டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பது தெரிய வந்து உள்ளது.
அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
இவற்றில் ஓய்வூதியதாரர்களால் அதிகம் நாடப்படும் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில், 90,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இணையான காலத்தை விட 37,000 கோடி அதிகம். இதே போல, மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சேமிப்பு திட்டத்தில் இதுவரை 19,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றுக்கான முதலீடு வரம்பு உயர்த்தப்பட்டது, இதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்ட வரம்பு 30 லட்சமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. மாதாந்திர வருமானம் திட்ட வரம்பு தனி கணக்கிற்கு 9 லட்சமாக மற்றும் இணை கணக்கிற்கு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
திமுக.,வினர் ஆட்சியில் இருந்து கொண்டு கொள்ளை அடித்த பணத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கே செலவழிப்பேன் என்று பிரதமர் மோடி உறுதி கூறினார். இன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மோடியின் கேரண்டி என்று மக்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவரது உரையின் முழுமையான தமிழாக்கம்… (தமிழாக்கம் – ராமஸ்வாமி சுதர்ஸன்)
வணக்கம் சென்னை. ஒவ்வொரு முறையும் நான் சென்னைக்கு வரும் போதும் தமிழர்களால் எனக்கு சக்தி உண்டாகிறது. உயிர்ப்பும் துடிப்பும் நிரம்பியிருக்கும் இந்த நகரத்திற்கு வருவது மிக அருமையாக இருக்கிறது. திறமைகள், வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளி சென்னை. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் நமது நோக்கத்தில், சென்னைவாசிகள் மிக முக்கியமான பங்கினை ஆற்றுவார்கள்.
நண்பர்களே, எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவு மிகப் பழமையானது, நீங்கள் என் மீது பொழியும் அன்பும் கூட மிகவும் பழமையானது. ஆனால் இங்கே சில ஆண்டுகளாகவே நான் தமிழ்நாட்டிற்கு வரும் போது, சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது, வயிற்றில் புளியைக் கரைக்கிறது. காரணம் என்ன தெரியுமா? காரணம்……. பாஜகவுக்கு மக்களாதரவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பது தான். இன்று, சென்னையிலே, மிகத் தெளிவாக இதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே, மோதி, வளர்ச்சியடைந்த பாரதத்தோடு கூடவே, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டையும் மேற்கொண்டிருக்கிறேன். நாம் மிக விரைவாக பாரதத்தை உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக ஆக்க வேண்டும். இதிலே தமிழ்நாட்டின், சென்னையின் பங்களிப்பு மிகப் பெரியது. பாரத அரசு, சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நமது அரசாங்கம் வாயிலாக, சென்னையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அது ஸ்மார்ட் நகரங்கள் திட்டமாகட்டும், குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான அம்ருத் திட்டமாகட்டும், சென்னை மெட்ரோ மற்றும் சென்னை விமானநிலையத் திட்டங்களாகட்டும், சென்னைவாசிகளின் வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக, நாம் வாழ்க்கை வாழ்வதில் சுலபத்தன்மை வேண்டும் என்பதன் பொருட்டு, பல திட்டங்களை முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம். சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயிலுக்கும் இடையேயான இடைவழியை ஏற்படுத்தவும் கூட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.
நண்பர்களே, ஒருபுறம் மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக பணியாற்றி வருகிறது…………. ஆனால் மறுபுறத்திலோ, மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு, சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களின் கனவுகளை கண்டு கொள்ளவேயில்லை, அதைப் பற்றிய கவலையேதும் அவர்களுக்கு இல்லை. சில காலம் முன்பு தான் மிகப்பெரிய புயல் வந்தது. சென்னைவாழ் மக்களுக்கு ஏகப்பட்ட துயரம் ஏற்பட்டது. ஏற்பட்டதா? சரிதானே?
ஆனால், திமுக அரசாங்கம், அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, அவர்களுடைய துயரத்தை மேலும்மேலும் அதிகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்கள் பெருவெள்ளப் பெருந்துயர்க்காலத்தில் வெள்ள மேலாண்மையைச் செய்வதில்லை, மாறாக……… என்ன செய்கிறார்கள்? ஊடக மேலாண்மையைச் செய்கிறார்கள்……… ஊடகங்களை சரிகட்டுகிறார்கள். மக்களின் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் நிரம்பியிருக்கிறது, ஆனால் இவர்கள் ஊடகங்களிலே என்ன சொல்லுகிறார்கள்?…… பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுது, வெள்ளநீர் இல்லை, என்கிறார்கள். திமுக அரசாங்கத்திற்கு….. மக்களின் துக்கங்கள்-துயரங்கள் பற்றி எல்லாம் சுத்தமாக அக்கறை இல்லை. தமிழ்மக்களே, உங்களைப் பற்றியும் கவலையில்லை, தமிழ்நாட்டைப் பற்றியும் அக்கறையில்லை என்பது இதிலிருந்து நன்கு தெரிகிறது.
நண்பர்களே, பாஜகவின் மத்திய அரசு, புரிந்துணர்வு உடைய அரசாங்கம், ஏழைகளின் நலனையே கருத்தில் கொண்டு செயல்படும் மக்கள் அரசாங்கம். கொரோனா பெருந்தொற்றின் போது நாம் முதன்மையாக, ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்க, ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட நமது அரசு ஏற்பாடு செய்தது. தேசம் தனக்கென சொந்தமாக ஒரு தடுப்பூசியை உருவாக்கிய போது, அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று, ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட நமது அரசு தீர்மானம் செய்தது. தமிழ்நாடு சிறுகுறுநடுத்தரத் தொழில்கள் துறையில் முன்னணி மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். நமது சிறுகுறுநடுத்தரத் தொழில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, நமது அரசாங்கம், தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான சிறுகுறுநடுத்தரத் தொழில்களுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன்வசதி அளித்தது.
நண்பர்களே, பா ஜ கவின் மத்திய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், கச்சை கட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் பொருட்டு, பாரத அரசு, பல திட்டங்களின் தொகையை, நேரடியாக இங்கே பயனாளிகளுக்கு அனுப்பி வருகிறது. இலட்சக்கணக்கான கோடி ரூபாய் ஆதாயங்கள், இப்போது நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைகின்றன என்பது தான், திமுகவிற்கு மிகப்பெரிய வருத்தம். என்ன சரியா? இன்று கழிப்பறைகளாகட்டும், எரிவாயு இணைப்பாகட்டும், குழாய்வழி குடிநீர் இணைப்பாகட்டும், இலவச ஆயுள்காப்பீடாகட்டும், சாலைகள், ரயில்வழிகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் என அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடந்தேறி வருகின்றன. இந்த வளர்ச்சித் திட்டங்களின் இலட்சக்கணக்கான கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க முடியாமல் இருக்கிறதே என்பது தான், திமுகவினருக்கு இருக்கும் பெரும் சிக்கல்.இந்த விஷயத்தில்……. ஒரு குடும்பம் மொத்தமுமே, பயங்கர எரிச்சலில் இருக்கிறது. இந்த திமுக காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், பணம் தான் கிடைக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம்…… அதை நாங்கள் தான் செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்புகிறார்கள் ……………. என்னமோ ஒட்டறாங்கன்னு சொல்லுவாங்களே, என்ன ஒட்டிக்கறாங்க……….??????????? ஆனால் ஐயோ பாவம்! இதிலும் கூட, அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நான் திமுக காரர்களுக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோதி………. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அளிக்கப்படும் பணத்தை………. கொள்ளையடிக்க விட மாட்டான். எந்தப் பணத்தை நீங்கள் கொள்ளையடித்திருக்கிறீர்களோ, அந்தப் பணம்………. திரும்ப வசூலிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் மக்களுக்காகவே செலவு செய்யப்படும். இது மோதியளிக்கும் கேரண்டி – இது மோதியின் உத்திரவாதம்.
