Home Blog Page 194

Oldest Candidate in Oldest Democracy!

0
biden vs trump - 2026

         Narasimhan Vijayaraghavan

Within a few minutes of the Biden  v. Trump US Presidential Debate Live, on 27th June,2024 at 21.00 ET ( 06.30 IST) at CNN Headquarters in Atlanta,Georgia, it was clear to any dispassionate observer/watcher, that the incumbent POTUS who showed up was ‘ile,tired and lacking in mental acuity’ to hold the most powerful office in the world. Biden presented a painful picture to his devoted. It was Donald J Trump who won by default despite the ‘obvious bluster and bravado full of alternate facts a.k.a. lies’.  A poor advertisement for a proud nation as oldest democracy.

US declared itself free on July, 1776. The first U.S. Presidential elections was held on 15th Dec,1788. The most famous exchanges called Lincoln-Douglas, between  Abraham Lincoln and Stephen A  Douglas between August 21, 1858 – October 15, 1858, were a cluster of  seven debates in the 1858 Illinois senatorial campaign, are talked of, even today.

While the concept of televised political debates is commonplace today, their origin can be traced back to a single, groundbreaking event: the 1950 Senate race in Massachusetts between Democratic Congressman John F. Kennedy and Republican Congressman Richard Nixon. There is, however, a common misconception – their first encounter wasn’t on September 27th, 1950, but rather on September 21st.

This historic debate, broadcasted on radio and the relatively new medium of television, marked a turning point in American politics. It offered voters an unprecedented opportunity to see and hear the candidates directly, rather than relying solely on speeches and printed media. An interesting trivia is that the same Kennedy had passed 1000% as political donation from his father to Nixon, nine years earlier, appreciating his ‘anti-communist’ commitment.

The 1950s were a period of immense political and social change. The Cold War was intensifying, and anxieties about communism were rampant. The September 21st debate, aired on WBZ-TV in Boston, was a local affair. Neither candidate expected a large audience.The format was simple: both men delivered opening statements, then responded to questions posed by a moderator. While the debate lacked the intense back-and-forth of today’s televised encounters, it was groundbreaking in its use of the new medium.

The impact of the televised debate was significant. While viewership numbers were modest by today’s standards, the debate captured the national imagination. People who wouldn’t normally attend political rallies now had a front-row seat to the political process. Kennedy, with his youthful appearance and confident delivery, was seen as performing better on television than the sweating and somewhat nervous Nixon.

This initial success of televised debates paved the way for their increased use in future elections. The Kennedy-Nixon debates of 1960, which were viewed by millions nationally, are considered a landmark moment in American political history.

The 1950 Kennedy-Nixon debate holds historical significance for several reasons. It marked the dawn of televised political debates, forever altering the way voters engage with candidates. It showcased the power of television to shape public perception, a factor that continues to influence elections today. Finally, it highlighted the importance of a candidate’s personal image and communication skills in the television age.

While not the first debate between the two politicians, the September 21st, 1950 encounter stands as a testament to the evolving landscape of American politics. It ushered in a new era of political communication, one that continues to shape our democratic process.

American democracy is strange, unique and peculiar. The candidate who wins the POtuS election may not win the popular vote. The constitutionally mandated Electoral College beast, put in by the framers in 18th century, clinches the candidate. The latest candidate to succeed this route was Donald J Trump who best Hilary Clinton in Nov,2016, via the Electoral College, despite trailing by 3 million votes in popular stakes, by winning the ‘few critical swing States ‘, among the 50 States.

Now, age has become a huge issue in the oncoming Nov 2024. The challengers are the oldest candidates ever. Josef Biden is 81  years and Donald J Trump is 78 years. not far behind. Rupee Murdock backed Wall Street  Journal, with an obvious GOP/Trump slant had recently written al story-  which went viral,  declaring that “behind closed doors,” President Joe Biden had  shown “signs of slipping.” The story questioned Biden’s mental acuity, playing into a GOP-propelled narrative that the 81-year-old president lacks the fitness to hold the nation’s highest office. The report, “ Most of those who said Biden performed poorly were Republicans, but some Democrats said that he showed his age in several of the exchanges”, was questioned as ‘slanted and exaggerated’.

