Home Blog Page 5602

‘இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்? புலம்பின ஆசாமி.

kanchi periyava - 2026

“பாம்பு,அக்னி,அபஸ்மாரம்,பேய்,பிசாசு,பூதகணம் இதெல்லாம் எதுக்காகவேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?”-ஒரு ஆசாமியைப் பார்த்து பெரியவா.

‘இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு பதிலையும் தான் பரமாசார்யா இப்படி மறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது அந்த ஆசாமிக்கு ​

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி-27-08-2015-சுருக்கம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சி மடத்துல ஒரு விசேஷ நாள்ங்கறதால கூட்டம் நிறையவே இருந்தது ஒரு நாள்.மடத்து சிப்பந்திகள் நாலஞ்சுபேர் ஆங்காங்கே நின்னு ஒழுங்குபடுத்தி பெரியவா தரிசனத்துக்கு அனுப்பிண்டு இருந்தா.

நேரமாக நேரமாக கூட்டம் அதிகரிச்சு, வரிசை நீண்டுண்டே போனதே தவிர கொஞ்சம் கூட குறையலை. அந்த சமயத்துல வரிசையல ஒரு இடத்துல கொஞ்சம் நெரிசல் ஏற்பட்டதால, நான் முன்னால, நீ முன்னாலன்னு சிலர் முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டா.அதைப் பார்த்துண்டே இருந்த மடத்து சிப்பந்தி ஒருத்தருக்கு சுர்ருன்னு கோபம் வந்துடுத்து.

கசமுசன்னு கூச்சல் போட்டுண்டு இருந்தவாளை நெருங்கி சகட்டுமேனிக்கு திட்டி, கண்டிச்சு சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்.சட்டுன்னு அங்கே அமைதி நிலவினாலும் சிலர் மனசுக்குள்ளே கறுவ ஆரம்பிச்சா.அவாளோட ஆத்திரத்துக்கு தூபம் போடறமாதிரி சிலர் சேர்ந்துண்டா.

“மடத்துல இருக்கிற அந்த சிப்பந்தி எப்பவுமே இப்படித்தான் சிடுசிடுன்னு விழுவார்.பரமாசார்யா பக்கத்துலயே இருந்தும் கொஞ்சம் கூட பக்குவமே இல்லாம இருக்காரே. இதெல்லாம் பெரியவாளுக்கு தெரியாமலா இருக்கும்.தெரிஞ்சிருந்தாஇந்த
மாதிரி ஆசாமியெல்லாம் பக்கத்துல சேர்த்துண்டிருப்பாரா?
மடத்துல இருந்தும் இப்படி மடத்தனமா நடந்துக்கறாரே!

இவாளையெல்லாம் எப்படித்தான் இங்கே வைச்சுண்டிருக்காளோ!” ஆளுக்கு ஆள் பேசிக்க ஆரம்பிச்சா.

கூட்டம் மெதுவா நகர்ந்தது.சலசலத்த நபர்கள் பெரியவாளை தரிசனம் பண்ணவேண்டிய முறை வந்தது.அந்த நபர்கள்ல முதல்ல நின்னவரைப் பார்த்தா ஆசார்யா, “நோக்கு சிவபுராணம் தெரியுமோ?” அப்படின்னு கேட்டார்.

“ஏதோ படிச்சிருக்கேன் பெரியவா!” கைகட்டி வாய் பொத்தி பவ்யமா சொன்னார், அந்த ஆசாமி.

“அதுல இருந்து உன்னண்டை ஒரு கேள்வி கேட்கலாமோ?”

“பெரியவா மன்னிக்கணும்..எனக்கு புராணத்துல பாண்டித்தியமெல்லாம் இல்லை. ஏதோ படிச்சிருக்கேன்… அதனால்…! இழுத்தார் அவர்.

ஒரே ஒரு சின்னக்கேள்வி பரமேஸ்வரனோட ஸ்வரூபம் எப்படி இருக்கும்னு தெரியுமோ? அதைச் சொன்னா போதும்.

“மகேஸ்வரனோட வடிவங்கள்ல மூணு பிரிவு இருக்குன்னு புராணம் சொல்றது. ரூபம்,அரூபம்,ரூபா ரூபம்னு..!”

தயங்கித் தயங்கி சொன்னவரை தடுத்தார் பெரியவா.

அவ்வளவு டீப்பா எல்லாம் போக வேண்டாம் அவரோட ரூபத்துல என்னவெல்லாம் இருக்கும்? இதெல்லாம் நீ பார்த்த சித்திரங்களை நினைவுபடுத்திண்டு சொன்னாலே போதும்!” ..மென்மையா சொன்னார் பெரியவா.

“சதாசிவனோட சிரசுல கங்கை இருக்கும். அவரோட ஒரு கையில அக்னி, இன்னொரு கையில மான், மற்றொண்ணுல மழு, அடுத்ததுல உடுக்கை இப்படி எல்லாம் இருக்கும்.
இடையில புலித்தோலை உடுத்திண்டு இருப்பார்.
ஒவ்வொண்ணா பட்டியல் போட்டார் அந்த ஆசாமி.

பொறுமையா கேட்டுண்டிருந்த பெரியவா,’அவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு..” அப்படின்னா.

