Home Blog Page 49

GST 2.0 குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை முழுமையாக… தமிழ்க் குரலுடன்!

pm modi speech in tv on gst - 2026

செப்.21 அன்று மாலை 5 மணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்
தமிழ் வடிவம்
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வணக்கம். 

நாளையிலிருந்து, சக்தியை உபாசிக்கும் புனிதவேளை, நவராத்திரி தொடங்க இருக்கிறது.  உங்கள் அனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி, தேசம், தற்சார்பு பாரதம் இயக்கத்திற்காக, மேலும் ஒரு, மகத்துவம் வாய்ந்த, மற்றும் பெரிய அடியை முன்னெடுக்கிறது.   நாளை, அதாவது நவராத்திரியின்…. முதல் நாள்,

செப்டம்பர் 22ஆம் தேதியன்று, சூரிய உதயத்தோடு கூடவே, அடுத்த தலைமுறை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அமலுக்கு வந்துவிடும்.  ஒருவகையிலே பார்த்தால், நாளைமுதல் தேசத்திலே, ஜிஎஸ்டி…. சேமிப்புக் கொண்டாட்டம், தொடங்கப்பட இருக்கிறது.  இந்த ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டத்திலே, உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும்.  மேலும் நீங்கள், உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை, மேலும் எளிதாக வாங்கி அனுபவிக்க முடியும். 

நம்முடைய தேசத்தின் ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள், புதிய மத்தியத்தட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர், அனைவருக்கும்,   இந்தச் சேமிப்புக் கொண்டாட்டத்தால், நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். 

அதாவது, இந்தப் பண்டிகைகள் காலத்தில், அனைவருக்கும் இனிப்பான செய்தியாகும்.  தேசத்தின் ஒவ்வொரு குடும்பத்தின், சந்தோஷங்கள் அதிகரிக்கும்.  நான் தேசத்தின், கோடானுகோடி குடும்பத்தவர்களுக்கும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், மற்றும், இந்த சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்விருப்பங்களைத் தெரிவிக்கிறேன், நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 

இந்தச் சீர்திருத்தங்கள், பாரதத்தினுடைய, வளர்ச்சிப் பயணத்திற்கு, மேலும் வேகம் கூட்டும்.  தொழில்களை, மேலும் சுலபமானதாக ஆக்கும்.  முதலீடுகளை, மேலும் கவரக்கூடியதாக இருக்கும்.  மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், வளர்ச்சிக்கான ஓட்டத்திலே, சமமான களம் அமைத்துக் கொடுக்கும். 

நண்பர்களே, 2017ஆம் ஆண்டிலே, பாரதமானது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நோக்கி முன்னேறியது.  அது ஒரு பழைய சரித்திரத்தை மாற்றுவதற்கும், ஒரு புதிய சரித்திரத்தை இயற்றவும், தொடக்கமாக அமைந்தது. 

பல பத்தாண்டுகள் வரை, நமது தேசத்தின் மக்கள், நீங்கள் அனைவரும், நமது வியாபாரிகள், தனித்தனி வரிகள் என்ற வலையில் சிக்கியிருந்தார்கள்.  ஆக்ட்ரோய், நுழைவு வரி, விற்பனை வரி, சுங்க வரி, வேட், சேவைவரி, இப்படி நினைவில் வைக்க முடியாத அளவுக்கு, டஜன்கணக்கான வரிகள், நம் தேசத்திலே இருந்தன.   ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகருக்கு, பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், எத்தனை சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பது மலைக்க வைக்கும்.  

ஏராளமான படிவங்களை நிரப்ப வேண்டியிருக்கும்.  எத்தனையோ தடைகள் இருந்தன.  ஒவ்வொரு இடத்திலும், வரிகளுக்கான விதவிதமான விதிகள் இருந்தன.  எனக்கு நினைவிருக்கிறது.  2014ஆம் ஆண்டிலே, தேசம் எனக்கு, பிரதம மந்திரி பொறுப்பை அளித்த போது, அப்போது அந்தத் தொடக்கக்கட்டத்திலே, ஒரு அயல்நாட்டு செய்தித்தாளிலே, ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு பிரசுரம் ஆகியிருந்தது. 

அதிலே, ஒரு கம்பெனியின் கஷ்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது.  அந்தக் கம்பெனி கூறியிருந்தது, அதற்கு ஒருவேளை, பெங்களூருவிலிருந்து, 570 கி.மீ. தொலைவில் இருக்கும், ஹைதராபாதுக்கு, தனது பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால், அந்த அனுப்புதல், எத்தனை கடினமானது என்றால், அவர்கள்…. சிந்தித்தார்கள், அவர்கள் சொல்லவும் செய்தார்கள், அந்தக் கம்பெனி என்ன விரும்பியது என்றால், முதலில் தங்களுடைய பொருட்களை, பெங்களூருவிலிருந்து ஐரோப்பா அனுப்பிய பிறகு, அதே பொருட்களை, ஐரோப்பாவிலிருந்து ஹைதராபாத் அனுப்பலாம் என்று.     

நண்பர்களே, வரி மற்றும் சுங்கம் என்ற பெரும் வலை காரணமாக, அப்போது இந்த நிலைமை இருந்தது.  நான் உங்களுக்கு ஒரேஒரு, பழைய எடுத்துக்காட்டை மட்டுமே நினைவூட்டுகிறேன்.  அப்போது இப்படி இலட்சக்கணக்கான கம்பெனிகளுக்கு, இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கு, தனித்தனி வரிகள் என்ற பெருவலை காரணமாக, அன்றாடம் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.  சரக்குகளை, ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு இடையே, அதிகரித்த செலவினங்கள், அதையும் கூட, ஏழைகள் சுமக்க வேண்டியிருந்தது, உங்களைப் போன்ற, நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்தது.

நண்பர்களே, தேசத்தை, இந்த நிலையிலிருந்து வெளியேற்றுவது, மிகவும் அவசியமாக இருந்தது.  ஆகையினாலே, எங்களுக்கு நீங்கள், 2014இலே சந்தர்ப்பம் அளித்தீர்கள், நாங்கள் அப்போது, மக்கள் நலனிலே, தேச நலனிலே, ஜிஎஸ்டியை எங்களுடைய முதன்மையாகக் கொண்டோம்.  நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தோம்.  நாங்கள் அனைத்து மாநிலங்களின், அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தோம். 

ஒவ்வொரு சிக்கலுக்கான தீர்வையும் தேடினோம்.  அனைத்து மாநிலங்களையும், அனைவரையும், ஒன்றிணைத்த பிறகு, சுதந்திர பாரதத்தின் இத்தனை பெரிய, வரிச்சீர்திருத்தம், சாத்தியமாகியிருக்கிறது.   இந்த மத்திய, மற்றும் மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிகளின் விளைவாகவே, நமது தேசம், பலடஜன் வரிகளின் சுமையிலிருந்து விடுதலை அடைந்தது.  இதனால் தான் தேசம் முழுவதற்கும், ஒரே மாதிரியான அமைப்பு உருவானது.  ஒரு தேசம், ஒரு வரி.. என்ற கனவு மெய்ப்பட்டது. 

நண்பர்களே, சீர்திருத்தம் என்பது இடையறாது நடக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும்.  காலம் மாறும் போது, தேசத்தின் தேவைகள் மாறும் போது, அப்போது அடுத்ததலைமுறை சீர்திருத்தங்களும், அதே அளவுக்கு அவசியமானதாகிறது.  ஆகையாலே, தேசத்தின் தற்போதைய தேவைகள், மற்றும் வருங்காலத்தின் கனவுகளை மனதில் கொண்டு, ஜிஎஸ்டியின்… இந்தப் புதிய சீர்திருத்தங்கள், அமலுக்கு வருகின்றன. 