குடும்ப அரசியல் பேசும் கட்சிகள், தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன. நான் தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுகிறேன்.
குடும்ப அரசியல் கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில், 18000 கிராமங்களில், மின்சாரமே இருக்கவில்லை, தேசத்தின் இரண்டரை கோடிக்கும் அதிகமான வீடுகளில் இருள் சூழ்ந்திருந்தது. 21ஆம் நூற்றாண்டின் பெரிய சவால் என்று சொன்னால் எரிசக்தி பாதுகாப்பு, எனர்ஜி செக்யூரிட்டி என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று நமது அரசு, இந்தத் திசையில், மிக விரைவாகப் பணியாற்றி வருகிறது. நான் இப்போது தான் கல்பாக்கத்திலிருந்து வருகிறேன், இங்கே எரிசக்தித் துறையில் தற்சார்பு நிலையை அடையும் திசையில் பாரதம் பெரிய அடியை முன்வைத்திருக்கிறது. இன்று கல்பாக்கத்திலே, தேசத்தின் முதல் மற்றும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஃபாஸ்ட் ப்ரீடர் அணு ஆலையானது, மின்சார உற்பத்திக்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையைக் கடந்திருக்கிறது. தொழில்நுட்ப மொழியிலே கூறினால், இன்று இந்த அணுசக்தி மையத்தில் கோர் லோடிங் தொடங்கி விட்டது. சில காலத்திலேயே, இதன் மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விடும். இந்த அணு உலை தொடங்கப்பட்டிருப்பதற்குப் பிறகு, பாரதம், இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கும் நாடுகளில் இரண்டாவது நாடாக ஆகி விடும். இந்தச் சாதனைக்காக, நான் பாரத நாட்டவர்கள் அனைவருக்கும், என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, மனவுறுதிப்பாடு பெரிதாக இருக்குமானால், அதற்கேற்ப, நமது உழைப்பும் பெரிய அளவுடையதாக இருக்க வேண்டும். 2024ஆம் ஆண்டின் தொடங்கி, சில வாரங்களே ஆகியிருக்கின்றன. ஆனால் இந்தக் காலகட்டத்தில், பாரதம் தனது எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்து கொள்வதில், பெரிய வீச்சில் செயல்பட்டு வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தான், நான் காக்ராபார் அணுசக்தி மையத்தில் நிறுவப்பட்டிரு8இக்கும் 1400 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய ஆலைகளை தேசத்திற்கு அர்ப்பணித்து வந்திருக்கிறேன்.
இன்று தான் தெலங்கானாவின் பல ஆற்றல் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டன, திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. தெலங்காணாவில் 1600 மெகாவாட் அனல்மின் நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
ஜாஎர்க்கண்டில் 1300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம்நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதே உபியில், 300 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி ஆலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானத்திலும் கூட பெரிய சூரியசக்தி ஆலைகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. யுபியில், மிகப்பெரிய புதுப்பிக்கவல்ல எரிசக்திப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் புனல் மின் நிலையத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியிருக்கிறது. சத்திஸ்கட்டிலே, ராய்பூரிலே, 4ஜி எத்தனால் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. யுபியிலே, நொய்டாவிலே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் நீர் மூலம், பசுமை ஹைட்ரொஜன் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் தமிழ்நாட்டிலே, பசுமை ஹைட்ரொஜன் எரிபொருள் வாயிலாக இயங்கும் கலம் தொடங்கப்பட்டது. யுபியிலே, மேரட்-சிம்பாவலி ட்ரான்ஸ்மிஷன் லைன்கள் கூட இந்த வேளையிலே தொடங்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தின் கொப்பலில், காற்றாலை பகுதி தொடங்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, பாரத அரசு வாயிலாக, ஒரு கோடிக் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கும், பி எம். சூரியகர், சூரிய வீடுகள், இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 75000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட இருக்கிறது. மின்சாரத்தோடு இணைந்த இத்தகைய பல திட்டங்கள், பாரதத்தை மின்சக்தித் துறையில் தன்னிறைவு உடையனவாக ஆக்கும். இவற்றிலே எல்லாம், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கும்.
நண்பர்களே, திமுக-காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்ன சொல்கின்றன – குடும்பத்துக்கே முதல் உரிமை. என்ன, சரியா நான் சொல்றது?
ஆனால் மோதி சொல்வது என்ன? ………….. தேசத்துக்கே முதன்மை…… நீங்கள் கூறுங்கள் சகோதர சகோதரிகளே, மோதி சொல்வது என்ன? தேசத்துக்கே முதன்மை. ஆகையினாலே தான் இண்டி கூட்டணியைச் சேர்ந்தவர்கள், என்னை வைய்ய, என்னை வசைபாட, ஒரு புதிய ஃபார்முலாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அடப் போய்யா, மோதிக்கு குடும்பம்லாம் கிடையாது, அதனால தான் இப்படியெல்லாம் பேசுறாரு என்று அவர்கள் கூறிவருகிறார்கள். என் உயிரினும் மேலான உறவுகளே,
எனக்கு 16 வயதான போது, நான் வீட்டைத் துறந்தேன். நீங்கள் தான் என் குடும்பம்,
பாரதநாட்டின் மக்கள் தான் என்னுடைய குடும்பத்தார்.
தேசத்தின் இளைஞர்கள் என் குடும்ப மக்கள், ஆகையால் தான், அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக ஆக்க, நான் இரவுபகலாக, கடுமையாக உழைத்து வருகிறேன், என் சொந்தங்களே!!!
இந்த தேசத்தின் சகோதரிகள்-தாய்மார்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான், மேலும்மேலும் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டி நான் பணியாற்றி வருகிறேன்.
தேசத்தின் விவசாயிகள், தேசத்தின் ஏழை-பாழைகள் தாம் என் குடும்பச் சொந்தங்கள், ஆகையால் தான் அவர்களுக்கு அதிகாரப் பங்களிப்பு ஏற்படுத்தப்பட, அவர்களின் உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்க, நான் என்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறேன்.
யார், யாருமே இல்லாதவர்களோ, யார் நிராதரவாக இருக்கிறார்களோ, யார் அநாதைகளோ, அவர்களும் இந்த மோதியைச் சேர்ந்தவர்கள் தாம், மோதி அவர்களுக்குச் சொந்தமானவன்.
என்னுடைய பாரதம் – என்னுடைய குடும்பம்.
ஆகையினால் தான், இன்று தேசம் முழுவதும், ஒரே குரலெடுத்துக் கூறுகிறது – நான், மோதியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்ன கூறுகிறது?
நான் தான் மோதியின் குடும்பம்,
நான் தான் மோதியின் குடும்பம்.
