக்கிறது. இதிலே உள்ளூர்வாசிகளுக்குப் புலிகளின் நேசன் என்ற வகையிலே பணிக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் புலிகளின் நேசர்கள், புலிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இதைப் போன்று பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே நான் சில முயற்சிகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கிறேன் என்றாலும், மக்களின் பங்கெடுப்பு புலிகளின் பாதுகாப்புக்கு உதவிகரமாக இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே, பாரதத்தில் புலிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிறது. உலகெங்கிலும் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீத எண்ணிக்கை நமது தேசத்திலே இருக்கிறது என்பது பெருமையும், சந்தோஷமும் அளிக்கும் விஷயம். சிந்தித்துப் பாருங்கள்!! 70 சதவீதம் புலிகள்!! இதனால் தான் நமது தேசத்திலே பல்வேறு பாகங்களில் பல புலிகள் சரணாலயங்கள் இருக்கின்றன.
நண்பர்களே, புலிகளின் அதிகரிப்போடு கூடவே நமது தேசத்தின் காட்டுப்பகுதிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதிலும் கூட சமூகங்களின் முயற்சிகள் காரணமாக பெரும் வெற்றி கிட்டி வருகிறது. கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில், ஒரு மரம் அன்னையில் பெயரில் நிகழ்ச்சி குறித்து நாம் பேசியிருந்தோம், இல்லையா? தேசத்தின் பல்வேறு பாகங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இந்த இயக்கத்தோடு தொடர்ந்து இணைந்து வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில நாட்கள் முன்பாக, தூய்மைக்குப் பெயர் போன இந்தோரிலே, ஒரு அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கே, ஒரு மரம் அன்னையின் பெயரில் நிகழ்ச்சியின்படி, ஒரே நாளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன. தங்கள் அன்னையின் பெயரில் மரம் நடும் இந்த இயக்கத்தோடு நீங்களும் கண்டிப்பாக இணையுங்கள், சுயபுகைப்படம் ஒன்றை எடுத்து, அதை சமூக ஊடகத்தில் தரவேற்றமும் செய்யுங்கள். இந்த இயக்கத்தோடு இணையும் போது, உங்களுடைய தாய், பூமித்தாய், இருவருக்கும் விசேஷமான ஒன்றை நீங்கள் செய்ததைப் போல உணர்வீர்கள்.
எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தொலைவில் இல்லை. இப்போது ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியோடு இணைந்த மேலும் ஒரு இயக்கம் இணைகிறது. வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே நாடெங்கிலும் இந்த வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி இயக்கமானது பெரும் உற்சாகத்தோடு நடந்தது. ஏழையோ, பணக்காரரோ, சிறிய வீடோ, பகட்டான மாளிகையோ, அனைவரும் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டு, பெருமித உணர்வை அனுபவித்தார்கள். மூவண்ணக் கொடியோடு கூட சுயபுகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை சமூக ஊடகத்தில் தரவேற்றம் செய்வதிலே பேரார்வம் காணப்பட்டது. ஒரு குடியிருப்புப் பகுதி அல்லது சுற்றுவட்டாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி பறக்கும் போது, சிறிது நேரத்திலேயே விடுபட்ட மற்ற வீடுகளிலும் காணத் தொடங்கி விடும். அதாவது வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கமானது மூவண்ணக் கொடியின் பெருமையைக் கொண்டாடும் ஒரு தனித்தன்மை வாய்ந்த விழாவாக மாறிவிட்டது. இது தொடர்பாக இப்போது பலவகையான நூதனங்களும் கூட நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வரவர, வீடுகளிலே, அலுவலகங்களிலே, வாகனங்களிலே, மூவண்ணக் கொடியைப் பதிக்க, பலவகையான பொருட்கள் வரத் தொடங்கிவிட்டன. சிலரோ, மூவண்ணத்தைத் தங்கள் நண்பர்கள், அண்டை வீட்டார்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். மூவண்ணக் கொடி தொடர்பாக உற்சாகம், கொண்டாட்ட உணர்வு ஆகியன நம்மை ஒருவரோடு ஒருவர் இணைக்கிறது.
நண்பர்களே, முன்பைப் போலவே இந்த ஆண்டும் கூட நீங்கள் harghartiranga.com இலே, மூவண்ணக் கொடியோடு கூடவே உங்களின் சுயபுகைப்படத்தைக் கண்டிப்பாக தரவேற்றம் செய்யுங்கள், இது தொடர்பாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாக, நீங்கள் ஏராளமான கடிதங்களை, தகவல்களை அனுப்புவீர்கள். இந்த ஆண்டும் கூட, நீங்கள் உங்கள் ஆலோசனைகளை எனக்குத் தெரிவியுங்கள். நீங்கள் மைகவ் அல்லது நமோ செயலியிலும் கூட உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம். நான் அதிகபட்ச ஆலோசனைகளை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உரையிலே தெரிவிக்க முயற்சி செய்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இதுகாறும் இணைந்திருந்தது மிகவும் உவப்பாக இருந்தது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், தேசத்தின் புதிய சாதனைகளோடு, மக்களின் பங்கெடுப்பின் புதிய முயற்சிகளோடு, நீங்கள் மனதின் குரலுக்காக உங்கள் ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். வரவிருக்கும் காலத்தில் பல திருவிழாக்கள் வரவிருக்கின்றன. அனைத்துப் பண்டிகைகளுக்குமான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து பண்டிகைகளை ஆனந்தமாகக் கொண்டாடுங்கள். தேசத்திற்காக புதியதாக ஒன்றைச் செய்யத் தேவையான ஆற்றலைத் தொடர்ந்து உங்களிடம் வைத்திருங்கள். பலப்பல நன்றிகள், வணக்கம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், ஆகஸ்ட், 2024)
நம் கலாசாரத்தில் பண்டிகைகளுக்குச் சிறப்பான இடம் உண்டு. அவை மதத் தொடர்பான பழக்க வழக்கங்களாக மட்டுமின்றி, அழகான கலாசாரத்தின் சின்னமாகவும் விளங்கி, உற்சாகமூட்டுகின்றன.
சில பண்டிகைகள் உபவாசம், கண் விழித்தல் போன்றவற்றோடு ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. மற்றும் சில பண்டிகைகள், வேடிக்கைகளோடும் உற்சவ கொண்டாட்டங்களோடும் பிரகாசிக்கின்றன. குடும்பமாகவும், சமூகமாகவும் சமுதாயத்திற்கு நல்லிணக்கம், நல்லுறவு, சந்தோஷம் ஆகியவற்றைப் பகிர்கின்றன. இவற்றின் பின்னணியில் சம்பிரதாயம், வழிபாடு, பூஜைகள், நிவேதனம், பிரசாதம் போன்றவை உள்ளன.
ஆறு ருதுக்களை (பருவ காலங்களை) அனுசரித்து காலத்திலும் இயற்கையிலும் தென்படும் பரிணாம மாற்றங்களைச் சார்ந்து பல்வேறு பருவங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகோடு விளங்கி, மகிழ்ச்சியளிக்கிறது. பருவக் காலங்களில் பின்பற்ற வேண்டிய நியமங்களை சாஸ்த்திரங்கள் விதித்துள்ளன.
