இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை: மதுரை அண்ணா நகர் மேலமடை அருள்மிகு, சௌபாக்கிய விநாயகர் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
இத் திருக்கோவிலில், மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்களில் காலை 9 மணி அளவில் வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, பால், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி போன்ற அபிஷே திரவியங்களால், சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்படுவது வழங்கம்பட்டது.
இதேபோன்று ,மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வராகி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். மேலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும் தேய்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், உலக நன்மைக்காக, திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய அர்ச்சகர் காந்தன், நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
டாஸ்மாக் காசை வைத்து அரசு நடைபெறுகிறது என்று அண்ணாமலை பேசினார்.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துதான் அரசு நடைபெறுகிறது என்று, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் அவர் மேலும் கூறியதாவது:
திமுக ஆட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு எதிராக உள்ளது என்பது தெரியும்.. தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காரணம் சௌராஷ்டிரா மக்கள். விசைத்தறி நெசவாளர்களுக்கு வாரியம் அமைப்பதாக திமுக வாக்குறுதி கொடுத்து ஆனால், அமைக்கவில்லை..
தமிழகத்தில் கடன் வாங்கும் மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளது. கடன் வாங்குவதில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது, முதலிடத்திற்கு வந்துள்ளது.
மதுவிலிருந்து வரும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தி வருகிறது திமுக.. அமைச்சர் பி டி ஆர் பேசி 4 மாதம் ஆகிவிட்டது.. 2014 இல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர் ஆனால், தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு தொடங்கப் பட்டுள்ளனர்..
2014 இல் பதினோரு சதவீதம் பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தது . ஆனால், தற்போது 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பிடங்களை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் ,எம்பி மாணிக்கத் தாகூர் பாதி நேரம் டெல்லியில் தான் இருப்பார்.
24 கோடி பெண்கள் தான் 2014 வரை வங்கி கணக்கு வைத்திருந்தார்கள். தற்போது 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். 2014 வரை பதினோரு சதவீதம் பள்ளிகளில் தனி கழிப்பறை இல்லை ஆனால் தற்போது நூறு சதவிதம் உள்ளது.
ரஃபேல் விமானத்தில் தற்போது பெண்கள் பயணித்திருக் கிறார்கள். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி தேவைப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தத் தொகுதி எம்பி மாணிக்கம் சாகர் தமிழகத்தில் இருக்க மாட்டார் அவர் டெல்லியில் தான் இருப்பார். அவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். மதுரை மற்றும் விருதுநகர் எம்பிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. ராகுல் காந்தி ஜோக்கர் என, சொல்கிறார்கள். வேறு மாதிரி இருக்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் இரண்டு எம்பிக்களும் வாயை திறக்கவில்லை. இவர்களை விட பெரிய டுபாக்கூர் முதல்வர் ஸ்டாலின். அவர் பெங்களூர் சென்றபோது 32 டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அப்போது கொழுக்கட்டை வைத்திருந்தாரா.
இந்தியாவில் ஈடுபட்டு இல்லாமல் 10 ஆண்டு காலம் 2ஜி ஊழழில் ஈடுபட்டவர்கள், தனிநாடு வேண்டும் என்று கேட்டவர்கள், காஷ்மீரை தனி நாடு என்று சொன்னவர்கள். இந்த கூட்டணியை பொறுத்தவரை இந்தியாவை சூறையாடியவர்கள்.
68 சதவீத பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். 7000 கோடியில் 2500 கோடி மத்திய அரசின் பணம். அதை கொடுக்க வாய்ப்பு இல்லை என்று அண்ணாமலை பேசினார்.
குடிப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்கிறது. 5,500க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 18வயதில் இருந்து 60 வயது வரை 18 சதவீதம் பேர் குடிக்கு அடிமை ஆகி இருக்கின்றனர். மது இல்லாமல் தமிழகத்தை நடத்த முடியாது என்று சொல்கிறார்கள். வரி மூலமாக அரசுக்கு வரக் கூடிய ரூபாய் 44 ஆயிரம் கோடி. தமிழக அரசுக்கு பாஜக., சார்பில் வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளோம். அதில், பனை, தென்னை மரங்களில் இருந்து வரும் அனைத்து பொருட்களும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளோம். – அண்ணாமலை (திருப்பரங்குன்றத்தில்..)
செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா அலுவலம் அருகில் வைத்து தென்காசி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விஎச்பி மாவட்ட இணைச் செயலாளர் முத்துமாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் குருசாமி. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்.வன்னியராஜன் மாவட்ட செயலாளர் முருகன் தளவாய். சபரிமணி. முன்னாள் மாநில தலைவர்.. பெரியகுழைகாதர் கண்டன உரைஆற்றினார்.