காங்கிரஸ், திமுக மற்றும் இண்டிக்கூட்டணியோடு இணைந்திருக்கும் கட்சிகள், ஊழலில் ஊறிப்போயிருக்கும் குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகள். இவர்களுக்கு எல்லாம், இவர்களுடைய குடும்பம் தான் எல்லாம், ஊழல் தான் அனைத்தும். இண்டி கூட்டணியைச் சேர்ந்த ஊழல் தலைவர்களைப் பொத்திப்பொத்திப் பாதுகாக்கக் கூடிய ஒரு தீர்மானத்தை, இன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
நண்பர்களே, உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவிற்குப் பிறகு, இண்டிக் கூட்டணிக்காரர்கள், கப்பல் கவிழ்ந்து விட்டதோ என்றவகையில் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஏனென்றால், இண்டிக் கூட்டணிக்காரர்களுக்கு, லஞ்சம் வாங்குவதைத் தவிர, ஊழல் செய்வதைத் தவிர, தேசத்தின் அமைப்புக்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாது. பல தசாப்தங்களாக இந்த இண்டிக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம், இப்படிப்பட்ட அரசியலை மட்டுமே செய்து பழகிப் போனவர்கள். இன்று, இதே நபர்கள் காரணமாகத் தான், தேசத்தின் இளைஞர்கள், அரசியல் பற்றியும், அமைப்புகள் மீதும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தூய்மையான அரசியலுக்கு, பெரும் உந்துசக்தியாக விளங்கும். என் நெஞ்சம் நிறை தமிழ்மக்களே, தூய்மை இயக்கம் என்பது, அது எப்படி இருந்தாலும் சரி, அது என் நெஞ்சுக்கு மிக நெருக்கமான ஒன்று என்பதை, நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள்.
நண்பர்களே, குடும்ப அரசியலுக்கும், உழைப்பிற்கும்… மலைக்கும் மடுவுக்கும் இடையிலான தூரம். ஆகையினாலே தான், குடும்ப அரசியல் என்பது, தன்னுடன் கூடவே அகங்காரம், மமதை, திமிர்த்தனத்தை வெளிப்படுத்துகிறது. குடும்ப அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஒருவர், அதிகாரத்தின் முக்கியப் பதவியைப் பெறும் போது, தேசத்தையும், தேசத்தின் மக்களையும் அடிமைகளாக அவர் கருதுகிறார். தனது பதவிக்கென இருக்கும் மாட்சிமை, கண்ணியத்தையும் கூட அவர் மறந்து போகிறார், விளையாட்டாகக் கடந்து போகிறார். தேசத்தின் மிகப் பெரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றம், திமுக குடும்பத்தின் ஒரு அமைச்சரிடத்திலே, கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது என்பதையும் நாம் இன்று பார்த்தோம். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்திக் காலில் போட்டு மிதித்து அவமானம் செய்வதும் கூட, குடும்ப அரசியல் நடத்துபவர்களின் இலட்சியம், அடையாளம்\ சகோதர சகோதரிகளே. தங்களுடைய அகங்காரம், மமதை காரணமாக, மக்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூட மதிக்காத ஒருவர், இன்னும் கூட தமிழ்நாடு அரசின் முக்கியமான பதவியில் இடம் பெற்றிருக்கிறார், இது வருத்தமளிக்கும் விஷயம்.
நண்பர்களே, நான் என்னுடைய உரையை நிறைவு செய்யும் முன்பாக என் மனதை அரிக்கும் ஒரு கவலையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டிலே போதைப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சி குறித்து, நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமானது. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழ்நாட்டின் எதிரிகளின் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது, மோதி அளிக்கும் கேரண்டி – இது மோதியின் கேரண்டி.
நண்பர்களே, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பொருட்டு, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
வளர்ச்சியடைந்த தமிழ்நாடு ஏற்படும் போது தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் பாதை வலுப்படும். நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தை உண்டாக்கியே தீருவோம்.
இத்தனை பெரிய எண்ணிக்கையில் நீங்கள் உங்கள் ஆசிகளை அளிக்க வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு பலப்பல நன்றிகள்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது, சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அவரது சனாதன ஒழிப்புப் பேச்சு, தேசிய அளவில் எதிரொலித்து, பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு இடங்களில் உதயநிதிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
பிரதமர் மோடி உள்பட, பாஜக., அமைச்சர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததுடன், திமுக., ஆளும் கட்சியாக் உள்ள தமிழகம் தவிர பல மாநிலங்களில் சட்டப்படியிலான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபகள், “நீங்கள் அரசியலமைப்பின் 19(1)(ஏ)- பிரிவின் கீழ் உங்களது கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். அரசியலமைப்பு 25-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கும் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். தற்போது உங்களுக்கு உள்ள உரிமையின்படி மேல்முறையீட்டிற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் பேசியதின் விளைவுகள் உங்களுக்கு தெரியாதா?. நீங்கள் ஒன்றும் சாமானியர் கிடையாது, நீங்கள் அமைச்சர். விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதை அடுத்து, இது தொடர்பான விசாரணையை மார்ச் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அபுதாபியில் அண்மையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில், முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரிசனம் செய்தனர்.
அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் ஹிந்து கோயிலை அண்மையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
1,200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 3 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 65,000 பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். இதில் காலை நேரத்தில் 40,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் மாலையில் மேலும் 25,000 பக்தர்களும் தரிசித்துள்ளனர்.
பலரும் ஹரே ராம ஹரே ராம என்றும் ஜய்ஸ்ரீராம் என்ற கோஷத்தை முழங்கியும் வளாகத்தில் பஜனைகளைப் பாடி வந்து தரிசித்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்த போதும், பொறுமையாக வரிசையில் காத்திருந்து, அமைதியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் இந்தியா மற்றும் மெக்சிகோ, லண்டன் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் தரிசித்தனர்.
இந்தக் கோயிலின் மூலம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களைப் பறிமுதல் செய்த போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வீட்டுக்கு சீல் வைத்த நிலையில் தற்போது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
சிக்கிய அண்மைய போதைக் கடத்தல்கள்!
2021 செப்.15: – குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஈரானில் இருந்து வந்த இரண்டு சரக்கு கன்டெய்னர்களில், 3,000 கிலோ, ‘ஹெராயின்’ போதைப்பொருளை கைப்பற்றினர். அதன் மதிப்பு, 21,000 கோடி ரூபாய். இந்த வழக்கில், சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா வைசாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்l
2021 மார்ச் 18:- லட்சத்தீவு அருகே ஒரு படகில் இருந்து, 300 கிலோ ஹெராயின், பாகிஸ்தான் குறியீடு உள்ள ஐந்து ஏ.கே., 57 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் 9 எம்.எம். தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கையை சேர்ந்த ஐந்து பேர் படகில் இருந்து கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. முகாமில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
2022 நவ.29: -ராமநாதபுரம் ஆளும் கட்சி பிரமுகர்களிடம் இருந்து, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘கோகைன்’ என்ற போதைப்பொருளைக் கைப்பற்றினர்l
2024 ஜன.22: – சென்னை அமைந்தகரை அருகே, நைஜீரியா நாட்டினரிடம் இருந்து ஒரு கிலோ கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ஆனால், சில முக்கியஸ்தர்களின் தலையீட்டால், அவர்களை முறையாக விசாரணை செய்யாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது
2024 பிப்.27: – குஜராத் கடல் பகுதியில், 3,300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த சரக்கு தமிழக படகில் ஏற்றப்பட இருந்தது தெரிய வந்துள்ளது.