ஆனால், காலக்கிராமத்தில் அவற்றில் பலவித மாற்றங்கள் நுழைந்தன. சாஸ்திர சம்மதம் பெறாவிட்டாலும், வேறுபாடு இல்லாத மாற்றங்களை ஏற்கலாம். வேற்றுமைகளை ஏற்க இயலாது.
உதாரணத்திற்கு, விநாயக சதுர்த்தியை எடுத்துக் கொள்வோம். இது பண்டைக் காலம் முதல், பாரத தேசத்தில், இமயம் முதல் குமரி வரை குளிர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் பண்டிகை. இதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உற்சாகமாகப் பங்கு பெறுவார்கள். இருபத்தோரு இலைகளைச் சேகரிப்பது, களிமண்ணால் விநாயகர் சிலையை வடிப்பது என்று வீட்டில் அனைவரும் சேர்ந்து செய்வார்கள்.
பூஜை செய்து கொழுக்கட்டை, லட்டு, பழங்கள், காய்கள், பலகாரங்கள், சுண்டல், அன்னம் எல்லாம் நிவேதனம் செய்து பிரசாதமாக சாப்பிடுவார்கள் அது ஒரு தனி அழகு, சந்தோஷம். ஆனால் காலக்கிரமத்தில் இந்த பண்டிகை வீதிகளில், பள்ளிகளில், நிறுவனங்களில், காலனிகளில் சமுதாயமாகச் சேர்ந்து செய்வது தொடங்கியது. இது சமுதாயத்தின் உயிரோட்டமாகவும், ஒற்றுமைக்குச் சின்னமாகவும் ஏற்பட்ட அழகான மாற்றம்.
ஆனால், இதில் சில வேறுபட்ட உணர்வுகள் நுழைந்தன. கட்டாயமாக சந்தா வசூல் செய்வது, ஏதேதோ இலைகளை எல்லாம் பத்திரம் என்று சொல்லி பிள்ளையார் சிலை மீது எறிவது, சாஸ்த்திர விதிக்குப் புறம்பான வடிவங்களில் விக்கிரகங்களை பெரிய அளவுகளில் தாயரிப்பது, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக ஏதேதோ பதார்த்தங்களைக் கொண்டு பெரிய சிலைகளை அமைப்பது, நீரில் கரைப்பது என்ற பெயரில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள்,, பூஜை மண்டபங்களின் முன்பாக ஆபாச நடனங்கள், கர்ண கொடூரமான ஓசைகள் – இவை எல்லாம் விநாயக சதுர்த்தியின் சம்பிரதாயத்திற்கு விரோதமாக நடக்கும் சம்பவங்கள்.
சாத்விகமும், அமைதியும் தெய்விக நிகழ்ச்சிகளின் இலக்கணங்கள். அவற்றுக்கு எதிராக நடக்கும் பழக்கங்கள் உண்மையான ஹிந்து தர்மத்தின் சொரூபங்கள் அல்ல. இப்படிப்பட்ட கேடுகளை சில இடங்களில் தேவி நவராத்திரி கொண்டாட்டங்களிலும், ஹோலி போன்ற பண்டிகைகளிலும் கூட பார்க்க நேர்கிறது.
ஹோலி என்பது அழகான வண்ணங்களின் பண்டிகை. நட்புக்கும், உறவுகளின் நெருக்கத்திற்கும் சின்னம். ஆனால் அதனை பயத்திற்கும் கவலைக்கும் இடம் கொடுக்கும் காரணிகளாக சில இடங்களில் செய்து விடுகிறார்கள். இந்த விகாரங்களால் உண்மையான பண்டிகையின் அழகோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை.
இவற்றுக்குத் துணையாக, உபாசகர்கள் மட்டுமே செய்யக் கூடிய வாராஹி நவராத்திரி, ஷ்யாமளா நவராத்திரி போன்ற ரகசியமான ஒன்பது நாள் பூஜைகளும், தசமஹா வித்யை போன்ற தாந்திரிக வழிபாடுகளும், சமூக ஊடகங்களின் படாடோபமான அறிவிப்புகளால், ஒரேயடியாகப் பரவி, உபாசனை சம்பிரதாயமற்றவர்களும், தேவையற்றவர்களும் கூட கோரிக்கைகளுக்காக இஷ்டம் வந்தாற்போல் பின்பற்றுவது அதிகரித்து விட்டது.
அரசியல் பதவி மோகத்தால் சிலர் மிக ஆடம்பரமாக இவற்றை ஏற்பாடு செய்து தேவையற்ற பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். முன்பு எப்போதும் கேட்டிராததும், சம்பிரதாயத்தில் இல்லாததுமான முறையில் இவை நடந்தேறுகின்றன.
குரு பூர்ணிமாவாக புகழ் பெற்ற வியாச பூர்ணிமாவும் சாஸ்திரங்களில் இல்லாத விதத்தில் நடத்தப்படுகிறது. வியாயசரையே மறந்து விட்டு நடக்கும் இந்த விசேஷங்களின் விமரிசை, அட்டகாசம் கொஞ்சமல்ல. அதே போல் சம்பிரரதாயமே தெரியாத விதத்தில் புனித நதிகளின் புஷ்கரங்கள் போன்றவையும் பொது மக்களிடையே அதிக குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
ஆண்டுக்கொருமுறை தீபாவளியன்று வெடி வெடிப்பது பண்டைய சம்பிரதாயங்களில் ஒன்று. ஆனால், அவற்றால் சுற்றுச் சூழல் மாசடைகிறது என்று தவறான பிரசாரம் செய்து ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்துவத்தையும், சில மாநில அரசுகள் வெடி வெடிக்கும் சம்பிரதாயத்தைத் தடை செய்வதையும் காண்கிறோம்.
ஆனால் பல தேசங்களில் அவர்களுடைய தேசத்தின் சுதந்திர தினத்தன்றோ அல்லது வேறொரு சந்தர்ப்பத்திலோ ஆண்டில் சுமார் ஒரு வாரம் வீடுகளிலும் வெளியிடங்களிலும் வெடி வெடித்து மகிழ்கிறார்கள். அங்கு யாரும் மாசு கோஷங்களோ போராட்டங்களோ நடத்தவில்லை.
பாரத தேசத்தில் மட்டுமே ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் ஹிந்துக்களின் ஒற்றுமையான சந்தோஷங்களை மறுக்கவேண்டும், தடை செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது அளவுக்கு அதிகமாக வளர்வதைப் பார்க்கிறோம்.
சிலரின் புரிதல் குறைபாடும், விவேகமற்ற இயல்பும், அனாவசியமான விரோதமான சேஷ்டைகளும், பிறருடைய தேவையற்ற தலையீடுகளும், பொய்யான குற்றச்சாட்டுகளும் நம் பண்டிகைகளின் தனிப்பட்ட, சிறப்பான சௌந்தர்யங்களை அறியமுடியாதபடி செய்கின்றன.
