Home Blog Page 237

வேட்டி, ஜிப்பா சகிதம் மோடி, மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்வாமி தரிசனம்!

modiji in madurai temple - 2026

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, தமிழில் தொடங்கி தனது உரையை அளித்தார்.

பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி சிறு, குறு தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

பின்னர், தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அங்கிருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மதுரையில் பிரதமர் மோடியை வரவேற்க சாலையில் காத்திருந்த மதுரை ஆதீனத்தைக் கண்டதும், காரை நிறுத்தச் சொல்லி, அவருக்கு வணக்கம் செலுத்தினார். அப்போது மதுரை ஆதினம் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதிகளில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.  வேட்டி, ஜிப்பாவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து, பாரம்பரிய உடையில் ஆலயத்தில் தொழுவதன் மகிமையை எடுத்துக் காட்டினார் பிரதமர் மோடி.

ஆலயத்துக்கு வந்த பிரதமர் மோடியை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் , பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றார். இவர் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் தாயார் என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை வந்திருந்த மோடி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அப்போது தக்காராக இருந்து மோடியை வரவேற்றார் கருமுத்து கண்ணன். கடந்த வருடம் அவர் காலமான நிலையில், இந்த வருடம் தக்காராக பொறுப்பேற்றுள்ளார் ருக்மிணி பழனிவேல்ராஜன்.

முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் பிரதமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதால், பாதுகாப்பு காரணங்களால் இன்று மாலையில் இருந்து பொது மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் இன்று இரவு பசுமலை நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்… பிரதமர் மோடி புகழராம்!

modi in madurai tvs school - 2026

மதுரை. தமிழகத்தில் எம்ஜிஆர் தத்து நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்தால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப் பார்க்கிறாள் என, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் .

மதுரை கருப்பாயூரணி டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில், குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டை, அவர் துவங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் எம்ஜிஆர் சுயநலம் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்ததால், இன்று வரை அவரை மக்கள் வீடுகளில் படத்தை வைத்து தெய்வமாக நினைத்துப் பார்க்கிறார்கள். அவர் மக்கள் போற்றுகின்ற மகத்தான தலைவராக இன்னமும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் .

அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா நல்லாட்சி தந்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், தற்போது தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி மக்கள் நலனை சிந்திக்காமல், செயல்பட ஆட்சியாக திகழ்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் பாஜக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஆகியவை மேம்பட்டு உள்ளது என்றும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும், லஞ்சம் ஊழலுக்கு எதிர்ப்பாக பாஜக ஆட்சி திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், பாஜகவை மக்கள் ஆதரித்தால், தொடர்ந்து நல்லாட்சி தர முடியும் என அவர் பேசினார்.

இதையடுத்து, பாரத பிரதமர் மோடி, வேட்டி சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் .

அவரை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ,பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். அவர், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு, பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி, மதுரையில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் வருவதையொட்டி, மாலை 5 மணி முதல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் யார் அனுமதிக்கப்படவில்லை. அவர் சுவாமி தரிசனம் முடிந்து சென்ற பிறகு, பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர்.

பிரதமர் வருகை ஒட்டி ,மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நாளை அவர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.

39 தொகுதிகளிலும் வெற்றி: பல்லடம் மாநாட்டில் அண்ணாமலை உறுதி!

palladam meeting with modi and annamalaiji speech - 2026

பல்லடம் பொதுக்கூட்டம்: 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, இன்றுதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் யாத்திரையை முடித்தார். இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய இணையமைச்சர் எல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவின் துவக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு நினைவு பரிசும், 65 கிலோ எடையுள்ள ஈரோடு மஞ்சள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக.,மாநிலத் தலைவர் அண்ணாமலை,  பிரதமர் வருவதற்கு சற்று தாமதம் ஆனதால், நேரமின்மை கருதி சுருக்கமாகப் பேசுகிறேன் என்று 4 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார். அவரை முதுகில் தட்டிப் பாராட்டினார் பிரதமர் மோடி. 