However, Josef R Biden proved the contents to be no far off the truth and reality. Even as the debate commences, the Democratic campaign managers , in a leak on social media said that ‘Biden was running a nasty cold’. It was clear that Bidrnvteam was covering up for the candidate who showed up on the debate stage.

Biden was ‘nervous and lacking in focus’, he ‘looked lost’, ‘was inchorrnt and worse’. Biden could not take Trump who was ‘galloping with lies’ as one of the CNN debate rules was that ‘there would be no fact-checking in real time’. Result: Trump trumped Biden fair and square.

The debate has had serious consequence that donors and aides associated in Biden campaign are  meeting to persuade Biden to ‘withdrawn from the race’. He alone can decide. The timeline was short but sufficient, ahead of Aug 19,2024, Democratic Party Convention in Chicago.

This too is one facet of the oldest democracy which fascinates,  in its multiple variants capturing the famed and apt quote from Winston Churchill, “ Many forms of Government have been tried, and will be tried in this world of sin and woe. No one pretends that democracy is perfect or all-wise. Indeed it has been said that democracy is the worst form of Government except for all those other forms that have been tried from time to time.…’

Would Biden pave the way for a  younger Democratic  nominee?

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

new vande bharat train color - 2026

சென்னையில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடா, திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்தியாவில் இயங்கும் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் நாளுக்கு நாள் பயணிகளிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க முடியும்.

ஆனால் நமது நாட்டின் ரயில்வே தண்டவாளங்களின் அமைப்புகள் காரணமாக இதன் அதிகபட்ச வேகம் 130 கிலோ மீட்டர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகம் உள்ள குறிப்பிட்ட முக்கியமான வழித்தடங்களில் தற்போது 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூர், விஜயவாடா, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும், மேலும் திருவனந்தபுரம் காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

தற்போது சென்னை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி துவக்கி வைக்க இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதால் இந்த சேவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மதுரை பெங்களூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு கோடை காலத்தில் கடந்த ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களில் சென்னையிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலம் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகளிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் வண்டி எண். 20607 ஏப்ரல் மாதத்தில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் இருக்கும் 100 சதவீத இடங்களை தாண்டி டிக்கெட் முன்பதிவு 120.41 சதவீதத்தை கடந்து பதிவாகியிருந்தது . அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் தவிர மீதி தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலில் நார்மல் சார் காரில் உள்ள இடங்களில் 122.64 சதவீதம் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது. மே மாதத்தை பொருத்தவரை எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் 135.24 சதவீதமும் சேர்க்காரி 130.4 சதவீதமும் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது.

சென்னை சென்ட்ரல் மைசூர் ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 69 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் வருமாருகத்தில் மைசூர் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 71 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், சென்னை கோவை இடையேய்க்கப்பட்ட ரயில் மூலம் ரூபாய் 92.75 லட்சமும், மறு மார்க்கத்தில் கோவை- சென்னை ரயில் மூலம் இரண்டு மாதங்களில் ரூபாய் 79. 04 லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே போல சென்னை எழும்பூர் -நெல்லை மற்றும் சென்னை-மைசூர் இயக்கப்பட்டு வரும் மந்தை பாரத் ரயில்களும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியிருப்பதாவது,

“சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலமாக இரண்டு மாதங்களில் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தவிர சில வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டது. அந்த ரயில்களுக்கும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பயணிகளின் தேவை அதிகமாக உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ‘இந்தியன் 2’ படம்; ஜூலை 12ல் வெளியீடு!

indian 2 kamal and shankar - 2026

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில சுவாரஸ்யமான தகவல்களும் பகிரப்பட்டன.

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன்-2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். 

தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  “இந்தியன் 2” டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியபோது… ‘உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஷங்கர் சார், ராக்ஸ்டார் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, இந்த படத்தில் ரணகளப்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கமல் சார், ஷங்கர் சார் இணைந்து, இதற்கு மேல் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பைத் தர முடியுமா எனத் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி’ என்றார்.

நடிகர் சித்தார்த் : ’21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழிநடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2.  இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்’ என்றார்.

இயக்குநர் ஷங்கர் : ‘பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.

அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான்.

பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங்கே முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார்.

அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை ஷீட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார்.

இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கி கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.