இத்தகு பின்னணியில் நம் சாஸ்திரங்களையும், பரம்பரையாகச் செய்துவரும் உண்மையான பழக்க வழக்கங்களையும் பிரமாணமாக அறிந்து, அறியச் செய்து கடைப்பிடிப்பது அவசியம். நம் சாஸ்திரங்கள் கூறிய விதி, விதானங்கள் அனைத்தும் இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் தெளிவையும் புஷ்டியையும் அளிப்பவையே தவிர அவற்றை அழிப்பவை அல்ல என்ற உண்மையைப் பரப்ப வேண்டும்.
There is nothing more counterproductive than envy. Someone in the world will always be better than you. Of all the sins, envy is easily the worst, because you can’t even have any fun with it. It’s a total net loss. – Charlie Munger
Well, Charlie Munger happened to be a lawyer. But, that is not what got him here. Polymath is a word. An expression. A sentence. And regrettably it is bandied about too loosely and casually to describe individuals. The expression loses its sting too easily. But, when used to capture Charlie Munger’s extraordinary faculties, it fits in beautifully. The word meets its perfect meaning.
Why did he appeal to me? He was an investor, a stock market guru. I have been through Harshad Mehta in 1992, Dotcom bubble in 1999, Ketan Parekh 2001, sub prime crisis in 2008 and the covid pandemic shake up too. I have lasted them all as I never relied on the market for my livelihood. My profession took care of it. The market was for fun, games and razzmatazz and generate wealth if it could and would. So Charlie, Warren Buffet and Berkshire Hathaway (there is the inevitable Ajit Jain Indian connect, insurance and reinsurance conglomerate to keep me hooked). But, Charlie Munger was right, front and center.
Charlie Munger, vice chairman of Berkshire Hathaway and long-time business partner of Warren Buffett, is widely regarded as one of the most profound thinkers in the realm of investing. His intellectual rigor, multidisciplinary approach, and keen insights into human nature have set him apart as an investing great. This essay explores Munger’s contributions to the world of investing, his intellectual frameworks, and the lasting impact of his philosophies.
Multidisciplinary learning
Munger’s investment philosophy is deeply rooted in his multidisciplinary approach, which he often refers to as a “latticework of mental models.” This framework involves integrating concepts from various fields such as psychology, mathematics, economics, and history to make well-rounded investment decisions. Munger believes that understanding the world through multiple lenses provides a more comprehensive and accurate perspective, which is crucial in the complex world of investing.
One of Munger’s key mental models is the concept of “inversion,” which he borrowed from the field of mathematics. Inversion involves thinking backward to solve problems, such as considering what could go wrong with an investment rather than what could go right. This approach helps investors identify potential pitfalls and make more informed decisions.
Rationality and Human Behaviour
Munger’s keen understanding of human behaviour and psychology is another cornerstone of his investment philosophy. He emphasizes the importance of recognizing cognitive biases and irrational behaviour’s that can cloud judgment and lead to poor investment decisions. Munger’s extensive knowledge of behavioural economics has enabled him to avoid common pitfalls and capitalize on opportunities where others might falter.
One notable example is Munger’s focus on the psychology of misjudgement, which he outlines in his famous speech “The Psychology of Human Misjudgement.” In this speech, Munger discusses various cognitive biases, such as confirmation bias, overconfidence, and loss aversion, and how they can adversely impact investment decisions. By being aware of these biases, Munger has been able to maintain a rational and disciplined approach to investing.
Value Investing and Long-Term Perspective
Munger, alongside Warren Buffett, is a staunch advocate of value investing a strategy that involves buying undervalued stocks with strong fundamentals and holding them for the long term. Munger’s emphasis on thorough research, intrinsic value, and patience has been instrumental in the success of Berkshire Hathaway. He believes that a long-term perspective allows investors to ride out market volatility and capitalize on the compounding of returns.
Munger’s investment philosophy also stresses the importance of investing in high-quality businesses with strong competitive advantages, or “moats.” He argues that companies with durable moats are more likely to generate consistent returns over time, making them ideal long-term investments. This focus on quality over quantity has been a hallmark of Munger’s approach and a key factor in his investment success.
Ethics and Integrity
Integrity and ethical behaviour are fundamental principles in Munger’s investment philosophy. He firmly believes that honesty and transparency are essential for long-term success and reputation. Munger has often stated that doing the right thing, even when it is not the most profitable in the short term, ultimately leads to better outcomes. His commitment to ethical behaviour has not only earned him respect in the investment community but has also contributed to the sustained success of Berkshire Hathaway.
Impact and Legacy
Charlie Munger’s intellectual contributions to investing have left an indelible mark on the field. His multidisciplinary approach, deep understanding of human behaviour, and unwavering commitment to rationality and ethics have inspired countless investors. Munger’s teachings and writings, including his seminal book “Poor Charlie’s Almanack,” continue to be a valuable resource for those seeking to improve their investment acumen.
Munger’s partnership with Warren Buffett has also been a testament to the power of collaboration and shared values in achieving extraordinary success. Together, they have built Berkshire Hathaway into one of the most successful investment firms in history, demonstrating the efficacy of their investment principles and the strength of their intellectual synergy.
Charlie Munger’s status as an intellectual colossus in the world of investing is well-deserved. His innovative mental models, deep insights into human psychology, and steadfast adherence to ethical principles have set him apart as a true investing great. Munger’s legacy will continue to influence and inspire future generations of investors, solidifying his place in the pantheon of investment luminaries.
When Charlie Munger died 34 days shy of his centenary, he along with Warren Buffet had built the 800 Billion $ business empire. But, he is now remembered and recalled, more for his wit and wisdom and his famous one-liner in the Berkshire Hatchway’s legendary AGM’s at Omaha, when asked to contribute after a Warren Buffet response- “I have nothing to add”. Contextually, it was a telling and profound statement which communicated far more than the 5 words. His presence was his statement. His pregnant silence never missed the target.
Despite losing an eye very early in life, after a routine cataract surgery, he was a voracious reader and described himself as one who was always seen as “One holding a book in hand with two legs thrust out”, as his favourite focus in life. That is some self-portrayal in these WhatsApp University, stolen focus times we live in.
But we can, must and shall surely allude to the man’s wit and wisdom as that was who he was and has left behind as his rich and lasting legacy. Shall we?
ஒரு ஓட்டப் போட்டியில் கடைசியாக வருவது நமக்கு தர்மசங்கடத்தை உண்டாக்குகிறது என்றால், நான்காவது இடத்தைப் பெறுவது, இன்னும் மிக அதிகமான வலியை ஏற்படுத்துகிறது, இது ஒரு விளையாட்டு வீரரை எதிர்காலப் பெருமைக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது அவர்களை முற்றிலும் நசுக்கிவிடலாம்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டின் பிரமாண்டமான கட்டத்தில் கிட்டத்தட்ட பதக்கத்தை பெறத் தவறவிட்டவர்களுடனான இந்தியாவின் விவகாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது, இது 1956 இல் தொடங்கியது.
