Home Blog Page 283

WC 2023: பாக். அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
23ஆம் நாள் – தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
சென்னை – 27.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          பாகிஸ்தான் அணியை (46.4 ஓவரில் 270, பாபர் ஆசம் 50, ஷகீல் 52, ஷதாப் கான் 43, ரிஸ்வான் 31, ஷம்சி 4/60, ஜேன்சன் 43/3, கோட்சி 2/42) தென் ஆப்பிரிக்க அணி (47.2 ஓவரில் 271/9,பவுமா 28, டிகாக் 24, டுஸ்ஸன் 21, மர்க்ரம் 91, டேவிட் மில்லர் 29, உதிரிகள் 21, ஷஹீன் ஷா அஃப்ரிதி 3/45, ரவுஃப் 2/62, வாசிம் 2/50, உஸ்மா மிர் 2/45) 1 விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபீக் (9 ரன்), இமாம்-உல்-ஹக் (12 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த பாபர் ஆசம் (50 ரன்), ரிஸ்வான் (31 ரன்) இருவரும் ஓரளவிற்கு நிலைத்து ஆடினர். ஆனால் தங்கள் முயற்சிகளைப் பெரிய ஸ்கோராக மாற்ற அவர்களால் முடியவில்லை.

அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த இஃப்திகார் அகமது (21 ரன்), ஷகீல் (52 ரன்), ஷதாப் கான் (43 ரன்), நவாஸ் (24 ரன்) ஆகியோரும் நன்றாக ஆடினர், ஆயினும் பெரிய ஸ்கோர் எடுக்க வில்லை. அதனால் 50 ஓவர்கள் கூட ஆட முடியாமல் 46.4 ஓவரில் 270 ரன் எடுத்து பாகிஸ்தான் அணி இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது.

          தென் ஆப்பிரிக்க அணி விளையாட வந்தபோது அவர்களின் நிலையும் ஏறத்தாழ பாகிஸ்தான் அணியைப் போலவே இருந்தது. இரண்டாவதாக விளையாடும்போது எப்போதுமே சற்று தடுமாறக்கூடிய தென் ஆப்பிரிக்க அணி 40.2 ஆவது ஓவரில் 91 ரன்னுக்கு மர்க்ரம் ஆட்டமிழக்கும்போது 250 ரன்னில் இருந்தது.

மீதமுள்ள 21 ரன்னை எடுக்க தென் ஆப்பிரிக்க அணி மிகவும் தடுமாறியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் 19 ரன் உதிரியாகக் கொடுத்தார்கள் என்றால் பாகிஸ்தான் அணி வீரர்கள் 21 ரன் உதிரியாகக் கொடுத்தனர்.

இறுதியில் வெற்றிக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது; பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கட் தேவைப்பட்டது. நடுவர்களை அதிகமுறை அவுட் கேட்டு பாகிஸ்தான் அணி டென்ஷனாக்கியது. தென் ஆப்பிரிக்க அணி உறுதியை இழக்காமல் ஆடி இறுதியில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக ஷம்சி (4 விக்கட்) அறிவிக்கப்பட்டார். இன்றைய வெற்றியோடு தென் ஆப்பிரிக்க அணி 10 புள்ளிகள் மற்றும் அதிக ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

cricket - 2026
#image_title

அப்பாடா; ஒருவழியாக…. பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை ரயில்கள் இனி… மின்சார இஞ்சினில் ஓடுமாம்!

podhigai in electric loco - 2026
#image_title

நவ 1முதல் பொதிகை சிலம்பு மயிலாடுதுறை விரைவு ரயில்கள் முழுமையாக செங்கோட்டை முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

எதிர் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வண்டிகள், இடையில் என்ஜின் மாற்றம் ஏதுமின்றி,மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்த வாரம் நெல்லை – மேட்டுப்பாளையம் மற்றும் செங்கோட்டை -மதுரை வண்டிகளும் மின்சார என்ஜின் மூலமாக ஓட்டப்பட உள்ளன. கேரளப் பகுதிகளில் மின்சார இணைப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால், கொல்லம், சென்னை கொல்லம் மதுரை குருவாயூர் மதுரை வண்டிகள் வழக்கம் போல மதுரை வரை டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படும். எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வழக்கம் போல் இயங்கும்

வரும் அக்.31ம் தேதியில் இருந்து சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரும் வண்டி எண் 12661 – பொதிகை எக்ஸ்பிரஸ் மின்சார எஞ்சினில் இயக்கப்படுகிறது. நவ.1ம் தேதியில் இருந்து செங்கோட்டை – சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12662 மின்சார எஞ்சினில் முழுவதுமாக இயக்கப்படுகிறது. இதுவரை மதுரையில் டிசல் எஞ்சின் மாற்றப்பட்டு வருகிறது. அந்த நேரம் இனி மிச்சமாகும். இது குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதுபோல், சென்னை – செங்கோட்டை வரும் வண்டி எண் 20681 சிலம்பு எக்ஸ்பிரஸ் நவ.1ம் தேதியில் இருந்தும், வண்டி எண் 20682 சிலம்பு எக்ஸ்பிரஸ் வரும் நவ.2ம் தேதியில் இருந்தும் மின்சார இஞ்சினில் இயக்கப்பட வுள்ளது. இதுநாள் வரை இந்த ரயிலுக்கு டீசல் எஞ்சின் விருதுநகரில் மாற்றப்பட்டு வருகிறது. இனி இது செங்கோட்டை – சென்னை முழுதும் மின்சார எஞ்சினில் இயக்கப்படும். இதனை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், வண்டி எண் 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை மற்றும் வண்டி எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் நவ.1 மற்றும் நவ.2 ஆகிய தேதிகளில் இருந்து மின்சார இஞ்சினில் இயக்கப்படும்.