அனிருத் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக மியூசிக் போட்டுள்ளார். ஒரு டியூன் அனுப்புவார் 80 % ஓகே என்பேன். ஆனால் நீங்கள் 100 % சொல்லும் வரை போட்டுக் கொண்டே  இருப்பேன் என்பார். என்னவிதமான சிச்சுவேசன் தந்தாலும் மிரட்ட கூடியவர், அனிருத்துக்கு வாழ்த்துக்கள்.  விவேக் சார் அவரை திரையில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

மனோ பாலாவும் அழகாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவில் வர்மம் செய்து ரவிவர்மம் காட்டியுள்ளார் ரவிவர்மன். குணால் சின்ன சின்ன சவுண்டில் கூட அவ்வளவு உழைத்திருக்கிறார்.

இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படத்தை சப்போர்ட் செய்து பெரிய வெற்றி பெறச்செய்தீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.

நடிகர் கமல்ஹாசன் : ‘உயிரே உறவே வணக்கம்.  உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்திய 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது.

இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது.

ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2  மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி.

இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி.

சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார்.  நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2  எனவும் மற்றும்  தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

சென்னை அசோக் நகரில் UPSC இலவச பயிற்சி

upsc civil services - 2026

அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் “குரு விருக்ஷா ஐஏஎஸ் அகடமி” சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அடுத்து வரும் யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்க இருக்கிறது.

பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம்.

அகடமியின் சிறப்பு அம்சங்கள்:

  • சிறந்த நிபுணர்களை கொண்டு பயிற்சிி வகுப்புகள்
  • வாராந்திர, மாத, ஆண்டு மாதிரி தேர்வுகள்
  • வசதியான Study Hall
  • தேவையான நூல்களை பயன்படுத்த நூலகம்

இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் நுழைவு தேர்வு, நேர்முக தேர்வு, குழு விவாதங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-07-2024

போட்டித் தேர்வு தேதி : 07-07-2024

போட்டித் தேர்வு பாடத்திட்டம்: மே 2023 முதல் மே 2024 வரையிலான நடப்பு நிகழ்வுகளில் (current affairs) இருந்து கேள்விகள் அமையும்.

மேலும் விவரங்களுக்கு..

தொடர்பு தொலைபேசி எண்கள்: 9363923451 & 9500481074

இப்ப பயிற்சியில் சேர இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டுகிறோம்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf2T7EqEaBP-8XUpj1jMFs0P5uLfd_3WuAsMxhFLhp5KvadBQ/viewform?usp=sf_link

T20 WC 2024: அரையிறுதியில் அலேக் ஆக வென்ற இந்திய அணி!

t20 worldcup - 2026
#image_title

டி 20 உலகக் கோப்பை – அரையிறுதி ஆட்டங்கள் – 27.06.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான்

இந்த அரையிறுதிக்கு முன்னர் ஆஃப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாலும், தென் ஆப்பிரிக்கா அணி ஆங்கிலத்தில் ச்சோக்கர்ஸ் என அழைக்கப்படுவதாலும் – அதாவது கடைசி நேரத்தில் சொதப்புவர்கள் என்பதாலும் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திற்கு வந்து, இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து, டி20 கோப்பையை வெல்லப்போவதாக கனவு கண்டு கொண்டிருந்ததாக சிலர் எழுதிவந்தனர். ஆனால் இன்று நடந்தது அதற்கு நேர்மாறானது.

ஒரு பிள்ளைப்பூச்சியை காலில் போட்டு நசுக்குவதுபோல தென் ஆப்பிரிக்க அணி ஆஃப்கானிஸ்தான் அணியைத் தோற்கடித்தது. டாஸ்வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. 11.5 ஓவரில் 56 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

அதிகபட்ச் ஸ்கோர் அஸ்மத்துல்லா உமர்சாய் (10 ரன்) உதிரி ரன்கள் அதைவிட அதிகம் (13 ரன்).  டி காக் ரோஹித் ஷர்மா போல அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் 3 ஓவர் அல்லது அதிகபட்சமாக 5 ஓவரில் மேட்ச் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் டி காக் இரண்டாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸும் மர்க்ரமும் சற்று நிதானமாக ஆடி 8.5 ஓவரில் 60 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். 