மாநில இணைச் செயலாளர் காளியப்பன் . பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் மாரியப்பன். நகர தலைவர் வேம்புராஜ் ஆகியோர் பேசினா். நிகழ்ச்சியில் நகர பார்வையாளர் வாசன். அமைப்புசாரா பிரிவு . காளி.இளைஞர் அணி தலைவர் வீரசிவா .ஸ்ரீராம் கார்த்திக் ,அருண் சங்கர் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன் .இ.மு . நகர தலைவர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் நகர செயலாளர்.சரவணன்.நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது. தொடர்ந்து புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த விண்கலம், இன்று புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம், நிலவை சுற்றத் தொடங்கியுள்ளது.
சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், நாளை இரவு 11 மணிக்கு சுற்றுவட்டப்பதையை குறைப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக 3-வது முயற்சியாக கடந்த மாதம் 14 ம் தேதி சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட்டது. திட்டத்தின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு 7.15க்கு சந்திராயன் 3 நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆக.23 அன்று அது நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chandrayaan-3 Mission: “MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity 🌖” 🙂
Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.
A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.
கோயில் பிரசாத சர்க்கரை பொங்கலில் இரண்டரை இன்ச் ஆணி: அதிர்ச்சியில் பக்தர்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தின் தொடரும் அலட்சியப் போக்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த ராமர் என்ற ஆட்டோ ஓட்டுநர் இன்று காலை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜா பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள பிரசாத ஸ்டாலில் புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவை வாங்கி உள்ளார்.
சர்க்கரை பொங்கலை பிரித்தபோது அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பொங்கலில், 2.5 இன்ச் ஆணி ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட, ராமர் உடனே பிரசாத ஸ்டாலின் விற்பனையாளரிடம் விளக்கம் கேட்ட போது சரியான விளக்கம் அவர் கூறவில்லை.
இதுகுறித்து, அலுவலகத்திலும் புகார் கூறியுள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து, பக்தர்கள் மீது அலட்சியப் போக்கு காட்டி வரும் தாடிக்கொம்பு கோயில் நிர்வாகத்தினர் என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை, கண்காணிக்க மண்டல இணை ஆணையர், உதவி ஆணையாளர், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர், கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பது கடமையாகும். ஆனால், பல மாவட்டங்களில், கோயில் இணை ஆணையாளர்கள் கோயில் அலுவலகத்து வந்து, சம்பள பதிவேடு, ரொக்க குறிபேடு, எம்.டி.ஆர். போன்ற பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, அறநிலையத்துறை ஆணையாளர் உரிய விசாரணை நடத்திய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Eyewitness accounts matter and talk better. One borrows with alacrity, aplomb and ease as it fits with our focus on the nuggets at play. A local villager, Mohammad Hasan Qureshi, 86, clearly remembers those stormy days. A week before the Pathans came, there were rumours that Kashmiri Sikhs [who had a significant population in this area] were planning to attack Muzaffarabad,” he says.
“A couple of days later, we heard that Pathans were coming”. Such rumours were natural, coming as they did amid a series of upheavals that shook the princely state of Kashmir when the so-called 3 June Plan was announced.Under the plan, British India, a Hindu-majority colony, was to be partitioned to create the Muslim state of Pakistan.The fate of Kashmir, a princely state with a Muslim majority but a Hindu ruler, hung in the balance.
Muslims in the western districts of the state revolted against the ruling maharaja in June and there were anti-Muslim riots in southern Kashmir in September. There were also reports of a leaked Pakistani plan for raising a tribal column of 20,000 fighters to attack and annex Kashmir.
Mr Qureshi remembers the evening of 21 October, when he and some friends climbed a ridge to have a view of the western valley. They saw trucks carrying Pathans drive down the Batrasi hills into Garhi Habibullah.
“We stayed up all night, waiting. They came in the morning – just before daybreak. There were hundreds of them. Most of them carried axes and swords. Some had muskets, others just sticks. The Maharaja’s guards at the barrier had vanished.”
First clashes took place on their way down to Muzaffarabad, some 8km (5 miles) of steep descent.
Gohar Rahman, a World War Two veteran from Battagram, 80km north-west of Garhi Habibullah, was in the column that crossed from Dub Gali. “We knew the area so we led one group through this shorter route, on foot,” he says. “The bulk of the Frontier tribesmen – Wazir, Mahsud, Turi, Afridi, Mohmand, the Malakand Yusufzais – went via the longer but easier Lohar Gali route in lorries and trucks.”