புதிய வடிவத்திலே, மேலும் முக்கியமாக, இப்போது வெறும், 5 சதவீதம், மற்றும் 18 சதவீதத்திற்கான வரி அடுக்கு இருக்கும்.  இதன் பொருள் என்னவென்றால், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள், மேலும் விலை மலிவாகிவிடும்.  உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பிரஷ், பற்பசை, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு, இப்படி பல பொருட்களும், இப்படி பல சேவைகளும், ஒன்று, வரி இல்லாமல் இருக்கும், அல்லது வெறும், 5 சதவீத வரி செலுத்த வேண்டியதாக இருக்கும். 

எந்தப் பொருட்களின் மீது முன்பெல்லாம், 12 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்ததோ, அவற்றிலிருந்து, 99 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 100க்கு பக்கமாக, 99 சதவீதப் பொருட்கள் இப்போது, 5 சதவீத வரி வரம்பிற்குள் வந்து விட்டன. 

நண்பர்களே, கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்திலே, 25 கோடி நாட்டுமக்கள், ஏழ்மையை தோற்கடித்திருக்கிறார்கள், ஏழ்மையை விரட்டியிருக்கிறார்கள், மேலும் ஏழ்மையிலிருந்து வெளியேறிய இந்த, 25 கோடி மக்கள் என்ற பெரிய சமூகம், புதிய மத்தியத்தட்டு என்ற வடிவிலே, இன்று நமது தேசத்திலே, மிகப்பெரிய பங்களிப்பு அளித்து வருகிறார்கள். 

இந்தப் புதிய மத்தியத்தட்டு மக்களுக்கு என, பிரத்யேகமான பேரார்வங்கள் இருக்கின்றன.  அவர்களுக்கென கனவுகள் இருக்கின்றன.  இந்த ஆண்டு, அரசாங்கம், 12 இலட்சம் வரையிலான வருமானத்திற்கு, வரிவிலக்கு அளித்து, ஒரு பரிசினை அளித்திருக்கிறது.  மேலும் சொல்ல வேண்டுமென்றால், 12 இலட்சம் ரூபாய் வருவாய் வரை, வருமான வரியில் விலக்கு கிடைத்தால், மத்தியத்தட்டு மக்களின் வாழ்விலே எத்தனை பெரிய மாறுதல் ஏற்படுகிறது!! 

எத்தனை எளிமையாகவும் வசதியாகவும் ஆகிறது!!  மேலும் இப்போது, ஏழைகளுக்கான முறை இது; புதிய மத்தியத்தட்டுக்கான முறை இது.  இப்போது ஏழைகளுக்கும், புதிய மத்தியத்தட்டு மக்களுக்கும், மத்தியத்தட்டு மக்களுக்கும், ஒரு வகையிலே, இரட்டை வெகுமதி கிடைத்திருக்கிறது.  ஜிஎஸ்டி குறைவானபடியால், இப்போது தேசத்தின் குடிமக்களுக்கு, தங்களுடைய கனவுகளை மெய்யாக்குவது, மேலும் சுலபமானதாக ஆகும். 

வீடு கட்டுதல், தொலைக்காட்சி, குளிர்சாதனங்கள், வாங்குவதாகட்டும்; ஸ்கூட்டர், பைக், கார் வாங்குவதாகட்டும்; இவை அனைத்தின் மீதும், இப்போது, குறைவாகவே செலவழிக்க வேண்டியிருக்கும்.  உங்களுக்கெல்லாம், சுற்றுலா சென்று வருவது கூட மலிவாகி விடும்.  ஏனென்றால், அதிக அளவு ஹோட்டல்களின் அறைகளுக்கும் கூட, ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு விட்டது. 

அதே போல நண்பர்களே, எனக்கு ஒன்று சந்தோஷமளிக்கிறது.  அதாவது கடைக்கார சகோதர சகோதரிகளும் கூட, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாக மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.  அவர்கள் ஜிஎஸ்டியில் ஏற்பட்டிருக்கும் விலைக்குறைப்பை, நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள்.  பல்வேறு இடங்களில் எல்லாம் முந்தைய, மற்றும் இப்போதைய அடுக்குபற்றி, பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

நண்பர்களே, நாம், நாகரிக் தேவோ பவ, குடிமக்களே நம் தேவர்கள், என்ற மந்திரத்தை அடியொற்றி முன்னேறி வருகிறோம், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களிலே, இதனை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.  நாம், வருமான வரியிலே விலக்கு, மற்றும் ஜிஎஸ்டியில் விலக்கு இரண்டையும் இணைத்துப் பார்த்தால், ஓராண்டிலே, எடுக்கப்பட்ட தீர்மானத்தால், இதனால் தேசத்தின் மக்களுக்கு, இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சேமிப்பு ஏற்படும்.  ஆகையால் தான் நான் இதை சேமிப்புக் கொண்டாட்டம் என்று கூறுகிறேன்.

நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டினால், நாம் தற்சார்பு பாரதம் என்ற பாதையிலே பயணித்தே ஆக வேண்டும்.  மேலும் பாரதத்தை, தற்சார்பு உடையதாக ஆக்க, மிகப்பெரிய பொறுப்பு, நம்முடைய எம் எஸ் எம் ஈக்கள், அதாவது, நமது சிறு, மத்திய, மற்றும் குடிசைத் தொழில்களின் மீதும் இருக்கின்றது.   எவை நாட்டுமக்களின் அத்தியாவசியத் தேவைகளோ, எவற்றை நாம் தேசத்திலேயே தயாரிக்க முடியுமோ, அவற்றை நாம், தேசத்திலேயே தயாரிக்க வேண்டும்.  

நண்பர்களே, ஜிஎஸ்டியின் அடுக்குகளைக் குறைத்ததால், விதிகள், மற்றும் செயல்முறைகள், மேலும் சுலபமாக ஆனதால், நமது எம் எஸ் எம் ஈக்கள், நமது சிறு தொழில்கள், குறு தொழில்கள் ஆகியவற்றுக்கு நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.  அவற்றின் விற்பனை அதிகரிக்கும், வரிகள் குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும்;  அதாவது, அவர்களுக்கும் கூட, இரட்டிப்பு ஆதாயம் கிடைக்கும்.  ஆகையால், இன்று என்னுடைய, எம் எஸ் எம் ஈக்களிடம், சிறு தொழிலாகட்டும், குறு தொழிலாகட்டும், குடிசைத் தொழிலாகட்டும், உங்கள் அனைவரிடத்திலும், அதிக அளவு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.  உங்களுக்கும் தெரியும்,

பாரதம், வளமையின் சிகரத்தின் மீது இருந்த போது, அப்போது, பாரதத்தின் பொருளாதார அமைப்பின் முக்கியமான ஆதாரமாக, நமது, எம் எஸ் எம் ஈக்களே இருந்தன, நமது சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் இருந்தன.  பாரதத்தின் தயாரிப்புத் துறை, பாரதத்தில் உருவாக்கப்பட்ட பொருட்களின், தரம் சிறப்பானதாக இருந்தது.  நாம் அந்த கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டும்.  நமது சிறு தொழில்கள் தயாரிப்பவை, அவை உலகிலே, அனைத்து உரைகற்களிலும், சிறப்பானவையாக இருக்க வேண்டும், மிக அருமையானவையாக இருக்க வேண்டும்.  நாம் தயாரிக்கும் பொருட்கள், அவை உலகிலே, அட்டகாசமான முறையிலே, மிகச் சிறப்பான பொருளுக்கான அடையாளமாக இருக்க வேண்டும்.  நமது பொருட்களின் தரம், உலகிலே, பாரதத்தின் அடையாளத்தை உயர்த்த வேண்டும், பாரதத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும், நாம் இந்த இலக்கை ஏந்திப் பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே, தேசத்தின் விடுதலைப் போருக்கு, எப்படி சுதேசி என்ற மந்திரத்தால் பலம் கிடைத்ததோ, அதே போல, தேசத்தின் வளமைக்கும் கூட, சுதேசி என்ற மந்தித்தால் மட்டுமே சக்தி கிடைக்கும்.  இன்று, அறிந்தோ அறியாமலோ, நமது அன்றாட வாழ்க்கையிலே, நிறைய அந்நியப் பொருட்கள் இணைந்து விட்டன, நமக்கு இது தெரியக்கூட இல்லை.  நம் பையில் இருக்கும் சீப்பு, அயல்நாட்டதா அல்லது நம் நாட்டதா நமக்குத் தெரியாது. 