2024 பிப்.29 – சென்னையைச் சேர்ந்த பிளமன் பிரகாஷ் என்பவர், மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம், 30 கிலோ மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவருடைய வீட்டில் மேலும் ஆறு கிலோ கிடைத்தது. இவற்றின் மதிப்பு 200 கோடி ரூபாய் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவை எல்லாம் அண்மைய போதைக் கடத்தல்களில், மாட்டிய சம்பவங்கள். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் எத்தனை விழிப்பாக இருந்தாலும், கிடைக்கும் சந்து பொந்துகளில் புகுந்து, பிடிபடாமல் தப்பித்து வரும் கலையில் கில்லாடியாக இருப்பதால் தான் போதை நடமாட்டம் வெகுவாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் தமிழகத்தையே உலுக்கிப் போட்ட ஒரு செய்தி, சர்வதேச போதைக் கடத்தல்களில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த திமுக., நிர்வாகி ஜாஃபர் சாதிக், போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார் என்பது! செய்தி வெளியானதும், சம்பந்தப்பட்ட நபரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது திமுக., தலைமை.
ஆனாலும், கட்சியின் நிதித் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்து வந்தவர் என்று அடையாளம் காட்டப்படுவதால், திமுக.,வினர் சற்றே கலங்கிப் போயுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் நபருக்கு திமுக.,வின் முதல் குடும்பத்தின் தொடர்பு நீண்டிருப்பதாகக் கூறப்படுவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த போதைக் கடத்தல் கும்பல் எப்படி நம் பாதுகாப்பு அமைப்புகளால் ஸ்கெட்ச் போடப்பட்டு, வசமாக வலையில் சிக்கியது என்ற தகவல்கள் ஊடகங்களில் பரவலாக வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து சமூகத் தளங்களிலும் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. அவற்றின் தொகுப்புக் கட்டுரையே இது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) மற்றும் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. திமுக.,வின் சென்னை மேற்கு மாவட்ட என்ஆர்ஐ பிரிவின் துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கும்பலின் மூளையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இது திமுகவை கலவரத்தில் தள்ளியுள்ளது.
பிப்ரவரி 15 அன்று, என்சிபி மற்றும் தில்லி போலீஸ் சிறப்புப் பிரிவின் கூட்டுக் குழு, நான்கு மாத கண்காணிப்புக்குப் பிறகு, மூன்று நபர்களைக் கைது செய்தது. மேற்கு தில்லியில் உள்ள பாசாய் தாராபூரில் உள்ள ஒரு குடோனில், ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக, மல்டிகிரைன் உணவுக் கலவையின் கவரில் சூடோபீட்ரைன் போதைப் பொருள் மூலப் பொருளை பேக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ஜாஃபரின் குழுவைச் சேர்ந்த முகேஷ் (34), முஜிபுர் ரஹ்மான் (26), அசோக் குமார் (33) ஆகிய மூவர் பிடிபட்டனர்.
அந்த குடோனில் இருந்து சுமார் 50 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ₹1.5 கோடிக்கு விற்கப்படும் மெத்தாம்பெட்டமைன் என்ற செயற்கை மருந்தை தயாரிக்க சூடோபெட்ரைன் பயன்படுத்தப்படுகிறது .
பிடிபட்ட மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது, உதயநிதி ஸ்டாலினுக்கும், மாநிலங்களவை எம்.பி., எம்.எம்.அப்துல்லாவுக்கும், திமுக.,வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் என்.சிற்றரசுவுக்கும் நெருக்கமான, திமுக., பிரமுகர் ஒருவரால், இது நடத்தப் பட்டு வருவதாக, மூவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகள் உடனே பரபரப்பாக வெளியாயின. இது குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, யார் அந்த திமுக., பிரமுகர் என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப் பட்ட நிலையில், இறப்பு வீட்டுக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதாக அண்டை அயலாரிடம் கூறிவிட்டு, ஜாஃபர் சாதிக் குடும்பத்துடன் இரவோடு இரவாக தலைமறைவானார்.
ஜாஃபர் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 45 சரக்குகளை அனுப்பியுள்ளார் என்றும், அதில் சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் இருந்தது, அதன் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் என்றும் பிடிபட்டவர்களிடம் இருந்து தகவல் பெறப்பட்டது.
இதை அடுத்து, மத்திய உள்துறை செயலாளருக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும், NCB, NIA, ED மற்றும் IB உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த போதைப்பொருள் வளையத்தின் அடியாழம் வரை செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜாஃபர் தலைமறைவாகிவிட்டதால், சென்னையில் உள்ள என்சிபி அதிகாரிகள் சென்னை மயிலாப்பூர், சாந்தோம் ஹைரோட்டில் அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாஃபரின் வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளனர். பின், NCB அதிகாரிகள் குழு, புதன்கிழமை ஜாஃபரின் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது போதைப்பொருள் வளையத்தில் விரிந்திருக்கும் நிதி வலையை வெளிப்படுத்தும் ஆவணங்களைக் கைப்பற்றியது.
“சாதிக்கின் வீட்டில் எந்த போதை மருந்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், போதைப்பொருள் பணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நிதி வலையை சுட்டிக்காட்டும் ஆவணங்கள் பலவற்றைக் கைப்பற்றினோம் என்றனர் என்சிபி அதிகாரிகள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சொந்த ஊராகக் கொண்டார் ஜாபர் சாதிக் என்று தெரிந்தது. அப்துல் ரஹ்மான் மற்றும் ஷம்சத் பேகம் ஆகியோருக்கு பிறந்த ஜாபர் சாதிக், பெரம்பூரில் வசித்து வந்தாராம். அவர் தந்தை பர்மா பஜாரில் கடை வைத்து சிடிக்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்று வந்தார் என்றும், படிப்பில் ஆர்வம் காட்டாத ஜாபர், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு, புரோக்கராக செயல்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஜாஃபர் தொடக்க கட்டங்களில், அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்றதற்காக சிக்கலில் சிக்கினார். அவர் செய்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் சிக்கலில் மாட்டியதால், ஜாஃபர் தொழில்களை மாற்றினார். பின்னாளில் அவர் ஒரு “குருவி”யாகவும் செயல்பட்டுள்ளார். அதன்மூலம், வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை கடத்தி வரும் தொழிலில் ஈடுபட்டபோதுதான், போதைப்பொருள் வியாபாரிகள் பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில், சரத்குமார் திரைப்படமான ‘ஜக்குபாய்’ திரைப்படத்தின் திருட்டு டிவிடி.,க்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே கள்ளச்சந்தையில் விற்றதற்காக ஜாஃபர் தமிழ்நாடு காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் சில மாதங்கள் சிறையில் இருந்த ஜாஃபர் வெளியே வந்து மீண்டும் ‘குருவி’யாக தனது ‘கூரியர்’ சேவையைத் திறம்படத் தொடர்ந்தார்.
திரையுலகின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜாஃபர், இயக்குனர் அமீருடன் நெருக்கமாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆதம் பாவாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாவா, மின்சார வாரியமான TANGEDCO விற்கு நிலக்கரியை இறக்குமதி செய்தார். அவர், இயக்குனர் அமீரிடம் ஜாபர் சாதிக்கை அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த நட்பு திமுக.,விலும் தமிழ்த் திரையுலகிலும் ஜாஃபருக்கு கதவுகளைத் திறந்தது.