அடுத்த கட்டமாக, வண்டி எண் 06504 / 06503 மதுரை – செங்கோட்டை , செங்கோட்டை – மதுரை ரயில்கள், வரும் நவ.8ம் தேதி முதல், மின்சார இஞ்சினில் இயக்கப்படும்.

வண்டி எண் 06029/06030 திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் மற்றும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் ஆகியவை வரும் நவ.10, நவ.11 ஆகிய தேதிகளில் மின்சார இஞ்சினில் இயக்கப்படும்.

இதுபோல், வண்டி எண் 16101/16102 – சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இதுவரை விருதுநகர் ரயில் நிலையத்தில் மின்சார இஞ்சின் மாற்றப்பட்டு வருகிறது. இது இனி மதுரை ரயில் நிலையத்தில் மின்சார / டீசல் எஞ்சின்கள் மாற்றப்பட்டு இயக்கப்படும். இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க… தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரத்துக்குள் வந்தடைகிறது. அதைவிட அதிகம் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் சுமார் பத்து மணி நேரத்தில் தென்காசியை வந்தடைகிறது என்பது தென்காசி ரயில் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அது போல் இதுவரை வந்ததில் இருந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்துவிடலாம் என்பது, ராஜபாளையம் சிவகாசி வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அம்சம் தான்!

ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட சாதனை நிகழ்ச்சி!

கரூர் அருகே, வன்னியம்மன் கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற, ஈசன் வள்ளி, கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று, சாதனை படைத்தார்கள்.

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியில், குளக்கரை வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஊர் மைதானத்தில், ஈசன் வள்ளி, கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி, நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில், முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர், பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2201 ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடை அணிந்து, ஒயிலாட்டம் ஆடினர். 2201 பேர் கலந்து கொண்ட இந்த ஈசன் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள், கண்டு ரசித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புதிய உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ், டிஸ்கவர் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.

நம்ம நாட்டு சுற்றுலா: உதயகிரி குகைகள்!

bhuvaneswar udayagirikandagiri - 2026
#image_title

3. உதயகிரி குகைகள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ராணி கும்பா குகைக்குப் பின்னர் இரண்டாவதாக உள்ள குகை பஜாகரா கும்பா ஆகும்.

2. பஜாகரா கும்பா

          பஜாகரா கும்பா மிகவும் எளிமையானது மற்றும் சிறியது. இது ஒரு கல் படுக்கை மற்றும் தலையணையைக் கொண்டுள்ளது மற்றும் இது பண்டைய காலங்களில் ஜெயின் துறவிகளின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. இந்த குகையில் வெற்று செவ்வக வடிவ தூண்களைத் தவிர வேறு எந்த சிற்பமும் இல்லை.

3. சோட்டா ஹாதி கும்பா

          சோட்டா ஹாத்தி கும்பா அளவில் சிறியது. இதன் முகப்பில் ஆறு சிறிய யானை உருவங்கள் மற்றும் பாதுகாவலர் சிலை உள்ளது.

4. அழகாபுரி கும்பா

          அழகாபுரி கும்பாவில் சிங்கம் தன் இரையை வாயில் வைத்திருக்கும் சிற்பம் உள்ளது. குகையில் சிறகுகள் கொண்ட மனித உருவங்கள் (தெய்வீக மனிதர்கள்) கொண்ட தூண்கள் உள்ளன. இதுவும் இரட்டை மாடி குகையாகும்.

5. ஜெய விஜய கும்பா

          ஜெய விஜய குகையில் ஒரு மர வழிபாடு சிற்பம் உள்ளது. இது இரட்டை மாடி குகையாகும். கனமான காதணிகள், பட்டைகள், அழகாக அலங்கரிக்கப்பட்ட முடி அணிந்த ஒரு பெண் சிற்பம் இங்கே உள்ளது. சிற்பத்தின்ஒரு புறத்தில் கிளியும், மற்றொன்று அவளது இடுப்பிலும் அமர்ந்திருக்கும்.

6. பனச கும்பா

          பனாச கும்பா என்பது குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லாத மிகச் சிறிய மற்றும் எளிமையான குகையாகும்.

7. தாகுராணி கும்பா

          தாகுராணி கும்பா ஒரு இரட்டை அடுக்கு குகையாகும்.  ஆனால் பாணியில் மிகவும் எளிமையானது. இது ஒரு சில சிறிய சிற்பங்களைக் கொண்டுள்ளது.

8. பாடலாபுரி கும்பா

          பாடலாபுரி கம்பம், தூண் வராந்தாவுடன் கூடிய சற்று பெரிய குகையாகும்.

9. மங்காபுரி மற்றும் ஸ்வர்கபுரி கும்பா

          மங்காபுரி மற்றும் ஸ்வர்கபுரி கும்பா இரண்டு மாடிகளைக் கொண்டது. மங்காபுரி குகை இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் உருவங்கள் மகதாவிலிருந்து மன்னர் காரவேலா அவர்களால் கொண்டு வரப்பட்ட கலிங்க ஜினாவை வணங்குவதை சித்தரிக்கிறது. இது ஒரு சேதமடைந்த ஜெயின் மத சின்னத்தைக் கொண்டுள்ளது, இது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது.

