Home Blog Page 237

முதல் கட்டத் தேர்தல் நிறைவு; தமிழகத்தில் 72 சத வாக்குகள் பதிவு!

election voting - 2026

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் மந்தம் ஏற்பட்டது. பின் மாலை நேரத்தில் வாக்குப்பதிவுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டனர். இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்… 

ஆரணி- 73.77
கரூர் – 74.05
பெரம்பலூர்- 74.46
சேலம்- 74.55
சிதம்பரம்- 74.87
விழுப்புரம்- 73.49
ஈரோடு- 71.42
அரக்கோணம்- 73.92
திருவண்ணாமலை- 73.35
விருதுநகர்- 72.99
திண்டுக்கல்- 71.37
கிருஷ்ணகிரி- 72.96
|வேலூர்- 73.04
பொள்ளாச்சி- 72.22
நாகப்பட்டினம்- 72.21
தேனி- 71.74
நீலகிரி- 71.07
கடலூர்- 72.40
தஞ்சாவூர்- 69.82
மயிலாடுதுறை- 71.45
சிவகங்கை- 71.05
தென்காசி- 71.06
ராமநாதபுரம்- 71.05
கன்னியாகுமரி- 70.15
திருப்பூர்- 72.02
திருச்சி- 71.20
தூத்துக்குடி- 70.93
கோவை- 71.17
காஞ்சிபுரம்- 72.99
திருவள்ளூர்- 71.87
திருநெல்வேலி- 70.46
மதுரை- 68.98
ஸ்ரீபெரும்புதூர்- 69.79
சென்னை வடக்கு- 69.26
சென்னை தெற்கு- 67.82
மத்திய சென்னை- 67.35

தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்போட அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 % என வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் – 56.68 % வாக்குகள் பதிவாகின.

கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, வேலூர், பொள்ளாச்சி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை என 13 தொகுதிகளில் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது. மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 

தேர்தல் புறக்கணிப்பு

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்குச்சீட்டு மையத்திற்கு பூத் ஏஜென்ட் கூட வரவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்ற அதிருப்தியில் மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து உள்ளனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் 1,400 வாக்குகள் உள்ள நிலையில், இங்கு வெறும் 9 வாக்குகளே பதிவாகி உள்ளன. தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் அறிவித்து உள்ளதால், மக்கள் யாரும் ஓட்டளிக்க வரவில்லை.

அதேபோல், திருவள்ளூர் குமாரராஜ பேட்டை வாக்குச்சாவடியில் யாரும் ஓட்டளிக்கவில்லை. 6 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பட்டி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதி மக்கள் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதி கோரி திண்டுக்கல் மாவட்டம் சீரங்கம்பட்டி பகுதி மக்கள் , தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சாரம், சாலை வசதி கேட்டு, கன்னியாகுமரி மாவட்டம் வலிய ஏலா கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணி கல்லூரணி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். மதியம் 1 மணி வரை 2 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குமாரகுடி, தெற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையாம்பட்டிபுத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கார்குடி கிராமம் மாதாகோயில் தெரு பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் உள்ள வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஹள்ளி கிராமத்தில் சாலை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா வழங்காத காரணத்தால் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலத்தேமுத்துப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இளம் வாக்காளர்கள் 8 பேரைத் தவிர வேறு யாரும் வாக்குப் போடவில்லை.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

விறுவிறு வாக்குப் பதிவு; தருமபுரியில் அதிகம், மத்திய சென்னையில் மிகக் குறைவு!

voting in tamilnadu - 2026
#image_title

பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86% சதவீதம் பதிவு ஆனது. குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% சதவீத வாக்குகள் பதிவு ஆனது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.

காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.

அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

4. ஆரணி- 56.73
5. கரூர் – 56.65
6. பெரம்பலூர்- 56.34
7. சேலம்- 55.53
8. சிதம்பரம்- 55.2
9. விழுப்புரம்- 54.43
10. ஈரோடு- 54.13
11. அரக்கோணம்- 53.83
12. திருவண்ணாமலை- 53.72
13. விருதுநகர்- 53.45
14. திண்டுக்கல்- 53.43
15. கிருஷ்ணகிரி- 53.37
16. வேலூர்- 53.17
17. பொள்ளாச்சி- 53.14
18. நாகப்பட்டினம்- 52.72
19. தேனி- 52.52
20. நீலகிரி- 52.49
21. கடலூர்- 52.13
22. தஞ்சாவூர்- 52.02
23. மயிலாடுதுறை- 52.00
24. சிவகங்கை- 51.79
25. தென்காசி- 51.45
26. ராமநாதபுரம்- 51.16
27. கன்னியாகுமரி- 51.12
28. திருப்பூர்- 51.07
29. திருச்சி- 50.71
30. தூத்துக்குடி- 50.41
31. கோவை- 50.33
32. காஞ்சிபுரம்- 49.94
33. திருவள்ளூர்- 49.82
34. திருநெல்வேலி- 48.58
35. மதுரை- 47.38
36. ஸ்ரீபெரும்புதூர்- 45.96
37. சென்னை வடக்கு- 44.84
38. சென்னை தெற்கு- 42.10
39. சென்னை மத்தி- 41.47

சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை. குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 வாக்குகள் பதிவாகி இருந்தது. மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 20.09 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. பெரும்பாலான தொகுதிகளில் 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பொதுவாக சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 20 முதல் 22 சதவீத வாக்குகள்தான் 11 மணி வரை பதிவாகியுள்ளன. மதுரையிலும் 22.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது..பகல் ஒருமணி நிலவரப்படி தமிழகத்தில் 40.5சத வாக்கு பதிவாகியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் 40சதத்திற்குமேல் வாக்கு பதிவானது.அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.8சதம் வாக்கு பதிவானது.விருதுநகர் கன்னியாகுமரி உட்பட பல தொகுதியில் 40சதத்திற்குமேல் பதிவானது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லடச்த்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
“அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

தமிழ்நாடு (39), அருணாசல பிரதேசம் (2), அசாம் (5), பீகார்(4), சத்தீஷ்கார் (1), மத்திய பிரதேசம் (6), மராட்டியம்(5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட் (5),மேற்கு வங்காளம் (3), அந்தமான்-நிகோபார் (1), காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரித்தனர். ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. அத்துடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த 102 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அருணாசலபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்படும்.என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

voting by vips - 2026
#image_title

2024 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் முதல் கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 

நூறு சதவீத வாக்குப் பதிவு என்பது குறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டார்.

அதில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது! – என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்திருந்து வாக்கை பதிவு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்று உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “கோவை தொகுதியில் பாஜக., வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறேன். நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும். ஆள்பவர்களோடு தொப்புள்கொடி உறவு நீடிக்க வாக்களிக்க வேண்டும். பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள்.

ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள்தான். எங்கு இருந்தாலும் மாலை 6 மணிக்குள் வாக்களித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். கேள்வியாகவும், தவமாகவும், வெளிப்படையாகவும் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். தேர்தல் திருவிழா நாளில் அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும். திராவிடக் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் முடிவு கட்டப்படும். மாற்றம் ஏற்பட வாக்களிக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு கிடைக்கும். 39 தொகுதிகளும் வெல்வோம்.

கொங்கு மண்டலத்தில் எப்படியாவது மக்களை விலைக்கு வாங்கலாம் என்று திமுக நினைப்பது கவலை அளிக்கும் விஷயம். ஜூன் 4ம் தேதி வெளிவரவிருக்கும் கோவை மாடல் நாடு முழுவதும் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். 

சென்னை கோயம்பேடு வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஓட்டளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும். இதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். 

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தபோது,  “கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெல்லும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். நாடு செழிக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். அகில இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் பிரதமர் மோடி மேலும் நல்ல மாற்றங்களை கொண்டு வருவார்” என்று கூறினார்.  

திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மிக முக்கியமான நாள் இது. திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது. நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்று கேட்கிறார்கள். நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல” என்றார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும். தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது” என்று கூறினார்.   

தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் அவர் இது குறித்துக் கூறியபோது, “இந்திய தேசத்தினுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடிதான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன்” என்றார்.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பிரபலங்கள், நடிகர்கள் உள்ளிட்ட்டோரும் இன்று காலை முதலே வாக்குச் சாவடிகளில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர். நடிகர் அஜித்குமார் தனது வாக்கினைச் செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வந்து வாக்களித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

IPL 2024: பும்ராவால் மும்பை இந்தியன்ஸ் பெற்ற அடுத்த வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியெட்டாம் நாள் ஐபிஎல் 2024 – 18.04.2024 

பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி (192/7, சூர்யகுமார் யாதவ் 78, ரோஹித் ஷர்மா 36, திலக் வர்மா 34, ஹர்ஷல் படேல் 3/31, சாம் கரன் 2/41) பஞ்சாப் அணியை (19.1 ஓவரில் 183, அஷுத்தோஷ் ஷர்மா 61, ஷஷாங்க் சிங் 41, ஹர்பிரீத் ப்ரார் 21, உதிரிகள் 21, கோயட்சி 3/32, பும்ரா 3/21) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியில் இன்று தொடக்க வீரர் இஷான் கிஷன் (8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (25 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) 11.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் (53 பந்துகளில் 78 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (34 ரன்), ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (7 பந்துகளில் 14 ரன்), ரொமாரியோ ஷெப்பர்ட் (1 ரன்), என குறைந்த அளவில் ரன்களே எடுத்தனர்.