திரையுலகில் ஆழமான வேரூன்றிய திமுக.,வுக்கு நெருக்கமான பலருடன் ஜாஃபர் விரைவில் நட்பு கொண்டார். கட்சிக்காரர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் ஜாஃபர் சாதிக்கை மிகவும் கவர்ச்சிகரமானவராகக் கண்டது, ஏனெனில் அசாத்தியமான பணப் புழக்கம். இந்நிலையில், 2019ல், ஜாஃபர் சிறிய அளவிலான மருந்து வியாபாரத்தில் இறங்கினார்.
உளவுத்துறை வட்டாரங்களின் தகவல்படி, பிரபலங்களுக்கு எந்த வகையான பார்ட்டி போதைப்பொருட்களையும் சப்ளை செய்யும் முக்கிய நபராக ஜாஃபர் மாறினார். மெதுவாக, அவரது பிரபல தொடர்புகள், போதைப்பொருள் விநியோகத்திற்காக அவரைச் சார்ந்து இருந்து வளர்ந்தது. இதன் மூலம் அவர் திமுக.,வின் மறைந்த ஜெ.அன்பழகனுடனும் (அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தின் தயாரிப்பாளர்) பின்னர் உதயநிதி ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக ஆன சிற்றரசுவுடனும் தொடர்பு கொள்ள வழிவகுத்தது.
சிற்றரசு மூலம், ஜாஃபர் உதயநிதியின் முகாமுக்குள் ஊடுருவி, அப்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவரின் கவனத்தைப் பெற்றார். .
உதயநிதி ஸ்டாலினிடம் கட்சிப் பதவியைப் பெற்ற சிற்றரசு, அவரைக் கவர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். உதயநிதி இல்லாமல் அவரால் பெரிய அரசியல் கனவுகளைக் காண முடியாது என்ற நிலையில் இருந்ததால், எல்லாம் சுமுகமாக நடைபெற்றுள்ளது.
2021 வாக்கில், ஜாஃபர் சாதிக் தனது அரசியல் தொடர்புகளின் காரணமாக போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே பிரபலமானார். நல்ல வேளையாக அவருக்கு தமிழகத்தில் அவருடைய தொடர்பிலான திமுக.,வே ஆட்சிக்கும் வந்தது. அதன்பின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் ஜாஃபர் சாதிக்கின் அந்தஸ்து சர்வதேச அளவில் உயர்ந்தது. ஜாஃபர் தன்னை விளம்பரப்படுத்துவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தார். அவரே மருந்து விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் ஆனார்.
5 ஜூலை 2021 அன்று, அவர் “J Square Pharma Private Limited” என்ற பெயரில் ஒரு மருந்து நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பதிவு செய்யப்பட்ட முகவரி கேஏஜே பிளாசா, 838, அண்ணாசாலை, சென்னை என்று இருந்தது. ஆனால் இந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு 955/1, உன்ட்வா, ராஜ்பூர்-உன்ட்வா சாலை, காடி, மெஹ்சானா, குஜராத் என்று இருந்துள்ளது. கதீப் அப்துல் ஜலீல் மற்றும் ஷாஹுல் ஹமீது ரஜப் பாத்திமா ஆகியோர் இந்த JSquare Pharma வின் இயக்குனர்களாக உள்ளனர். ஆனால் இந்த நிறுவனம் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
இது தவிர, ஜாஃபர் வேறு சில மருந்து நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இவை ஜாஃபர் சாதிக்கிற்கு சூடோபெட்ரைனை வழங்கும். அதன்மூலம், ஜாஃபர் சாதிக் தனது நிறுவனம் மற்றும் அவரது பிற தொடர்புகளுடன், பல தானிய தூள் மற்றும் உலர் தேங்காய் ஏற்றுமதி என்ற போர்வையில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சூடோபீட்ரைனை ஏற்றுமதி செய்ய முடிந்தது. தில்லியைச் சேர்ந்த மெக்சிகன் மருந்தாளுனர்களைப் பயன்படுத்தி, ஜாஃபர் பெரிய அளவில் மெத்தாம்பேட்டமைனைத் தயாரித்து சந்தைப்படுத்தியிருக்கலாம் என்று NCB நம்புகிறது.
ஜனவரி 17 அன்று, ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், NCB தில்லி பிரிவு சுமார் 2.95 கிலோ மெத்தாம்பேட்டமைனைக் கைப்பற்றியது. அப்போது, மெக்சிகோ மற்றும் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டவர்களின் தொடர்பில், நவம்பர் 2023 இல் இந்தியாவிற்கு வந்து தங்கியிருந்த மூன்று மெக்சிகன் வேதியியலாளர்களை கைது செய்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனவரி 29 அன்று லூதியானா, மொஹாலி மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் என்சிபி அமைப்பு சோதனை நடத்தியது. அப்போது 4 கிலோ சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருள் கடத்தலில் ஜாஃபர் சாதிக்கிற்கும் பங்கு இருப்பதாக என்சிபி இப்போது நம்புகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அமெரிக்க DEA (மருந்து அமலாக்க நிர்வாகம்) இண்டெல் மூலம் கொடுத்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஜாஃபரின் வலையை என்சிபி முழுக் கண்காணிப்பில் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர், இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ., – தேசியப் பாதுகாப்பு முகமையும் இணைக்கப்பட, அனைத்து ஏஜென்சிகளும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது!
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணிசமான பணம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு ஜமாத்கள், அரபிக் கல்லூரிகளில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்கப்பட்டதை என்ஐஏ கண்டறிந்தது. மேலும் ஜாஃபரின் இணைப்பு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம் வரை நீண்டதும் தெரியவந்தது. துபாய், மலேசியா, இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அவரது சட்டவிரோத வர்த்தக தொடர்புகள் விரிவடைந்திருந்ததையும் கண்டறிந்தார்கள்.
தமிழ்த் திரையுலகில் ஜாஃபர் செய்த முதலீடுகள், மற்றும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கவிருப்பதாகக் கூறப்படும் படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சிகளை NIA மற்றும் ED ஆகியவை உன்னிப்பாகக் கவனித்தன. இயக்குனர் அமீர், ஜாஃபர் சாதிக்குடன் நெருக்கமாக இருப்பதும் ஏஜென்சிகளின் முழு கவனத்தின் கீழ் வந்தது.
முன்னதாக, ஜனவரி 2020 இல், ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை ரூ.1 கோடி மதிப்புள்ள ஆம்பெடமைன், மெத்தாம்பேட்டமைன், ஹெராயின் போன்றவற்றைக் கைப்பற்றி 9 பேரைக் கைது செய்தது. இந்த போதைப் பொருட்கள் மீன்பிடி படகுகளில் கடத்தி வரப்பட்டன.
செப்டம்பர் 2021 இல், கடற்படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என்று கூறப்படும் ₹21,000 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கைப்பற்றியது. ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, ஒரு ஷெல் கம்பெனியாக பதிவு செய்து, டால்கம் பவுடரில் தில்லிக்கு ஹெராயின் கொண்டு சென்றதில் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, குஜராத் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த வாரம் பிப்ரவரி 27 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் 3300 கிலோ போதைப்பொருளை என்சிபி, இந்திய கடற்படை மற்றும் குஜராத் ஏடிஎஸ் ஆகியவை கைப்பற்றின.