1956, மெல்போர்ன் – இந்திய கால்பந்து அணி
இந்திய கால்பந்து அணி காலிறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது, நெவில் டிசோசா விளையாட்டுப் போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தனது அணிக்கு முன்னிலை அளித்ததன் மூலம், யூகோஸ்லாவியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நெவில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இரண்டாம் பாதியில் யூகோஸ்லாவிய வீரர்கள் வலுவாகத் திரும்பி வந்து போட்டியில் தங்களுக்கு சாதகமாக முத்திரை குத்தினார்கள்.
வெண்கலப் பதக்க வகைப்பாடு போட்டியில், இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் பல்கேரியாவிடம் தோற்றது, இவ்வாறாக இந்திய கால்பந்து அணியின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது.
1960, ரோம் – மில்கா சிங்
1960இல் மில்காசிங் வெண்கலப் பதக்கத்தை மிகக் குறைந்த வித்தியாசத்தில் தவறவிட்டார். 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்கேற்று, பதக்கப் போட்டியாளராகப் பேசப்பட்ட ‘பறக்கும் சீக்கியர்‘ தனது சக போட்டியாளர்கள் ட்ராக்கில் எங்கே இருக்கிறார்கள் எனப் பார்க்க தனது வேகத்தைக் குறைத்த பிறகு ஒரு நொடியில் 1/10 பங்கு குறைவாக பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு மில்கா விளையாட்டை கிட்டத்தட்ட கைவிட்டார், மேலும் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் தடம் பதித்து இரண்டு தங்கப் பதக்கங்களை வெல்ல அவருக்கு நிறைய வற்புறுத்தல் தேவைப்பட்டது.
1980, மாஸ்கோ – இந்திய பெண்கள் ஹாக்கி அணி
சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பினால் மாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளை நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற முன்னணி ஹாக்கி நாடுகள் புறக்கணித்ததால், இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது முதல் முயற்சியிலேயே பதக்கம் பெறுகின்ற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு பதக்கத்தைத் தவறவிட்ட வேதனையை அந்த அணி தாங்கிக்கொண்டது, ஜிம்பாப்வே, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் ரஷ்யாவுக்குப் பின்னால் கடைசியாக USSR அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
1984, லாஸ் ஏஞ்சல்ஸ் – PT உஷா
லாஸ் ஏஞ்சல் ஒலிம்பிக்ஸ் ரோமில் நடந்த மில்காவின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது, பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை ஒரு நொடியில் 1/100 பங்கு வித்தியாசத்தில் தவறவிட்டார். ‘பய்யோலி எக்ஸ்பிரஸ்‘ என்று அழைக்கப்படும் அவர், ருமேனியாவின் கிறிஸ்டினா கோஜோகாருவுக்குப் பின்னால் நான்காவது இடத்தைப் பிடித்தார், இந்திய நாடே அவருக்காக கண்ணீர் சிந்தியது.
2004, ஏதென்ஸ் – லியாண்டர் பயஸ்
20 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஏதென்ஸ் விளையாட்டுப் போட்டியில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி இரட்டையர்கள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டதால், நான்காவது இடத்தின் சாபம் இந்திய அணியை வேட்டையாடத் திரும்பியது. டென்னிஸில் இந்தியாவின் தலைசிறந்த இரட்டையர் ஜோடியான பயஸ் மற்றும் பூபதி ஜோடி குரோஷியாவின் மரியோ ஆன்சிக் மற்றும் இவான் லுபிசிக் ஜோடியிடம் 6-7, 6-4, 14-16 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டு நான்காவது இடத்தைப் பிடித்தது. அதற்கு முன், இந்திய ஜோடி அரையிறுதியில் ஜெர்மனியின் நிக்கோலஸ் கீஃபர் மற்றும் ரெய்னர் ஷட்லர் ஜோடியிடம் 2-6 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது.
குஞ்சராணி தேவி
அதே விளையாட்டுப் போட்டியில், குஞ்சராணி தேவி பெண்களுக்கான 48 கிலோ எடை தூக்கும் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார், ஆனால் அவர் உண்மையில் பதக்கப் போட்டியில் இல்லை. க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 112.5 கிலோ எடையைத் தூக்கும் தனது இறுதி முயற்சியில் தகுதியிழந்த குஞ்சராணி, வெண்கலப் பதக்கம் வென்ற தாய்லாந்தின் அரே விரத்தாவோர்னை விட 10 கிலோ பின்தங்கிய நிலையில், 190 கிலோ எடையை மொத்தமாகத் தூக்கி முடித்தார்.
2012, லண்டன் – ஜாய்தீப் கர்மாகர்
துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜாய்தீப் கர்மாகர் இந்தப் பதிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவருக்குப் பின்னால் ஒரு இடத்தைப் பிடித்த பயங்கரமான உணர்வை அனுபவித்தார். ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் போட்டியின் தகுதிச் சுற்றில் கர்மாகர் ஏழாவது இடத்தைப் பிடித்தார், மேலும் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு வெறும் 1.9 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருந்தார்.
2016, ரியோ டி ஜெனிரோ – தீபா கர்மாகர்
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், இத்தகைய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். பெண்களுக்கான வால்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிறகு, அவர் 15.066 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார் மற்றும் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். அவர் இந்தியாவிற்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தினார் மற்றும் ஒரு சிறந்த ஜிம்னாஸ்ட் ஆக அமெரிக்காவிலோ ரஷ்யாவிலோ பிறக்க வேண்டிய அவசியமில்லை என்ற செய்தியை வழங்கினார்.
அபினவ் பிந்த்ரா
அதே விளையாட்டுப் போட்டிகளில், அபினவ் பிந்த்ராவின் புகழ்பெற்ற வாழ்க்கை ஒரு விசித்திரக் கதையை நோக்கிச் சென்றது, ஆனால் அவரது வகுப்பைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீரர் கூட நான்காவது சாபத்திலிருந்து விடுபடவில்லை, ஏனெனில் அவர் தனது வரலாற்று தங்கப் பதக்கத்தை பெற்ற எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விஸ்கர் மூலம் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
2020, டோக்கியோ – மகளிர் ஹாக்கி அணி
1980 மாஸ்கோ விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் உறுப்பினர்கள் மீண்டும் இதேபோன்ற வலியை அனுபவித்து, வெண்கலத்தை இழந்தனர். மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி. அரையிறுதியில், அர்ஜென்டினாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும், வெண்கலப் பதக்கத்தை வெல்ல வாய்பு இருந்தது. ராணிராம்பால் அண்ட் கோ, கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால், அவர்கள் பதக்கத்தை வெல்வதற்கான எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் பிரிட்டன் இரண்டு முறை கோல் அடித்து 4-3 என முன்னேறி பதக்கத்தை தட்டிச் சென்றது இந்திய அணியை கண்ணீரில் ஆழ்த்தியது.