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களான ஹர்ஷல் படேல் மற்றும் சாம் கரண் இருவரும் சிறப்பாக பந்துவீசினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. 

193 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இன்றும் ஆடவில்லை. தொடக்க வீரர்களாக சாம் கரணும் பிரப்சிம்ரன் சிங்கும் இறங்கினர். பிரப்சிம்ரன் சிங் (பூஜ்யம் ரன்) முதலாவது ஓவர் மூன்றாவது பந்திம் ஆட்டமிழந்தார். சாம் கரண் (6 ரன்) இரண்டாவது ஓவர் ஆறாவது பந்தில் அவுட்டானார்.

சாம் கரணுக்கு முன்னர 1.4ஆவது ஓவரில் ரில்லீ ரோஸ்கோ (1 ரன்) ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் லியம் லிவிங்க்ஸ்டோன் (1 ரன்) 2.1 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இப்படி முக்கியமான பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஷஷாங்க் சிங் (41 ரன்) மற்றும் அஷுத்தோஷ் ஷர்மா (61 ரன்) இருவரும் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணி வெற்றிபெறக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தினர்.

15 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 147/7 என இருந்தது. 16ஆவது ஓவரை மத்வால் வீசினார். அந்த ஓவரில் அஷுத்தோஷ் ஷர்மா மூன்று சிக்சர்கள் அடித்து வெற்றி இலக்கை 18 பந்துகளில் 25 ரன் என ஆக்கினார்.

17ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் மூன்று ரன் கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதற்கடுத்த ஓவரை கோயட்சி வீசினார். அதில் அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் மும்பை கைக்கு வந்தது. அந்த ஓவரில் 2 ரன் கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருப்பினும் 12 பந்துகளில் 23 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை. 19ஆவது ஓவரை பாண்ட்யா வீசினார். அதில் அவர் 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கட்டும் எடுத்தார்., இதனால் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.

மத்வால் வீசிய அந்த ஓவரில் ரபாடா இரண்டாவது பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினார், எனவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

18.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
டெல்லி7346-0.074
மும்பை7346-0.133
குஜராத்7346-1.303
பஞ்சாப்7254-0.251
பெங்களூரு7162-1.185

இந்த பத்து வருடங்களில்… அமலாக்கத்துறை என்ன செய்தது?

enforcement directorate - 2026
  • செல்வ நாயகம்

இந்த பத்து வருடங்களில் அமலாக்கப் பிரிவு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள் இங்கே..

13 ஏப்ரல் 17 எகனாமிக் டைம்ஸ் செய்தி:

– 2014 முதல் 2024 வரை அமலாக்கப் பிரிவு 5,155 பண மோசடி (PMLA) வழக்குகள் போட்டிருக்கிறது. அதற்கு முந்தைய யுபிஏ காலத்தில் (2005 – 2014) போட்ட வழக்குகள் எண்ணிக்கை: 1,797.

– 2014இல் தான் அமலாக்கப் பிரிவு வழக்குகளில் முதல் தண்டனை பெறப்பட்டது. 2014 – 2024 வரை 63 பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். 2005 – 2014 வரை ஒருவர் கூட தண்டனை பெறவில்லை!

– 2014 முதல் 2024 வரை : 755 பேர் கைது + 1.21 லட்சம் கோடி சொத்து முடக்கம்.
2005 – 2014 வரை: 29 பேர் கைது + வெறும் ஐந்தாயிரம் கோடி சொத்து முடக்கம்.

– அமலாக்கப் பிரிவு 2014 – 2024இல் முடக்கிய சொத்துக்களில் 84 சதவீத சொத்துக்களை தீர்ப்பாயம் (Adjudicating Authority of the PMLA ) அங்கீகரித்திருக்கிறது. 2005 – 2014 காலக்கட்டத்தில் இது வெறும் 68%.

– 2014 முதல் 2024 வரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை எண்ணிக்கை : 1,281.
2005 – 2014 வரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை எண்ணிக்கை : 102.

– இது தவிர, வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் மல்லய்யா போன்றோரை நாட்டுக்கு கொண்டு வர 2014 முதல் 2024 வரை 43 extradition requests கொடுக்கப் பட்டிருக்கின்றன. இது வரை நால்வர் கொண்டுவரப் பட்டிருக்கின்றனர்
2005 -2014 வரை : பூஜ்ஜியம் extradition requests!!