“என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங்குக்கு முதலில் ஒரு வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல் 3,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் என்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் கப்பலில் இருந்தவர்கள், தமிழகத்தில் இருந்து வரும் ஒரு மீன்பிடி படகுக்காக, செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் 7 மணி வரை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடத்தல் பொருட்களை வழங்குவதற்காக காத்திருந்தனர். இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், என்சிபி செயல்பாட்டுக் கிளை, கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
கடற்படை அதன்நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பலைத் தயாராக்கி, செவ்வாய்க்கிழமை அதிகாலை படகை இடைமறித்தது. விவரங்களைக் கேட்டறிந்து, நடவடிக்கைக்காக போர்க்கப்பல் மூலம் இந்தக் கப்பல் குஜராத்தின் போர்பந்தருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இருந்த “அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாத ஐந்து வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்திய படகுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் நான்கு ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் கைப்பற்றப்பட்ட பேக்கேஜில், மருந்து பேக்கேஜிங் மெட்டீரியல் ‘ராஸ் அவத் ஃபுட்ஸ் கோ, பாகிஸ்தானின் தயாரிப்பு’ என்று அச்சிடப்பட்டுள்ளது,” என்று ஞானேஸ்வர் சிங் தெரிவித்தார். NCB மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக, பெரும்பாலான பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளனர். 2021 இல் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றப்பட விவகாரத்தில் ஆய்ந்ததில், அதன் கரங்களுடன் சென்னை இணைப்பு உள்ளது தெரியவந்தது. எங்களின் மிகப்பெரிய ஹெராயின் போதைப்பொருள் எங்களை சென்னை தம்பதியிடம் அழைத்துச் சென்றது. இப்போது இந்த. சென்னையின் கோணத்தைப் பற்றி நாங்கள் குழப்பமடைந்தோம், ஜாஃபரின் மோசடியைக் கண்டுபிடித்த பிறகு, எங்களுக்கு இப்போது அதற்கான தொடர்பு புரிகிறது” என்று கூறினர்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், சென்னையிலும் இந்த விநியோகத்தை ஜாபர் சாதிக் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். “சலீம் பாய் பிரியாணி” என்ற பெயரில் பிரியாணி விற்பனை நிலையங்களை நடத்தி வந்தார். இந்தச் சங்கிலி வளசரவாக்கம், மூலக்கடை மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டிருந்தது. இந்தக் கிளைகள் அனைத்தும் (காரணங்கள் தெளிவாகத் தெரியாத நிலையில்) இரண்டு மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டன.
நுங்கம்பாக்கத்தில் உள்ள சலீம் பாய் பிரியாணி விற்பனை நிலையம், லயோலா கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகத் தெரிய வந்தது. இது தவிர, சென்னையில் நடைபெறும் அனைத்து பார்ட்டிகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்பவர் ஜாபர் சாதிக் என்றும், அந்த விநியோகத்தில் அவருக்கு ஏகபோக உரிமை இருந்ததையும் கண்டறிந்தார்கள்.
ஜாஃபரின் ஆளும் கட்சி தொடர்புகள் மூலம், இந்த விநியோகத்தில் இருந்த போட்டி நசுக்கப்பட்டது. அவர் சுதந்திரமாக இயங்கினார் என்று ஜாஃபருக்கு நெருக்கமான ஒருவர் இதுகுறித்துக் கூறியிருக்கிறார்.
இது போன்ற பார்ட்டிகளுக்கு வழக்கமானச் செல்பவர் கூறிய தகவல், “போதைக்கு அடிமையான பெண்கள் போதைப்பொருளைப் பெறுவதற்கு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஜாஃபர் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டார்” என்றுள்ளார்.
திமுகவில் உள்ள அனைவரும் ஜாஃபரிடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளனர். அவர் மிகவும் தாராளமாக இருந்துள்ளார். திமுக.,வினருக்கு வரம்பு இல்லாத ஏடிஎம் கார்டு போல் ஆனார். சுவாரஸ்யமாக, ஜாஃபர் தனது நிதியுதவியை கடன் என்று சொல்லி வழங்க மாட்டார். இதனால் திமுக.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம் பெரும் தொகையை ஈட்டியபோது, ஜாஃபர் அவற்றை முதலீடு செய்து தனது ’தங்கச் சுரங்கத்தை’ சட்டப்பூர்வமாக மாற்ற முடிவு செய்தார். இதனால் அவர் திரையுலகில் தயாரிப்பாளராக நுழைந்தார் ( வழி – அமீர் சுல்தான்) . நான்கு திரைப்படங்களைத் தயாரித்தார். மாயவலை, இறைவன் மிக பெரியவன், இந்திரா மற்றும் மங்கை. அவற்றில் இரண்டு ரிலீசுக்கு தயாராக உள்ளன.
கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசையமைக்கும் படத்துக்கு நிதியளிக்க இருந்தார். இது தவிர இயக்குனர் அமீரின் வாழ்வாதாரத்திற்காக 2007 முதல் நிதியுதவி செய்து வந்தார்.
இதுகுறித்து திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்தபோது, “அமீர் தனது சாலிகிராமம் அலுவலகத்தை 2008ஆம் ஆண்டு தி.நகர் ராஜன் தெருவுக்கு மாற்றினார். அன்றிலிருந்து, வாடகை உட்பட முழு அலுவலகத்தின் செலவுகளையும் ஜாஃபர் ஏற்றுக்கொண்டார். அமீருக்கு செலவுக்காக மாதம் ₹10 லட்சம் கொடுக்கிறார். ஜாஃபர் பின்னால் இருப்பதால், அமீர் பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார். பணத்துக்காக நான் சிரமப்பட்டபோது, அமீர் எனக்கும் உதvவ முன்வந்தார். நான் நன்றி, வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சுமார் 8 மாதங்களுக்கு முன்பு, துபாயிலிருந்து ஒரு நண்பர் சாதிக்கைப் பற்றி எச்சரித்தார். அன்றிலிருந்து நான் அமீரிடமிருந்தும் கூட விலகி இருந்தேன்.ஜாஃபர் சாதிக்கின் வியாபாரத்தைப் பற்றி அமீருக்கு எந்தக் கவலையும் இல்லை. என்றாலும், ஜாஃபர் சாதிக்கின் செயல்பாடுகளைப் பற்றி அமீர் நன்கு அறிந்தவர் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இயக்குநர் அமீரோ தனக்கும் ஜாபர் சாதிக்குக்கும் இடையிலான உறவு என்பது திரைத்துரை தொடர்பானது மட்டுமே என்றும், ஒரு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தொடர்பு உண்டு என்றும், அந்தப் படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும் கூறினார். ஊடகங்களில் வரும் தகவல்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மன உளைச்சலுக்கு உட்படுத்துமே தவிர வேறு இதனால் ஒன்றும் விளையாது என்று கூறி, போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைத்தால் செல்லத் தயார் என்றும் கூறினார்.
ஆனால், சமூக ஊடகங்களில், இயக்குநர் அமீருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் இடையிலான நட்புறவு குறித்து பல்வேறு வீடியோக்கள் வைரலாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில், அமீரே முன் வந்து, சாதிக்குக்கும் தனக்கும் வர்த்தகத் தொடர்புகள் பல இருப்பதைத் தெரிவிக்கிறார். எனவே அமீர் மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு, தான் ஓர் அப்பாவி என தோற்றம் வரும் படி நடிக்கிறார் என்றும் சமூகத் தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
இதனிடையே, ஜாபர் சாதிக்கின் செயல்பாடுகளை ஓரிரு ஆண்டுகளாகக் கண்காணித்து வந்த நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) மூத்த அதிகாரி ஒருவர், “திரைப்படத் துறை மட்டுமல்ல, ஜாஃபர் சாதிக்கிற்கு அமீர் சமூகத்தின் ஆதரவைக் கொண்டு வந்தார். அவர் ஜாஃபர் சாதிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெய்னுலாபிதீனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜாஃபர் சாதிக் அனைத்து முஸ்லீம் அமைப்புகளுக்கும் தனது நன்கொடைகளில் தாராளமாக இருந்தார்.