          இக்குகைகளில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு காரவேலாவின் தலைமை ராணியைப் பற்றிப் பேசுகிறது, மற்ற இரண்டு கல்வெட்டுகள் காரவேலாவின் வாரிசான குடேபசிரி மற்றும் குடேபசிரியின் சகோதரன் மகன் பாதுகாவைக் குறிப்பிடுகின்றன.

10. கணேஷ் கும்பா

          உதயகிரியில் உள்ள முக்கியமான குகைகளில் விநாயக கும்பமும் ஒன்று. குகையின் வலதுபுறப் பிரிவின் பின்புறத்தில் செதுக்கப்பட்ட விநாயகரின் உருவத்திற்காக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது பிற்காலத்தில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். குகையின் நுழைவாயிலில் யானைகள் மாலைகளைச் சுமந்து செல்லும் இரண்டு பெரிய சிலைகள் உள்ளன, மேலும் நுழைவாயிலில் காவலராகப் பயன்படுத்தப்படும் விலங்குகளின் முதல் சிற்ப  எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது. மேலும், நுழைவாயிலில் துவாரபாலகர்களின் செதுக்கப்பட்ட உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குகையில் உள்ள சிற்பங்கள், உஜ்ஜயினியின் இளவரசி வாசசவதத்தை, கௌசாம்பியின் அரசன் உதயணனுடன் வசந்தகாவுடன் ஓடிப்போன கதையை விவரிக்கின்றன.

11. ஜம்பேஸ்வர கும்பா

          ஜம்பேஸ்வர கும்பா என்பது ஒரு நெடுவரிசை மற்றும் இரண்டு பைலஸ்டர்கள் கொண்ட மிகவும் எளிமையான மற்றும் சிறிய குகையாகும். இது மகாமதேவரின் மனைவி நாயகியின் குகை என்று கல்வெட்டு கூறுகிறது.

12. வியாக்ர கும்பா

          உதயகிரியில் உள்ள பிரபலமான குகைகளில் வியாக்ர கும்பாவும் ஒன்று. இடிந்து கிடக்கும் குகை, புலியின் வாயைப் போன்று செதுக்கப்பட்ட நுழைவாயிலைக் கொண்டுள்ளது, ஒற்றை செல் புலியின் தொண்டையை உருவாக்குகிறது. உதயகிரியில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று. வியாக்ரா என்ற சொல்லுக்கு “புலி” என்று பொருள். இங்கு காணப்படும் கல்வெட்டு இந்த குகை நகர நீதிபதி சபூதிக்கு சொந்தமானது என்று கூறுகிறது.

13. சர்ப்ப கும்பா

          சர்பா கும்பா என்பது வழக்கத்திற்கு மாறாக இரண்டு கல்வெட்டுகளைக் கொண்ட சிறிய குகையாகும். சர்பா என்ற சொல்லுக்கு “பாம்பு” என்று பொருள்.

14. ஹாதி கும்பா

          ஹாதி கும்பா என்பது மன்னர் காரவேலரின் கல்வெட்டுடன் கூடிய ஒரு பெரிய இயற்கை குகை ஆகும், இது அவரைப் பற்றிய தகவல்களின் முக்கிய ஆதாரமாகும். யானையின் நேர்த்தியான சிற்பம் இருப்பதால் இந்த குகை ஹாதி கும்பா என்று அழைக்கப்படுகிறது. ஹாதி என்ற சொல்லுக்கு “யானை” என்று பொருள்.

15. தனகர கும்பா

          தனகாரா கும்பா என்பது ஒரு சிறிய குகையாகும், இதன் நுழைவாயிலில் செதுக்கப்பட்ட இரண்டு பரந்த தூண்கள் மற்றும் துவார பாலக சிற்பங்கள் உள்ளன.

16. ஹரிதாச கும்பா

          ஹரிதாச கும்பா என்பது மூன்று நுழைவாயில்கள் மற்றும் முன் பக்கத்தில் ஒரு வராண்டா கொண்ட ஒரு சிறிய குகையாகும். இங்கு கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.

17. ஜகந்நாத கும்பா

          ஜகன்னாத கும்பா என்பது மூன்று நுழைவாயில்களைக் கொண்ட தோராயமாக வெட்டப்பட்ட குகையாகும்.

18. ரசுய் கும்பா

          ரசுய் கும்பா என்பது வழக்கத்திற்கு மாறாக மிகச் சிறிய குகை.

5வது முறையாக கோயில் உண்டியலைக் கொள்ளை அடித்தவர்கள்! சிசிடிவி., காட்சிகளால் அதிர்ச்சி!

temple hundi roberry - 2026
#image_title

சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமம் துர்க்கை அம்மன் கோவிலில், ஐந்தாவது முறையாக கோவில் உண்டியலை உடைத்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள்;
போலீசார் விசாரணை !

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், நேற்றைய முன் தினம் நடு இரவில் மர்ம நபர்கள் இருவர் கோயிலுக்குள் புகுந்தனர். இதில், ஒருவர் கருப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்திருந்தார். மற்றொருவர் கோவிலில் இருந்த மஞ்சள் சேலையை கிழித்து முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கட்டியிருந்தார். இருவரும் சேர்ந்து உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இக்கோவிலில், ஐந்தாவது முறையாக உண்டியல் திருட்டு மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இக்கோவிலில் திருவிழா நடைபெறவில்லை இரு தரப்பினரையும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சமரசம் ஏற்படவில்லை இதனால், துர்க்கை அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்திருப்பதை யார் புகார் கொடுப்பது என்று கேள்விக்குறியாக இருப்பதால், நேற்று இரவு வரை சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர் .
இரு பிரிவினரும் கருத்து வேறுபாட்டால் சாமி கும்பிடாததால் இதை சாதகமாக பயன்படுத்தி உண்டியலில் அதிகமாக பணம் இருக்கும் என்று உண்டியலை திருடி சென்று விட்டார்கள் என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர் .
மேலும், இக்கோவிலில் முகூர்த்த காலங்களில் திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆகையால், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கொள்ளை சம்பவம் நடந்தும் இதுவரை கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்காததால் , மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர் .