இந்தியா  vs இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் ஆட்டம் இந்திய நேரப்படி காலையில் நடந்தது என்றால் இந்தியா இங்கிலாந்து அணிகளின் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது.  ஆனால் மழைக்கான முன்னறிவிப்பு இருந்தது. எனவே ஆட்டம் நடக்குமா? நடக்காதா என்ற பதட்டமும் இருந்தது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா சென்ற ஆட்டத்தைப் போலவே வெறியாட்டம் ஆடத் தயாராக இருந்தார். ஆனால் விராட் கோலி மீண்டும் ஒருமுறை குறைவான ஸ்கோரில் அட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் (39 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 23 ரன்), ஜதேஜா (9 பந்துகளில் 17 ரன்), அக்சர் படேல் (6 பந்துகளில் 10 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் மூன்று விக்கட்டுகளை எடுத்தார்.

இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின்போது முதல் சேஞ்ச் பவுலராக களமிறங்கிய அக்சர் படேல் நாலாவது ஓவரில் பட்லரையும் (23 ரன்), ஆறாவது ஓவரில் ஜானி பெயர்ஸ்டோவையும் (பூஜ்யம் ரன்), எட்டாவது ஓவரில் மொயின் அலியையும் (8 ரன்) வீழ்த்தினார்.

இதற்கிடையில் பும்ரா, பில் சால்டை (5 ரன்) ஐந்தாவது ஓவரில் அவுட்டாக்கினார். இதற்கு அடுத்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ், ஹாரி ப்ரூக் (25 ரன்), சாம் கரன் (2 ரன்), கிரிஸ் ஜோர்டன் (1 ரன்) ஆகியோரை தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கசெய்ததுடன், லியம் லிவிங்க்ஸ்டோன் ரன் அவுட் ஆகவும் காரணமாக இருந்தார்.

ஆட்டத்தின் எந்த நிலையிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் இல்லை. 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 68 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது. 

இந்திய அணி ஜூன் 29 அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் தனது இரண்டாவது முறை கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் விளையாடும்.

தென் ஆப்பிரிக்க அணி முதன் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.

இரண்டு அணிகளும் இந்தப். போட்டியில் தாங்கள் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்.      

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

sengol in parliament - 2026
#image_title

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

செங்கோல் பற்றி அவர் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், செங்கோல் என்பதன் பொருள் புரியாமல் ஆங்கிலேய அடிமைகளின் பொது புத்தியில் பொதிந்துபோன கசடுகள் மட்டுமே. பாரத நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் என எதுவும் அறியாத நேருவின் வழியில் வந்தவர்களால் இப்படி தான் பேச முடியும்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், நீதியின் சின்னமாக செங்கோலை வைத்திருந்தனர். அரசன் நீதி தவறும்போது செங்கோல் சாய்ந்து விட்டது எனக்கூறினர். மதுரையில் நீதி தவறியதை அறிந்த பாண்டியன் தன் உயிர் துறந்து செங்கோலை காத்தான்.

மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப் பின், சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன.

செங்கோல் பற்றி தொல்காப்பியம் துவங்கி, பக்தி இலக்கியங்கள் வரை பல்வேறு இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பழம் பெரும் இலக்கியங்களான சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை உள்ளிட்டவை குறிப்பிடும் நிலையில், அவற்றில் செங்கோலாக திருக்குறள் குறிப்பிடப்படுகிறது.

திருக்குறளில் மனைமாட்சி, செங்கோண்மை எனும் அதிகாரங்கள் மன்னனின் இயல்புகள், அவன் கடைபிடிக்க வேண்டிய நெறிகள், அவன் ஆட்சியில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. அதுபோலவே வள்ளலாரும் இறைவன் அளித்த செங்கோலாக தன் சுத்த சன்மார்க்க சங்கத்தை குறிப்பிடுகிறார்.

அத்தகைய செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் இந்தி கூட்டணியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சமாஜ்வாதி கட்சி எம்.பி.யின் கடிதத்தை தொடர்ந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணியின் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் செங்கோல் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்து ஏற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.பி திரு. மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

அதுபோலவே, செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை எனவும், அதனால் தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என்ற திமுக மூத்த தலைவர் திரு. டி.கே.எஸ் இளங்கோவனின் கருத்தும் இந்தி கூட்டணியினர் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இவர்களின் இந்த கருத்துகள் அனைத்துமே ஆங்கிலேயே அடிவருடி மனப்பான்மையின் வெளிப்பாடு தான். செங்கோலின் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த இந்தி கூட்டணி தலைவர்களுக்கும் தெரியவில்லை.