நாம், இவற்றிலிருந்தும் கூட விடுபட்டாக வேண்டும்.  நாம் வாங்கும் பொருட்கள் எல்லாம், இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டும்;  இதிலே, நமது தேசத்தின் இளைஞர்களின் உழைப்பு இருக்க வேண்டும், நமது தேசத்தின் சகோதர  சகோதரிகளின் வியர்வை இருக்க வேண்டும்.  நாம், அனைத்து இல்லங்களையும், சுதேசியின் அடையாளமாக ஆக்க வேண்டும்.  அனைத்துக் கடைகளையும், சுதேசியால் அழகுபடுத்த வேண்டும்.  பெருமையோடு கூறுங்கள், இது சுதேசி என்று; பெருமையோடு சொல்லுங்கள், நான் சுதேசியையே வாங்குகிறேன் என்று; நான் சுதேசிப் பொருட்களை, விற்கவும் செய்கிறேன் என்று, இதுவே, அனைத்து பாரதீயர்களின் உணர்வாக ஆக வேண்டும். 

எப்போது இப்படி நடக்கிறதோ, அப்போது பாரதம் விரைவாக வளர்ச்சி அடையும்.  நான் இன்று, அனைத்து மாநில அரசுகளிடமும் கேட்டுக் கொள்கிறேன், தற்சார்பு பாரதத்தின் இந்த இயக்கத்தோடு கூடவே, சுதேசியின் இந்த இயக்கத்தோடு கூடவே, தங்களுடைய மாநிலங்களிலே, தயாரிப்புத் துறைக்கு விரைவு கூட்டுங்கள், முழுச் சக்தியோடு, முழு உற்சாகத்தோடு இணையுங்கள்.  முதலீடுகளுக்கான சூழலை அதிகரியுங்கள், மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து முன்னேறும் போது, தற்சார்பு பாரதம் என்ற கனவு நிறைவைக் காணும், பாரதத்தின் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும், பாரதம் வளர்ச்சி அடையும். 

இந்த உணர்வோடு கூடவே, நான் மீண்டும் ஒரு முறை, இந்த சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். 

ஒரு முறை மீண்டும், உங்கள் அனைவருக்கும், நவராத்திரிக்கான, ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.

GST 2.0: இனி நம்ம கையில பணம் நெறய புழங்கும்!

gst collection - 2026

நாளை முதல் மறைமுக வரி சீர்திருத்தம் #GST 2.0 அமலுக்கு வருகிறது. இது நேரடியாகவும், மறைமுகவாகவும் பல பயன்களை விளைவிக்கவல்லது. ஏற்கனவே நேரடி வரி விதிப்பிலும் (வருமான வரி) ரூ.12 இலட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

● வரிக் குறைப்பு பொது மக்கள் கையில் கூடுதல் பணம் புழங்க வழிவகை செய்துள்ளது.

● இதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

● நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சேவை அளிக்கும் வணிகர்கள் அனைவரும் எளிதான வரி விதிப்பிற்கு (5% & 18%) மாறுவார்கள்.

● வரி விதிப்பில் உள்ள சின்னச் சின்ன சிரமங்கள், வரம்புக் குழப்பங்கள் படிப்படியாக சில மாதங்களில் குறைந்து விடும்.

● வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய சிந்தனை அல்லது அவசியம் பலருக்கு இல்லாமல் போகும்.

● மறைமுக வரி குறித்த வழக்குகள், மேல்முறையீடுகள், அபராதங்கள், இழுத்தடிப்பு நிச்சயம் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

● நிதியமைச்சகம், வர்த்தக அமைச்சகம், சட்ட அமைச்சகம் மூன்றும் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரின் பணிச்சுமையை இலகுவாக்கும்.

● பட்ஜெட்டில் வரி குறித்த புதிய அறிவிப்புகள் வரும் ஆண்டுகளில் தேவையில்லாமல் போகும்.

● GST கவுன்சில் போன்ற மாநில நிதியமைச்சர்களின் குழு கூடி முடிவெடுக்கும் விஷயங்கள் கை விரலில் எண்ணி விடும் அளவுக்கு மிக சொற்பமாக மட்டுமே இருக்கும்.

● அரசின் செலவினம் குறைந்து, அரசு இயந்திரத்தின் செயல்திறன் அதிகரிக்கும்.

● Ease of Doing Business என்பதில் நாம் பல படிநிலைகள் முன்னேறுவோம். ஆனால் உலக வங்கி,IMF தரும் இந்த ஆய்வு முடிவுகள் வருவதற்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகும்.

● புதிய அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வரும். உள்ளூர் நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்தும்.

● எண்ணிலடங்கா தொழில் முனைவோர், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவர்.

● சர்வதேச நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகும்.

● ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளான நெடுஞ்சாலைகள், இரயில் தடங்கள், துறைமுகங்கள் இணைப்பு, விமான நிலையங்கள், நீர்வழிப் போக்குவரத்துத் தடங்கள், சரக்கு முனையங்கள் இலக்கு வைத்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

● சரக்கு போக்குவரத்து, கட்டுமானம், மின்சார உற்பத்தி + விநியோகச் செலவுகள் படிப்படியாக குறையும்.

● மின்சாரம், பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை வருங்காலத்தில் GST யில் கொண்டு வரப்பட வேண்டும்.

● இறுதியாக GST 2.0 சீர்திருத்திற்கு பிரதமர் தான் தான் காரணம் என்று பெருமை பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தற்போது கூறுகிறது. இதை ஒவ்வொரு GST கவுன்சில் கூட்டம் முடிந்த பின்போ, மாநில எதிர்க்கட்சிகள் நிதிப் பகிர்வு குறித்து அரசியல் செய்யும் போதோ சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொன்னால் இதை இப்போது நிச்சயம் வரவேற்று இருப்பேன்.

  • சக்ரவர்த்தி மாரியப்பன்

இந்தியர்களுக்கு ட்ரம்ப் எடுத்த பாடம்!

donald trump - 2026

ட்ரம்ப் சரி! நாம தான் தப்பு!

கூகுள் சி இ ஓ யார் தெரியுமா?
மைக்ரோசாஃப்ட், யூட்யூப், ஃபெட் எக்ஸ், அடோப், ஐபிஎம், அட அவ்வளவு ஏங்க வேர்ல்டு பேங்க் சி இ ஓ வே இந்தியன் தான். நாம இல்லாம அமெரிக்காவே நகராது….
இல்லையா?
இல்லை.