கொள்ளை சம்பவம் நடக்கும் போது பக்தர்கள் யாரேனும் கோவிலுக்குள் வந்திருந்தால் கொலை நடந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர் . ஆகையால், இக்கோவில் அருகில் ரோந்து பணியை அதிகரிக்கவும் புற காவல் நிலையம் ஒன்று அமைக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: பிரதமரின் முழுமையான உரை!

pm narendra modi - 2026
#image_title

கோவாவில் 26.10.2023 அன்று நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உரை

–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

வாழ்க பாரத அன்னை,
வாழ்க பாரத அன்னை,
வாழ்க பாரத அன்னை,

கோவா கவர்னர் திரு பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, பிரபல இளம், ஆற்றல் மிக்க முதல்வர் பிரமோத் சாவந்த் அவர்களே, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய அமைச்சரவையில் உள்ள எனது மற்ற சகாக்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மற்ற மக்கள் பிரதிநிதிகளே, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சகோதரி பி.டி.உஷா அவர்களே, நாட்டின் மூலை முடுக்கிலிருந்து வந்துள்ள இளம் விளையாட்டு வீரர்களே, துணை ஊழியர்கள், பிற அதிகாரிகள் மற்றும் இந்திய விளையாட்டுகளின் மகாகும்பத்தின் மாபெரும் பயணம் இன்று கோவாவை வந்தடைந்துள்ளது. எங்கும் வண்ணம்… அலைகள்… உற்சாகம்… புறப்பாடு. கோவாவின் காற்றில் ஏதோ ஒன்று இருக்கிறது. 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், பல வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

பல விளையாட்டு நட்சத்திரங்களை நாட்டுக்கு வழங்கிய பூமி இந்த கோவா பூமி. இங்கே ஒவ்வொரு தெருவிலும் கால்பந்து மோகம் தெரியும். நாட்டின் பழமையான சில கால்பந்து கிளப்புகள் கோவாவில் உள்ளன. இத்தகைய விளையாட்டுகளை விரும்பும் கோவாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடப்பது புதிய ஆற்றலை அளிக்கிறது.

என் குடும்ப உறுப்பினர்களே,

இந்தியாவின் விளையாட்டு உலகம் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றியின் புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 70 ஆண்டுகளில் நடக்காதது, இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடந்ததைக் கண்டோம், தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன. இவற்றிலும் இந்திய வீரர்கள் 70க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று இதுவரை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளனர். முன்னதாக, உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதிலும் இந்தியா புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றிகள் இங்கு வரும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பெரிய உத்வேகம். இந்த தேசிய விளையாட்டுகள் ஒரு வகையில் உங்களுக்கு, அனைத்து இளைஞர்களுக்கும், அனைத்து வீரர்களுக்கும் வலுவான ஏவுதளமாகும். உங்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகளின் எண்ணிக்கையை மனதில் வைத்து, உங்கள் முழு பலத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும். செய்வீர்களா? உறுதியாகச் செய்வீர்களா? பழைய சாதனைகளை முறியடிப்பீர்களா? எனது வாழ்த்துகள் உங்களுடன் உள்ளன.

என் இளம் நண்பர்களே,

இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் தெருவிலும் திறமைக்கு பஞ்சமில்லை. வறுமையான காலத்திலும் இந்தியா சாம்பியன்களை உருவாக்கியது என்பதற்கு நமது வரலாறு சாட்சி. எங்கள் சகோதரி பி.டி.உஷா என்னுடன் மேடையில் அமர்ந்திருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு நாட்டு மக்களும் எப்பொழுதும் ஏதோ ஒரு குறையை உணர்ந்தனர். இவ்வளவு பெரிய நாடான நாம் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் மிகவும் பின்தங்கியிருந்தோம். எனவே, 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, நாட்டின் இந்தத் துன்பத்தை ஒழிக்கும் பணியை தேசிய உறுதியுடன் முன்னெடுத்தோம். நாங்கள் விளையாட்டு உள்கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம், தேர்வு செயல்முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம், அதை இன்னும் வெளிப்படையானதாக மாற்றினோம். வீரர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்தோம். வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்தோம். சமூகத்தின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்தோம், பழைய சிந்தனை, பழைய அணுகுமுறை காரணமாக, எங்கள் விளையாட்டு உள்கட்டமைப்பில் இருந்த தடைகளை ஒவ்வொன்றாக அகற்றும் பணியைத் தொடங்கினோம். திறமைகளைக் கண்டறிவதில் இருந்து ஒலிம்பிக் மேடையை அடைவதற்கு அவர்களைக் கைப்பிடிப்பது வரை அரசாங்கம் ஒரு வரைபடத்தை உருவாக்கியது. அதன் முடிவுகளை இன்று நாடு முழுவதும் பார்க்கிறோம்.