அதிதி அசோக்
அதே விளையாட்டுப் போட்டிகளில், கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்கும் ஒரு வரலாற்றுப் போடியம் ஃபினிஷிங்கைத் தவறவிட்ட வேதனையை அனுபவித்தார். உலக தரவரிசையில் 200 வது இடத்தில் உள்ள 26 வயதான அவர், ஷாட் ஃபார் ஷாட் உலகின் சிறந்த கோல்ப் வீரர்களுடன் மோதினார். ஆனால், வேதனையுடன் நெருங்கி வந்து நான்காவது இடத்தைப் பிடித்த பிறகு அவர் இறுதியில் தோல்வியடைந்தார்.
1986 சியோல் – தங்கம் தவறவிட்ட ஷைனி வில்சன்
ஷைனி வில்சன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியவர். சியோலில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, அவர் முதல் இடத்தில் ஓட்டத்தை முடித்தார், ஆனால் பின்னர், 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீட்டிக்கப்பட்ட மகிழ்ச்சிக்குப் பதிலாக, ஷைனி ஆபிரகாம் தனது தடகள வாழ்க்கையில் மிகவும் துரதிர்ஷ்டவசமான நாளை எதிர்கொண்டார். முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ஷைனிக்கு தங்கம் கிடைக்கவில்லை; மோசமாக, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஷைனி, ஓடு பாதையில் அவர் செய்த தொழில்நுட்பப் பிழை காரணமாக உறுதி செய்யப்பட்ட தங்கத்தை தவறவிட்டார். விதிமுறைப்படி 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் முதல் 200 மீட்டர் வரை தங்கள் பாதையில் ஒட வேண்டும், ஷைனி சற்று முன்னதாகவே தடங்களை மாற்றினார். வழக்கமாக, 200 மீட்டர் குறியைக் குறிக்க உங்களிடம் சிவப்புக் கொடி இருக்கும். ஆனால் அன்று, பாதைக்கு அருகில் மஞ்சள் மற்றும் சிவப்பு இரண்டு கொடிகள் இருந்தன. எது குறி என்று தெரியவில்லை. மஞ்சள் முதலில் வந்தது, அதனால் நான் தடங்களை மாற்றினேன்,” என ஷைனி பின்னர் கூறினார்.
இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 213 (சூர்யகுமார் 58, பந்த் 49, ஜெய்ஸ்வால் 40, பத்திரனா 4-40) இலங்கை அணியையை 170 (நிசாங்கா 79, மெண்டிஸ் 45, பராக் 3-5, அர்ஷ்தீப் 2-24, அக்சர் 2-38) 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சூர்யகுமார் யாதவின் தலைமையின் கீழ் இந்தியாவின் புதிய T20I சகாப்தம் ஒரு பெரிய ஸ்கோரைப் பாதுகாப்பதில் பல்வேறு புள்ளிகளில் நடுக்கத்தை வெளிப்படுத்தினாலும் வெற்றியோடு இலங்கைப் பயணத்தைத் தொடங்கியது.
பதம் நிஸ்ஸங்கின் ஃப்ரீ-ஸ்ட்ரோக்கிங் 79ஆல் வழிநடத்தப்பட்ட ஒரு உற்சாகமான இலங்கை பேட்டிங் யூனிட், வெறும் ஐந்து பந்துவீச்சாளருடன் விளையாடிய இந்திய அணியுடன் விளையாடியது. ஆனால் ஸ்கோர்போர்டு அழுத்தம் காரணமாய் தோல்வியுற்றது.
குறிப்பிட்டு சொல்வதென்றால் இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கை சொல்லலாம். குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.
ஒரு சமயத்தில் இலங்கை கையில் ஒன்பது விக்கெட்டுகள் இருந்தன, ஆனால் அவர்களுக்கு இன்னும் 36 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்டது.
முன்னதாக ரவி பிஷ்னோய் வீசிய பந்தை டீப் மிட்விக்கெட்டில் பறக்கவிட்ட நிசாங்கா, அக்சர் படேலிடம் அவுட்டாகி தோல்விக்கான பயணத்தை தொடங்கி வைத்தார். நான்கு பந்துகளில் குசல் பெரேரா வீழ்ந்தபோது இந்தியா அந்த தொடக்கத்தை இரட்டை அடியாக மாற்றியது.
இது ஒரு பரபரப்பான தோல்வியின் தொடக்கமாக இருக்கும்; இலங்கை அணி 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, தாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு ஆட்டத்தை தோல்வியில் முடித்தனர்.
ஜம்மு & காஷ்மீரில் கார்கில் வெற்றி தினத்தில் பிரதமரின் உரை 26 ஜூலை 2024
தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் பி.டி.மிஸ்ரா அவர்களே, மத்திய அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், முப்படைகளின் தளபதிகள், கார்கில் போரின்போது ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் வி.பி.மாலிக், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல். மனோஜ் பாண்டே, சேவையாற்றி ஓய்வுபெற்ற வீரர்கள், கார்கில் போரில் விருதுகளைப் பெற்ற வீரமிகுந்த வீரர்களின் தாய்மார்கள், துணிச்சலான பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.
கார்கில் வெற்றிக்கு நாடு இராணுவத்திற்கு கடன் பட்டிருக்கிறது
ராணுவத்தின் துணிச்சலான வீரர்களே, என் அன்பு நாட்டு மக்களே, கார்கில் வெற்றியின் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்று லடாக் என்ற இந்த மாபெரும் நிலம் காண்கிறது. தேசத்துக்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை கார்கில் வெற்றி தினம் சொல்கிறது. நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்தன, தசாப்தங்கள் கடந்து செல்கின்றன, நூற்றாண்டுகள் கடந்து செல்கின்றன, பருவங்களும் மாறுகின்றன, ஆனால் தேசத்தைக் காக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்தவர்களின் பெயர்கள் அழியாமல் உள்ளன. இந்த தேசம் என்றென்றும் நமது இராணுவத்தின் வலிமைமிக்க மாவீரர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.
கார்கில் போரின் போது, நான் ஒரு சாதாரண நாட்டுக்காரனாக எனது ராணுவ வீரர்களின் மத்தியில் இருந்தேன் என்பது எனது அதிர்ஷ்டம். இன்று நான் மீண்டும் கார்கில் பூமியில் இருக்கும் போது, அந்த நினைவுகள் என் மனதில் பசுமையாக இருப்பது இயல்பு. இவ்வளவு உயரமான இடங்களில் நமது படைகள் எப்படி கடினமான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நாட்டிற்கு வெற்றியைத் தேடித்தந்த இத்தகைய துணிச்சலான மனிதர்களை நான் மரியாதையுடன் வணங்குகிறேன். கார்கிலில் தாய்நாட்டைக் காக்க தியாகம் செய்த தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன்.