மேலே சொன்ன அத்தனை கம்பெனிகளுக்கும் ஓனர் யாரு? அமெரிக்கன்ஸ்…
நாம யாரு? லேபரரூ…
என்ன வித்யாசம்?
நம்ம அம்மா அப்பா நம்மள என்ன சொல்லி வளர்த்தார்கள்? நல்லா படி மகனே/மகளே நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி கை நிறைய சம்பாதிச்சு நிம்மதியா வாழணும்.

எந்த ரிஸ்க்கும் இல்லாம, நல்ல வேலையில் சேர்ந்து மாசமாசம் நல்ல சம்பளம் வாங்கணும். அவ்வளவு ஏன், நல்ல மாப்பிள்ளைங்க, நல்ல கம்பெனியில வேலை பார்க்கிறார். நிரந்தர வேலை. தைரியமா பொண்ணைக் கொடுக்கலாம்.
காக்காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கோணும்.
எந்தப் பெற்றவர்களும் தொழில் தொடங்கு, நிர்வாகம் செய்னு சொன்னதே இல்லை.

அமெரிக்கன்ஸ் / ஐரோப்பியன்ஸின் பலமே மேனேஜ்மெண்ட்ல ஸ்ட்ராங்காக இருப்பது தான். ”பால் கெட்டி” என்ற முன்னாள் கோடீஸ்வரரை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் ராக் பெல்லர் மாதிரியான பெரிய தொழிலதிபர். அவருடைய அப்பாவும் பெரிய தொழிலதிபர் தான். வருடத்திற்கு சில நூறு டாலர்கள் மட்டுமே கொடுப்பாராம். இதை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள். இதுவும் ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுப்பேன். பிழைத்தால் பிழைத்துக் கொள் இல்லையென்றால் அப்படியே ஓடிடுனு சொல்லியிருக்கார்.

அந்தக் காலத்தில் சில நூறு டாலர் என்பது பெரிய விசயம் தான். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ஒரு ஹோட்டலோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரோ ஆரம்பித்திருப்போம். பால்கெட்டி என்ன செய்தார் என்றால், வளைகுடா நாடுகளுக்குச் சென்று இருக்கும் காசையெல்லாம் வைத்து எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டினார். இரண்டு வருடங்களாக ஒவ்வொரு முயற்சியும் தோல்வி. எனினும் ரிஸ்க் எடுத்து கடைசியில் உலகத்தின் முதல் மூன்று கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.

இன்றைக்கும் நம் மக்கள் என்ன செய்கிறோம்? ஐடி / கம்.சைன்ஸ்/மெக்.எஞ்சினியர் என்று வேலைக்குப் போகும் மனநிலையிலேயே படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோம்.

குறைந்தபட்சம் கல்லூரியிலிருந்தாவது மேனேஜ்மெண்ட் படிப்பினை விரும்பிப் படிக்கிறோமா? கடனுக்கு எம்பிஏ பட்டம் வாங்கிட்டு அதைக் காட்டி ஒரு ப்ரமோஷன் வாங்கிக்கிறோம்.

இன்றைக்கு நாம இல்லாட்டி அமெரிக்கா இல்லைனு நாமளா கற்பனை பண்ணிக்கிறோம். நாம இல்லாட்டி, இந்தோனேசியா, வியட்நாம், மெக்ஸிகோ, ப்ரெஸில், நைஜீரியா, எத்யோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களைத் தூக்கிட்டு வந்து ட்ரெய்ன் பண்ணி தொழிலை நடத்திக் கொள்வான். நாம தான் அங்கே வேலை போனதும், ஏய்.. இந்திய அரசே! வேலை கொடுக்க வக்கில்லையா? எங்கள் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லையா என்று வெட்கமே இல்லாமல் அடுத்தவர்கள் மீது பழி போடுவோம்.

கொஞ்சம் யோசித்தீர்களா?
சுந்தர் பிச்சை, அஜய் பங்கா, ராஜ் சுப்பிரமணியம், அரவிந்த் கிருஷ்ணா எல்லாம் தன் கையிலிருக்கும் கோடான கோடியை வைத்து ஏன் தனியாக ஒரு கூகுள், ஐபிஎம், பேங்க், ஃபெட் எக்ஸ் போன்றதொரு கம்பெனியை ஆரம்பிக்கவில்லை என்று?

இவர்களெல்லாம் கம்பெனி ஆரம்பிப்பதாகச் சொன்னாலே உலகம் முழுவதுமிருந்து முதலீடுகள் கொட்டும். ஏன் ஆரம்பிக்கவில்லை.

அந்த வகையில், ஸோகோ ”ஸ்ரீதர் வேம்பு” ஒரு வைடூரியம். ரிஸ்க் எடுத்த தேசப்பற்றாளர். ஆனால், நமக்கெல்லாம் ஐடி நிறுவனம் என்றாலே வெளிநாட்டுக்குச் சேவை செய்யும் இன்ஃபி மாதிரியான கம்பெனிகள் தான் நினைவுக்கு வருகிறது.

ஏனெனில், நமக்கு நிர்வாகரீதியாக வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுவதை விட வேலை செய்து வெற்றிபெற்றவர்களே ஹீரோக்களாகப் படுகிறார்கள். சினிமா தயாரிப்பாளர்களை விட நடிகர்களே ஹீரோவாகப் பார்ப்பது போல…

இனியாவது நம் குழந்தைகளுக்கு நிர்வாக மேலாண்மையின் அவசியத்தையும், கல்வியையும் போதிப்போம். அடுத்த சில தசாப்தங்களில் உலக வல்லரசாவோம்.

அது வரை இன்னிக்கு ட்ரம்ப் என்ன அறிக்கை விடப் போகிறார்னு எக்ஸ்/ட்ரூத் ஆப்களை ரெஃப்ரெஷ் பண்ணிட்டே காத்திருக்க வேண்டியது தான்.

  • ஆனந்தன் அமிர்தன்

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் மக்கள் அடையும் நன்மைகள்: பட்டியலிட்டார் பிரதமர் மோடி!

pm modi speech in tv on gst - 2026

வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5 %, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5%, 18% என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. இந்த சீர்திருத்தம் நாளை 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறையும்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சிகள் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்,’நாளை முதல் அமலாகும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை மூலம் மக்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மூலம் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இந்தியப் பொருட்களையே வாங்குவீர்!

பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டதாவது…

நாளை முதல் நவராத்திரி தொடங்குகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளில், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். 

நாளை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. இந்த சீர்திருத்தத்துக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தம், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வர்த்தகத்தை எளிதாக்கி முதலீட்டை அதிகரிக்கும்.

ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு ஜிஎஸ்டி மூலம் பூர்த்தியானது. தற்போது காலம் மாறிவிட்டது. தேவையும் மாறிவிட்டது. அதனால் தான் தற்போது இரண்டாம் தலைமுறை வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி.,க்கு முன்பு 12 வகையான வரிகள் இருந்தன. இதனால் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதிலும் மக்கள் சிரமப்பட்டனர்.

2014 ல் பிரதமராக பதவியேற்ற போது, ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியானது. அதில், இந்தியாவில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிறுவனம் ஒன்று ஒரு பொருளை பெங்களூருவில் இருந்து ஐதராபாத் கொண்டு செல்வதில் பிரச்னைகள் இருந்தது. முதலில், அதனை பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவுக்கும், அதன் பிறகு அந்த பொருளை ஐரோப்பாவில் இருந்து ஐதராபாத்துக்கும் கொண்டு சென்றதாக தெரிய வந்தது. அப்போது, இருந்த வரிகள் மற்றும் சுங்கச்சாவடிகளால் ஏற்பட்ட பிரச்னை இது. 

லட்சக்கணக்கான நிறுவனங்கள், மக்கள், பல்வேறு வரிகளால் அவதிப்பட்டனர். பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக செலவு செய்தனர். அந்த சூழ்நிலையில இருந்து விடுவிக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது.