Around 2,000 tribesmen stormed Muzaffarabad that morning and easily scattered the Kashmir state army deployed there. Military historians estimate it was just 500-strong at the time and had also suffered defections by Muslim soldiers.
Flushed with victory, the tribesmen got down to wanton looting and arson.
“They plundered the state armoury, set entire markets on fire and looted their goods,” Mr Rahman says.
“They shot everyone who couldn’t recite the kalima – the Arabic-language Muslim declaration of faith. Many non-Muslim women were enslaved, while many others jumped in the river to escape capture.”
The streets were littered with signs of mayhem – broken buildings, broken shop furniture, the ashes of burnt goods and dead bodies, including those of tribal fighters, state soldiers and local men and women. There were also bodies floating in the river.
The raiders spent about three days in Muzaffarabad before sense prevailed and the leaders urged them to move on towards Srinagar, the state capital some 170km to the east. From here, one column drove in trucks down the Jhelum river, breezing past Uri and reaching Baramulla where another round of looting and arson ensued.
We can capture the timeline as follows:
3 June 1947: The June Plan, also called the Mountbatten Plan, is approved in a meeting. It culminates in the Independence of India Act 1947 which partitions British India into independent states of India and Pakistan. The Act receives royal assent in July.
15 June: Agitation in the form of a No-Tax campaign starts in Poonch, an internal principality of Kashmir state.
15 August: Killings are reported from Bagh in Poonch principality when pro-Pakistan groups try to hoist a Pakistani flag to mark independence and clash with the state police.
12 September: Prime Minister of Pakistan Liaquat Ali Khan holds a meeting with military and civilian officials where a go-ahead is reportedly given to two plans: raise a tribal force to attack Kashmir from the north and arm the rebels in Poonch.
4 October: Rebels clash with state forces at a place called Thorar, and go on to besiege state forces in Poonch.
22 October: Tribal bands attack Muzaffarabad, then move eastwards to capture Baramulla. Some of the fighters reach the outskirts of Srinagar.
24 October: Sardar Ibrahim, a pro-Pakistan landlord from Poonch principality, announces the founding of the government of Azad (free) Jammu and Kashmir (AJK) at a place called Palandri, and appoints himself as its head.
26 October: The Maharaja of Kashmir, earlier inclined to stay independent due to the demographic composition of his state, accedes to India, presumably under duress.
27 October: Indian air and ground troops start landing at Srinagar, tilting the balance against tribal invaders and leading to the partition of Kashmir along the line that more or less exists today.
We would be failing in our duty if we did not recall the bravery and brauvara of our patriotic soldiers. We shall promptly go there. Even as the proceedings before constitution bench goes on, we must not forget that but for the valor and sacrifice of our armed forces , there may have been no Art.370 to debate over. Dreadful and mind boggling construct to even contemplate.
(Author of Constitution. & its Making/Working, OakBridge is practicing advocate in the Madras High Court)
Jagmohan Malhotra, popularly known by the mononym ‘Jagmohan’ was born on 25 September 1927 in Hafizabad (present-day Pakistan) to Amir Chand and Dropadi Devi.
He was a former Indian civil servant and politician close to Sanjay Gandhi and Indira Gandhi and notoriously famous for his conduct during the Internal Emergency (1975-77). He served as the Lt. Governor of Delhi and Goa and the Governor of Jammu and Kashmir. He also served as the Union Minister for Urban Development and Tourism after getting elected to Lok Sabha.
“ Frozen: A Sketch of Life in the Valley of Kashmir” is a book written by Jagmohan, who served as the Governor of Jammu and Kashmir at two different periods (1984-89 and 1990-90). The book provides a personal and insightful account of the situation in Kashmir during his tenure.
In “Frozen,” Jagmohan discusses the complex political and social issues faced by the region. He reflects on the challenges of governance, the rise of militancy, and the circumstances that led to the exodus of Kashmiri Pandits from the Kashmir Valley in the late 1980s and early 1990s.
The book delves into the historical context and provides a detailed analysis of the events that unfolded during Jagmohan’s tenure as the Governor. It offers his perspective on the measures taken by the government to tackle the rising insurgency and restore stability in the region.
Overall, “Frozen” presents a first-hand account of the turbulent period in the history of Jammu and Kashmir and provides readers with insights into the complexities and intricacies of the region’s political and social dynamics. It is a valuable resource for those interested in understanding the Kashmir conflict from a policymaker’s viewpoint.