நண்பர்களே,

முந்தைய அரசாங்கங்களில், விளையாட்டு வரவு செலவுத் திட்டம் குறித்து தயக்க உணர்வு இருந்தது. மக்கள் நினைக்கிறார்கள் – ஒரு விளையாட்டு ஒரு விளையாட்டுதானே … அது ஒரு விளையாட்டு தவிர வேறு என்ன? இதற்கு ஏன் செலவு செய்ய வேண்டும்! நமது அரசு இந்தச் சிந்தனையை மாற்றியது. நாங்கள் விளையாட்டு பட்ஜெட்டை அதிகரித்தோம். 9 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த ஆண்டு மத்திய விளையாட்டு பட்ஜெட் 3 மடங்கு அதிகம். Khelo India முதல் TOPS திட்டம் வரை, நாட்டில் உள்ள வீரர்களை ஊக்குவிக்க அரசாங்கம் ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டங்களின் கீழ், உங்களைப் போன்ற திறமையான வீரர்கள் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அளவில் அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களின் பயிற்சி, உணவுமுறை, இதர செலவுகள் என ஏராளமான பணத்தை அரசு செலவிடுகிறது. TOPS என்றால் Target Olympic Podium Scheme அதாவது ஒலிம்பிக் போடியத்தை அடையும் திட்டம், இதன் கீழ் நாட்டின் தலைசிறந்த வீரர்களுக்கு உலகின் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் இளைஞர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர் என்று கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய திறமையான வீரர்கள் குழு தயாராகி வருகிறது. இதில், ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 லட்சத்துக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கேலோ இந்தியா பிரச்சாரத்தில் இருந்து வெளிவரும் சுமார் 125 இளம் வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர். இந்த அமைப்பு பழைய முறையில் இருந்திருந்தால், இந்த திறமைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது. இந்த திறமையான வீரர்கள் 36 பதக்கங்களை வென்றுள்ளனர். Khelo India, வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை அழகுபடுத்துகிறது, பின்னர் TOPS மூலம் ஒலிம்பிக் போடியம் ஃபினிஷிற்கான பயிற்சியையும் மனோபாவத்தையும் வழங்குகிறது. இது எங்களின் சாலை வரைபடம்.

என் இளம் நண்பர்களே,

எந்தவொரு நாட்டின் விளையாட்டுத் துறையின் முன்னேற்றமும் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துடன் நேரடியாக தொடர்புடையது. நாட்டில் எதிர்மறை, விரக்தி மற்றும் எதிர்மறையான தன்மை இருக்கும்போது, ​​அது களத்திலும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் இந்த வெற்றிகரமான விளையாட்டுக் கதை இந்தியாவின் ஒட்டுமொத்த வெற்றிக் கதையிலிருந்து வேறுபட்டதல்ல. இன்று இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இன்று இந்தியாவின் வேகம் மற்றும் அளவுடன் போட்டியிடுவது கடினம். கடந்த 30 நாட்களின் பணி மற்றும் சாதனைகளில் இருந்து இந்தியா எப்படி முன்னேறி வருகிறது என்பது பற்றிய யோசனை உங்களுக்கு கிடைக்கும்.

நண்பர்களே,

நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்வதில்லை. உங்கள் பிரகாசமான எதிர்காலம் எவ்வாறு தயாராகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். என் இளைஞனே, உன்னிப்பாகக் கேள், 30 நாட்களின் வேலையை மட்டும் சொல்கிறேன். கடந்த 30-35 நாட்களில் என்ன நடந்தது, நாடு இந்த வேகத்திலும், இந்த அளவிலும் முன்னேறினால், உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு மோடியின் உத்தரவாதம் நிச்சயம் என்று நீங்கள் உணருவீர்கள்.

கடந்த 30-35 நாட்களில் மட்டும்,

  • பெண்களின் சக்திக்கு வணக்கம் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
  • ககன்யான் தொடர்பான மிக முக்கியமான சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
  • இந்தியாவிற்கு அதன் முதல் பிராந்திய விரைவு இரயில், நமோ பாரத் கிடைத்தது.
  • பெங்களூரு மெட்ரோ சேவை விரிவாக்கப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீரின் முதல் விஸ்டாடோம் ரயில் சேவை தொடங்கியது.
  • டெல்லி-வதோதரா விரைவுச்சாலை இந்த 30 நாட்களில் திறக்கப்பட்டது.
  • ஜி-20 நாடுகளின் எம்.பி.க்கள் மற்றும் சபாநாயகர்களின் மாநாடு இந்தியாவில் நடைபெற்றது.
  • உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது, ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் திரும்புவதற்காக ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டது.
  • 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் இலங்கை இடையே படகுச் சேவை தொடங்கியது.
  • ஐரோப்பாவை பின்தள்ளி, 5G பயனர் தளத்தின் அடிப்படையில் இந்தியா உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றானது.
  • ஆப்பிளைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்-ஐ தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
  • உணவு மற்றும் பழம்-காய்கறி உற்பத்தியில் நமது நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

நண்பர்களே,

          இதுவரை பாதியத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் எண்ணவேண்டியது நிறைய இருக்கிறது.