இந்த நிலையில் தான், 2017 ல் ஜிஎஸ்டியை அமல்படுத்திய போது இந்தியா, பழைய வரலாற்றை மாற்றி புதிய வரலாற்றை நோக்கி திரும்பியது. வர்த்தகர்களும், மக்களும் பல மறைமுகவரிகளால் அவதிப்பட்டு வந்தனர்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, ஒவ்வொரு மாநிலங்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்தோம். அனைவரின் ஒருமித்த முடிவோடு பெரிய வரி சீர்திருத்தம் அமலானது. மத்திய மாநில அரசுகளின் முயற்சி காரணமாக, பல வரி அடுக்கு பின்னணியில் இருந்து நாடு விடுபட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்ற கனவு நனவானது.

ஜிஎஸ்டி அமலாக்கம் நாட்டின் பெரிய வரி சீர்திருத்தம். தற்போது வரி கட்டமைப்பு எளிமைபடுத்தப்பட்டு உள்ளது. இந்த சீர்திருத்தம் நாட்டின் சேமிப்புத் திருவிழா. பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளினால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.

ஜிஎஸ்டி 2.0 – நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன; இதன் மூலம் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

இனி 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடி வரை செலவு குறையும்.

99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பில் வந்துள்ளன. உணவு, மருந்து , பல்வேறு வீட்டு உபயோக பொருட்களின் விலை இனி குறையும். சிக்கலான வரி கட்டமைப்பில் இருந்து நுகர்வோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் துவங்குகிறது.

உணவுப் பொருட்கள், மருந்துகள், அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை விரைவில் மலிவாகப்போகின்றன. வீடு, டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களை வாங்குவது இனி எளிதாகும்.

வரும் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை, தற்சார்பு பாரதம் என்ற பாதை மூலமாகவே நாம் அடைய முடியும். இதனை நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்

இந்தியாவின் விடுதலைக்கு சுதேசி என்ற மந்திரம் எப்படி சக்தியைக் கொடுத்ததோ, அதேபோல் சுதேசி பொருட்கள் நாட்டிற்கு புதிய வலிமையைக் கொடுக்கும்.

நமது பாக்கெட்டில் இருக்கும் ஒரு சீப்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? என்று கூட நமக்குத் தெரியாது.

எனவே நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியர்களின் வியர்வை அடங்கியதாக இருக்க வேண்டும்

தற்சார்பு பாரதத்திற்காக எதையெல்லாம் உள்நாட்டில் தயாரிக்க முடியுமோ அதை எல்லாம் நாம் இங்கேயே தயாரிக்க வேண்டும்.

நாம் தயாரிக்கும் பொருட்கள் உலகில் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட சிறந்ததாக இருக்க வேண்டும். அவை உலகின் அனைத்து சந்தைகளிலும் கிடைக்க வேண்டும்.

அந்தளவுக்கு தரமான பொருட்களை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும். இதனால் நாட்டின் பெருமையும், கவுரவமும் அதிகரிக்கும்.

நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு, நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ரூ.12 லட்சம் வரை வருவாய் இருந்தால் வருமான வரி கட்ட தேவையில்லை என்ற சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பலன்களை நாட்டு மக்கள் அனுபவித்து  வருகின்றனர்.

கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு பல கனவுகள் நோக்கங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது. அரசு வழங்கிய முதல் பரிசு. அரசு பரிசளித்தது. ரூ.12 லட்சம் வரை வரிச்சலுகை அளித்த போது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தற்போது இரண்டாம் பரிசாக ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜிஎஸ்டிகுறைப்பு மூலம் அவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற முடியும்.

வருமான வரியிலும், ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். நடுத்தர மக்கள் இனி எளிதாக தங்களது இலக்குகளை நிறைவேற்றுவார்கள். இந்த வரி சீர்திருத்தத்தால் சிறிய கடைக்காரர்கள் கூட பலன் அடைவார்கள். மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும்.

சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியாக நடக்கும் நடவடிக்கை. காலமும் தேவையும் மாறும் போது மாற்றத்தை ஏற்பது அவசியம். மாற்றங்கள் ஏற்படும் போது நாட்டில் மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்த தலைமுறை சீரதிருத்தம் மிகவும முக்கியமானது. நாட்டின் தற்போதைய தேவை மற்றும் எதிர்காலத்தை மனதில் வைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

டிவி, டூவீலர்கள், கார்கள் உள்ளிட்டவற்றை எளிதாக வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை நுகர்வோர்களுக்கு கொண்டு செல்ல வணிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.

சுய சார்பு இந்தியாவே இந்த நேரத்தில் தேவையாக உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் ஊக்கம் அளிக்கின்றனர். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுய சார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும். உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளும் அந்த பொருட்களை விற்க வேண்டும். சுதேசி 2.0 இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.!

ஸ்ரீவிலி திருவண்ணாமலையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

1000959909 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சனிக்கிழமை புரட்டாசி சனி வார கருட சேவையும் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.இங்கு மூலவரான சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்த திருத்தலம் பக்தர்களால் தென் திருப்பதி என அழைக்கப்படும்.இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கருட சேவை வெகு விமர்சையாக நடைபெறும்.அதை தொடர்ந்து வரும் ஞாயிறன்றும் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி சனி வார கருட சேவை 20ந்தேதி அதிகாலை 4:30 மணி அளவில் தொடங்கியது. அப்பொழுது சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலிலேயே பக்தர்கள் மலையேறி கூட்டம் கூட்டமாக சென்று சீனிவாச பெருமாளை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் முடி இறக்கியும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை காணிக்கையாக செலுத்திய வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலில் பகல் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜையும் இரவு 8 மணிக்கு சாயரட்ச பூஜையும் நடைபெற்றது. நண்பகல் 12.00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் 4.00 மணிக்கு உற்சவர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

இன்று மஹாளய பட்ச அமாவாசை என்பதால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் மலையை சுற்றி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதிகளும், செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ் நேரடியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு வந்து ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாள் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

22வது ஆண்டில் பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்..

FB IMG 1751899540884 - 2026

செங்கோட்டை சென்னை செங்கோட்டை பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்த ரயில் சாதாரண பயணிகள் பெட்டிகளை அதிகரித்து குறைந்த கட்டண மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைத்து பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரயில் பயணம் என்றால் சுகமானது.அதிலும் இந்த பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிப்பது தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிக மிக இயல்பானது.ராத்திரி பயணத்தை துவக்கினால் விடிவதற்கு முன் சென்னை சென்று விடலாம்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் தென்காசி சென்னை இடையே வாரம் ஒருநாள் இயங்கி பின்னர் செங்கோட்டை சென்னை இடையே வாரம் 5 நாள் இயங்கி தற்போது தினசரி ரயிலாக பயணிகளின் ஏகாபித்த ஆதரவுடன் மதுரை கூட்டத்தில் அதிக வருவாயீட்டும் ரயிலாக பொதிகை அதிவிரைவு ரயில் இயங்கி வருகிறது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதையடுத்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பாக இந்த ரயிலுக்கான கொண்டாட்டம் 20/09/25 மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், பொருளாளர் மற்றும் மதுரை ரயில் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுந்தரம் , PRO ராமன் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா , செங்கோட்டை அக்ரி ஷேக் , மேலூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி இவ்விழாவிற்கான ஜாங்ரி மற்றும் இரண்டு கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பல ஆயிரம் பயணிகள் பயணிக்கும் இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் ஒரு மணி நேரம் பயண நேரத்தை குறைக்க வேண்டும்.கூடுதலாக சாதாரண பயணிகள் பெட்டி குறைந்த கட்டணத்தில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபரின் அடுத்த அடாவடி! இனி ‘தேர்வு’ கடினமே!