அண்ணாமலை பேசிய போது… 

”இது யாத்திரை நிறைவு விழாவே தவிர, 39 எம்.பி.,க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.  இன்னும் 60 நாட்களில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும். இன்று யாத்திரை நிறைவு விழாவே தவிர, 39 எம்.பி.,க்களை பார்லிமென்ட்க்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை. 

காங்கிரஸ் தடை செய்த ஜல்லிக்கட்டு, இன்றைக்கு நடைபெறுவதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே. அதன் காரணமாக ஜல்லிக்கட்டு நினைவுப்பரிசும், பாரம்பரியமிக்க மஞ்சளும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டன. 2014, 2019ல் செய்த தவறை தமிழக மக்கள் இந்த முறை செய்ய மாட்டார்கள். பொய் பிரசாரங்களை ஏற்காமல், பிரதமர் மோடியை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பல்லடம் கூட்டம் தமிழக பாஜ.,விற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பேசினார் அண்ணாம்னலை. 

லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள… அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா! பல்லடத்தில் மோடி உற்சாக உரை!

palladam meeting with modi and annamalai - 2026

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். 

பல்லடத்தில் பிப்.27  இன்று நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பேசினார் பிரதமர் மோடி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “வணக்கம்” என தமிழில் பேசி உரையை தொடங்கினார்.

  • பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்…
    தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கிறது.
  • பா.ஜனதாவில் வளர்ச்சி பார்த்து பலருக்கு அச்சம்.
  • தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை பா.ஜனதா அரசு அளித்துள்ளது.
  • மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்தும் கொடுத்து வருகிறது.
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பெரிய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்து திமுக தமிழக அரசுக்கு ஏதும் செய்யவில்லை.
  • 1991-ல் நான் ஒற்றுமை யாத்திரை தொடங்கியபோது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.
  • என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது.
  • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்
  • தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜனதா வைத்துள்ளது.
  • பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள்.
  • தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.
  • ஜவுளி துறையில் சிறப்பு வாய்ந்த நகராக திருப்பூர் உள்ளது.
  • நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதி பெரும் பங்கு வகிக்கிறது.
  • நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது.
  • இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பதுபோல் உள்ளது.
  • இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • 2024-ல் தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் கட்சி பா.ஜனதா.
  • என் மண் என் மக்கள் யாத்திரை தன்னுடைய பெயராலும் பெருமை பெற்றுள்ளது.
  • என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.
  • நாடுதான் முதன்மையானது என பா.ஜனதா கருதுகிறது.
  • இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள்.
  • தமிழ்மொழி, கலாசாரம் மிக சிறப்பானது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 

பல ஆண்டுகளாக தமிழகத்தைக் கொள்ளை அடித்தவர்கள், பாஜக.,வின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். மத்திய பாஜக., அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை மத்திய பாஜக., அரசு வழங்கியுள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெரிய அமைச்சரவைகளில் அமைச்சர்களாக இருந்தபோதும் திமுக எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி செய்ததை விட பல மடங்கு பாஜக., அரசு செய்துள்ளது. 

மோடி, அனைவருக்காகவும் பணியாற்றுகிறார்; ஏழைகளுக்காக பணியாற்றுகிறார்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார். இதுவே இந்த மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர இருக்கிறது.

நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பாஜக.,வின் வளர்ச்சியை தடுக்கின்றனர். இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்ஜிஆர். அதனால் அவர் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறார். அவரைப் போலவே ஜயலலிதாவும் மக்கள் மனதில் நிலைப்பெற்றிருந்தார். எம்ஜிஆர் குடும்பத்திற்காக உழைத்தவர் அல்ல, மக்கள் நலனுக்காக பணியாற்றியவர்.

ஜெயலலிதா தமிழக மக்களோடு எந்த வகை தொடர்பு வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் திமுக.,வால் அரசியல் இழுக்கு ஏற்பட்டுள்ளது. வாரிசு அரசியலை எதிர்த்தவர் எம்ஜிஆர். அவரை அவமதிப்பது போல், திமுக ஆட்சி நடைபெறுகிறது. நாடு வளர்ச்சி அடையும் போது தமிழகமும் அதே வேகத்தில் வளர்ச்சி அடையும். 2 பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்களில், ஒன்று தமிழகத்திற்கு வருகிறது.