ஏற்கனவே LYCA வழக்கில் ED விசாரணைக்கு உட்பட்ட உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கும் அவர் நிதி அளித்துள்ளார். ஜாஃபர் வழங்கிய நிதியை முதல்வரின் குடும்பத்தினர் பல முதலீடுகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
சிறிது காலத்தில், பணம் நிறம் மாறும். இது திரைப்படத் தொழில், ரியல் எஸ்டேட், ஆயுதக் கடத்தல், மனித கடத்தல் மற்றும் நிச்சயமாக ‘பயங்கரவாதம்’ ஆகியவற்றில் கலக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை எவ்வளவு தீவிரமாக பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார் அந்த ஐபி அதிகாரி. வரும் நாட்களில் திமுக மிகப் பெரிய சிக்கலை நோக்கிச் செல்லும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஏஜென்சிகள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து ரெகார்ட்களையும் சேகரித்துள்ளனர். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. நாங்கள் தூங்கவே இல்லை. பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதுதான் எங்களின் (தில்லி காவல்துறையின்) வேலை என்றாலும், நாங்கள் பல போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கிறோம். இந்தக் குற்றங்கள் நாடுகடந்தவை, சர்வதேச அளவிலானவை என்பதால், அண்மைய தில்லி போதைப்பொருள் கடத்தலைப் போலவே சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் உள்ளீடுகளைப் பெறுகிறோம். இந்தியா, இன்று உலக சமூகத்தால் மிகப்பெரிய மனித வள திறன் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது. நமது மனித ஆற்றலை சீர்செய்ய முடியாத வகையில் சேதப்படுத்தும் நமது எதிரிகளின் புதிய ஆயுதம் போதைப்பொருள். நமது இளைய தலைமுறை போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டால், இந்தியா ஏழை நாடாக மாறும். நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும். சமூகம் சிதைந்து விடும். இதை எப்படி நாம் அனுமதிக்க முடியும்? ஜாஃபர் சாதிக்கின் வழக்கின் அடி ஆழத்துக்கு வருவோம், என்ன ஆனாலும் சரி” என்று அந்த ஐபி அதிகாரி மிகுந்த வேதனையுடன் இது குறித்துக் கூறியுள்ளார்.
உண்மையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் நாட்டின் நலம் விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியையே கொடுத்திருக்கின்றன. எத்தகைய வலைப்பின்னல் இதுபோன்ற போதைக் கடத்தல் ஆசாமிகளுக்கு இருக்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்கையும் செய்கிறார்கள்.
போதை மருந்தை தயார் செய்ய ஃபார்மா மருந்துக் கம்பெனி.
ஏற்றுமதி செய்ய எக்ஸ்போர்ட் நிறுவனம்..
பொருளை வெளியிடங்களுக்கு அனுப்ப கூரியர் கம்பெனி…
உள்ளூர் கடைநிலை மக்களின் விநியோகத்துக்காக பிரியாணி கடை…
கல்லூரி மாணவர்களுக்கு கபே…
உயர் மட்ட மக்களுக்கு ECRகளில் பப்ஸ் மற்றும் கிளப்புகள்…
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க சினிமா தயாரிப்பு…
இதில் தம்மைத் தாமே பிரபலப்படுத்தி நிறுத்திக் கொள்ள நடிப்பது,, சக நபர்களை இணைத்துக் கொள்வது
பாதுகாப்புக்கு ஆளும் கட்சி, அரசியல்…
ஹவாலா டிரான்ஸாக்ஷனுக்கு நெருங்கிய நெட்வொர்க்
உண்மையில், நாட்டின் மீது அக்கறையும் நாட்டின் இளைஞர்கள் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்ட எவராலும், இளைய சமூகம் போதைக்கு அடிமையாகி வீழ்வதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. இது இளைஞர்களின் எதிகாலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்டதும் கூட!
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற கப்பலில்,அந் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய இரட்டைப் பயன்பாட்டு சரக்கு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மும்பையில் உள்ள இந்திய பாதுகாப்பு முகமைகள் கப்பலை தடுத்து நிறுத்தியதாக ஏஜென்ஸி செய்திகள் கூறுகின்றன.
சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு பயணித்த “சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா” (CMA CGM Attila) எனும் சரக்கு கப்பல் மும்பையின் நவ சேவா (Nhava Sheva) துறைமுகம் வழியாகச் செல்லும் போது இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் அந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் கராச்சிக்குச் செல்லும் வழியில் மால்டா-கொடியுடன் கூடிய வணிகக் கப்பலான – CMA CGM Attila-ஐ சுங்க அதிகாரிகள் நிறுத்தினர். அந்த சரக்குகளில் இத்தாலிய பிரதியால் தயாரிக்கப்பட்ட கணினி எண் கட்டுப்பாட்டு இயந்திரம் (CNC) இருந்தது. CNC இயந்திரங்கள் அடிப்படையில் ஒரு கணினியால் கட்டுப்படுத்தப் படுகின்றன மற்றும் கைமுறையாக சாத்தியமில்லாத செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் துல்லியத்தின் அளவை உருவாக்குகின்றன.
அந்தக் கப்பலில், பாகிஸ்தானின் அணு ஆயுத மற்றும் நீண்ட தூர ஏவுகணைத் திட்டங்களுக்குத் தேவைப்படும் முக்கியப் பொருட்களை இந்தக் கப்பல் கொண்டு செல்வதாக இந்திய அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் கப்பல் தடுத்து நிறுத்தப் பட்டதாம்!
சுங்கத்துறை அதிகாரிகள் கப்பலை பரிசோதித்த போது அதில் “சிஎன்சி” (Computer Numerical Control) மெஷின்கள் எனப்படும் இயந்திரம் இருந்தது. தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தைச் (DRDO) சேர்ந்த அதிகாரிகள் அந்த சிஎன்சி இயந்திரத்தை பரிசோதித்த போது, அது பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்த கூடியது என்று தெரியவந்ததாக, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மெஷின்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றினர்!
இந்த இயந்திரத்துக்கான ஆவணங்களில், சீனாவின் “ஷாங்காய் ஜேஎக்ஸ்ஈ குளோபல் லாஜிஸ்டிக்ஸ்” எனும் நிறுவனத்திலிருந்து “பாகிஸ்தான் விங்க்ஸ்” எனும் சியால்கோட் பகுதியைச் சேர்ந்த நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்திய அதிகாரிகளின் தீவிர விசாரணையில் 22,180 கிலோ எடை கொண்ட இந்த இயந்திரம், சீனாவின் “டையுவான் மைனிங்” எனும் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானின் “காஸ்மாஸ் என்ஜினியரிங்” நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரியவந்தது. இதை அடுத்து இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அணு ஆயுத திட்டங்களுக்காக சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கருவிகளுடன் கப்பல்கள் ஏற்கெனவே சில முறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
பல ஆண்டுகளாக, பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு சீனாவின் ஆதரவைப் பற்றிய கவலை அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில், ஒரு சீனக் கப்பல் பாகிஸ்தானின் ஏவுகணை உற்பத்திக்கான கூறுகளை எடுத்துச் சென்றது, இது பாகிஸ்தானுக்குச் செல்லும் சீனக் கப்பலில் தொழில்துறை உபகரணங்களாக மறைத்து வைக்கப்பட்டது.