trump h1b begging - 2026

அடுத்த குண்டு அக்டோபர் 20.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிரடியாக US-CS எனும் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதாவது இது அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்வு முறையில்… வெற்றி பெறுபவர்களுக்கு மாத்திரமே யுனைடெட் ஸ்டேட்ஸ் என்கிற நாட்டின் குடியுரிமையை பெற தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக மிக கடினமான தேர்வு முறைகளை புகுத்தி இருப்பதாக பலரும் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

முதல் எல்லாம் சம்பிரதாயமாக அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் அமெரிக்க ஆங்கில பேச்சு வழக்கு தெளிவு இருந்தால் போதும், என்பதை சோதிக்கும் விதத்தில் ஒரு தேர்வு முறையை வைத்து இருந்தார்கள்….. அமெரிக்க குடியுரிமை பெற…

அதில் தான் தற்போது டிரம்ப் நிர்வாகம் மூக்கை நுழைத்து கதக்களி ஆடி இருக்கிறார்கள். இருபது கேள்விகளுக்கு பன்னிரண்டு சரியாக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக 128 கேள்விகளுக்கு குறித்த நேரத்திற்குள் சரியான விடை கொடுக்க வேண்டும்….. அப்போது தான் இரண்டாம் தாளில் வரும் அந்த இருபது கேள்விகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்பது போல் வடிவமைப்பு செய்து இருக்கிறார்கள். இதன் மாதிரி அமைப்பும் வெளியிடவில்லை…., முன்பு இருந்தது. நேர நிர்ணயம் எதன் அடிப்படையில்…. இணைய வழியில் தேர்வா… அல்லது நடத்தப் போகும் அமைப்புக்கு, அதிகாரம் என்ன என்பதெல்லாம் விசா நடைமுறையோடு சம்மந்தப்பட்டது என சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 8,08,000 பேர் வரை நம் இந்திய குடிமக்கள் அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக புள்ளி விபர தரவுகள் சொல்கின்றன….. இவ்வாண்டு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் குடியுரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறார்களாம்….. இதில் இந்திய மக்கள் சுமார் 57% பேர் என்கிறார்கள்.

ஏற்கனவே கோல்டன் விசா வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் H1B விசா மற்றும் H4 விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பலரை கொந்தளிக்க செய்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அதிலும் குறிப்பாக இந்தியர்களை என்கிறார்கள். ஏனெனில் இந்த விசா நடைமுறையில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான்…. கிட்டத்தட்ட 70% பேர் பாதிக்கப்படக்கூடும் என்கிறார்கள்.

அடுத்த இடியாக இந்த US-CS தேர்வு வந்து சேர்ந்திருக்கிறது.

இவையெல்லாவற்றுக்கும் நம் அமெரிக்க பெரியார் பீட்டர் நவ்ரோ பின்புலத்தில் இருப்பதாக பலரும் பொருமிக் கொண்டு நிற்கிறார்கள். இவருக்கு தற்சமயம் அமெரிக்க அதிபரின் பொருளாதார பிரிவு ஆலோசகர் என்கிற பதவி கொடுத்து கூடவே வைத்து கொண்டு இருக்கிறார் டிரம்ப். ஏடாகூடமான யோசனைக்கு பேர் போனவர் இந்த நவ்ரோ. பழமைவாத கிருஸ்துவ அடிப்படைவாதி என பெயர் எடுத்தவர். நம்மூர் ஆட்களை மருந்துக்கும் ஆகாது இவருக்கு… அமெரிக்க உச்ச பதவிகளில் இந்தியர்கள் பலர் கோலோச்ச ஆரம்பித்து விட்டனர் என ஆர்ப்பரிப்பவர்…… அதை எதிர்கொள்ளும் (நண்டு சிண்டு) வேலைகளில் தற்போது இறங்கி இருப்பதாக இவரே கூறிக் கொள்கிறார். சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்மூர் வீரமணி வேலைகளில் கை தேர்ந்தவர்……. ஒரு மாற்றாக நவ்ரோ இந்தியர்….. இந்தியர்….. என நடு இரவிலும் புலம்பிக் கூடியவர்.

அடுத்ததாக என்ன நடக்கும்…..?!?!

அக்டோபர் 20 பிறகான விண்ணப்பப் படிவத்தில் தான் இந்த தேர்வு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது….. அதுவரையில் பழைய நடைமுறை தொடரும் என பொடி வைத்து இருக்கிறார்கள்.

ஏன் இப்படி….????

இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை சதவீதம் பேர் முண்டியடித்து விண்ணப்பிக்க இருக்கிறார்கள் என்பதை அவதானிக்க போகிறார்கள் அதில் இந்தியர்கள் எத்தனை சதவீதம் பேர் என கணக்கிட இருக்கிறார்கள். ஏற்கனவே H1B விசா நடைமுறைக்கு கொண்டு வரும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து இட்டுயிருக்கும் நிலையில் இந்த அமெரிக்க குடியுரிமை விண்ணப்பப் படிவம் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவில் வேலை பார்க்க H1B, H4 விசா நடைமுறையில் உள்ளது…. அமெரிக்க குடியுரிமை பெற்றுக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக குடியேற US-CS வழிவகை செய்கிறது.

இந்த இரண்டு முறைகளை தாண்டி அமெரிக்காவில் வாழ்வது நடைமுறை சாத்தியம் இல்லை.

அப்படியான சூழ்நிலையில் இந்த கெடுபிடிகள் அத்தனையும் இந்தியர்களை குறிவைத்தே என்கிறார்கள். அமெரிக்கா வாழ் இந்தியர்களை கொண்டு நம் இந்திய தேசத்தை வழிக்கு கொண்டு வர நினைக்கிறது அமெரிக்கா.ஆயுத வியாபாரம் படுத்து விட்டது என்பதனால் விவசாய பொருட்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கு முக்கால் பாகம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் கொண்டே விவசாயம் பார்க்கிறது அமெரிக்கா. சகட்டு மேனிக்கு மரபணு மாற்றம் செய்து இருக்கிறார்கள் அவர்கள். தாவர விலங்கின கலப்பு அதில் பேர் போனது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

இந்த விஷயத்தில் சீனர்கள் தான் கில்லாடிகள்…. அவர்கள் மரபணு விதைகளில் வீர்யம் உள்ளனவற்றை கண்டறிந்து மேம்படுத்தல் செய்து பயிரிட்டு வருகின்றனர். உரங்களை உபயோகிப்பது வெகுவாக குறைந்து விட்டனர். இந்த மகசூலுக்கு அரபு நாடுகளில் ஏக கிராக்கி….கனடா வரை இதன் வீச்சு உண்டு.இதனால் அமெரிக்க விளைச்சல் நாளுக்கு நாள் தேக்கமடைந்து வருகிறது.அவற்றை சரிகட்ட நம் இந்திய தேசத்தை குறிவைத்து இருக்கிறார்கள்.

உலக அளவில் இந்திய பால் மற்றும் அது சார்ந்த உற்பத்தி பொருட்கள் முதல் இடத்தில் இருக்க… அமெரிக்கா, பால் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களுக்கான சந்தையை திறந்து விடச் சொல்லி நிர்பந்தித்து வருகிறது டிரம்ப் நிர்வாகம். அடுத்ததாக மரபணு மாற்றப்பட்ட தானிய பயிர் வகைகள் மற்றும் பார்லி ஒட்டு இன வீர்ய விதைகளை இந்தியாவில் பயிரிட அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் அவர்கள்.