‘இண்டி’ கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான பணிகளை செய்ய மாட்டார்கள். இண்டியா கூட்டணியின் ஒரே நோக்கம், மோடியை வெறுப்பதே! குடும்ப ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றியே சிந்திக்கிறார்கள். இண்டியா கூட்டணி தமிழகத்தில் வெற்றிப்பெற்றால் தமிழகத்தை வளர்ச்சியடைய அனுமதிக்க மாட்டார்கள். இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் இனிமேல் தேசத்தை சுரண்ட முடியாது.

முத்ரா கடன் வசதி திட்டம் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சம் கோடி கடனாக வழங்கப்ப்டடுள்ளது. மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார். தமழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பாஜக., தன்னுடைய 3வது ஆட்சி காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை இலக்காக கொண்டு பணியாற்ற உள்ளது.

தமிழகத்தை ஆளுகின்ற கட்சி, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுக்கிறது. இண்டியா கூட்டணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். நீங்கள் தமிழகத்தின் பிரகாசமான வளர்ச்சிக்கு உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளீர்கள். தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பல்லடம் அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலையின் ‛ என் மண்: என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் பாஜக., தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச, திறந்த வேனில் வந்தார்பிரதமர் மோடி. அவருக்கு லட்சக்கணக்கில் அங்கே திரண்டிருந்த மக்கள், கட்சித் தொண்டர்கள், மலர்களைத் தூவி, பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு, மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று கூறி வரவேற்பு அளித்தனர்.

5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு மாநாட்டுப் பந்தலில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்  பட்டிருந்தன. 500 அண்டாக்களில் உணவு தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கவும் உணவுசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வந்திருந்த கூட்டத்தினர் வரிசையாக வந்து நின்று பாக்கு மட்டை தட்டுகளில் உணவை வாங்கி உண்டு சென்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் வந்திருந்த கட்சி தொண்டர்கள் மாநாட்டில் பந்தலுக்கு உள்ளே வர இயலாமல் இட நெருக்கடி காரணமாக வெளியிலேயே நிற்க வேண்டி இருந்தது.  பலர் கார்களில் இருந்த படி மொபைல் போன்கள் வாயிலாக நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். 

மாநாட்டு மேடைக்கு பிரதமர் மோடி வரும்போது அருகே கூட்டத்திலிருந்து தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்த மோடியின் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் எல் முருகனும் உடன் இருந்தனர். பிரதமர் மோடி வருவதற்கு முன்னதாக விழாமேடையில் பாஜக தலைவர்களுடன் கூட்டணி கட்சி தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.  அவர்கள் ஒவ்வொருவராக  எழுந்து வந்து மாநாட்டு மேடையில் பிரதமர் மோடியின் நலத்திட்ட பணிகள் பாஜகவின் வளர்ச்சி, அண்ணாமலை மேற்கொண்ட என்மன் என் மக்கள் பாதயாத்திரையின் வெற்றி ஆகியவை குறித்து பேசினர்.

விழா மேடையில் பிரதமர் மோடிக்கு எல்.முருகன், தோடர் பழங்குடியினர் தயாரித்த துண்டு ஒன்றை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து மோடிக்கு, ஜல்லிக்கட்டு காளை சிலையை, அண்ணாமலை பரிசாக வழங்கினார். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காங்கிரஸ் திமுக கூட்டணி அரசியல் தடை செய்யப்பட்டதும், பின்னர் வந்த பிரதமர் மோடி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி தமிழர்களின் வீர விளையாட்டை மீட்டுக் கொடுத்ததன் அடையாளமாக இந்த பரிசை வழங்குவதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து கூட்டணிக் கட்சியினர்,  ஈரோட்டின் புவிசார் அடையாளமான  ஈரோட்டு மஞ்சள் மாலையை  பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவித்தனர்.

சோழவந்தான், மொடக்குறிச்சி ரயில்வே பாலங்கள்; பிரதமர் மோடி திறந்துவைப்பு!

railway bridgesopened - 2026

சோழவந்தானில்

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் சுமார் 49 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ளது.