2. ஜனவரி 5 எகனாமிக் டைம்ஸ் செய்தி:

அமலாக்கப் பிரிவு, சிபிஐ-யை கண்டு எதிர்க் கட்சிகள் கதறுவதேன்? வழக்கில் சிக்கியிருக்கும் பிரபலங்கள்:

– லாலு பிரசாத் குடும்பம்.
– நேஷனல் ஹெரால்டு உள்ளிட்டவற்றில் சோனியா குடும்பம்.
– நில மோசடியில் ராபர்ட் வாத்ரா, பியங்கா வாத்ரா.
– டில்லி சாராய ஊழலில்: கேஜ்ரிவால், சிசோடியா, கவிதா ராவ், சஞ்சய் சிங்…
– வெவ்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் திரிணாமூல் கட்சி நபர்கள்: அபிஷேக் பானர்ஜி, மஹுவா மொயித்ரா… (கீழே பெரிய பட்டியல்).
– காங்கிரஸின் புபேஷ் பாகல், தீரஜ் சாஹு என நீண்ட பட்டியல்.
– ஜார்க்கண்ட் சோரன்…!

3. அக்டோபர் 2023 – நியூஸ்18 செய்தி:

வழக்கில் சிக்கியிருக்கும் மமதா திதி கட்சி ‘தலைவர்களின்’ பட்டியல்

– சுதிப் பானர்ஜி
– மதன் மித்ரா
– ஃபர்ஹாத் ஹக்கீம்
– சுப்ரத்தா முகர்ஜீ.
– சுல்தான் முஹமது.
– அனுப்ரத்தா மொண்டல்.
– ஜோதிப்ரியா மல்லிக்.
– பார்த்தா சாட்டர்ஜி.
– அபிஷேக் பானர்ஜி.
– மஹுவா மொயித்ரா
– சந்தேஷ்காளி ஷேக் ஷாஜஹான்.
– இன்னும் பலர்!!

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

palladam meeting with modi and annamalaiji speech - 2026

தமிழகம், புதுச்சே ரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் முதற்கட்ட மாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை த் தேர்தல் நடை பெற உள்ளது. இந்த 102 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்ட ணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார் .

இதில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலைக்கு எழுதிய கடித்த தில், ”நீங்கள்தான் என் சொத்து. மதிப்புமிக்க பதவியை உதறிவிட்டு மக்களுக்காக சேவை யாற்ற வந்ததில் மகிழ்ச்சி. கட்டா யம் கோவை மக்கள் வெ ற்றி பெற வை ப்பார்கள் ’’ என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை த் தேர்தல் இந்தியாவில் 7 கட்ட ங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக நாளை (ஏப்ரல் 19) தமிழகம், புதுச்சே ரியில் உள்ள 40 தொகுதிகள் உட்ப ட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்ட து.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்ட ணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார் .

அந்த வகை யில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மோடி, ‘‘என் அருமையான காரியகர்த்தாவே . ராம நவமி தினத்தில் இந்தக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடை கிறேன். மதிப்புமிக்க பணியை (ஐ.பி. எஸ்) விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை யாற்ற உறுதி எடுத்துள்ள உங்கள் முடிவுக்கு நான் வாழ்த்துகிறேன்.

தமிழ்நா டு முழவதும் பா.ஜ.க அடிமட்ட கட்டமை ப்பை வலுப்படுத்தி, இளை ஞர்களுக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்ட வற்றின் மூலம் நீங்கள் முக்கிய பங்காக உள்ளீர்கள் . உங்களின் அர்ப்பணிப்பால் கோவை நிச்சயம் லாபம் பெறும். கோவை மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடை வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை போன்ற வர்கள் தான் எனக்கான பெரும் சொத்து. ஒரு குழுவாக, தொகுதியாக நாட்டு மக்களின் நலனுக்காக நாம் எதை யும் விட்டு கொடுக்க மாட் டோம்.

இது சாதாரண தேர்தல் அல்ல . இந்தியா முழுவதும் உள்ள குடும்ப ங்கள் , குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வை த்துக் கொ ள்வா ர்கள் . மே லும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்த ப்பட்டுள்ளது.

இன்னும் நிறை ய பணிகள் செ ய்ய வே ண்டி உள்ளது. குறிப்பாக அனை வரும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்ப து இந்த தேர்தல் மூலம் தொடரும். இந்த தேர்தல் என்ப து நம்மை பிரகாசமான எதிர்கால த்துடன் இணைக்கும் பாலமாகும். பா.ஜ.க பெறும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையான அரசை அமைப்பதை நோக் கி செ ல்லும். 

அதுமட்டுமின்றி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகை யில் இருக்கும். கடைசி நேரத்தில், நீங்களும் மற்ற நிர்வாகிகளும் தேர்தல் வே லைகளில் பிசியாக இருப்பீர்கள் , இருப்பினும் உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள் ளுங்கள் .

தற்போ து கோடைக்கால ம் தொடங்கிவிட்ட து. இதனால் வெ ப்பம் அதிகரிக்கும். ஆனால் நாட்டிற்கு இது முக்கியமான தேர்தல், எனவே வெ யில் தொடங்குவதற்கு முன்பே அனை வரும் வாக்களிக்க வே ண்டும் என்பதை உறுதி செய்யுங்கள் .

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

modi in kanyakumari - 2026

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

நாளை (ஏப்., 19) தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும் பல கட்ட தேர்தல் முடிந்து வரும் ஜூன் 4 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணி அனைத்து வேட்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்கள் பல தரப்பினரும் பட்ட கஷ்டங்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரும் பலன் பெற்றுள்ளனர். ஆனாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் எங்கள் பணியில் இந்த தேர்தல் திடமாக இருக்கும்.

2047 க்குள் வளர்ந்த தேசமாக

பா.ஜ.க., மற்றும் நமது கூட்டணி பெறும் ஒவ்வாரு ஒட்டும் நிலையான அரசை அமைப்பதற்கும், 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக அமைக்க நாம் செல்லும் பயணத்திற்கு நல்ல ஊக்கத்தை தரும். இந்த முக்கியமான தருணத்தில் நான் கேட்டு கொள்வது என்னவென்றால், தேர்தல் முடியும் கடைசி தருணம் வரை நாம் ஊக்கமாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் மற்றும் உங்களை சுற்றியுள்ள நபர்களின் உடல் நலத்தையும் பேணி காத்திட வேண்டும். கோடை காலம் என்பதால் பெரும் சிரமங்கள் இருக்கும்.
இந்த தேர்தல் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, வெப்பம் தொடங்கும் முன், அதிகாலையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பாஜகவின் வேட்பாளராக, எனது காலத்தின் ஒவ்வொரு தருணமும் எனது சக குடிமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . இது சாதாரண தேர்தல் அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராதிகா சரத்குமாருக்கு…

பெண் சக்தியின் தாக்கத்தை அனைவரின் மனதிலும் எடுத்துச் சென்றுள்ளீர்கள் என விருதுநகர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 17) விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாசரத்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராம நவமி நன்னாளில் இக்கடிதத்தை எழுதுவதில் மகிழ்கிறேன். தாங்கள் நலம் என நம்புகிறேன். உங்கள் கலையுலக பயணம் பல லட்சம் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் அரசியல் வாயிலாக மக்கள் சேவைக் கு தங்களை அர்ப்பணித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கலை, கலாச்சார மற்றும் சமூக சேவையில் உங்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு விருதுநகர் மக்களின் மகத்தான அன்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.

பெண் சக்தியின் தாக்கத்தை அனைவரின் மனதிலும் எடுத்துச் சென்றுள்ளீர்கள் . மக்களின் ஆசிர்வாதத்துடன் தாங்கள் நாடாளுமன்றத்தில் சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட போகிறீர்கள் என நம்புகிறேன். உங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் எனக்கு மிகப்பெரிய சொத்து. நம் சக் தி முழுவதையும் மக்களின் சேவை க்காகவும், நாட்டிற்காகவும், உங்கள் தொகுதிக்காகவும் முழுமையாக பயன்படுத்துவோம். இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல , இந்தியாவில் உள்ள குடும்பங்கள் , முக்கியமாக வயதில் மூத்தவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் அனுபவித்த இன்னல்களை நினைவுகூர்வார்கள் .

அதேசமயம், கடந்த 10 ஆண்டுகள் அதை மறக்கடிக்கும் வகையில் அனை த்து தரப்பிலும் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது, துன்பங்கள் அகன்றிருக்கிறது என்பதை இக்கடிதம் மூலம் தங்கள் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், செய்து முடிக்க இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. இவைகளை எல்லாம், உறுதியாக களைந்தெடுத்து, மக்கள் நிம்மதியாக இருப்பதை உறுதி செய்வதே நமது நோக்கம். இந்த தேர்தல் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் இணைக்கின்ற ஒரு வாய்ப்பு என்றே சொல்லாம். 

பாஜகவின் ஒவ்வொரு வாக்கும், ஒரு நிலையான, உறுதியான, நேர்மையான அரசமைக்கவும் 2047இல் முன்னேற்றமடைந்த நாட்டிற்கான பயணத்தின் அஸ்திவாரமாகவும் அமை யும். இந்த முக்கியமான தருணத்தில், நம் ஒவ்வொரு தொண்டர்களும் இந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சிறப்பாக பயன்படுத்துவோம்.

அதேநேரத்தில், உங்கள் உடல் நலத்திலும், உங்களின் சகாக்களின் உடல்நலத்திலும் அக்கறையோடு இருங்கள். கோடை வெயிலின் தாக்கம் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஆனால், இந்தத் தேர்தல் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான மிகவும் முக்கியமான தேர்தல். ஆகவே , வாக்காளர்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பாக காலையிலேயே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான நீங்கள் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் என் உறுதிமொழியை , என் ஒவ்வொரு மணித் துளியும் நாட்டின் நலனுக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக என்பதை அறிவுறுத்துங்கள் .

உங்கள் வெற்றிக்காக என் வாழ்த்துகள். 2047இல் நம் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்க நாம் 24/7 பணி செய்வோம் என்பது இந்த மோடியின் உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

ஏ.பி. முருகானந்தத்துக்கு…

திருப்பூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம். 

பாஜக இளை ஞர் அணி பொறுப்பில் இருந்து அயராது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு, திருப்பூரின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள் . மக்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்தை அடை வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற சக குழு உறுப்பினர்கள் எனக்கு பெரும் சொத்து. பாஜக பெறும் ஒவ்வொரு வாக்கும் நிலையான அரசை அமை ப்பதை நோக் கிச் செ ன்று, 2047க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான நமது பயணத்தில் வே கத்தை அளிக்கும். தேர்தலில் வெ ற்றி பெற எனது வாழ்த்துகள். 

பாரிவேந்தருக்கு …

மக்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் அமர்வீர்கள் ; உங்களைபோன்றவர்கள்தான் என் சொத்து. சமூகப் பணிகளால் மக்களை கவர்ந்துவிட்ட தாக பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில் பாராட்டு.

IPL 2024: அதிர்ச்சி கொடுத்த குஜராத் அணி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியேழாம் நாள்: ஐபிஎல் 2024 – 17.04.2024

குஜராத் டைடன்ஸ்
vs டெல்லி கேபிடல்ஸ்

          குஜராத் அணியை (17.3 ஓவர்களில் 89 ரன், ரஷீத் கான் 31, முகேஷ் குமார் 3/14, இஷாந்த் ஷர்மா 2/8, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2/11) டெல்லி அணி (8.5 ஓவரில் 92/4, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 20, ஷாய் ஹோப் 19, ரிஷப் பந்த் 16*, அபிஷேக் போரல் 15) 67 பந்துகள் மீதியிருக்கையில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியில் இன்று தொடக்க வீரர் ஷுப்மன் கில் (8 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சாஹா (2 ரன்) 3.5ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பிறகு சாய் சுதர்ஷன் (6 பந்துகளில் 12 ரன்), டேவிட் மில்லர் (2 ரன்), அபினவ் மனோகர் (8 ரன்), ராகுல் திவாத்தியா 15 பந்துகளில் 10 ரன்), ஷா ருக் கான் (ரன் எதுவும் எடுக்கவில்லை, கோல்டன் டக்) என குறைந்த அளவில் ரன்களே எடுத்தனர்.

டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா இருவரும் சிறப்பாக பந்துவீசினர். 17.3 ஓவர் முடிவில் குஜராத் அணி 89 ரன்னிற்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

          90 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) நன்றாக விளையாடினார் ஆனால் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ப்ருத்வி ஷா 6 பந்துகளில் 7 ரன் அடித்து 2.4ஆவது ஓவரில் அவுட்டானார்.

 அவருக்குப் பின்னர் அபிஷேக போரல் (7 பந்துகளில் 15 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (10 பந்துகளில் 19 ரன்), ரிஷப் பந்த் (11 பந்துகளில் 16 ரன்), சுமித் குமார் (9 பந்துகளில் 9 ரன்) அடித்து டெல்லி அணியை 8.5 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 92 ரன் அடித்து அணியை வெற்றிபெறச்செய்தனர்.

          டெல்லி கேபிடல்ஸ் அணியின் அணித்தலைவர் ரிஷப் பந்த் இரண்டு கேட்ச் பிடித்தார்; இரண்டு ஸ்டம்பிங் செய்தார்; அற்புதமாக தன்னுடைய அணித்தலைவர் பணியைச் செய்தார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

17.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
டெல்லி7356-0.074
குஜராத்7346-1.303
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
பெங்களூரு6152-1.124

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

pmk ramadoss - 2026

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதற்கான 18&ஆம் மக்களவைத் தேர்தல்களின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு & புதுவையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பதை நீங்கள் சிந்தித்து செயல்படுத்துவதற்கான 48 மணி நேர கெடு இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தக் காலத்தில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

2024&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று இக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன.

வழக்கமாக மக்களவைத் தேர்தல்கள் மத்திய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தல் தான் என்றாலும் கூட, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நடப்பு மக்களவைத் தேர்தல் சற்றே வேறுபட்டது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்பதை தீர்மானிப்பதைக் கடந்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத ஆட்சிக்கு கடிவாளம் போடுவதற்கும் இந்தத் தேர்தல் உதவும் என்பது தான் நடப்பு மக்களவைத் தேர்தலின் சிறப்பு என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள். இதுவரை முடிவெடுக்காத வாக்காளர்கள் எதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை சமூகநீதியை வளர்த்தெடுப்பதையும், தமிழக உரிமைகளை வென்றெடுப்பதையும் மிக முக்கியமானதாக கருதுகிறது. சமூகநீதியை வளர்த்தெடுப்பதற்கு அடிப்படை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 70 ஆண்டு கனவு என்றாலும் கூட, தொடுவானத்தைப் போல நமது கைகளில் இருந்து நழுவிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதெல்லாம் அதிக பிரதிநிதித்துவம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கிட்டத்தட்ட சாத்தியமாக்க முடிந்திருக்கிறது. ஆனாலும், பா.ம.க. இல்லாத சூழல்கள் அதை சீரழித்திருக்கின்றன. இந்த முறை பா.ம.க. அதிக பிரதிநிதித்துவம் பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக சாத்தியமாகும். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெருங்கனவும் நனவு ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை கட்டமைக்கப்பட்டதில் தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதனால், அதற்கேற்ற அளவில் அவற்றில் மாநில ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், வேளாண் கட்டமைப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசிடமிருந்து தான் நாம் பெற்றாக வேண்டியுள்ளது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் 2014&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019&ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூகநீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

சமூகநீதிக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுப்பதையே முதல் கடமையாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, அதிகபட்சமாக அது போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.

மற்றொருபுறம் ஆபத்தான திசையிலும், அழிவுப் பாதையிலும் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசை கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக கூட்டணியை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு அளித்த பரிசு ஆகும். திமுக அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

2021 தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக செய்து முடிப்போம் என்று 510 வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் 50 வாக்குறுதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இளைஞர்கள், மகளிர், அரசு ஊழியர்கள் ஆகியோரின் நலன் சார்ந்தும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவை சார்ந்தும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த பல்வேறு தரப்பினருக்கும் ஏமாற்றம் மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

  1. ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  2. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  4. தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கப்படும்.
  5. மின்பயன்பாட்டு கணக்கீடு மாதம் ஒரு முறை நடத்தப்பட்டு, கட்டணம் குறைக்கப்படும்.
  6. பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்.
  7. நெல் குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொள்முதல் விலையாக வழங்கப்படும்.
  8. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
  9. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
  10. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
  11. ரூ.2000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். ரூ.3000 கோடியில் கொள்ளிடத்தின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும்.
  12. பல்வேறு சமூகங்களின் உள் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மீனவர்களை பழங்குடியினராக அறிவிக்க சட்டம் இயற்றப்படும்.
  13. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்கள் வேலைத் திட்டமாக மாற்றியமைக்கப்படும்.
  14. மத்திய அரசு பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படும்.
  15. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும்.

திமுகவால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மேற்கண்டவை மிகவும் முக்கியமான வாக்குறுதிகளாகும். ஆனால், இந்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதிலிருந்தே மக்களை திமுக அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத திமுகவுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை திமுகவுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ்நாட்டில் மக்களை வாட்டும் திமுக அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சூரிய குலத் தோன்றல் ராமனுக்கு சூரிய அபிஷேகம்!

surya thilak in ramalla - 2026
#image_title

இன்று நண்பகலில் அயோத்தி ராம பிரான் ஆலயத்தில் சூரிய கதிர்கள் ஸ்வாமியின் திரு நெற்றியில் படுகிற மாதிரியான அமைப்பு பற்றிய செய்திகள் வீடியோ காணக் கிடைக்கிறது ..

சூரிய திலகம் என்பது கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு புதுமையான விஞான ஏற்பாடு ஆகும், இன்றும், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று ராம் லல்லா சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்கள் ஒளிரும் வகையில் இது அமைக்கப்பட்டு இருக்கிறது

பகவான் ராமர் பிறந்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா (நமது சித்திரை ) மாதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த நிகழ்வுகள் நடக்கும்.

‘சூர்ய திலகம்’ பின்னால் உள்ள அறிவியல்:- இது நமது தமிழக கோவில்கள் மாதிரி நேரிடையான சூரிய ஒளி அமைப்பு இல்லை கண்ணாடி மற்றும் லென்ஸ் மற்றும் கியர் பாக்ஸ் அமைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு விஷயம்

இதை உருவாக்கிய டாக்டர் எஸ் கே பானிக்ரஹி, சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ ரூர்க்கியின் விஞ்ஞானி-

“சூர்ய திலக் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு ஸ்ரீராம நவமி நாளிலும் ஸ்ரீராமர் சிலையின் நெற்றியில் ‘திலகம்’ – சூரிய ஒளி தோன்ற வைப்பதாகும்.

இத்திட்டத்தின் கீழ், ஸ்ரீராம நவமி அன்று நண்பகலில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி கொண்டு வரப்படும். ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தில்,

ஒவ்வொரு ஆண்டும் சூரியனின் நிலை மாறுகிறது என்றும், விரிவான கணக்கீடுகளின்படி, ராம நவமி தேதி ஒவ்வொரு 19 வருடங்களுக்கும் மீண்டும் அதே நாளில் நிகழும்…

சிலையின் நெற்றியில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்ட திலகத்தின் திட்டமிடப்பட்ட அளவு 58 மிமீ ஆகும். திலகம் ராம் லல்லாவின் நெற்றியில் சுமார் மூன்று முதல் மூன்றரை நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் முழு வெளிச்சத்துடன் தெரியும்.

ராமர் கோயிலுக்குள் நுழையும் சூரியக் கதிர்கள் முதலில் கோயிலின் மேல் தளத்தில் நிறுவப்பட்டுள்ள கண்ணாடியில் விழும் என்று CSIR-CBRI விஞ்ஞானி விளக்கினார்.

பின்னர் மூன்று லென்ஸ்கள் மூலம் கோவிலின் இரண்டாவது மாடியில் உள்ள மற்றொரு கண்ணாடிக்கு கதிர்கள் செலுத்தப்படும்.

ராம நவமியின் போது சூரிய அபிஷேகத்திற்காக ராம் லல்லா சிலையின் நெற்றியில் தோன்றும் சூரிய ஒளி மற்றொரு கண்ணாடியைப் பயன்படுத்தி இரண்டாவது தளத்தின் வழியாக ராம் மந்திரின் கருவறைக்கு செலுத்தப்படும்.

சூரிய திலக் கருவி தயாரிக்க பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களால் ஆனவை, அவற்றின் நீடித்த தன்மை மற்றும் கால மாற்றத்தால் ஏற்படும் அரிப்பை எதிர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் சூரியன் துல்லியமாக நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்திர நாட்காட்டியுடன் சீரமைக்கும் வகையில் கியர்பாக்ஸ் கொண்டு இதை நுட்பமாக வடிவமைததுள்ளார்கள் .

தமிழகத்தில் நமது முன்னோர்கள் இந்த கண்ணாடி கியர் பாக்ஸ் போன்ற விஞஞானகள் இல்லாமல் தானே நேரிடையாக சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும் படி கோவிலை அமைத்து இருந்தார்கள் .. அது வேற லெவல் விஞஞானம் ..

அவற்றில் சில

ஏகாம்பரேஸ்வரர் கோவில்:-

பங்குனி மாதமான மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு 19, 20, 21 ஆகிய தேதிகளில் கோயிலின் உள்சுவரில் உள்ள 1,008 சிவலிங்கங்கள் மீது சூரியக் கதிர்கள் விழுகின்றன. இக்கோயிலின் பங்குனி உத்திரம் திருவிழாவில் மிக முக்கியமான திருவிழாவாகும்.

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்:-

சூரியனின் கதிர்களின் தீவிரத்தின் அடிப்படையில் லிங்கம் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறத்தை மாற்றுகிறது.

தேனுபுரீஸ்வரர் கோவில்:-

கபில நாதர் லிங்கம் ஏப்ரல் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்களால் நேரடியாகப் படுகிறது.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்:-

சூரியனின் கதிர்கள் காலை 6:20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைகின்றன, சூரியன் உயரும் போது படிப்படியாக தெய்வத்தை நோக்கி நகர்கிறது.

இது கூகிள் இல் தேடியது – இன்னும் பல பல கோவில்கள் உள்ளன !!!

ராம பிரானுக்கு 21 ஆம் நூற்றாண்டில் நமக்கு தெரிந்த விஞஞானத்தை கொண்டு கட்டி இருக்கிறோம் – மேலும் வட நாட்டில் பெரிதாக இந்த கோவில் கட்டும் விஷயங்கள் இருந்த மாதிரி தெரியவில்லை !!

  • விஜயராகவன் கிருஷ்ணன்