இவையெல்லாம் உணவு தேவைகளை தாண்டி மது உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இடம் கொடுக்க வில்லை என்றதும்….. இந்திய தேசத்தை போதை பொருள் வர்த்தகம் சார்ந்த நாடுகளின் பட்டியலில் இந்த வாரம் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள். எத்தனை சில்லுண்டிதனம்….

இவற்றுக்கெல்லாம் நம் இந்திய பிரதமர் என்னவிதமான எதிர்வினை ஆற்றி இருக்கிறார்…..?!?!

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க டீப் ஸ்டேட் வகையறாக்கள் மூலம் கொடுத்துவந்த… விவசாயிகள் போராட்டத்தை நாசுக்காக கையாண்டு வெற்றி கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான அமெரிக்காவுக்கு இந்திய உற்பத்தி சந்தையை திறந்து விட முடியாது என தீர்த்து சொல்லி அதிரடித்திருக்கிறார். ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட முடியாது என்கிறார்.

மொத்தத்தில் அடிபணிய முடியாது…..ஆனதை பார்த்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

இது அமெரிக்காவை கொந்தளிக்க செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் மேற்கொண்ட விசா மற்றும் குடியுரிமை சமாச்சாரங்கள்.

இதில் இந்தியா சாதிக்குமா….????
நிச்சயமாக அந்த கவலையே வேண்டாம்.

ஏனெனில் தற்போதைய இந்திய முன்னெடுப்புகள் அத்தனையும் பின்னிணைப்பில் டாலர் எனும் கரன்சியை குறிவைத்தே பதம் பார்த்து வருகிறார்கள்.

உதாரணமாக டிரம்ப் நிர்வாகம் உலக அளவில் இரண்டு நாடுகள் மீது மட்டுமே சுமார் 50% வரிவிதிப்பு செய்து நடைமுறை படுத்தியது. ஒன்று இந்தியா மற்றொன்று பிரேசில். இது வெளிப்பார்வைக்கு…

ஆனால் இது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள்.BIRCS என்கிற ஆங்கில சொல்லின் B பிரெசிலை குறிக்கும் I இந்தியாவை குறிக்கும். இவர்களின் அடிநாதம் RIC. அதாவது ரஷ்யா,இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் ஒன்றிணைந்து முதலில் உருவாக்கியது தான் ரிக். இன்றைய தேதியில் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் ஆக வளர்ந்து நிற்கிறது…..

இன்றைய தேதியில் இந்த கூட்டமைப்பில் 21 நாடுகள் அதிகாரபூர்வமாக ஒன்றிணைந்து இருக்கிறார்கள்…… உலகப் பொருளாதாரத்தில் சுமார் 68% சதவீதமும் உலக மக்கள் தொகையில் 73% இந்த குடையின் கீழ் வருகிறார்கள். இவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உண்டென்றால் அது நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாத்திரமே.

இது அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவரும் சொல்லி வைத்தார் போல இணைய வழி கரன்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இன்று உலக அளவில் பல நாடுகளில் UPI ஏற்றுக் கொள்ளப்பட்டு கோலோச்ச ஆரம்பித்து விட்டது.கொஞ்சம் கொஞ்சமாக டாலர் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது.

அதன் பொருட்டே நம் கைகளை கொண்டே நம் கண்ணை குத்தும் விதமாக அமெரிக்க வாழ் இந்தியர்களை கொண்டே நம் இந்திய தேசத்தை பதம் பார்த்து விடலாம் என பகல் கனவு காண ஆரம்பித்து இருக்கிறார்கள் டிரம்ப் தரப்பில்…..

நடக்கும் அத்தனைக்கும் இதுவே மூல காரணம்.

நம் இந்திய பிரதமரும் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வரும் தீபாவளி திருநாளுக்கு கூடுமானவரை நம் இந்திய உற்பத்தி பொருட்களையே வாங்கிட பாருங்கள்….. அதற்கே முன்னுரிமை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில் அந்நிய செலாவணி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சற்றேறக்குறைய சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் புழங்கி வருகிறது… இவற்றை நம்மால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர். மறைமுகமாக இது அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட சவால் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

தற்சார்ப்பில்… தன்னிறைவு கண்டு ஏற்றுமதிக்கான வழிவகைகளை ஆராய்ந்திட பாருங்கள், இந்த அரசு அதற்கு துணை நிற்கும் தேவையான அனைத்திற்கும், ஆவண செய்யும் என உறுதி அளித்திருக்கிறார்.

இவையெல்லாம் மிகப் பெரிய முன்னெடுப்பு சமாச்சாரங்கள். புரிந்துக்கொள்ள பாருங்கள்.

அதைவிடுத்து மித்ரோன்…… என மேடையில் நின்று அலப்பறை கொடுக்கும் கழிசடைக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டாம். அந்த பன்னாடைக்கு இந்த பத்து ஆண்டுகளில்… பன்னிரெண்டு ஆண்டுகளில் எந்த ஒரு நல்லதும் கண்ணுக்கு தெரியவில்லை என்பதாக எடுத்து கொண்டு நகர்வதே சாலச் சிறந்தது. நாட்டின் நலன் சார்ந்த சமாச்சாரங்களில் அக்கறை கொண்டவர்களுக்கு நிச்சயம் நாட்டின் தற்போது உள்ள நிலை புரியும். அது போதும்.

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

மஹாளய அமாவாசை தர்ப்பணம்; மந்திரம். செய்முறை!

amavasai pitru tharpanam - 2026

யஜுர் வேதம் – ஆபஸ்தம்பம் – மஹாளயபக்ஷ புண்யகால தர்ப்பணம்
மஹாளய பக்ஷம் தினமும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டும்
21.09.2025 – ஞாயிற்றுக்கிழமை – அமாவாஸ்யை

மஹாளய அமாவாஸ்யா புண்யகாலம்

ஆசமனம்.
அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சிலகட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶுக்லாம் + ஶாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்,
மமோபாத்த + ப்ரீத்யர்த்தம்,
அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஶய: ஶ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம், மத்யே
விஶ்வாவஸு நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அத்ய அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ வாஸர: பானு வாஸர யுக்தாயாம் பூர்வ பல்குநீ நக்ஷத்ர (காலை மணி 10:58 வரை) உபரி உத்தர பல்குநீ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணு யோக, விஷ்ணுகரண, ஏவங்குண ஸகல விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

ப்ராசீனாவீதி (பூணலை இடம் போட்டுக் கொள்ளவும்)

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

……..கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதாமஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…………கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாணாம் உபயவம்ஶ பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் வர்கத்வய அவஶிஷ்ட பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாம் துரிரோசந ஸம்க்ஞகானாம் விஶ்வேஷாம் தேவானாம் மஹாவிஷ்ணோஶ்ச அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய அமாவாஸ்யா புண்யகாலே மம ஸகாருணிக வா்கத்வய பித்ரூன் உத்திஶ்ய அத்யதன பக்ஷீய மஹாளய தில தர்ப்பணம் கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும். பூணலை இடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச// அஸ்மின் கூர்ச்சே மம ஸகாருணிக வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி: ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா, பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாஶ்ச அனுகைஸ்ஸஹ//

மம ஸகாருணிக வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

தர்ப்பண மந்த்ரம்

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ருதக்ஞா: தேனோ வந்து பிதரோஹவேஷு
……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அங்கிரஸோந: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியாநாம் அபிபத்ரே.ஸௌமனஸே ஸ்யாம
……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஆயாந்துந: பிதர: மனோஜவஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்
……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்
……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம:

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

யேசேஹ பிதர: யேசனேஹ, யாகுஶ்ச வித்மயாநு உசனப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்து
……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுவாதா: ருதாயதே, மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ன: ஸந்து ஓக்ஷதீ:
……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுநக்த்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துந: பிதா
……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுமான்ன: வனஸ்பதி: மதுமான் அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துந:
……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

……..கோத்ரா: ………… நாம்நீ: வஸுரூபா: மாத்ரூஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: ………… நாம்நீ: ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: ………… நாம்நீ: ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

……..கோத்ரா: ………… நாம்நீ: வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: ………… நாம்நீ: ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: ………… நாம்நீ: ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

…..கோத்ரான்……..ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

…..கோத்ரான்……..ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

…..கோத்ரான்……..ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ: வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ: ருத்ரரூபா: மாது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ: ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

தத்தத் கோத்ரான் தத்தத் ஶர்மண: வஸு வஸு ஸ்வரூபான் வர்கத்வய அவஶிஷ்ட பித்ருவ்ய மாதுலாதீன் ஸர்வான் காருணிக பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, ஸகாருணிக வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே ஸகாருணிக வா்கத்வய பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச,
நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம:
யாநிகாச பாபாநி ஜன்மாந்த்ர க்ருதானிச தாநி
தாநி விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே,
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச,
ஜகத்திதாய க்௫ஷ்ணாய கோவிந்தாய நமோ நம:

நமஸ்கார:

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச// அஸ்மாத், கூர்ச்சாத், ஆவாஹித மம ஸகாருணிக வர்கத்வய பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்திமாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி (பூணூல் வலம்)
ஆசமனம்
மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர – ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே நமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்க்காணும் மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
மயா அனுஷ்டித திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்

1100 ஏக்கர் கோரியது வஃக்ப்; வெறும் 2 ஏக்கர்தான் என்றது நீதிமன்றம்!

chennai highcourt - 2026

1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்தாக மசூதி கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,100 ஏக்கர் நிலத்திற்கு மேல் உள்ள ஒரு மசூதியின் வக்ஃப் சொத்தாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து. 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் செப்புத் தகடு மூலம் வழங்கப்பட்ட மான்யம் (மானியம்) அடிப்படையில் அந்த மசூதிக்கு 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆகஸ்ட் 18, 2016 அன்று கண்டியாபேரியில் உள்ள கன்மியா பள்ளிவாசல் (மசூதி) முத்தவல்லிக்கு ஆதரவாக வக்ஃப் தீர்ப்பாயம் (திருநெவேலி முதன்மை துணை நீதிமன்றம்) பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிவில் சீராய்வு மனுவை ஓரளவுக்கு அனுமதித்த நீதிபதி எம். தண்டபாணி இவ்வாறு தீர்ப்பளித்தார்.

மாநில அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி மற்றும் அமிகஸ் கியூரி செவனன் மோகன் ஆகியோர் முன்வைத்த விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதி இந்த முடிவை எடுத்தார். மசூதிக்கு எந்த நிலமும் உரிமை இல்லை என்று அது வாதிட்டது.

வக்ஃப் தீர்ப்பாயத்தில் 2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில் மசூதியால் பட்டியலிடப்பட்ட அனைத்து சர்வே எண்களும் 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் (அழிப்பு மற்றும் ரயோத்வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் விதிகளின் கீழ் 1966 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் வாதிட்டார்.

அரசாங்கம் சொத்துக்களை ரயோத்வாரி நிலங்களாக அறிவித்தது, இதன் மூலம் வக்ஃப்பின் உரிமையை விலக்கியது, மேலும் அந்த நிலங்களில் பல பகுதிகள் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன என்று ஏஏஜி கூறினார். 362 பேர் நிலங்களை ஒதுக்கீட்டு பட்டாக்களின் அடிப்படையில் விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அரசாங்கத்தின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, ஒரு சொத்து வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டவுடன், அது அப்படியே இருக்கும் என்று கூறினார். செப்புத் தகட்டில் உள்ள தெலுங்கு கல்வெட்டு 1925 ஆம் ஆண்டிலேயே படியெடுக்கப்பட்டதால், 1712 ஆம் ஆண்டு மசூதிக்கு வழங்கப்பட்ட மானியத்தை சந்தேகிக்க முடியாது என்று அவர் கூறினார்.

கல்வெட்டில் இது “மசூதி தர்மத்திற்கான சர்வ மான்யம்” என்றும், “சூரியன் மற்றும் சந்திரன் இருக்கும் வரை இது மகனிடமிருந்து பேரனுக்கு தொடரும்” என்றும் எழுதப்பட்டிருந்தது. மதுரை சமஸ்தானத்தின் முன்னாள் ஆட்சியாளரால் வழங்கப்பட்ட வரி இல்லாத மானியம் 1865 மற்றும் 1866 ஆம் ஆண்டுகளின் இனாம் கண்காட்சி பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மானியத்தின் மீதான மசூதியின் உரிமையை திருநெல்வேலி (திருநெல்வேலியின் முந்தைய பெயர்) துணை நீதிமன்றம் மார்ச் 8, 1955 அன்று உறுதிப்படுத்தியது, மேலும் துணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போதிலும், மாநிலத்தால் மேல்முறையீட்டில் அது எடுக்கப்படாததால் அந்த ஆணை இறுதியானது என்று நீதிபதி கூறினார்.

இருப்பினும், மசூதிக்கு எவ்வளவு நிலம் உரிமை உண்டு என்பது குறித்து வந்தபோது, ​​செப்புத் தகடு கல்வெட்டு 75 கோட்டா நிலம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறுகிறது என்றும், கூகிள் தேடலில் ஒவ்வொரு கோட்டா/கட்டாவும் 0.03124 ஏக்கருக்குச் சமம் என்று காட்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே, மசூதிக்கு மொத்தம் 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உண்டு, அதற்கு மேல் எதுவும் இல்லை என்று நீதிபதி தண்டபாணி கூறி, செப்புத் தகடு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் எல்லைகளின் அடிப்படையில் அந்த நிலத்தை அடையாளம் காண தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

சர்வே மற்றும் எல்லைச் சட்டம் 1923 இல் மட்டுமே நடைமுறைக்கு வந்தது, அதுவரை, நிலங்களுக்கு சர்வே எண்களை ஒதுக்கும் நடைமுறை நடைமுறையில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், 1,100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏராளமான சர்வே எண்களின் மீது மசூதி எவ்வாறு உரிமை கோரியது என்பதை விளக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி கூறினார்.

“இந்த விஷயத்தில் சட்ட நிலைப்பாட்டின் புத்திசாலித்தனமான விளக்கத்துடன் இந்த நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியதற்காக, கற்றறிந்த அமிகஸ் திரு. செவனன் மோகன் வழங்கிய உதவிக்கு இந்த நீதிமன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, இதன் மூலம் இந்த நீதிமன்றம் கையில் உள்ள பிரச்சினை தொடர்பான சட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் தனது கருத்தை வழங்க முடியும்” என்று நீதிபதி தனது தீர்ப்பை முடித்தார்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!

madurai first sani kizhamai perumal temple - 2026

உசிலம்பட்டி அருகே புரட்டாசி முதல் சனிக்கிழமையில் 100ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீமானூத்து, கல்லூத்து கிராமத்திற்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடந்து, அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பூஜைகளை, அர்ச்சகர் தெய்வச்சிலை செய்தார்.

உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியில் புத்தூர் மலை அடிவாரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் மலைராமர் திருக்கோவிலில் மலைராமர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.