பாகிஸ்தானின் தீவிரவாதம் பலிக்காது
கார்கில் போரில் வென்றது மட்டுமல்ல, ‘உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமை’ என்பதற்கும் ஒரு அற்புதமான உதாரணத்தைக் கொடுத்தோம். அந்த நேரத்தில் இந்தியா அமைதிக்காக முயன்றது உங்களுக்குத் தெரியும். பதிலுக்கு பாகிஸ்தான் மீண்டும் தனது அவநம்பிக்கை முகத்தை வெளிப்படுத்தியது. ஆனால் உண்மையின் முன் அசத்தியமும் பயங்கரமும் தோற்கடிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் என்ன முயற்சி எடுத்தாலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் தனது வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அந்த நாடு பயங்கரவாதத்தின் உதவியுடன் தன்னைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், இன்று நான் பேசும் போது பயங்கரவாதத்தின் தலைவன் என் குரலை நேரடியாகக் கேட்கும் இடத்திலிருந்து. இந்த பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அவர்களின் மோசமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது. நமது துணிச்சலான வீரர்கள் பயங்கரவாதத்தை முழு பலத்துடன் நசுக்குவார்கள், எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் பலன்
லடாக் அல்லது ஜம்மு காஷ்மீர் எந்தப் பகுதியாக இருந்தாலும், வளர்ச்சி எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலையும் இந்தியா நிச்சயமாக முறியடிக்கும். சில நாட்களில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி, சட்டப்பிரிவு 370 நீக்கி 5 ஆண்டுகள் ஆகின்றன. இன்று ஜம்மு காஷ்மீர் புதிய எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறது, பெரிய கனவுகளைப் பற்றி பேசுகிறது. ஜி-20 போன்ற உலகளாவிய உச்சிமாநாட்டின் முக்கியமான கூட்டங்களை நடத்துவதற்காக ஜம்மு காஷ்மீர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வளர்ச்சியுடன், ஜம்மு-காஷ்மீர்-லே-லடாக் ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. மூன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக, ஸ்ரீநகரில் தாஜியா ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. ‘பூமியின் சொர்க்கம்’ என அழைக்கப்படும் இந்த காஷ்மிர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வேகமாக நகர்கிறது.
லடாக்கில் வளர்ச்சி
இன்று, லடாக்கிலும் ஒரு புதிய வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது, ‘ஷிங்குன் லா சுரங்கப்பாதை’ கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஷிங்குன் லா டன்னல் மூலம் லடாக் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பருவத்திலும் நாட்டோடு இணைக்கப்படும். இந்த சுரங்கப்பாதை லடாக்கின் வளர்ச்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய சாத்தியக்கூறுகளின் புதிய வழிகளைத் திறக்கும். கடுமையான வானிலையால் லடாக் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் இந்த சிரமங்களும் குறையும். இந்த சுரங்கப்பாதையின் பணி தொடங்கப்பட்டதற்கு லடாக்கின் எனது சகோதர சகோதரிகளை நான் குறிப்பாக வாழ்த்துகிறேன்.
லடாக் மக்களின் நலனே எப்போதும் எங்கள் முன்னுரிமை. எனக்கு நினைவிருக்கிறது, கொரோனா காலத்தில், கார்கில் பகுதியைச் சேர்ந்த நமது மக்கள் பலர் ஈரானில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீண்டும் அழைத்து வர தனிப்பட்ட அளவில் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஈரானில் இருந்து கொண்டு வரப்பட்டு ஜெய்சால்மரில் தங்க வைக்கப்பட்டு, உடல்நிலையில் திருப்திகரமான அறிக்கைகள் கிடைத்த பிறகு, அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல உயிர்களை காப்பாற்ற முடிந்ததில் நாங்கள் திருப்தி அடைகிறோம். இங்குள்ள மக்களின் வசதிகளையும், இலகுவான வாழ்க்கையையும் அதிகரிக்க இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் லடாக்கின் பட்ஜெட்டை ரூ.1100 கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளோம். அதாவது, கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரிப்பு! இன்று இந்தப் பணம் லடாக் மக்களின் வளர்ச்சிக்கும், இங்கு வசதிகளை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாலைகள், மின்சாரம், தண்ணீர், கல்வி, வேலைவாய்ப்பு – லடாக்கின் காட்சி ஒவ்வொரு திசையிலும் மாறிக்கொண்டே இருக்கிறது, காட்சியும் மாறிக்கொண்டே இருக்கிறது. முதன்முறையாக இங்கு முழுமையான திட்டமிடலுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜல் ஜீவன் மிஷன் காரணமாக, இப்போது லடாக்கில் உள்ள 90 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறது. லடாக் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்குவதற்காக, சிந்து மத்திய பல்கலைக்கழகம் இங்கு கட்டப்படுகிறது. லடாக் பகுதி முழுவதையும் 4ஜி நெட்வொர்க்குடன் இணைக்கும் பணியும் நடந்து வருகிறது. 13 கிலோமீட்டர் நீளமுள்ள சோஜிலா சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதன் கட்டுமானத்துடன், தேசிய நெடுஞ்சாலை எண் ஒன்றில் அனைத்து வானிலை இணைப்பும் இருக்கும்.
எல்லைப்புற சாலைகள்
நாட்டின் எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிக்கான அசாதாரண இலக்குகளை நிர்ணயித்துள்ளோம் மற்றும் சவாலான பணிகளை எங்கள் கைகளில் எடுத்துள்ளோம். எல்லைச் சாலைகள் அமைப்பு- BRO Border Road Organisation இத்தகைய இலக்குகளை அடைய முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உழைத்துள்ளது. BRO கடந்த மூன்று ஆண்டுகளில் 330 க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துள்ளது. இதில் லடாக்கில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வடகிழக்கில் சேலா சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் அடங்கும். கடினமான நிலப்பரப்புகளில் வளர்ச்சியின் இந்த வேகம் புதிய இந்தியாவின் திறனையும் திசையையும் காட்டுகிறது.
இன்றைய உலகளாவிய சூழ்நிலைகள் முன்பை விட வேறுபட்டவை. எனவே, நமது படைகள் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களிலும், வேலை செய்யும் பாணியிலும் அமைப்புகளிலும் நவீனமாக இருக்க வேண்டும். எனவே, பல தசாப்தங்களாக பாதுகாப்புத் துறையில் பெரிய சீர்திருத்தங்கள் தேவை என்று நாடு உணர்ந்தது. இதை ராணுவமே பல ஆண்டுகளாக கோரி வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதற்கு முன்பு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள்
கடந்த 10 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறையின் முதல் முன்னுரிமையாக பாதுகாப்புச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். இந்த சீர்திருத்தங்களால், இன்று நமது படைகள் அதிக திறன் பெற்றுள்ளதுடன், தன்னிறைவு பெற்றுள்ளது. இன்று, பாதுகாப்புக் கொள்முதல் செய்வதில் பெரும் பங்கு இந்திய பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்படுகிறது. பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டில் 25 சதவீதம் தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளின் பலனாக இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி தற்போது ரூ.1.25 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தியா ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக கருதப்பட்டது. இப்போது இந்தியா ஒரு ஏற்றுமதியாளராக முத்திரை பதித்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் பட்டியலை நமது படைகள் தயாரித்து, இப்போது இந்த 5000 பொருட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்யாது என்று முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக ராணுவ தலைமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்னிபத் திட்டம்
பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களுக்காக இந்திய ஆயுதப் படைகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். பல ஆண்டுகளாக நமது படைகள் பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளன. ‘அக்னிபத்’ திட்டம் ராணுவம் செய்த தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல தசாப்தங்களாக, பாராளுமன்றம் முதல் பல்வேறு குழுக்கள் வரை சக்திகளை இளமையாக மாற்றுவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய வீரர்களின் சராசரி வயது உலக சராசரியை விட அதிகமாக இருப்பது நம் அனைவருக்கும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே, இந்த விஷயம் பல ஆண்டுகளாக பல குழுக்களில் எழுப்பப்பட்டது. ஆனால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இந்த சவாலை தீர்க்க முன் எந்த விருப்பமும் காட்டப்படவில்லை. ராணுவம் என்றால் தலைவர்களுக்கு சல்யூட் அடிப்பது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலரின் மனநிலை இருந்திருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை; எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி நாட்டு மக்களின் அமைதிக்கான உத்தரவாதம்; எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கான உத்தரவாதம்.
அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள்
‘அக்னிபத்’ திட்டத்தின் மூலம் இந்த முக்கியமான கனவை நாடு நிவர்த்தி செய்துள்ளது. அக்னிபத்தின் நோக்கம் படைகளை இளமையாக ஆக்குவது, அக்னிபத்தின் நோக்கம் படைகளை தொடர்ந்து போருக்குத் தகுதியாக வைத்திருப்பது. துரதிர்ஷ்டவசமாக, சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயத்தை அரசியலாக்கியுள்ளனர். இராணுவத்தின் இந்த சீர்திருத்தத்திலும் கூட சிலர் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக பொய் அரசியல் செய்கிறார்கள். படைகளில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களை நடத்தி நமது படைகளை பலவீனப்படுத்தியவர்கள் இவர்கள்தான். விமானப்படைக்கு நவீன போர் விமானங்கள் கிடைக்கக்கூடாது என்று விரும்பியவர்கள் இவர்கள்தான். தேஜாஸ் போர் விமானத்தை பெட்டிக்குள் அடைக்க ஆயத்தம் செய்தவர்கள் இவர்கள்தான்.
அக்னிபத் திட்டத்தில் சேர்பவர்களுக்குக் கிடைக்கும் சலூகைகள்
‘அக்னிபத்’ திட்டம் நாட்டின் பலத்தை அதிகரிக்கும் என்பதுடன், நாட்டின் திறமையான இளைஞர்களும் தாய்நாட்டிற்கு சேவை செய்ய முன்வருவார்கள் என்பதே உண்மை. தனியார் துறை மற்றும் துணை ராணுவப் படைகளில் தீயணைப்பு வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. சிலருடைய புரிதலுக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சிந்தனைக்கு என்ன நேர்ந்தது? ஓய்வூதியப் பணத்தை மிச்சப்படுத்தவே இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்ததாக மாயையை பரப்பி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், ஆனால் இப்படிப்பட்டவர்கள் கேட்க வேண்டும், தயவு செய்து சொல்லுங்கள், மோடியின் ஆட்சியில் இன்று பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமா? 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நேரம் வரும். அப்போது மோடிக்கு 105 வயதாகியிருக்கும், அப்போதும் மோடி அரசு அமையுமா? இன்றைக்கு 105 வயதாகும் போது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முறைகேடு செய்யும் மோடி இப்படி ஒரு அரசியல்வாதியா? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஆனால் நண்பர்களே, எனக்கு நாடுதான் உயர்ந்தது, கட்சி அல்ல. மற்றும் நண்பர்களே, இராணுவம் எடுத்த முடிவை நாங்கள் மதித்துள்ளோம் என்பதை இன்று நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன். நான் முன்பே சொன்னது போல, நாங்கள் அரசுக்காக வேலை செய்கிறோம், அரசியலுக்காக அல்ல. எங்களுக்கு தேசத்தின் பாதுகாப்புதான் முக்கியம். எங்களைப் பொறுத்தவரை ரூ.140 கோடி மதிப்புள்ள அமைதிதான் முதல் விஷயம்.
இராணுவத்திற்கு மேதி அரசு செய்திருக்கும் சேவைகள்
நாட்டு இளைஞர்களை தவறாக வழிநடத்துபவர்களின் சரித்திரமே அவர்கள் ராணுவ வீரர்களை பொருட்படுத்தவில்லை என்பதற்கு சாட்சி. 500 கோடி என்று பெயரளவுக்கு நிதி ஒதுக்கி ‘ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்’ என்று பொய் சொன்னவர்கள் இவர்கள்தான். ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தி, முன்னாள் ராணுவத்தினருக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கியது நமது அரசுதான். எங்கே 500 கோடி, எங்கே 1.25 லட்சம் கோடி! எத்தனையோ பொய்களும் நாட்டு வீரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிய பாவமும்! சுதந்திரம் அடைந்து 7 தசாப்தங்கள் ஆன பிறகும், ராணுவத்தின் கோரிக்கையையும், துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையையும் மீறி, நமது தியாகிகளுக்கு போர் நினைவுச் சின்னம் கட்டாமல், அதைத் தள்ளிப்போட்டு, குழுக்களை அமைத்து, வைத்திருந்தவர்கள் இவர்கள்தான். வரைபடங்களைக் காட்டுகிறது. எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு போதிய குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை கூட வழங்காதவர்கள் இவர்கள்தான். மேலும் நண்பர்களே, கார்கில் விஜய் திவாஸைப் புறக்கணித்தவர்கள் இவர்கள்தான். நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் ஆசிர்வாதத்தால் நான் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றேன், எனவே இந்த முக்கியமான வரலாற்று நிகழ்வை இன்று நாம் நினைவுகூர முடிகிறது. மற்றபடி அப்போது வந்திருந்தால் இந்தப் போர் வெற்றியின் சவாரி நினைவுக்கு வந்திருக்காது.
கார்கில் வெற்றியின் உண்மை சொந்தக்காரர்கள்
கார்கில் வெற்றி எந்த அரசாங்கத்தின் வெற்றியல்ல, கார்கில் வெற்றி எந்தக் கட்சிக்கும் கிடைத்ததல்ல. இந்த வெற்றி நாட்டின் வெற்றி, இந்த வெற்றி நாட்டின் பாரம்பரியம். இது நாட்டின் பெருமை மற்றும் சுயமரியாதை விழாவாகும். மீண்டும் ஒருமுறை, 140 கோடி நாட்டு மக்களின் சார்பாக, நமது வீர வீரர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்துகிறேன். கார்கில் விஜயின் 25வது ஆண்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சொல்லுங்கள் – பாரத் மாதா கி ஜெய்!!! இந்த பாரத் மாதா கி ஜெய் என்னுடைய அந்த வீரத் தியாகிகளுக்காகவும், என் பாரத அன்னையின் துணிச்சலான மகன்களுக்காகவும்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யில் உள்ள அருள்மிகு ஸ்ரீ துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீதிருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆடித்தபசு விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு சிம்ம வாகனம் , குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர்.