  • மகாராஷ்டிராவில் 50 ஆண்டுகளாக தேங்கி கிடந்த நல்வாண்டே அணையில் இன்று பூமி பூஜை செய்துள்ளேன்.
  • தெலங்கானாவில் கடந்த 30 நாட்களில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான சூப்பர் அனல் மின் திட்டம் துவக்கப்பட்டது.
  • சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான நவீன எஃகு ஆலை திறக்கப்பட்டது.
  • ராஜஸ்தானில் மெஹ்சானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயுக் குழாயின் ஒரு பகுதி திறக்கப்பட்டது.
  • ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனைய கட்டிடம் மற்றும் ஐஐடி வளாகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
  • கடந்த 30 நாட்களில், மகாராஷ்டிராவில் 500க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • சில நாட்களுக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த தோர்டோ சிறந்த சுற்றுலா கிராமத்துக்கான விருதைப் பெற்றது.
  • ஜபல்பூரில் உள்ள வீராங்கனை ராணி துர்காவதி நினைவிடத்தின் பூமி பூஜை நடந்தது.
  • மஞ்சள் விவசாயிகளுக்கு மஞ்சள் வாரியம் அறிவிக்கட்டது.
  • தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தது.
  • மத்தியப் பிரதேசத்தில், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் வீடுகளைப் பெற்றுள்ளன.
  • இந்த 30 நாட்களில், பிரதமர் ஸ்வநிதி யோஜனாவின் பயனாளிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 26 கோடி கார்டுகளை உருவாக்கும் மைல்கல்லை கடந்துள்ளது.
  • ஆர்வமுள்ள மாவட்டங்களுக்குப் பிறகு, நாட்டில் ஆசையுள்ள தொகுதிகளின் வளர்ச்சிக்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
  • காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் ஒரே ஒரு காதி கடையில் ரூ.1.5 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

மேலும் நண்பர்களே,

இந்த 30 நாட்களில் விளையாட்டு உலகிலும் நிறைய நடந்துள்ளது.

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது.
  • 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வு நடைபெற்றது.
  • உத்தரகாண்ட் ஹாக்கி ஆஸ்ட்ரோ-டர்ஃப் மற்றும் வெலோட்ரோம் ஸ்டேடியம் பெற்றது.
  • வாரணாசியில் நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி தொடங்கியது.
  • குவாலியருக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் திவ்யாங் விளையாட்டு மையம் கிடைத்தது.
  • மேலும் இந்த தேசிய விளையாட்டுகளும் இங்கே கோவாவில் நடக்கின்றன.

          30 நாட்களில் மட்டுமே, என் இளையவர்களே, சிந்தித்துப் பாருங்கள், வெறும் 30 நாட்களில் முடித்த பணிகளின் பட்டியல் மிக நீண்டது. நான் உங்களுக்கு ஒரு சிறிய பகுதியைக் காட்டினேன். இன்று, நாட்டின் ஒவ்வொரு துறையிலும் முன்னோடியில்லாத வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், அனைவரும் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளனர்.

நண்பர்களே,

என் தேசத்தின் இளைஞர்கள், என் இந்தியாவின் இளைஞர்கள் இந்த அனைத்து வேலைகளிலும் மையமாக உள்ளனர். இன்று இந்திய இளைஞர்கள் முன்னோடியில்லாத நம்பிக்கையுடன் உள்ளனர். இந்திய இளைஞர்களின் இந்த நம்பிக்கையை தேசிய தீர்மானங்களுடன் இணைக்கும் மற்றொரு பெரிய வேலை சமீபத்தில் செய்யப்பட்டது. மேரா யுவ பாரத், இங்கே நீங்கள் எல்லா இடங்களிலும் பலகைகளைப் பார்த்திருப்பீர்கள், மை யுவ பாரத், அதாவது மை பாரத் என்ற பெயரில் ஒரு புதிய தளம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை, அதாவது, நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களையும், ஒருவருக்கொருவர் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கும் ஒரு நிறுத்த மையமாக இது இருக்கும். அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளை மேலும் மேலும் வழங்க முடியும். இந்தியாவின் இளைஞர் சக்தியை வளர்ந்த இந்தியாவின் சக்தியாக மாற்ற இது ஒரு ஊடகமாக மாறும். இன்னும் சில நாட்களில், அக்டோபர் 31 ஆம் தேதி, ஒற்றுமை தினத்தன்று, நான் மை பாரத் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளேன். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 அன்று, நாடு முழுவதும் ஒற்றுமைக்காக ஓட்டம் என்ற பெரிய நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். நாட்டின் ஒற்றுமைக்காக அக்டோபர் 31ஆம் தேதியன்று கோவாவிலும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற மாபெரும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த பிரச்சாரத்தில் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும்.

நண்பர்களே,

இன்று, இந்தியாவின் உறுதியும் முயற்சியும் மிகப் பெரியதாக இருக்கும்போது, ​​இந்தியாவின் அபிலாஷைகள் உயர்ந்ததாக இருப்பது இயற்கையானது. அதனால்தான் ஐஓசி அமர்வின் போது 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளை முன்வைத்துள்ளேன். 2030ல் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளையும், 2036ல் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்த இந்தியா தயாராக உள்ளது என்று ஒலிம்பிக்கின் உச்சக் குழுவிடம் உறுதியளித்தேன்.

நண்பர்களே,

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான எங்கள் விருப்பம் வெறும் உணர்ச்சி பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக, இதற்குப் பின்னால் சில உறுதியான காரணங்கள் உள்ளன. 2036-க்குள், அதாவது இன்னும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா உலகின் முன்னணி பொருளாதார சக்திகளில் ஒன்றாக இருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு இந்தியனின் வருமானமும் இன்று இருப்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அப்போது இந்தியாவில் மிகப் பெரிய நடுத்தர வர்க்கம் உருவாகும். விளையாட்டு முதல் விண்வெளி வரை இந்தியாவின் மூவர்ணக்கொடி இன்னும் பெருமையுடன் பறக்கும். ஒலிம்பிக்கை நடத்துவதற்கு இணைப்பு மற்றும் பிற நவீன உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. இன்று இந்தியா 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நவீன உள்கட்டமைப்புக்கு செலவிடத் தயாராகி வருகிறது. எனவே, ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது நமக்கு எளிதாக இருக்கும்.