ஒரு சில விநாடிகளுக்கு அப்புறம், பெரியவா, “சொல்ல மறந்துட்டேன்.சர்ப்பம் அவரோட சரீரத்துல பல இடங்கள்ல சுத்திண்டு இருக்கும். காலுக்குக் கீழே அபஸ்மாரத்தைப் போட்டு மிதிச்சுண்டு இருப்பார். பேய், பிசாசு,பூதகணங்கள் எல்லாம் அவர் பக்கத்துல சுத்தி
நின்னுண்டு இருக்கும்!”

சொல்லி முடிச்சவரோட முகத்துல ஏதோ பத்து மார்க் கேள்விக்கு ஒருவரிகூட விடாம பதில் எழுதிட்டு முழு மார்க் கிடைச்சுடும்னு நினைச்சு சந்தோஷப்படற பையன் மாதிரி பரமாசார்யா கேள்விக்கு தான் ரொம்ப சரியா பதில் சொல்லிட்டோம் கறாப்புல ஒரு பூரிப்பு
தெரிஞ்சுது.

“ரொம்ப சரியா சொன்னே..இன்னொரு கேள்வி பாக்கியிருக்கு அதுக்கும் பதிலை சொல்லிடு. நீ இப்போ சொன்னியே, பாம்பு,அக்னி,அபஸ்மாரம்,பேய்,பிசாசு,பூதகணம் இதெல்லாம்
எதுக்காகவேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?”

ஆசார்யா கேட்டதும் அப்படியே திகைச்சு நின்னார் அந்த ஆசாமி.
பொற்கிழி உனக்குத்தான்னு செண்பக பாண்டியன் சொன்னதும் பிரகாசமா மாறின தருமியோட முகம், உன் பாட்டுல பிழை இருக்குன்னு நக்கீரர் சொன்னதும் இருண்ட மாதிரி,அவரோட முகம் சட்டுன்னு மங்கித்து. அப்படியே கையைக் கட்டிண்டு
இறுக்கமா நின்னார்.

ஒரு நிமிஷம் கழிச்சு ஆசார்யாளே அதுக்கான காரணத்தை சொல்லத் தொடங்கினார்.;

“அரவம்,அபஸ்மாரம்,அக்னி இப்படி எல்லாமே ஆபத்தானதுகள் சர்ப்பத்தை விட்டா அது சகலரையும் கடிச்சு வைச்சுடும்.

அக்னியைப்பத்தி சொல்லவே வேண்டாம்.எல்லாமும் பஸ்மம்தான்.அபஸ்மாரம்கறது ஒரு மாதிரி மயக்கத்தை உண்டு பண்ணி எழுந்திருக்கவிடாம செஞ்சுடும்.இன்னும் பேய்,
பிசாசு, பூதங்களைப்பத்தி சொல்லவே வேண்டாம்.அதெல்லாம் ஸ்வதந்தரமா விட்டா எல்லோருக்குமே ஹிம்சை பண்ணிடும்.

“அதனாலதான் அதையெல்லாம் வெளியில எங்கேயும் போக விடாம தனக்குப் பக்கத்துலயே வைச்சுண்டு இருக்கார் பரமேஸ்வரன்.இத்தனையையும் தான் எங்கே போனாலும்
கூடவே கூட்டிண்டு போறார்.அதுகளோடதான் ஆடறார்.

சஞ்சாரம் பண்ணறார்.

சனகாதிகள் மாதிரியான முனிவர்கள் கூட எப்பவும் அவர் கூடவே இருக்கறது இல்லை. ஆனா, துஷ்டர்களை எப்பவும் தன்கூடவே வைச்சுண்டு கண்காணிச்சுண்டே இருக்கார்
அப்படிப்பட்டவாளை வெளியில விட்டுடாம தன்னண்டையே வைச்சுக்கறதுதான் பரமேஸ்வரனோட கிருபை புரிகிறதா?”

பரமேஸ்வரனோட மகிமையை மட்டுமில்லாம மடத்து சிப்பந்தி ஒருத்தர் கோபப்பட்டபோது ‘இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு
பதிலையும் தான் பரமாசார்யா இப்படி மறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது அந்த ஆசாமிக்கு.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் திருப்பம்: சோதனைக்கு தயார் என்கிறார் திலீப்

Kavya Bhavan Dileep - 2026

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மலையாளத் திரையுலகில் பிரபலம் ஆனவரான நடிகர் திலீப்பும், அவரது மனைவி மஞ்சு வாரியாரும் பிரிவதற்கு நடிகை பாவனாதான் காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் காரணத்தால்தான், நடிகை பாவனாவை அவர் கடத்தி துன்புறுத்த ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திலீப் மறுத்து வந்தார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் திலீப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் பாவனாவைக் கடத்த சொன்னது திலீப்தான் என்ற ரீதியில் எழுதி, திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் இதனை மறுத்த திலீப், பல்சர் சுனில் தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்தார். மேலும், பாவனா கடத்தல் விவகாரத்தில் எந்தவித சம்பந்தமும் தனக்கு இல்லை என்றும், இது தொடர்பான எந்த விசாரணைக்கும், சோதனைக்கும் தான் தயாராக இருப்பதாகவும் திலீப் தனது பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

அவர் எழுதியிருப்பது: பாவனா கடத்தல் விவகாரத்துக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக எனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலையாளத் திரைப்பட உலகில் எனக்குள்ள மரியாதையைக் கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ராமலீலா திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்று வரும் கூட்டு சதி என்றே இதை நான் பார்க்கிறேன்.

கடத்தல் விவகாரத்தில் என்னைத் தொடர்புபடுத்தி எழுந்துள்ள சர்ச்சையால் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

இதனிடையே அவரது கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திருமதி மோடியைத் தேடிய அதிகாரிகள்! அமெரிக்க சுவாரஸ்யம்!

no mrs modi gabbar singh - 2026

அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. இது குறித்து, இணையத்தில் புதிய பரபரப்பாக, இந்த சுவாரஸ்ய நிகழ்வு வேகமாகப் பரவி வருகிறது.

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர் அதிபரின் வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது அவர் கார் கதவுகளைத் திறக்க காரின் இரு புறமும் அதிகாரிகள், வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

பொதுவாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரதமர்கள், அதிபர்கள் உள்ளிட்டோர், மனைவியுடன் தான் வருவர். அதுபோல் பிரதமர் மோடியும் மனைவியுடன் வந்திருப்பார் என்ற நினைவில், அவரது மனைவிக்கு உதவும் வகையில் காரின் அடுத்த பக்கத்துக் கதவையும் திறந்து வைத்தபடி ஒருவர் நின்றார். ஆனால், மற்றொரு கதவைத் திறந்துகொண்டு மோடி மட்டும் கீழே இறங்கிச் சென்று அதிபருடன் பேசத் தொடங்கினார்.

இது தொடர்பான வீடியோ காட்சி, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
1. மோடியின் கார் வருகிறது.
2. வீரர்கள் வணக்கம் போடுகின்றனர்
3. மோடியின் மனைவி வெளியே வருவார் என நினைத்து, கார்க் கதவை திறக்க செல்கிறார் ஒருவர்.
4. ஆனால், அங்கு மோடியின் மனைவி இல்லை…
இந்த வாசகங்களுடன் ஒரு வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

 

காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

kazaniyuran - 2026

இன்று … வருந்தத்தக்க செய்தியைப் பகிர்ந்தார் நிமிரவைத்த நெல்லை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

எங்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் பிறந்ததால் தன் பெயரை கழனியூரான் என்றே வைத்துக் கொண்ட மூத்த நண்பர் எம்.எஸ்.அப்துல் காதர் இன்று மறைந்தார் என்ற செய்திதான் அது… இன்று (27.6.2017) காலை சுமார் 10.47 மணியளவில் இயற்கை அவர் உயிரைப் பறித்துக் கொண்டது.

1954ல் பிறந்தவர். ஆசிரியப் பணியில் இருந்தார். என்பள்ளிக்கூட வயதில் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைத்து அவருக்கு நான் அறிமுகமானேன். அதன் பின்னும் சிற்சில கூட்டங்களில் சந்திப்பேன். நான் மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி.யின் பெயரனார் தீப.நடராஜன் ஐயா இல்லத்தில் வைத்து சந்தித்தேன். அந்த அரை நாளில் ஒரு தீபாவளி மலருக்கான அனைத்து விஷயங்களை அந்த இல்லத்தில் இருந்தபடியே முடித்தேன். மஞ்சரி தீபாவளி மலர் 2006ல் அவர் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

கரிசல்கட்டு நாயகன் என அன்போடு நாங்கள் அழைத்து மகிழும் எழுத்தாளர் கி.ரா.,வின் அத்யந்த சீடர். எனவே, கி.ராஜநாராயணன் குறித்து நீங்களே எழுதுங்கள் என்று அவரிடம் பொறுப்பைக் கொடுத்தேன். சிறப்பாக செய்தார்.

கதைசொல்லி – இதுதான் கரிசல்காட்டு இலக்கியத்தின் தளமாக இருந்தது. இந்தக் கதைசொல்லி – இதழாகப் பரிமளித்தது. அதன் பொறுப்பாசிரியராகவும் திகழ்ந்தார் கழனியூரான்.

கழனியூரான் என்பேன். அவர் கழனியூரன் என்று ஒரு காலை எடுத்துவிட்டுப் போட்டுக் கொள்வார். ஊரைச் சொல்லி மண் மணத்தோடு பெயரை அழைத்துக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்!

மதங்களைக் கடந்து, சாதிச் சிக்கல்களைக் கடந்து, கொள்கைகளைக் கடந்து, அரசியல் பார்வைகளைக் கடந்து நட்பு பேணிய எத்தனையோ பேரில், என் மனத்தில் நிறைவாய் அமர்ந்தவர் இந்தக் கழனியூரன் எனும் அப்துல்காதர்!

கண்டவுடன் செய்யும் கைகுலுக்கலுக்கு விடை கொடுத்து, ஊர்ப் பாசத்தால் உடலொடு ஆரத் தழுவிக் கொள்ளும் நட்புறவு எங்களது. எனைவிட வயது 22 பெரியவர். அந்த மூத்த நட்பு, இன்று எனைக் கடந்து சென்று விட்டது.

நேற்றிரவு கூட கி.ரா. 95 நிகழ்வு குறித்து கே.எஸ்.ஆர் உள்ளிட்ட நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தாராம். அவரது மகன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருநெல்வேலி சென்றிருக்கிறார்.

சந்தோசபுரத்தில் உள்ள தனது மகனின் இல்லத்தில் வழக்கம் போல் இன்றைய பணிகளை செய்து கொண்டிருந்தவர், காலை உணவாக கஞ்சி மட்டுமே அருந்தியுள்ளார். பின் திடீரென தனது உடல்நிலை ஏதோ போல இருந்ததால் அருகிலிருந்த தனது நண்பரான நெல்லையைச் சேர்ந்த வேம்புவை அழைத்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களுடன் கால் டாக்ஸி மூலம் சோழிங்கநல்லூரில் உள்ள Global Hospital – Chennai மருத்துவமனைக்கு 10.30 மணி அளவில் கொண்டு சென்றுள்ளனர். வீட்டில் இருந்து அவரை வெளியே அழைத்து வரும்போதே நாடித்துடிப்பு குறைந்து அவரால் நடக்க இயலாத நிலை இருந்ததாம்.

பின் 10.47 மணி அளவில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாயிலாகக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நாளை பிற்பகல் 3 மணி அளவில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

என் சகோதரன் தோனி: வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிராவோ!

bravo - 2026

எம்.எஸ்.தோனி என் சகோதரன் என்று மேற்கித்திய தீவுகளின் அணி வீரர் பிராவோ இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேற்கித்திய தீவுகள் அணி ஆல் ரவுண்டரான பிராவோ ஐபிஎல்லில் கலந்துகொண்டு விளையாடியவர். அதுவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருந்தபோது, இந்திய கிரிக்கெட் வீரர்களுடன், குறிப்பாக தோனி, ரெய்னா உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். அவர்களின் நட்பை சென்னை சூப்பர் கிங்க் அணி ரசிகர்கள் பெரிதும் ரசித்துப் போற்றினர்.

தற்போது, பிராவோவின் இந்த நட்புறவு, மேற்கித்திய தீவுகளில் இந்திய அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்திலும் எதிரொலித்துள்ளது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனிடையில் பிராவோ, இந்திய கிரிக்கெட் வீரர்களை தன் இல்லத்துக்கு அழைத்தார். அவரது அழைப்பின் பேரில், தோனி, விராட் கோலி, ஷிகர் தவான், புவனேஷ்வர், ரஹானே என ஒரு பட்டாளமே சென்றது. தோனியுடன் அவரது மகள் ஸிவாவும் சென்றார்.

அவர்களது வருகையை ஒட்டி தனது இஸ்டர்கிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டார் பிராவோ. தோனியுடன் பிராவோ, அவரது அம்மா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிராவோ, மற்றொரு தாயிடமிருந்து எனக்குக் கிடைத்த சகோதரன் நேற்றிரவு எனது இல்லத்தில் அவரது அழகான மகளுடன் என்று புகைப்பட விளக்கம் போட்டு பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு வாங்க: டிரம்புக்கு மோடி அழைப்பு!

modi trumb handshake - 2026

வாஷிங்டன்:

அமெரிக்கா அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி, அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தானும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என வெகு ஆர்வமாக இருப்பதாக டிரம்ப்பின் மகள் இவான்க்கா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது, இந்தியாவுக்கு டிரம்ப் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற டிரம்ப், தன் மகள் இவான்கா, இந்தியா வருவதற்கு மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகக் கூறினார். இதையடுத்து இவான்காவை இந்தியாவில் வரவேற்பதற்கு தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக மோடி பதிலளித்தார்.

 

டிவி., செய்தி சேனல் அநாகரிக விவாதம்: எஸ்.வி.சேகருக்கு சுப.வீ.,யின் கேள்விகளும் பதிலடிகளும்!

sekar subhavee - 2026

சென்னை:

டிவி செய்தி சேனலில் நடைபெற்ற அநாகரிக விவாதம் தொடர்பாக பாஜக.,வின் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அவரது பதிவுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேரா. சுப வீரபாண்டியன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் முன்வைத்துள்ள கேள்விகள்:

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம்.
நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.

  1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனை உங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. “சாதியும் மதமும் நமக்குத் தாய், தந்தை போல” என்று கூறியுள்ளதோடு, “ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல” என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய் போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், ‘சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக் காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில் வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை.

  2. “எந்தப் பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர் நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி விட்டனர் என்பீர்கள்! ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்து போய்விட்டது?

  3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச் சொல்ல முடியவில்லையே?

  4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள். மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறிய ‘பிரபலங்களைத்’ தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்ற ஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதே இல்லையா? அன்று மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.

  5. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளை அபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம். ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின் மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்! செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால், உங்களின் கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள் சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே!

இப்போதும்
அன்புடன்
சுப. வீரபாண்டியன்
– என்று சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சுப.வீரபாண்டியனின் இந்தக் கேள்விகளுக்கு சமூக வலைத்தளங்களில் பதில் கருத்துகளும் வரத் தொடங்கியுள்ளன. எஸ்.வீ.சேகர் ஒவ்வொரு சாதியையும் அவரவர் உயர்த்திப் பேசிக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார், அடுத்த சாதியை மட்டம் தட்டாதீர்கள் என்று கூறினார். எல்லோரும் உயர்ந்த சாதி எனும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லோருமே உயர்ந்த நிலைக்கு இருப்பார்கள், ஏன் கீழ் நிலைஎன்று எண்ணப்போகிறார்கள் என்று சேகர் நினைக்கலாம். ஆனால் சுப.வீ. போன்றவர்கள் மட்டந்தட்டிப் பேசி சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும், பதற்றத்தை உருவாக்குவதாகவும்தான் செயல்படுகிறார்கள்; சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியையும் பார்ப்பன அடையாளமிட்டு காழ்ப்பு உணர்ச்சியை விதைப்பவர்கள்தான் சுபவீ போன்றவர்கள் என்று சிலர் கருத்து வெளியிட்டனர். சுப.வீ.யும் எஸ்.வீ.சேகரும் ஏன் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும்? அப்படி சேகர் ஏதும் சொன்னாரா? அல்லது அப்படி ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும் என்று எஸ்.வீ.சேகர் விரும்பினாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

சங்கரராமன் கொலை வழக்கில், காஞ்சிபுரத்தில் முற்றுகையிடுவோம் என்று கருணாநிதியும் திகவினரும் மிரட்டி, ஜெயலலிதா மூலமாக ஒரு பொய்யான வழக்கைப் போட கூட்டணி நாடகம் நடந்தது என்றும், இப்படி ஜோடிக்கப்பட்ட வழக்கு போடப்பட்டதால்தான் பார்ப்பனர்கள் தமிழகத்தில் தங்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா விவகாரத்தில், அவர் பார்ப்பனர் என்பதை எவரும் முன்னிறுத்த வில்லை என்றும், அவர் சார்ந்த திராவிடக் கழகங்களைத்தான் முன்னிறுத்தினார்கள் என்றும், ஜெயலலிதா காலமான பின்னர், இத்தனைக்கும் காரணமாக அமைந்து பின்னணியில் இயங்கியது பார்ப்பன ஜெயலலிதா அல்ல, அது ஒரு திருடர் குடும்பம் என்றும், சேருவார் சரியில்லாமல் சேர்ந்த பாவத்தை பார்ப்பன செயலலிதா அனுபவிக்க நேர்ந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.

பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் பார்ப்பன மாணவர்கள், 99 சதவீதம் எடுத்தாலும் மேல்படிப்புக்கு எத்தகைய சிரமத்தை அனுபவிக்கின்றனர் என்பதைத்தான் சேகர் குறிப்பிட்டாரே அன்றி, பள்ளிகளில் படிப்பதற்கு அல்ல என்பதை பேராசிரியராக இருந்த சுப.வீ., ஒரு கல்வியாளராகப் புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யோகா என்பதைப் பற்றிப் பேசப் போகின்றபோது, யோகா என்பதை பார்ப்பனர்கள் மட்டுமே கண்டுபிடித்து திணித்தார்கள் என்று இல்லாதபோது, அதில் பார்ப்பனீயம் சாதீயம் எல்லாம் எங்கே வந்தது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், குறிப்பிட்ட சாதியை மட்டுமே வாயில் வந்த படி பேசும் அறிவு நிலைக்கு சாதி ஒழிப்பு கருத்தாளர்களுக்கு எந்த அடிப்படையில் பதிலடி கொடுப்பது என்றும், அதில் நாராயணன் செய்தது சரியே என்றும் வாதிடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

அரசியல் இயக்க ரீதியாக தொடர்பில் உள்ளவர் எனும் வகையிலும், தனிப்பட்ட வகையில் நண்பர் எனும் வகையிலும் ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து மு.க.ஸ்டாலினிடம் எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறார்; சாதாரண எந்தப் பார்ப்பனரும் ஸ்டாலினுக்கு போன் செய்து பேசவில்லை! அப்படியே ஓட்டு கேட்க வரும் ஒரு கட்சியிடம் ஒரு சமுதாயம் சார்பில் பேசுவது தவறு என்றால், ஒரு சமுதாயத்தை இழித்தும் பழித்தும் பேசும் திக., தலைவர் வீரமணியோ சுப.வீ.யோகூடத்தான் ஒவ்வொரு முறையும் தவறு செய்கிறார்கள் என்று விவாதித்து வருகின்றனர். மேலும், வெட்டு குத்து கொலை என்று பார்ப்பனரை வஞ்சம் வைத்துத் தீர்ப்பதற்கும், அவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப் படுவதற்கும், பார்ப்பனர்களை வழக்குகளில் சிக்க வைக்க சுப.வீ. போன்றவர்கள் திட்டமிட்டு சமூகத்தில் கூலிப்படைகளை முன்வைத்து செயல்படுத்தி வருகிறார்களோ எனும் அச்சத்தை அவரது கருத்து காட்டுகிறது என்றும் கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.

இந்தப் பிரச்னையை இருவர் தொடர்பான பிரச்னையாக பார்க்கக் கூடாது என்றும், செய்திசேனல் விவாதங்களில் சாதி, மத, இன அடையாளங்களோ, தனி நபர் காழ்ப்புணர்வோ இன்றி அணுக வேண்டும் என்றும் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.

மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டறிக்கை வெளியீடு

வாஷிங்டன்:

அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. டிரம்ப் தனது மனைவியுடன் மாளிகை வாசலுக்கு வந்தார். மோடியுடன் கைகுலுக்கி கட்டித் தழுவி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அவர் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணி) வெள்ளை மாளிகை சென்றடைந்த போது, அவருக்கு வெள்ளை மாளிகையில் சிகப்புக் கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப்பும், மெலனியாவும் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிபராக டிரம்ப்பை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு தொழில் வளர்ச்சி, சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப், மிகச் சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது நாட்டுக்கு பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக சிறப்பாக அவர் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்த வரவேற்பு எனக்கு அளித்த வரவேற்பு அல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அளிக்கப் பட்ட வரவேற்பு என்று கூறினார் மோடி.

தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். அப்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து தனியாக சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் பின்னர் உரையாடிய போது, பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப், “மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். அவர் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ட்ரம்ப்பும், மெலனியாவும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த வரவேற்பானது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகப் பார்க்கிறேன். இந்த சந்திப்பில் நான் பேச நிறைய இருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னேற்றத்தின்மீது ஆர்வமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தக் கூட்டறிக்கையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் வளர்ச்சியின் உந்துசக்தியாக திகழ்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்திய பசிபிக் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதுதான் இருநாடுகளின் குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் அமைதி, வளர்ச்சியில் இருநாட்டின் பங்களிப்பு மேலும் வலுப்படும்.. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். பொருளாதார ரீதியாக மோடி சிறப்பாக செயல்படுகிறார்; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தந்ததில் பெருமிதம் கொள்வதாக டிரம்ப் கூறினார்.

இதன் பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று நெதர்லாந்த் செல்கிறார் மோடி.

வானதி சீனிவாசன் காரை வழிமறித்து கோஷம்: 15 பேர் மீது புகார்

vanathi srinivasan - 2026

சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் சென்று கொண்டிருந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷமிட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் திங்கள்கிழமை நேற்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக அவருக்குச் சொந்தமான காரை எடுத்துக் கொண்டு கார் ஓட்டுநர் கோபி சரவணன் சென்றுள்ளார். அவர், திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் சென்றுகொண்டிருந்த போது 15 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தது. மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக முழக்கமிட்ட அக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து ஓட்டுநர் கோபி சரவணன் அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.

மறக்கக் கூடாத மனிதர்களின் நினைவில்… : ஃபீல்ட் மார்ஷல் மானக் ஷா

genmanaksha - 2026

நாள்: 1971ம் ஆண்டு, மார்ச் 25. இடம்: கிழக்கு பாகிஸ்தான்.

எங்கு பார்த்தாலும் கலவரமும், பீதியும், பதட்டமும் தாண்டவமாடிய நேரம். என்னவாகப் போகிறோம் என்று புரியாமல் கிடைத்த பொருட்களை கையில் எடுத்துக் கொண்டு, குடும்பம் குடும்பமாக இந்தியாவை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது அப்பாவி மக்கள் கூட்டம்.

மேற்கு வங்கத்தின் வழியாகவும், கிழக்கு இந்திய மாநிலங்கள் வழியாகவும் ஆயிரக்கணக்கில் புகுந்த வங்காளிகளால் இந்தியா விழி பிதுங்கியது. மறுபக்கம் தப்ப முடியாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உயிரிழந்த வங்காளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான் ராணுவம். கிழக்கு பாகிஸ்தானில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மை, கலவரம், இனப் படுகொலையால் இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பதட்டம்.

அலை அலையாய் வந்துகொண்டிருக்கும் அகதிகளால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமே என்ற அச்சம். கல்கத்தா விரைகிறார் பிரதமர் இந்திரா காந்தி. அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை. முடித்துக் கொண்டு டெல்லி வருகிறார். நேராக ராணுவ தலைமையிடத்திற்குச் செல்கிறார்.

ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் மானக் ஷாவிடம் கேட்கிறார். “இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தால் என்ன செய்ய முடியும்?”
அதற்கு இப்படி பதிலளிக்கிறார் மானக் ஷா, “ஒன்றும் செய்ய முடியாது”. தளபதியின் இந்த பதிலைக் கேட்டு இந்திராவுடன இருந்த மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஒரு ராணுவத் தளபதி நாட்டின் ஆட்சித் தலைவரிடம் இப்படி பதிலளிப்பார் என்று யார்தான் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் முகத்தில் இருந்த கம்பீரம் மாறாமல், இந்தப் பதிலைத் தெரிவித்தார் மானக் ஷா. அவர்களின் எண்ண ஓட்டத்தைக் கணித்த மானக் ஷா “நமது ராணுவம் தற்போது தயார் நிலையில் இல்லை. தாக்குதலுக்கு நாம் திட்டமிட்டால் அதற்கு கால அவகாசம் தேவை” ஆனால் ‘போர்’ வேகத்தில் இருந்த இந்திராவோ, “கிழக்கு பாகிஸ்தானை நமது ராணுவம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்குத் தேவையான திட்டங்களுடன் இன்னும் 2 நாட்களில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்து சேருங்கள்” என்று கூறி விட்டு கிளம்பிச் செல்கிறார்.

இரண்டு நாட்களில் அமைச்சரவையும் கூடியது. இந்திரா தலைமையில் கேபினட் அமைச்சர்கள் அனைவரும் மானக் ஷாவின் பதிலை அறிய காத்துள்ளனர். அப்போது இந்திரா, “உடனடியாக கிழக்கு பாகிஸ்தானுக்குள் நமது ராணுவம் நுழைய வேண்டும். அங்குள்ள பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடிக்க வேண்டும். அப்போதுதான் முஜிபுர் ரஹ்மான் ஆதரவு அரசை நம்மால் அங்கு நிறுவ முடியும். அகதிகளும் கிழக்கு பாகிஸ்தான் திரும்பிச் செல்ல முடியும். இது அவசரம்”.

இந்திராவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மானக் ஷா, “கிழக்கு பாகிஸ்தானில் 90 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் உள்ளனர். இவர்களை சமாளிக்க நாம் இரு படைப் பிரிவுகளை அனுப்ப வேண்டும். ஒன்றை வங்காளத்திற்கும் (மேற்கு வங்காளம்), இன்னொன்றை வட கிழக்குப் பகுதிக்கும் அனுப்ப வேண்டும். இதற்கு குறைந்தது 2 மாதங்களாவது ஆகும். உடனடியாக அனுப்புவது சாத்தியமில்லாதது”.

இதைக் கேட்ட இந்திரா பதிலேதும் பேசாமல் மானக் ஷாவை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உடன் இருந்த அமைச்சர்களோ, ஒரு ராணுவத் தளபதி இப்படியா கூறுவது, தயார் நிலையில் படைகளை வைத்திருக்க வேண்டாமா என்று ஆவேசப்பட்டனர்.

அதைக் கண்டு கொள்ளாத மானக் ஷா, “எனது படையினர் ஜூன் மாதத்திற்குள் தயாராகி விட்டாலும் கூட, என்னால் உடனடியாக தாக்குதலை நடத்த உத்தரவிட முடியாது. அதற்கு இரு காரணங்கள். ஒன்று, அந்த சமயத்தில் பருவ மழை தீவிரமாக இருக்கும். மற்றொன்று, இமயமலைப் பகுதியில் பனி விலகியிருக்கும். அந்த நிலையில், வடக்கு எல்லையில் நிலை கொண்டுள்ள படையினரை கிழக்கு பாகிஸ்தான் நோக்கி வரவழைப்பது கடினமாக இருக்கும். அப்படி வந்தால் பாகிஸ்தான் ராணுவம் நம்மைத் தாக்கும். எல்லைப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நாம் இரு மோதல்களை சந்திக்க முடியாது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படாது என்ற உறுதிமொழியை அவர்களிடமிருந்து நம்மால் உறுதியாகப் பெற முடியாது. எனவே மழை நிற்க வேண்டும், இமயமலைப் பகுதியில் பாதைகள் அடைபட வேண்டும். அப்போதுதான் நம்மால் ஏதாவது செய்ய முடியும்” என்றார்.

மானக் ஷாவின் பதிலால் அமைச்சர்கள் மறுபடியும் கோபப்பட்டனர். ஆனால் இந்திராவின் முகத்தில் அர்த்தம் பொதிந்த மெளனம். இருப்பினும் மெளனத்தைக் கலைத்த இந்திரா, “படைகளை தயார் படுத்துங்கள். சொல்லும்போது தாக்கலாம். அனேகமாக அது ஜூன் மாதமாகவும் இருக்கலாம்” என்று மானக் ஷாவுக்கு உத்தரவிட்டார். அவரும் வேறு வழியில்லாமல் சரி என்றார்.

அதன் பின்னர் மானக் ஷாவுக்கு எதிராகவும், நமது ராணுவத்தின் தயார் நிலை குறித்தும் ஏகப்பட்ட கேலிப் பேச்சுக்கள், ஏளனங்கள், விமர்சனங்கள். பேசாமல் எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்பி பாகிஸ்தானை விரட்டியிருக்கலாமே என்றும் நக்கல்கள். மானக் ஷாவுக்கு தைரியம் கொஞ்சம் குறைச்சல்தான் என்றும் ஏளனங்கள். எல்லாம் மானக் ஷாவின் காதுகளையும் எட்டின. அவரோ அமைதி காத்தார்.

அதேசமயம், கிழக்குப் பிராந்திய படையினருக்கு உங்களால் எந்த வகையில் தயாராக முடியுமோ, அந்த ரீதியில் ரெடியாகுங்கள். உங்களுக்கு தோன்றுகிற திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். மறுபக்கம் கிழக்கு பாகிஸ்தானைச் சுற்றிலும், தகவல் தொடர்பு வசதிகளை வலுப்படுத்தினார். நிர்வாக அலுவலகங்களை நிர்மானிக்க உத்தரவிட்டார்.

இந்தத் தாமதம், இன்னொரு நல்ல விஷயத்திற்கும் வித்திட்டது. அது, கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அரசுக்கும் எதிராக செயல்பட்டு வந்த முக்தி வாஹினி கொரில்லா படையினர் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள அது வசதியாக இருந்தது. இதுதவிர, இந்தியாவிலிரு்நதபடி சுதந்திர வங்கதேச அரசு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பாமல் தடுக்கப்பட்டது.

இப்படி பல முனைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் நமது ராணுவத்தையும் மானக் ஷா பக்காவாக தயார்படுத்தி வைத்திருந்தார். எல்லாம் முடிந்த நிலையில் டிசம்பர் 3ம் தேதி இந்தியா மீது பாகிஸ்தான் விமானப்படை சொல்லாமல் கொள்ளாமல் தாக்கியது. தொடங்கியது இந்தியா- பாகிஸ்தான் போர்.
பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர், மானக் ஷாவின் சாமர்த்தியத்தாலும், புத்திசாலித்தனமான நடவடிக்கையாலும் 15 நாட்களில் முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானைச் சுற்றிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நமது படைகள், அப்படியே உள்ளே புக, தப்ப முடியாமல் ஸ்தம்பித்து நின்றன பாகிஸ்தான் படைகள்.

90 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். புதிதாகப் பிறந்தது வங்கதேசம்.

இந்த இடத்தில் நமக்கு நினைவுக்கு வருபவர் ரஷ்ய ராணுவ தளபதி மார்ஷல் குதுஸோ. குதுஸோவுக்கும், மானக் ஷாவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நாட்டின் பிரதமரே படையெடுக்க உத்தரவிட்டும் அதை உறுதியாக மறுத்தவர் மானக் ஷா. அதேபோலத்தான், மார்ஷல் குதுஸோவும், நெப்போலியனிடமிருந்து மாஸ்கோவை காக்க ஜார் மன்னன் உத்தரவிட்டும் அதை ஏற்க மறுத்தார். இருவரும் அதற்கு தெரிவித்த காரணம் ஒன்றுதான் -படைகளுக்கு ஏற்ற சாதகமான நிலை இல்லாதது.

1812ம் ஆண்டில் ரஷ்ய படையின் தளபதியாக இருந்தவர்தான் குதுஸோ. அப்போது மாஸ்கோ மீது நெப்போலியன் படையெடுத்த போது அதை தடுக்க குதுஸோவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்தார் குதுஸோ. அப்படிச் செய்தால் ரஷ்ய படைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று கூறி மறுத்து விட்டார்.

அதேபோல, உகந்த நேரமாக இல்லாததால் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தால் இந்தியப் படைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி இந்திராவின் உத்தரவை ஏற்க மறுத்தார் மானக் ஷா. தனது செயலால் ரஷ்ய ராணுவத்தை காப்பாற்றினார் குதுஸோ. அதேசமயம், சரியான நேரத்தில் படையெடுத்து மாஸ்கோவையும், ரஷ்யாவையும் மீட்டவர் அவர்.

அதேபோலத்தான் முதலில் மறுத்தவர் மானக் ஷா. ஆனால் சரியான நேரம் வந்தபோது, கிழக்கு பாகிஸ்தானை சுற்றி வளைத்து பாகிஸ்தான் படையினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இந்தியாவின் ராணுவப் பெருமையை உலகுக்கு பறை சாற்றினார். சுதந்திர வங்கதேசம் உருவாக உதவினார். இந்த இரு தளபதிகளையும், அரசுகளின் நெருக்கடிகள் எதுவும் செய்யவில்லை. உண்மை நிலையை உணர்த்தி உகந்த நேரத்தில் தத்தமது நாட்டின் கெளரவத்தை காப்பாற்றியவர்கள் இருவரும். அதேசமயம், வாய்ப்பு கிடைத்தபோது வெற்றிக் கனியை தட்டிப் பறித்தவர்கள்.

இந்திராவின் முதல் கட்டளையை ஏற்க மறுத்த மானக் ஷா, பின்னர் வாய்ப்பு வந்தபோது, 15 நாட்களில் காரியத்தை முடித்து இந்திராவை குளிர்வித்தார். எதிர்ப்பாளர்களின் வாயையும் கட்டிப் போட்டார். இந்திய ராணுவத்தின் மிக உயரிய வெற்றி எது என்றால் அது நிச்சயம் 71 போர்தான். அந்த வெற்றியின் நாயகன் மானக் ஷா.


பத்ம விபூஷன், மிலிட்டர் கிராஸ் உள்ளிட்ட நாட்டின் மிக உயரிய சிவிலியன், ராணுவ விருதுகளைப் பெற்ற மானக் ஷா, இந்திய ராணுவ வீரர்களால் சாம் பகதூர் என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
இந்திய ராணுவத்தின் மிகச் சிறந்த பிரிவான கூர்கா ரெஜிமெண்ட்டின் முதல் கமாண்டரும் அவர் தான். பின்னர் இந்திய ராணுவத்தின் பீல்ட் மார்ஷல் நிலைக்கு உயர்ந்தார்.
வீரத்துடன் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தலை வணங்காத நெஞ்சமும் மிக கலகலப்பான சுபாவமும் கொண்டவர்.
1971ம் ஆண்டு டிசம்பரில் மானக் ஷாவிடம், பாகிஸ்தானுடனான போருக்கு தயாரா என பிரதமர் இந்திரா காந்தி கேட்டபோது, மானக் ஷா சொன்ன பதில், “I am always ready sweetie”. கலகலவென சிரித்த இந்திராவிடம் அடுத்த பதினான்கே நாட்களில் வெற்றிக் கனியைத் தந்தார்.
பாகிஸ்தான் சரணடையும் நிகழ்ச்சியில் பங்கேற்க டாக்காவுக்கு செல்லுமாறு இந்திரா கூறியபோது, அதை மறுத்துவிட்ட மானக் ஷா, அவர்கள் என்னிடம் சரணடைய வேண்டாம்.. அந்த மரியாதை நமது ராணுவத்தின் கிழக்கு மண்டல கமாண்டர் ஜக்ஜித் சிங் அவுராவுக்கே கிடைக்க வேண்டும் என்று கூறிவிட்டவர் மானக் ஷா.
முன்னதாக நேரு பிரதமராக இருந்தபோது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் எம்ஜிகே மேனன் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனால் மெதுவாக ஷா ஒதுங்கினார். ஆனால், அருணாச்சல பிரதேசத்தைக் கைப்பாற்றி சீனா ராணுவம் துவம்சம் செய்த நிலையில் ஷாவின் உதவியை தான் நாடினார் நேரு. மேலும் மேனனையும் ராஜினாமா செய்ய வைத்தார் நேரு. இதையடுத்து அருணாச்சல் விரைந்த ஷா, வீரர்களை முடுக்கிவிட்டு சீனா மேலும் முன்னேறுவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திக் காட்டினார்.
1914ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி அம்ரிஸ்தரில் பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர் ஷா. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழகத்திலேயே தங்கிவிடத் தீர்மானித்த ஷா, நீலகிரி மலையின் குன்னூரில் தனது இறுதிக் காலம் வரை வசித்து வந்தார்.