அந்த ரயில்வே மேம்பாலத்தை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இதற்கான காணொளி நிகழ்ச்சி விழா சோழவந்தான் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, பாஜக மாவட்டப் பொருளாளர் முத்துராம், ரயில்வே பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மதுரை ரயில்வே கோட்ட உதவி கோட்ட பொறியாளர் முத்தையா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை ரயில்வே பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பகல் 12. 20 மணியளவில் பாரதப் பிரதமர்மோடி காணொளி வாயிலாக சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து பேசினார். இதில், சோழவந்தான் ரயில் பயணிகள் நலச்சங்க உதவிச் செயலாளர் சுப்பிரமணியன், வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் ஒர்க் ஷாப் முருகன், செந்தமிழன், செல்வி,ராஜா, வாசுதேவன், விஸ்வ ஹிந்து பரிஷத் முருகன், முருகேஸ்வரி,ரமேஷ், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ராஜேஷ், கருப்பணன் சோழவந்தான் பிராமணர் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், காசி விஸ்வநாதன், நாகேஸ்வரன் ,சி. ஆர். பி. இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, வக்கீல் பாண்டுரங்கன் உள்பட ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிலைய கண்காணிப்பாளர் சுந்தர் கணேஷ் நன்றி தெரிவித்தார். சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னன் மற்றும் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

மொடக்குறிச்சியில்

ரயில்வே நுழைவு பாலம் திறப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம் / அடிப்பாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் / துவக்கி வைத்தல் / நாட்டுக்கு அர்ப்பணித்தல் நிகழ்வினை காணொளி வாயிலாக மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று (26.02.2024) துவக்கி வைத்தார்கள்.

அதன் அடிப்படையில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி ஆர்.டி காலேஜ் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே நுழைவு பாலம் திறப்பு விழா இன்று (26.02.2024) திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் சாவடிப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

திறப்பு விழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி மற்றும் நமது கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் கொடுக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்வினை தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

காரைக்குடியில்…

தில்லியில் இருந்து காணொளி வாயிலாக, அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பில், 554 ரயில் நிலையங்களை மறு சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பான நிகழ்ச்சி காரைக்குடியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி எம்.பி., பேசுகையில்,‛‛ மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து நாம் ரூ.1 வரி கட்டினால், 29 காசு தான் திரும்ப வருகிறது. ஆனால், உத்தர பிரதேசத்தில் ரூ.1 கட்டினால் ரூ.2.73 திரும்ப கிடைக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக.,வினர் அரசு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்றும், உங்கள் குடும்பம் என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பாஜக.,வினர் ‘மோடி வாழ்க’ என்றும் ‘கோ பேக் கார்த்தி’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து கார்த்தி எம்.பி., தனது பேச்சை முன்னதாகவே முடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.

பிரதமரின் தமிழக வருகை: மதுரையில் ஹெலிகாப்டர் ஒத்திகை; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

pm modi in 17th coperative meet - 2026

மதுரை: பிரதமர் வருகையையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீரபாஞ்சான் பகுதியிலுள்ள ஹெலிபேடு தளத்தில் ஒத்திகை நிகழ்வும் நடந்தது.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பிப். 27-ம் தேதி பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலுார் விமான படைத்தளத்துக்கு பகல் 2.30 மணிக்கு வருகிறார். தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்துக்குச் செல்லும் அவர் , பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் மாதப்பூர் ஊராட்சி பகுதியில், நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

இதன்பின், பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மாலை சுமார் 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடையும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக மதுரை கருப்பாயூரணி வீரபாஞ்சானிலுள்ள, டி.வி.எஸ். லட்சுமி பள்ளி வளாக ஹெலிபேடில் வந்திறங்குகிறார். இதன்பின், 5.15 மணிக்கு டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு சாலை மார்க்கமாக 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பிப். 28-ம்தேதி காலை 8.15 மணிக்கு தாஜ் ஓட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பிரதமரின் வருகையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் வருவதால், தென்மண்டல ஐ.ஜி. என்.கண்ணன் ஆலோசனை பேரில், டிஐஜி ரம்யாபாரதி மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடக்கின்றன.

இது குறி்து போலீஸார் கூறுகையில், “கடந்த 3 நாட்களுக்கும் மேலாக டிவிஎஸ் பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள ஹெலிபேடு தளத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர். தென் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் இன்று மதுரை வர
வழைக்கப்பட்டு, தொடர்ந்து, கண்
கணிக்கின்றனர். ஹெலிபேடு தளத்தில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி இருக்கிறதா என, விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

தேசிய பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட தொழில் பாதுகாப்பு படையினர் 3 பிரிவாக பிரிந்து கடந்த 2 நாட்களாகவே மதுரை விமான நிலையம், டிவிஎஸ் பள்ளி வளாகம் மற்றும் பசுமலை தாஜ் ஓட்டல் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். காவல் ஆணையர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி. என். கண்ணன், டிஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது, நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கண்காணிக்கின்றனர்.

கருத்தரங்கு நிகழ்வு நடக்கும் இடம் மற்றும் ஹெலிபேடு உள்ளிட்ட பகுதிகள், மதுரை – வரிச்சியூர் ரோடு பகுதியை நாளை ( பிப்.26) தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ மற்றும் பிரதமருக்கான பிரத்யேக பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும்.

தமிழ்நாடு போலீஸார் சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுவர். பிரதமரின் வருகையையொட்டி, ஏற்பாடு செய்து பாதுகாப்பு பணியை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் திங்கட்கிழமை மதுரை வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

பாரத பிரதமர் மதுரை வருகையையொட்டி, மதுரை கருப்பாயூரணி பகுதிகளில் சாலைகளில் போடப்பட்டுள்ள வேகத் தடைகள் அகற்றப்பட்டுள்ளது. சாலைகளில் இரு புறங்களிலும் தூய்மைப் பணிகளை, மாநகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! மோடி வரும் முன்னே… பயணிகள் ரயில் கட்டணக் குறைவு பின்னே!

railway news - 2026
#image_title

பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நிலையில் ரயில் பயணிகள் பலரின் ஏகோபித்த கோரிக்கையான பயணிகள் ரயில் பழைய கட்டணம் மீண்டும் திரும்பி உள்ளது என்று தெரிகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அல்லாது குறைந்த தூரத்தில் இயங்கும் பயணிகள் ரயில்களுக்கு முந்தைய பயணிகள் ரயில்களுக்கான கட்டணத்தையே வசூலிக்க சொல்லி வாய்மொழி உத்தரவாக வந்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் பயணிகள் கட்டணத்தில் இயங்கிய ரயில்கள் சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் என மாற்றப்பட்டு இதில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை, இன்று முதல் தென்னக ரயில்வே மாற்றி மீண்டும் பழைய பயணிகள் கட்டணத்தை வசூலிக்க வாய்மொழி உத்தரவு ரயில்வே நிலையங்களுக்கு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

பல பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக மாற்றி அறிவித்த ரயில்களையும் மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றி இந்த ரயில்களிலும் பழையபடி குறைந்த பயணிகள் கட்டணத்தை வசூலிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி, பெரும் தாண்டவம் ஆடியது. இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் அப்போது ரயில் போக்குவரத்து சில மாதங்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பின்பு முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள் மட்டும் அவசர நிமித்தமாக செல்வோர் வசதிக்காக சிறப்பு கட்டணம் சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கேரளத்தில் தென்னக ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட 324 பயணிகள் ரயிலில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் என மாற்றி அமைத்து எக்ஸ்பிரஸ் கட்டணங்கள், அதாவது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக முக்கிய வழித்தடமாக மதுரை ராஜபாளையம் செங்கோட்டை, செங்கோட்டை திருநெல்வேலி, திருச்செந்தூர் திருநெல்வேலி, நாகர்கோவில் திருநெல்வேலி, இடையே இயங்கிய பயணிகள் ரயில் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது.

மதுரை திருவனந்தபுரம் திருச்சி சேலம் பாலக்காடு எர்ணாகுளம் ரயில்வே தோட்டங்களில் இயங்கிய அனைத்தும் அதாவது 324 ரயில்களும் சிறப்பு கட்டண ரயில்களாக மாற்றப்பட்டு எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. இதற்கு ரயில் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .

கொரோனா முடிந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்லாம் சிறப்பு கட்டணத்திலிருந்து பழையபடி விரைவு ரயில் கட்டணமே வசூலிக்கப்பட்டது. ஆனால் பயணிகள் ரயிலில் மட்டும் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக 20 ரூபாய் கட்டணம் சிறப்பு ரயில்களில் 40 ரூபாய் அல்லது 45 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதனால் சாதாரண பயணிகள் ரயிலில் ஏறி முக்கிய பணிகளுக்கு வியாபாரம் நிமித்தமாக செல்வதற்கு பெரும் அவதிப்பட்டனர்.

தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சிறப்பு கட்டணம் ரயில்கள் அனைத்தும் தென்மேற்கு ரயில்வே உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் பிரிவுகள் மாற்றி மீண்டும் பயணிகள் ரயில் கடந்த சில தினங்களாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் தென்னக ரயில்வேயில் ரயில் எண் ஜீரோவில் தொடங்கும் ரயில்கள் (train numbers begins with ‘0’ ) குறிப்பாக 200 கி.மீ.,ம்க்கும் குறைவான தொலைவுக்கு ஓடும் ரயில்கள், சிறப்பு கட்டண சிறப்பு முறையில் என இருந்ததை ரத்து செய்து பழைய கோவிட்டுக்கு முன்பு வசூலிக்கப்பட்ட குறைந்த கட்டணமான பயணிகள் ரயில் கட்டணம் ரூபாய் 10 முதல் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பயணிகள் பலர் தெரிவித்த போது, தென்னக ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாக அதிகாரபூர்வமாக மாற்றிவிட்டது . குறிப்பாக கோயமுத்தூர் நாகர்கோயில் இடையே இயங்கிய பயணிகள் ரயில் ஏழை எளியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுபோல் மதுரை – புனலூர் – மதுரை இடையே இயங்கிய பயணிகள் ரயில் பயணிகளுக்கு பெரும் பாக்கியமாக இருந்தது. இந்த ரயில்கள் எல்லாம் படிப்படியாக விரைவு ரயில் ஆக மாற்றப்பட்டுவிட்டது

மேலும் முக்கிய வழித்தடங்களில் இரு அல்லது மூன்று பயணிகள் ரயிலை ஒரே ரயிலாக இணைத்து சிறப்பு ரயில் என இருந்ததை மாற்றி விரைவு ரயில் ஆக அதிகாரப்பூர்வமாக மாற்றி இயக்கப்பட்டு வருகிறது.

செங்கோட்டையில் இருந்து மதுரை வரை இயங்கிய பயணிகள் ரயிலும் திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய பயணிகள் ரயிலும் ஒன்றாக்கி மயிலாடுதுறை செங்கோட்டை என ஒரே ரயிலாக மாற்றி கடந்த இரு ஆண்டுகளாக விரிவுரைகளாக இயங்கி வருகிறது.

இது போல் மதுரை செங்கோட்டை, செங்கோட்டை கொல்லம், புனலூர் குருவாயூர் ஆகிய மூன்று பயணிகள் ரயிலை ஒன்றிணைத்து மதுரை குருவாயூர் என ஒரே ரயிலாக விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கி வருகின்றனர் .

இது போன்ற ரயில்களையும் மீண்டும் பழையபடி பயணிகள் ரயில் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது சென்னை கோட்டத்தில் பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் பழைய சாதாரண கட்டண நிலையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் திருச்சி மதுரை தோட்டங்களில் சில அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு பழைய சாதரண கட்டண நிலையிலேயே இன்று முதல் பயணிகள் ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனினும் இன்னும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை பெற்றதாக தெரிகிறது. இதுபோன்று வாய்மொழி உத்தரவு பெற்று கட்டணம் பழையபடி குறைக்கப்பட்டு வாங்கினால் யூ டி எஸ் ஆப் மூலம் பெறுபவர்களுக்கும் டிக்கெட் ஏஜெண்டுகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும் படிப்படியாக ஓரிரு நாட்களில் சீராகி, முழு நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் 2ம் கட்டமாக ரயில் நிலையங்கள் மேம்படுத்தல்; தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

pm narendra modi - 2026
#image_title

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டும், ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையம்’ என்ற திட்டத்தின் கீழ் நவீனமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி – மின்படிக்கட்டுகள், உள்ளூா் தயாரிப்பை முன்னிலைப் படுத்தும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ அமைப்பது உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இந்த ரயில் நிலையங்களில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். அந்தப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலக தரத்தில் நவீனமாக மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தில்லியில் இருந்தபடி, காணொளிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள 554 ரயில் நிலையங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தில்லியில் நடந்த இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ், ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடு முழுவதும் அந்தந்த மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டிய 554 ரயில் நிலையங்களில் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் நவீனமாக மேம்படுத்தப்படுகின்றன.

இந்த 34 ரயில் நிலையங்களில் சென்னை கோட்டத்தில் 7, சேலம் கோட்டத்தில் 8, திருச்சி கோட்டத்தில் 4, மதுரை கோட்டத்தில் 13, கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9, திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் தென்னக றயில்வே சாா்பில் 32 ரயில் நிலையங்கள், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டிய தமிழகத்தில் உள்ள 34 மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்கள் விவரம் …

1. திருநெல்வேலி சந்திப்பு
2. கும்பகோணம்
3. ஈரோடு சந்திப்பு
4. அம்பத்தூர்
5. திண்டுக்கல் சந்திப்பு
6. ஓசூர்
7. தர்மபுரி
8. திருச்செந்தூர்
9. மேட்டுப்பாளையம்
10. மாம்பலம்
11. சென்னைக் கடற்கரை
12. பரங்கிமலை
13. திருப்பத்தூர்
14. புதுக்கோட்டை
15. கிண்டி
16. நாமக்கல்
17. பழனி
18. காரைக்குடி சந்திப்பு
19. மொரப்பூர்
20. சின்னசேலம்
21. கோவை வடக்கு
22. பொம்மிடி
23. ராஜபாளையம்
24. ராமநாதபுரம்
25. சென்னைப் பூங்கா
26.பொள்ளாச்சி சந்திப்பு
27. கோவில்பட்டி
28. தூத்துக்குடி
29. அம்பாசமுத்திரம்
30. பரமக்குடி
31. மணப்பாறை
32.விருத்தாசலம் சந்திப்பு
33. திருவாரூர் சந்திப்பு
34. திருவண்ணாமலை.

இவற்றில், திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் ரூ.270 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. தற்போது ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமாக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையமும் நவீனமாக்கப் படுவது நெல்லை வாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்தப் பணிகளை இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த விழாவில் சென்னையில் கடற்கரை, கிண்டி, பரங்கிமலை ஆகிய 3 இடங்களிலும் அதிகாரிகள் பங்கேற்றனர். பரங்கிமலையில் நடந்த விழாவில் ஆளுநர் ரவீந்திர நாராயண்.ரவி கலந்து கொண்டார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகத்தளப் பதிவில் வெளியிட்ட செய்தியில்…

அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழகத்தில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். தொலைநோக்கு தலைமையின் கீழ், ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போதைய திட்டங்கள் ரூ. 45,769 கோடிக்கு மேல் உள்ளதால், மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட ஆயத்தமாக உள்ளது… என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசால் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்களும் சர்வதேச தரத்தில் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் திறந்தவெளி கூரை அமைக்கப்படும். பயணிகள் பொருட்கள் வாங்குவதற்கான ஷாப்பிங் மண்டலம் உருவாக்கப்படும். பயணிகள் நிலையங்களில் விரும்பிய உணவுகளை சாப்பிடுவதற்கு உயர் ரக உணவுகள் கொண்ட ஓட்டல்களுடன் உணவு சந்தையும் அமைக்கப்படும். குழந்தைகள் விளையாடும் பூங்காவும் இந்த ரயில் நிலையங்களில் இடம் பெற்றிருக்கும்.