நண்பர்களே,

நமது தேசிய விளையாட்டுகளும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் அடையாளமாகும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் திறனை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த ஊடகம். இந்த முறை கோவாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவா அரசும், கோவா மக்களும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. இங்கு உருவாக்கப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு பல தசாப்தங்களுக்கு கோவா இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியா இங்கிருந்து பல புதிய வீரர்களை பெறுவார்கள். இதன் மூலம் மேலும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை இங்கு ஏற்பாடு செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளில், கோவாவில் இணைப்பு தொடர்பான நவீன உள்கட்டமைப்புகளும் கட்டப்பட்டுள்ளன. தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.

நண்பர்களே,

கோவா, இந்த கோவா திருவிழாக்களுக்கு பெயர் பெற்றது. கோவா சர்வதேச திரைப்பட விழா தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சர்வதேச மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் உச்சிமாநாடுகளுக்கான முக்கிய மையமாக கோவாவை எங்கள் அரசு உருவாக்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு கோவாவில் பிரிக்ஸ் மாநாட்டை ஏற்பாடு செய்தோம். G-20 தொடர்பான பல முக்கிய கூட்டங்களும் இங்கு கோவாவில் நடைபெற்றுள்ளன. உலகில் சுற்றுலாவின் நிலையான வளர்ச்சிக்காக, சுற்றுலாவுக்கான கோவா சாலை வரைபடத்தை ஜி-20 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது கோவாவுக்கு மட்டும் பெருமை அல்ல, இந்தியாவின் சுற்றுலாவுக்கும் பெரிய விஷயம்.

நண்பர்களே,

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, எந்தச் சவாலாக இருந்தாலும் சரி, எந்தச் சூழலிலும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை நாம் இழக்கக் கூடாது. இந்த அழைப்பின் மூலம், முப்பத்தி ஏழாவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கோவா தயாராக உள்ளது. கோயோன் ஆசா தயார்! கோவா தயார்! மிக்க நன்றி.

WC 2023: தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
22ஆம் நாள் – இங்கிலாந்து vs இலங்கை
பெங்களூரு – 26.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து அணியை (33.2 ஓவரில் 156, ஜானி பெயர்ஸ்டோ 30, டேவிட் மலான் 28, பென் ஸ்டோக்ஸ் 43, லஹிரு குமாரா 3/35, ரஜிதா 2/36, மேத்யூஸ் 2/14) இலங்கை அணி (25.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 160, பதுன் நிசாங்கா 77, சமரவிக்ரமா 65) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          சென்ற உலகக் கோப்பையை வென்ற அணியா இது? இந்த வருடம் நிச்சயமாக அரையிறுதிக்கு வரும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அணியா இது? நம்ப முடியவில்லை. இன்று பெங்களூருவில் இங்கிலாந்து அணி அப்படியொரு மோசமான ஆட்டம் ஆடியது. பூவாதலையா வென்று மட்டையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (30 ரன்), டேவிட் மலான் (28 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களம் இறங்கிய ஜோ ரூட் மூன்று ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆட வந்த பென் ஸ்டோக்ஸ் 43 ரன் எடுத்தார். இவர்களைத் தவிர மற்ற இங்கிலாந்து அணி வீரர்கள் “வந்தார்கள்-போனார்கள்” கதைதான். 50 ஓவர்கள் முழுமையாகக் கூட விளையாடவில்லை.

33.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 156 ரன் மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்க முடிந்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட 10 ஓவர் வீசி முடிக்கவில்லை. காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் மத்தீஸா பதிரனாவுக்குப் பதிலாக இன்று ஆடிய ஆஞ்சலா மேத்யூஸ் 5 ஓவர் வீசி, அதில் ஒரு மெய்டன் ஓவரும் வீசி, 14 ரன் கொடுத்து 2 விக்கட்டுகள் வீழ்த்தினார்.

          பதிலுக்கு இலங்கை அணி அருமையாக ஆடியது. சதீரா மற்றும் நிசாங்கா இருவரும் ஆட்டமிழக்காமல் 137 ரன்களை ஒன்றாக சேர்த்தனர். இறுதியில் இலங்கை அணி 25.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து எளிதில் வென்றது. குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரையும் ஆரம்பத்திலேயே இழந்தபோது, துரத்தலில் சில  கவலைகள் ஏற்பட்டிருக்கும்.

மேலும் 2 விக்கெட்டுக்கு 26 என்ற நிலையில் இங்கிலாந்து ஒருவேளை வெற்றிக்கு வாய்ப்பிருக்குமோ என நினைத்திருக்கலாம். ஆனால் நிசங்காவும் சதீராவும் இந்த துரத்தலை எளிதாக வழிநடத்தியதால், அத்தகைய எண்ணங்களை விரைவாக இங்கிலாந்து அணி இழந்தது. இருப்பினும் இலங்கை அணியின் வெற்றியை பந்துவீச்சாளர்கள் அமைத்தனர்.

இந்த மைதானம் பந்து வீச்சுக்கு உகந்த மைதானம் அல்ல. ஆங்கில பானியில் சொல்வதானால் இந்த பிட்ச் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிட்ச் அல்ல. ஆனால் இலங்கையின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவற்றை பாராட்டியே ஆகவேண்டும்.

          லஹிரு குமாரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இனிவரும் நாலு ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறலாம்.

இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியும் வருகின்ற நாலு ஆட்டங்களில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தேர்வாகலாம்.

          நாளை சென்னையில் பாகிஸ்தானுக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்குமான ஆட்டம் நடைபெறவுள்ளது.

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் குருவார பிரதோஷம்!

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருவார பிரதோஷ விழா நடந்தது.சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் நடந்த குரு வார பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவிலில் வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ என்று சிவபுராணம் பாடி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமையில்,மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் எம் வி எம் குழுமத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதே போல், தென்கரை அகிலாண்டஈஸ்வரி அம்மன் சமேத மூல நாதசுவாமி கோவில், திருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோவில்,பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயம், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் குருவார பிரதோஷ விழா நடந்தது.

இதே போல், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் கோவிலிலும், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவிலிலும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மதுரை ஜுப்பிலி டவுன் ஞானசக்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை தெப்பக்குளம் அருள்மிகு முத்தீஸ்வரன் திருக்கோவிலிலும், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவிலிலும், மதுரை சிம்மக்கல் பழைய சொக்கநாதர், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், குருவார பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி, ஏராளமான பக்தர்கள் சிவன் அம்பாளை தரிசித்து சென்றனர்.

மதுரையில் இருந்து பாதுகாப்பாக பசும்பொன் சென்ற தங்க கவசம்!

pasumpon thangakavasam - 2026
#image_title

மதுரையிலிருந்து பாதுகாப்பாக தங்க கவசம் பசும்பொன் சென்றது!

மதுரை அண்ணாநகரில், அரசு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேவரின் முழு உருவ தங்கக் கவசம் பசும்பொன் கிராமத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சமாதியில் உள்ள அவருடைய முழு உருவச் சிலைக்கு, ஆண்டுதோறும் அவருடைய ஜெயந்தி அன்று தங்க முழு உருவக் கவசம் அணிவிக்கப்படும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், இந்த தங்கக் கவசம் வழங்கப்பட்டது.
இது கடந்த சில வருடங்களாக தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்படும் தேவருடைய தங்க முழு உருவ கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள அரசு வணிக வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப் படுகிறது. இதை, அதிமுக கட்சி பொருளாளர், ஆண்டுதோறும் பெற்று, அதை முத்துராமலிங்க தேவர் வாரிதாரர்களிடம் ஒப்படைப்பார்.

அவ்வாறு ஒப்படைக்கப்படும் தங்க முழு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையிலிருந்து பசும்பொன் கிராமத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்கப் படுவது வழக்கமாக உள்ளது.

தேவர் ஜெயந்தி முன்னிட்டு, இம்மாதம் 30 -ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர்கள் தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வழி படுவர். அன்றைய தினம் பசும்பொன்னில் விழாக்கோலம் காணும்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார்கள், மற்றும் பஸ்கள் வேண்களில் பலர் தேவர் சமாதிக்கு சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவர். அன்றைய தினம் அன்னதானம் நடைபெறும்.

இதற்காக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பும், போலீசார் ரோந்து பணியும் ஈடுபடுவர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தும், பலர் முளைப்பாரி ஊர்வலம், பாலாபிஷேகம் செய்து வழிபடுவர். இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

WC 2023: அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா; நொறுங்கிப் போன நெதர்லாந்து!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
21ஆம் நாள் – ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து
டெல்லி – 25.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி (399/8, வார்னர் 104, மேக்ஸ்வெல் 106, ஸ்மித் 71, லபுசேன் 62, வான் பீக் 4/74) நெதர்லாந்து அணியை (21 ஓவரில் 90, விக்ரம்சிங் 25, ஆடெம் சாம்பா 4/8, மார்ஷ் 2/19) 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் நாலாவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மென் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். 3 சிக்சர் 11 ஃபோருடன் வார்னர் 104 ரன் அடித்தார். ஒரு சிக்ஸ் 9 ஃபோருடன் ஸ்மித் 71 ரன் அடித்தார். 2 சிக்ஸ், 7 ஃபோருடன் லபுசேன் 62 ரன் அடித்தார். 8 சிக்ஸ், 9 ஃபோருடன் மேக்ஸ்வெல் 106 ரன் அடித்தார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் 40 பந்தில் சதம் அடித்து மேக்ஸ்வெல் இன்று அதிவேக சதமடித்த சாதனை புரிந்தார். அதில் இரண்டாவது 50 ரன்னை அவர் 13 பந்துகளில் அடித்தார். கடைசி 10 ஓவர்களில் 131 ரன். நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களால் அடிக்கப்பட்டனர். அதில் பந்துவீச்சாளர் டி லீட் மிகவும் பாவம். அவரது பந்துவீச்சு விவரம் 10 ஓவர்-115 ரன்-2 விக்கட். நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் காலின் ஆக்கர்மேன்-ஐ ஏன் 4 ஓவர் மட்டும் போடச்சொன்னர் என்பது புரியாத புதிர்.

இரண்டாவதாக ஆடிய நெதர்லாந்து அணி தோல்வி பயத்தோடு ஆடினர்.. அந்த அணியின் அதிக பட்ச ஸ்கோர் விக்ரம்ஜித் சிங்கின் 25. மற்றாவர்கள் எல்லாம் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 21 ஓவர்களில் நெதர்லாந்து அணி 90 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தாயசத்தில் வென்றது.

கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய வெற்றியோடு ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. நாளை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெறௌள்ளது.