இந்தப் பொருட்களைப் பெற்ற சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பொறுப்பான அமைப்புடன் தொடர்புடையவர்களா என்பதை விசாரணை கண்டறிய முயல்கிறது.
பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு ஏவுகணை பொருந்தக்கூடிய பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டதற்காக ஜெனரல் டெக்னாலஜி லிமிடெட் (பாகிஸ்தானுக்கு ஆட்டோகிளேவ் சப்ளையர்), பெய்ஜிங் லுவோ லுவோ டெக்னாலஜி டெவலப்மென்ட் மற்றும் சாங்சோ உடெக் கூட்டு நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு ஜூன் 2023 இல் அமெரிக்கா அனுமதி வழங்கியது.
காஸ்மோஸ் இன்ஜினியரிங் ஒரு பாகிஸ்தானிய பாதுகாப்பு சப்ளையர் ஆகும், இது மார்ச் 12, 2022 முதல் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தெர்மோஎலக்ட்ரிக் கருவிகளின் கப்பலை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதில் இருந்து கண்காணிப்புப் பட்டியலில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக., இன்று வெளியிட்டது. தலைநகர் தில்லியில் பாஜக., வெளியிட்ட அறிவிப்பில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாயின வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அமித் ஷா காந்தி நகரில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 195 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 பேர் என, வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
பாஜக., இன்று வெளியிட்ட 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
உ.பி.யில் 51, ம.பி.யில் 24, மேற்கு வங்காளத்தில் 20, குஜராத்தில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தில்லியில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 பெண் வேட்பாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி- வாரணாசி, அமித்ஷா- காந்தி நகர், மன்சுக் மாண்டவியா- போர்பந்தர், அருணாச்சல பிரதேசம் மேற்கு- கிரண் ரிஜூஜூ, பன்சுரி ஸ்வராஜ்- புதுடெல்லி, அர்ஜூன் முண்டா- குந்தி, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்
அஸ்வினி- காசர்கோடு, கேரளா, நடிகர் சுரேஷ் கோபி- திருச்சூர், அப்துல் சலாம்- மலப்புரம், கேரளா, மத்திய அமைச்சர் சந்திர சேகர்- திருவனந்தபுரம், கேரளா, மத்திய அமைச்சர் முரளிதரன்- ஆட்டிங்கால், கேரளா ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- குணா, மத்திய பிரதேசம், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்- விதிஷா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இது குறித்து பாஜக,. தேசிய பொது செயலாளர் வினாத் தாவ்டே கூறியபோது, “முதற்கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.” என்றார்.
தமிழகத்துக்கு வேட்பாளர் ஒருவரும் அறிவிக்கப்படவில்லை. காரணம், இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையிலும், வரும் மார்ச் 4ம் தேதி பிரதமர் சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாலும், முதற்கட்ட வேட்பளர் பட்டியலில் தமிழகத்தினைச் சேர்ந்த எவரும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, கூட்டணி இறுதி செய்யப் பட்டதும், அடுத்தகட்ட பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோழவந்தானில் அம மு க கொடிக்கம்பம் மற்றும் பீடம் தகர்ப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் சூழலில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் தொகுதியில் வருகின்ற 6ஆம் தேதி புதன்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் , சோழவந்தான் மற்றும் அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், கட்சியினர் சோழவந்தான் அலங்காநல்லூர் பகுதிகளில், கொடியேற்றுவதற்காக கொடி கம்பம் நடும் பணியினை செய்து வருகின்றனர். சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக, பேரூர் செயலாளர் திரவியம் ஏற்பாட்டில், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அனைத்து கட்சிகளும் இருக்கும் கொடி கம்பங்களுக்கு மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை ஏற்றி வைப்பதற்கான பணிகளை செய்து வந்தனர்.
இதற்கான கொடிமரத்தினையும் கொடி மரத்திற்கான பீடம் அமைக்கும் பணியினையும் செய்திருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் கொடி கம்பத்தினை அகற்றியும் பீடத்தினை சேதப்படுத்தியும் சென்று விட்டனர். இதனை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராஜன், பேரூர் செயலாளர் திரவியம், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சுந்தர் ரபீக், ரஜினி பிரபு, முனைவர் பாலு மற்றும் தொண்டர்கள் அந்த இடத்தில் திரண்டனர். இது குறித்து, காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க ப்பட்டு, காவல் காவல் துறையினர் வந்து கொடிமரத்தினை அகற்றி சென்றவர்கள் மற்றும் பீடத்தினை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூறுகையில்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையில் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இ
ந்த செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதுகுறித்து, கழகப் பொதுச் செயலாளர் மண்டலத் தலைவர் டேவிட் அண்ணாதுரை மற்றும் மாவட்டச் செயலாளர் மேலூர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று கூறினர்.
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
இந்த வார்டுகளில், சுமார் முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இட நெருக்கடி காரணமாக சோழவந்தானின் புறநகர் பகுதிகளில் விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சோழவந்தானின் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமப் படுகின்றன.
குறிப்பாக, பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால், நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கொடிக் கம்பங்களை அமைத்து வைத்திருப்பதால் பொதுமக்களுக்கும் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங் களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அருகில் கொடி கம்பங்கள் இருப்பதால், குடிநீரை உபயோகப்படுத்துவதற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத கொடியேற்ற விழா நடைபெற்று அதனைத் தொடர்ந்து, வைகாசி திருவிழா தொடங்க உள்ள நிலையில், இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து அதே நேரத்தில் ரயில் வருதைப் பார்த்து, டார்ச்லைட் அடித்து ரயிலை நிறுத்தி, பெரும் ரயில் விபத்தை தவிர்த்த தம்பதியினருக்கு ரயில்வே சார்பில் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே, தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்தச் சம்பவத்தின் போது, அந்த ரயில் பாதையில், ஆற்றிங்கல் சிறப்பு ரயில் வருவதைக் கண்டு, தண்டவாளத்தில் ஓடி, டார்ச் லைட் அடித்து நள்ளிரவு நேரத்தில் ரயில் ஓட்டுநருக்கு சரியான வகையில் சிக்னல் கொடுத்து, உஷார் படுத்தி, ரயிலை நிற்கவைத்து, பெரும் விபத்தைத் தடுத்த புளியரைப் பகுதியை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவியான வடக்குத்திஅம்மாள் ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களது சாமர்த்திய செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் அந்த தம்பதியினரை நேரில் அழைத்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையத்திற்கு சண்முகையா மற்றும் அவரது மனைவியை அழைத்து வந்து பெரிய அளவிலான விபத்தை தடுத்த தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுரை கேட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா உடன் பல்வேறு ரயில்வே துறை உயர் அதிகாரிகளும் இருந்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் தொடர்பாளர் ராமன் உள்ளிட்டோரும் உடன் இருந்து, தம்பதியைப் பாராட்டினர்.