மேலும் பயணிகள் வசதிக்காக நிலையத்துக்குள் செல்லுவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு ஒரு வழியும் என தனித்தனி வாசல்கள் அமைக்கப்படும். ரயில் நிலையம் அருகிலேயே பல அடுக்குகள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் இடம் உருவாக்கப்படும். வயதான பயணிகளை கருத்தில் கொண்டு லிப்ட் வசதிகளும் செய்யப்படும்.

நகரும் படிக்கட்டுகள், சொகுசு ஓய்வு அறைகள், காத்திருப்பு கூடங்கள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும். இதன் மூலம் இந்த நவீன ரயில் நிலையங்கள் ஒருங்கிணைந்த பல வகை இணைப்புகளுடன் அந்தந்த பகுதி சமூக பொருளாதார செயல்பாடுகளின் மையமாகவும் உருவெடுக்கும்.

ரயில் நிலையங்களின் மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்லாது, பிரதமர் மோடி இன்று 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கும் அடிக்கல் நாட்டினார். ரூ.41 ஆயிரம் கோடி செலவில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் 121 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் தமிழகத்தில் அமைய உள்ளன.

இந்தத் திட்டங்கள் மூலம் முக்கிய பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடையில்லாமல் இயங்கும். பயணிகள் ரயில் நிலையங்களை கடப்பதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஐ.பெரியசாமி அமைச்சர் பதவிக்கு ஆபத்து! வழக்கில் விடுவித்ததை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

chennai highcourt - 2026

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை மீண்டும் நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.
  • ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார் வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றத்திற்கு ஆணை
  • மார்ச் 28க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இந்த உத்தரவால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டலாம் என கூறப்படுகிறது.

2006 முதல் 2011 வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தவர் பெரியசாமி. இவர் வீட்டு வசதி வாரிய நிலத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.

இந்த உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். அமைச்சர் பெரியசாமி தரப்பில் தில்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர்ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, இந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை உத்தரவு பிறப்பித்தார்.

இதில், 2024 ஜூலைக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டுள்ளது. மார்ச் 28 க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி அமைச்சர் பெரியசாமி ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும், அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும் என்றும் கருத்துப் பதிவு செய்துள்ளார் நீதிபதி.

ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா!

alankanallur amman temple function - 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவில் ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றது

முதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மனுக்கு கொடியேற்றி கம்பம் சாட்டுதல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் எல்லைக் கொடி கட்டுதல் நிகழ்ச்சியும் கும்மி பாட்டு பெரியாற்றங்கரையில் சக்தி பூஜை செய்து அன்னை மாரியம்மன் சக்தி கரகம் எடுத்து பெரிய ஊர் சேரி பிரிவு கேட்டு கடை அலங்காநல்லூர் குறவன்குளம் பிரிவு எரம்பட்டி பிரிவு விஜயமங்கலம் கீழச்சின்னம்பட்டி பிரிவு வழியாக வீதி உலா வந்தது

பின் ஸ்ரீ ஜோதி செட்டி கருப்பசாமி ஆலயத்தில் இருந்து முளைப்பாரி உடன் கோவிலுக்கு வீதி உலா மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியாக மாவிளக்கு எடுத்தல் அக்கினி சட்டி கரும்பாலை தொட்டியில் எடுத்தல் அழகு குத்துதல் அங்கப்பிரவேசம் செய்தால் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அன்று மதியம் இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை அம்மன் பெரியாற்றங்கரை எழுந்தருளி பாராட்டு மற்றும் தீர்த்தவாரி வைபவம் நிகழ்ச்சியும் அன்று மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கேட்டு கடை வழியாக கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் திங்கட்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் சாந்தி பூஜை செய்து பிறகு முளைப்பாரி சக்தி கரகம் ஆலயம் வந்து திருக்கோயிலாகத்தில் கரைக்கப் பட்டது

அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் கோவிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நிதிஅம்மா செய்திருந்தார் இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்