Chapter 6 of the book “My Frozen Turbulence in Kashmir” by Jagmohan provides a detailed history of Article 370 of the Indian Constitution. The chapter begins by tracing the origins of Article 370 to the Instrument of Accession that was signed by Maharaja Hari Singh of Jammu and Kashmir in 1947. The Instrument of Accession gave India control over the defense, foreign affairs, and communications of Jammu and Kashmir, but it allowed the state to retain its own constitution and a special status within the Indian Union.
Article 370 was incorporated into the Indian Constitution in 1950 to give legal effect to the provisions of the Instrument of Accession. The article granted Jammu and Kashmir a number of special privileges, including the right to have its own constitution, flag, and citizenship laws. It also prohibited the central government from applying certain laws of the Indian Union to Jammu and Kashmir without the consent of the state government.
Jagmohan argues in the chapter that Article 370 was a necessary compromise to ensure the accession of Jammu and Kashmir to India. He also argues that the article has been misinterpreted and misused by Kashmiri separatists to promote their own agenda.
The chapter concludes with a discussion of the future of Article 370. Jagmohan argues that the article should be reviewed and amended to ensure that it does not undermine the unity and integrity of India. He also argues that the state of Jammu and Kashmir should be brought fully into the mainstream of Indian life.
ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்துள்ளது, இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம். ஆமை வேகத்தில் செயல்படும் அதிகாரிகள். பக்தர்கள் உயிர் கிள்ளுகீரையா? என்று கேட்டு, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
வரலாற்று சிறப்புமிக்கதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதுமான ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்து உள்ளது.
இது எத்தகைய அபசகுணம். கோவில் வளாகம் தீ பிடிப்பது, சிதிலமடைந்து சிதைவது போன்றவை ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் ஏற்படுவது. இது போன்ற சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு வரும் ஆபத்தை குறிப்பது என்பது மக்கள் நம்பிக்கை.
நூறு ஆண்டுகள் கடந்தாலே தொன்மையானது என்று பாதுகாக்கபட வேண்டும் என்பதைக் கூட அறியாத குருடர்களாக அறநிலையத்துறை இருந்துவருகிறது வேதனைக்குரிய விஷயம்.
பல நூற்றாண்டுகள் கடந்த ஸ்ரீ ரங்கம் கோவில் போலுள்ள பல கோவில்கள் கலாச்சார பாரம்பரியமாக பாதுக்காக்க பட வேண்டியவை. சிதிலமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி சில நாட்கள் முன்பு இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் எச்சரித்தனர். இருந்தும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை செயல்பாபு என முதல்வர் புகழ்ந்து சில மாதங்களுக்கு முன்பு பேசினார். செயல்பாபு என்று முதல்வரால் பாராட்டப்பட்டவரின் நடவடிக்கையே இப்படி என்றால் மற்றவர்களின் செயல்பாடு எத்தகையது என தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தெய்வாதீனமாக இந்த அசம்பாவிதம் பகலில் நடைபெறவில்லை. இது இறைவனின் கருணை என்றே கருதுகிறோம். பக்தர்கள் நடமாட்டத்தின் போது நடந்து இருந்தால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழக அரசின் மெத்தனபோக்கு இதற்கு காரணம்.
உலகப் புகழ் பெற்ற ஶ்ரீ ரங்கம் திருக்கோவிலில் நடந்துள்ள இந்த அசம்பாவிதத்தை உடனே சீர் செய்து தக்க பரிகாரம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், ஆடி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு ஆடி பெருந்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களின் ஓம்சக்தி, பராசக்தி முழக்கத்துடன் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி, ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா வரும் 11ம் தேதி, ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையன்று சிறப்பாக கொண்டாடப்படும். அன்று, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருநந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சோழவந்தான் பகுதியில் என் மனம் என் மக்கள் அண்ணாமலை நடைபயணம் தடபுடலாக நடைபெற்றது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் எட்டாம் நாள் நடை பயணமாக நேற்று மாலை சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட தெ.நாராயணபுரம் கிராமத்தில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கினார்.
அங்கே கிராம மக்கள் சார்பாக வரவேற்பு நடந்தது. இங்கு உள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்களுடைய ஜல்லிக்கட்டு மாட்டுடன் அண்ணாமலையை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கிராமத்தில் 40 வருடங்களாக ராணுவ வீரர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் உணவகத்திற்கு நேரடியாகச் சென்று கடை உரிமையாளர் சுபா தேவி ரவியை பாராட்டினார்.
ஊத்துக்குளியில் ஒரு பெண் அவரை அழைத்து நடைபயணத்தை பாராட்டி வருங்காலத்தில் நீங்கள் தான் முதல்வராக வேண்டும். எங்களுடைய ஆதரவு உங்களுக்குத்தான் என்று தெரிவித்தார். அங்கே இளநீர் குடித்துவிட்டு தொடர்ந்து தென்கரை கிராமத்தில் ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்தினார்.