தமிழ் பண்பாட்டின் மீதும், தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தின் மீதும் இவர்களுக்கு மதிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் நிருபித்து விட்டார்கள். இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டு விட்டார்கள்.

நமது தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்தி கூட்டணி தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வரலாறை மறைத்துப் பேசுவதா? சேகர் பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!

sekharbabu with stalin - 2026
#image_title

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:

கோவில்களைத தமிழர்கள் கலவரமாக பார்க்காமல் கலையாக பார்த்ததால் கோவில் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் பேசியுள்ளார். அமைச்சராவதற்கு முதல்வரின் அடிமையாக இருந்து ஆமென் போட்டால் போதும். எந்த தகுதியும் தேவையில்லை என்பதை இவரது பேச்சு வெளிக்காட்டுகிறது. சேகர் பாபுவிற்கு சரித்திரமும் தெரியாது தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் முகலாயர், ஆங்கிலேயரால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று தெரியாமல் பேசியிருக்கிறார்.

எந்த சட்டசபையில் நின்று இவர் பேசுகிறாரோ அந்த இடத்தில்தான் சென்ன மல்லீஸ்வரர் கோவில், சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்தது. அதனை பிரிட்டிஷ் காரர்கள் இடித்து தான் ஜார்ஜ் கோட்டை கட்டினார்கள்.

அதற்கு அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் தான் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் இருந்தது. அதனையும் இடித்தார்கள். தன்மானத்தோடு ஆங்கிலேய கொடுங்கோலனை இந்துக்கள் எதிர்த்தனர். மக்களின் எதிர்ப்பிற்கு பின்னர் பணிந்து போனான். அதன்பிறகு இந்துக்கள் ஒன்று சேர்ந்து தேவராஜ் முதலியார் தலைமையில் கட்டிய கோவில்கள் தான் தற்போது ஒரு கிலோமீட்டர் தாண்டி பூக்கடை பகுதியில் உள்ளது.

சென்னையின் தலக் கோவில்களே இவைதான். அதனால் தான் இதற்கு சென்னை என்ற பெயரே வந்தது என்பதை மறந்துவிட முடியாது.

சென்னை மைலாப்பூர் கடலையொட்டி இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அதனை இடித்து அங்கு கட்டப்பட்டது தான் செயிண்ட் தாமஸ் சர்ச். இப்போது உள்ள கோவில் அதன் பிறகு கட்டப்பட்டது.

இப்படி பல கோவில்களை மதவெறி பிடித்த ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு உள்ளது. சாம்பலில் இருந்து உயிர்ப்பெறும் ஃபினிக்ஸ் பறவை போல இந்துக்கள் மீண்டும் கட்டிய கோவில் வரலாறு அமைச்சர் சேகர்பாபுவிற்கு தெரிந்தால் வாய்க்கு வந்தபடி இப்படி பேசுவாரா?

மதவெறியர்களான முகலாயர், திப்பு சுல்தான், ஹைதர்அலியால் பாதிக்கப்பட்டது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில். 400 ஆண்டுகள் சாமி (சிவலிங்கம்) இல்லாத கோவிலாக வேலூர் மாவட்டமே பாழடைந்து கிடந்தது. இந்து முன்னணி நிறுவனர் ஐயா வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் இந்துக்களை ஒன்று திரட்டி 1981-ல் சுவாமியை பிரதிஷ்டை செய்ய வைத்தார்.

செஞ்சி கோட்டை மீது இருந்த கோவில் பெருமாள் ஆக்கிரமிப்பாளனால் பாதிக்காமல் அப்புறப்படுத்தினர் பக்தர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தான் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திண்டுக்கல் அபிராமி மலைக்கோவிலில் இருந்த சுவாமிகள் திப்பு சுல்தான் ஆக்கிரமிப்பு சமயத்தில் கொடியவர்களால் அகற்றப்பட்டது. அதனை மீண்டும் வைக்க இந்துக்கள் போராடி வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமும் திருவரங்கமும் 40 ஆண்டுகள் முகலாயர்களின் ஆக்கிரமிப்பால் மூடி கிடந்த சரித்திரம் அமைச்சருக்கு தெரியுமா?

விஜயநகர பேரரசின் தளபதி கம்பண்ண உடையாரின் படைகளால் இவ்விரு கோவில்களும் மீட்கப்பட்டன.

வரலாறு தெரியாத அமைச்சருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் முகலாயர்களால் சிதைக்கப்பட்ட லிங்கமும் அதன் அருகில் இந்த சரித்திர நிகழ்வு குறித்து தகவல் பலகை இருப்பது தெரியுமா?

அந்த தகவல் பலகையை வைத்தவர் என்றும் மக்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர். ஆவார்.

அதுபோல பல சரித்திர உண்மைகளை தமிழர்களிடம் மறைத்தது தி.மு.க.வின் மோசடி அரசியல். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது உண்மைதானே. அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அதே காரணங்களால் இடிக்கப்பட வேண்டிய வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களை இடித்தது உண்டா? காரணம் இந்துக்கள் ஏமாளிகள் என்ற அகம்பாவம்தானே.

முகலாய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழகத்தில் சுமார் 300 கோவில்களை இடித்து மசூதி / தர்கா கட்டியதற்கு ஆதாரபூர்வமான பட்டியல் இருக்கிறது அமைச்சர் அவர்களே.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று பெரியோர்கள் கூறுவார்கள் மறந்து விடாதீர்கள். இந்த உண்மைகள் உங்களுக்கும் முதல்வருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதற்காக உண்மையை மறைக்க நினைக்காதீர்கள்.

நீங்கள் கோவிலை கலையாக பார்த்து இருந்தால் நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து குப்பையாக குவித்து இருப்பீர்களா?

முகலாயனும் ஆங்கிலேயனும் இடித்து சேதப்படுத்திய வரலாறை மூடி மறைத்து பேசுவீர்களா??

அப்படி கோவிலை ஆன்மிக கேந்திரமாக தாங்கள் பார்க்காவிட்டாலும், கலையாக பார்த்தாலும் கோவில் இடிப்பதை கைவிடுங்கள். திண்டுக்கல் அபிராமி மலைமீது ஈசனும் அம்பாளும் எழுந்தருள செய்யுங்கள்.

தமிழகத்தின் திருக்கோவில்களை திட்டமிட்டு சிதைக்கும் கயவாளிகளை மனநிலை பாதித்தவர்கள் என்று வழக்கை முடிப்பதை கைவிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் சமூக விரோதிகளுக்கு அச்சம் வரும்.

எனவே அமைச்சர் சேகர் பாபு அவர்களே மதவெறி இஸ்லாமிய படையெடுப்பாளர்களை பக்தி நெறியோடு வாழ்ந்த தமிழ் மன்னர்களும், பாளையக்காரர்களும்,
வடக்கே இருந்த மன்னர்களும், விஜயநகர பேரரசும், மராட்டிய வீரசிவாஜி வம்சத்தவர்களும்,
தடுத்து நிறுத்தியதால் தான் தமிழக திருக்கோவில்கள் ஓரளவேணும் காப்பாற்றப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

அதே சமயம் கோவில்கள் பாதிக்கப்படாமல் இருக்க கவனம் செலுத்திடவும் கோவிலின் புனித தன்மை காத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

narendra modi in parliament - 2026

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை…

3ஆவது முறையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் மோதி அவர்கள்

நண்பர்களே,  தேசத்தின் மக்கள் நமக்கு, 3ஆவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார்கள்.   அந்த வகையிலே, நம்முடைய பொறுப்புகளும் கூட, மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.   ஆகையினாலே, நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன், நீங்கள் எங்களுக்கு 3ஆவது முறையாக சந்தர்ப்பம் அளித்திருக்கிறீர்கள், இரண்டு முறை அரசாங்கத்தை நடத்திய அனுபவம் எங்களிடம் இருக்கிறது.  நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன், இந்த நம்முடைய 3ஆவது ஆட்சிக்காலத்திலே, நாங்கள் முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக உழைப்போம்.  மேலும் இந்த உறுதிப்பாட்டோடு கூட, நாங்கள் இந்த புதிய பொறுப்பினை மேற்கொண்டு, எங்கள் கடமைகளை ஆற்றுவோம்.

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட அவசரநிலை பற்றி நினைவுகூர்கிறார் மோதி அவர்கள்

யாரெல்லாம், பாரதத்தின் மக்களாட்சி முறையின்…… பாரம்பரியங்களின் மீது, அர்ப்பணிப்பு உடையவர்களோ, அவர்களுக்கெல்லாம், ஜூன் 25, மறக்கக்கூடாத தினமாகும்.   அவசரநிலைக்காலத்தின், இந்த 50 ஆண்டுகள், நமக்களிக்கும் உறுதிப்பாடு, நாம் பெருமையோடு நமது அரசியல்சட்டத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டுமக்கள் உறுதியேற்போம்.   நம் பாரதத்தில் மீண்டுமொருமுறை,   50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்ட, செயலைச் செய்ய யாரும் துணியவே கூடாது.   மேலும் மக்களாட்சி முறையின் மீது, களங்கத்தை ஏற்படுத்த விடக்கூடாது. 

ஆக்கப்பூர்வமான விவாதங்களே அவையில் மக்களின் எதிர்பார்ப்பு, அமளியல்ல, காங்கிரஸுக்கு அறைகூவல் விடுக்கும் மோதிஜி

தேசத்தின் மக்கள், எதிர்க்கட்சிகளிடம், நல்ல முயற்சிகளையே எதிர்பார்க்கின்றார்கள்.  இதுவரை அவர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம், இப்போது இந்த, 18ஆவது மக்களவையினிலே, எதிர்க்கட்சிகள், தேசத்தின் சாமான்ய மக்கள் எதிரணியினர் என்ற முறையில் அவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள்.  ஜனநாயகத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.   எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு, இசைவாக நடப்பார்கள், என்று நான் நம்புகிறேன்.  அவையினிடத்திலே, சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு என்றால், விவாதங்களைத் தான், விழிப்புடன் இருத்தலைத் தான்.   பாசாங்கு செய்தலையோ, பகட்டாக நடத்தலையோ மக்கள் விரும்பவில்லை.  இடையூறுகளை விரும்பவில்லை.  மக்கள், விரும்புவது ஆக்கப்பூர்வமானதை,  வெற்று கோஷங்களை அல்ல.

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தேர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடி
யேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சோழவந்தான் பெரிய கடை வீதியில் தொடங்கிய, தேர் பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி சின்ன கடை வீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் வழியாக மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும் .

காலை 8:30 மணிக்கு தொடங்கும் தேரோட்ட நிகழ்ச்சியானது 11:30 மணி அளவில் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்வது வழக்கம் ஆனால், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டை மறித்து கடைகளை கட்டி இருப்பதாலும் சாலையின் நடுவில் கடைகள் இருப்பதாலும் தேர் வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக, சின்ன கடை வீதி எனும் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் நுழைந்த தேர் 20 நிமிடத்தில் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டிய நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது . குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் இருந்து தேரை இழுப்பதற்கு பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு இடத்தில் இருந்து தேரை நகற்றுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலானதால், தேரோட்ட நிகழ்ச்சியை காண வந்த வெளியூர் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பல இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து தேர் இப்போது வரும் அப்போது வரும் என ,எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக எடுத்து தேர் வருவதற்கு வழி ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாததால் 3 மணி நேரத்தில் நிலைக்கு வர வேண்டிய தேர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தேர் நிலைக்கு வராததால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன ..?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது ..?

நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது ..!

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.
இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின் பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது .

நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..! இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..! நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது. பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,

முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..!

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை… ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது…

பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று ; புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு தெய்வங்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது… அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

எல்லாம் சரி , ஆனால் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது ..?

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு. மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது)
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..!

அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!! தெய்வத்தின் அருளுடன் வாழ்க வளமுடனும் நலமுடனும் ..!!!

சமூகத் தளங்களில் சுற்றி வரும் ஒரு பழைய செய்தி தான். இருந்தாலும் இதை நாம் அடிக்கடி மனத்தில் வைத்துக் கொள்வது நல்லது. மீண்டும் மீண்டும் படித்து உரு ஏற்றிக் கொள்வது சிறந்தது.

தகவல் பகிர்வு: சரவண பாரதி