இந்நிலையில், 10ம் நாள் நிகழ்ச்சியான தபசு நிகழ்ச்சியானது திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
துணைமாலை அம்மன் தபசு மண்டபத்தில், திருமேனிநாதரை அடைவதற்காக தவம் மேற்கொண்டதாகவும், அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்து, திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் திருமேனிநாதருக்கும, துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மன் சுவாமியை மூன்று முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது.
அம்பாள் பூரண சந்தோஷத்துடனும், பகவான் மன நிறைவுடனும் குண்டாற்றில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியே ஆடித்தபசு எனப்படுகிறது.
மேலும், ஆடித்தபசு விழாவைக் காணும் போது பக்தர்கள் தங்கள் பிரச்சனைகள் தீர்வதாகவும், திருமண தடை நீங்குவதாகவும், குழந்தை பாக்கியத்தடை நீங்குவதாகவும் நம்பி வழிபடுகின்றனர்.
இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு திருக்கோவிலைச் சென்றடைந்தனர்.
தபசுத் திருவிழாவைக் காண விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.
தபசுத் திருவிழாவை முன்னிட்டு திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Our chief want is someone who will inspire us to be what we know we could be.” – Ralph Waldo Emerson, essayist, poet and philosopher
Prologue
For one who exploited the Covid pandemic times to read, read, write and write and continue to write well beyond, compulsive writing is maniacal. Practicing law has always been about learning ( earning too as in monetizing) and sharing. And the famed Justice Felix Frankfurter letter to a 12 year student Paul Claussen who sought advice to take up law as a profession has remained an obsession. So, one engaged and indulged in multiple disciplines ( jack of all trades and master of none, one readily concedes) as a poor man’s clone of Claussen .
From
Mr. Justice Felix Frankfurter (71 years while writing the letter)
To
M. Paul Claussen, Jr., a 12-year-old living in Alexandria, Virginia, US
My dear Paul: May,1854
No one can be a truly competent lawyer unless he is a cultivated man. If I were you I would forget about any technical preparation for the law. The best way to prepare for the law is to be a well-read person. Thus alone can one acquire the capacity to use the English language on paper and in speech and with the habits of clear thinking which only a truly liberal education can give. No less important for a lawyer is the cultivation of the imaginative facultiesby reading poetry, seeing great paintings, in the original or in easily available reproductions, and listening to great music. Stock your mind with the deposit of much good reading, and widen and deepen your feelings by experiencing vicariously as much as possible the wonderful mysteries of the universe, and forget about your future career.
With good wishes,
Sincerely yours, [Signed] Felix Frankfurter
M. Paul Claussen, Jr.
Well, you may have got the gist of the scary start. Yes, one has chosen to pen a book ( what else) in the name and style on “Great Ones”. Not confined to law. Not biographical sketches but anecdotal and episodal musings from the lives and times of the chosen ‘Great Ones’. Who are these ‘Great Ones’? They would be from MY chosen stable. Those that appeal to me and my senses and sensibilities. After all, it is my work. From any and every field that appeals to my low hanging fruit values.
I would be travelling across multi disciplines. I have known them for long from history . Read them for long. Continue to read them. Social media platforms and free access to audio-video versions, on the information highway are huge in access. This effort would be on the values they espoused and lived by. Not a pen sketch on their births, careers and demises, with datelines. Interesting takes on their Wit & Wisdom.
(Note: These installments may flow daily, weekly or bi weekly or as my fancy takes me. You have been forewarned. Those who care and dare may proceed. Rest are free to exercise the safe/sure option of DELETE, if you have not already!).
Let me for now lay out the contours of my foray, in this Prologue, as it were.
The Essence of Greatness
In the annals of human history, certain individuals stand out not merely for their achievements, but for the indelible marks they leave on the world. These are the great ones—those whose influence transcends their immediate environment, reshaping entire fields and inspiring countless others to strive for excellence. The concept of greatness, while multifaceted, often centers on a combination of vision, innovation, resilience, and the capacity to inspire. This book, titled “Great Ones,” endeavors to explore the lives and legacies of such inspirational leaders across various disciplines, delving into the essence of what makes them remarkable.
Defining Greatness
Greatness is a term that is frequently used but seldom understood in its entirety. It transcends mere success or competence, encompassing a broader spectrum of attributes including moral integrity, visionary thinking, and a commitment to the greater good. Great leaders are those who not only excel in their respective fields but also drive transformative changes that benefit humanity as a whole. They possess a unique combination of intellect, empathy, and tenacity, allowing them to navigate and surmount the formidable challenges they face.
The Multifaceted Nature of Leadership
Leadership, a central theme in the narratives of the great ones, manifests in myriad forms across different fields. In politics, it might be characterized by the ability to unite divided populations and steer nations through tumultuous times. In science, it could involve ground breaking discoveries that alter our understanding of the universe and improve human life. In the arts, leadership often takes the form of creative genius that redefines cultural paradigms and inspires future generations. Each field demands a distinct set of skills and qualities, yet the underlying principles of leadership remain consistent: vision, courage, and an unwavering dedication to one’s mission.
Visionaries in Politics
Political leaders who have achieved greatness often do so by championing causes that resonate deeply with the collective aspirations of their people. Many are revered not just for their political acumen but for their profound moral vision and unwavering commitment to justice and equality. Their leadership extended beyond the confines of traditional politics, embodying a universal quest for human dignity and freedom. Their legacies continue to inspire movements for social justice and human rights across the globe.
Innovators in Science and Technology
The realm of science and technology has been profoundly shaped by individuals whose innovative thinking and relentless pursuit of knowledge have pushed the boundaries of what is possible. Pioneers were those who revolutionized our understanding of physics and chemistry, laying the groundwork for numerous technological advancements. Their intellectual brilliance was matched by an insatiable curiosity and a resilience in the face of adversity. These great ones exemplify the transformative power of scientific inquiry and the enduring impact of technological innovation on society.
Icons in the Arts and Culture
In the arts, greatness is often associated with an unparalleled ability to capture and express the human experience. Artists, Attorneys, poets , Justices and writers , who broke conventions and introduced new perspectives, challenging audiences to see the world through a new prism. Their work transcends time and place, continuing to evoke profound emotional responses and inspire creativity. The influence of these artistic and cultural icons extends beyond their immediate contributions, shaping the evolution of artistic expression and cultural identity.
The Legacy of Greatness
The legacies of great leaders are not confined to their lifetimes; they ripple through history, influencing subsequent generations and shaping the future. These individuals often leave behind not just tangible achievements but also a philosophical and ethical framework that guides future endeavors in their fields. Their stories serve as powerful reminders of the potential for human greatness and the enduring impact of visionary leadership.
Conclusion
As we embark on the journey through the lives and legacies of the great ones in this book, we aim to uncover the principles and qualities that define true greatness. By examining the diverse paths taken by these inspirational leaders, we hope to illuminate the common threads that unite them and offer insights into how their extraordinary contributions continue to inspire and guide us. “Great Ones” is not just a celebration of individual achievement but a tribute to the enduring power of visionary leadership and its capacity to effect profound and lasting change in the world. And hopefully inform and inspire!