சோழவந்தானில் எம் வி எம் மருது மஹால் அருகே பாஜக மாநில விவசாய அணிச் செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளி மயில் சிவகாமி உள்பட பாஜக தொண்டர்கள் திரளாக அண்ணாமலையை வரவேற்றனர்.
இங்கு உள்ள மகாலில் உள்ளே சென்று அங்கிருந்தவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். வட்ட பிள்ளையார் கோவில் பஸ் நிலையம், கடைவீதி மாரியம்மன் சன்னதி தெரு, காமராஜர் சிலை வரை நடந்து சென்றார். அங்கிருந்த மக்கள் அவரை வழிநெடுக மலர் தூவி வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சோழவந்தான் காமராஜர் சிலை முன்பாக நடை பயணத்தை நிறைவு செய்த அண்ணாமலை, பொது மக்களிடம் பாஜக அரசின் சாதனைகள் திமுக அரசின் ஊழல்கள் பற்றி எடுத்துரைத்தார்.
இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல், வாடிப்பட்டி கண்ணன் கோச பெருமாள், முத்துராமன், மூவேந்தர் ரங்கஜி, அழகர்சாமி மற்றும் மேனகா திருவேடகம், நாராயணபுரம் ஊத்துக்குளி தென்கரை சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உள்பட 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தனது சோழவந்தான் அனுபவம் குறித்து அண்ணாமலை சமூகத் தளத்தில் பதிவு செய்திருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணம், பாண்டியர்களுக்கு எதிராகப் போர் தொடுத்து வந்த சோழன், இந்தப் பகுதியின் செழிப்பைப் பார்த்து உவந்த சோழவந்தானில், பெருந்திரளெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில், வெகுசிறப்பாக நடந்தேறியது.
புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு, புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு. ஜல்லிக்கட்டுப் போட்டியை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடை செய்த காங்கிரஸ் திமுக கூட்டணியின் சதியை முறியடித்து, அலங்காநல்லூரின் அடையாளமாகிய ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த சிறப்புச் சட்டம் இயற்ற வழிவகை செய்தவர் நமது பிரதமர் மோடி அவர்கள்.
மோடியின் முகவரி : சோழவந்தான்
ஒன்பது ஆண்டுகளில் 2802 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளி சோழவந்தான் பண்ணைக்குடியைச் சேர்ந்த திரு தர்மர், 46 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6000 திட்டத்தின் பயனாளி திரு சின்னா தேவர், விவசாயிகள் செழிக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 6225 விவசாய அங்காடிகளில் ஒன்றின் உரிமையாளர் திருமதி சுந்தரி, 48,506 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான வாடிப்பட்டியைச் சேர்ந்த திருமதி பூரணவள்ளி, e-NAM திட்டத்தின் 37 லட்சம் பயனாளிகளில் ஒருவரான திரு. மணிமாறன், 15 லட்சம் பேர் பயனடைந்துள்ள பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான திருமதி மனோரஞ்சிதம் இவர்கள் தான் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
கொரோனா காலத்திலிருந்து மூடப்பட்டுக் கிடக்கும், கர்மவீரர் காமராஜரால் திறக்கப்பட்ட அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பல கோடி செலவு செய்து மகனுக்குத் திருமணம் செய்து வைத்த இந்தப் பகுதி அமைச்சர் மூர்த்திக்கு, இந்த ஆலையைத் திறக்க மனம் இல்லை. G-Square ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நலனுக்காக மட்டுமே அமைச்சர் மூர்த்தியின் பத்திரப்பதிவுத் துறை நடக்கிறது.
ஜூலை மாதம், தமிழகத்துக்கு வரவேண்டிய 31 டிஎம்சி காவிரி நீர் வரவில்லை. கர்நாடகா வரை போய், தன் காங்கிரஸ் கூட்டணி நண்பர்களைச் சந்தித்து விருந்து உண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடக முதலமைச்சரிடம் சொல்ல தைரியம் இல்லை. கர்நாடகாவிடம் தண்ணீர் திறந்து விடச் சொல்லுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். வெறும் நாடகங்களிலேயே ஆட்சி நடத்தி விடலாம் என்று நினைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக கூட்டணிக் கட்சி காங்கிரஸிடம் நமது உரிமையான காவிரி நீர் பெற முடியவில்லை என்றால் எதற்கு கூட்டணியில் இருக்கிறீர்கள்? காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. தமிழக மக்கள் நலனை அடகு வைத்து எதற்கு இப்படி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி?
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த தமிழக மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி.