Home Blog Page 5620

21-Year-Old Muslim Woman Burnt Alive In Karnataka For Marrying Dalit Man

0

girl-attack-image

In a nondescript village of Bijapur district, an inhumane incident of honour killing has come to light.

On Saturday night, a 21-year-old pregnant Muslim woman was burnt alive by her family members for marrying a Dalit man.

Banu Begum and 24-year-old Sayabanna Sharanappa Konnur, both residents of Gundakanala village in Bijapur’s Muddebihal taluk, had fallen in love and had kept their relationship a secret as their families would disapprove.

On January 22, Banu’s parents learnt of their relationship and had brutally assaulted Sayabanna.

“The day Banu Begum’s parents found out about their relationship, her parents had dragged her to the police station. They had created a huge ruckus there and had demanded that the police file a POCSO case against Sayabanna, while claiming that their daughter was a minor. They also filed a written complaint in this regard,” said Talikote DySP, PK Patil.

After this incident, Banu and Sayabanna eloped to Goa on January 24, and decided to live there. In February, they got their marriage registered.

When Banu got pregnant, the couple decided to return to Gundakanala, assuming that their families would accept their marriage. Except, they didn’t.

When the couple returned to the village on Saturday morning, they went to meet their families with the news of Banu’s pregnancy.

“The families did not accept their marriage and a huge fight raged through the day,” the Talikote DySP said.

“Banu’s parents wanted her to leave Sayabanna, and the boy’s father was also not too pleased with the match. On Saturday night, when the couple refused to give in to their families’ demands, Sayabanna’s father, along with Banu’s mother, brother and sister brutally assaulted him,” Patil added.

Sayabanna was bitten all over his body and Banu’s mother had pelted stones at him, the police said.

But while Sayabanna managed to escape the clutches of his torturers and ran to the Talikote Police Station, Banu wasn’t so lucky.

“Sayabanna arrived at the station and was severely injured. He narrated the series of events and he ran back to pick up Banu,” Patil claimed.

“But by the time he reached, the family members had set her on fire,” Patil said. He claimed that two police officers reached the spot 10 minutes after Sayabanna did, as it took them some time to find the place.

Sayabanna meanwhile screamed for help but his wife had already died. In the process of dousing the flames off Banu’s body, he too sustained some minor burns.

“Based on Sayabanna’s account, none of Banu’s neighbours came forward when he begged them for help. He says that they too were of the opinion that the girl had done a terrible deed and went inside their homes and locked the doors while Banu was being burnt. However, when we went to question the neighbours, they said that they did not see or hear anything and are not cooperating with the investigation,” an officer at the Talikote Police Station said.

On Sunday, Banu’s mother, brother, sister and father-in-law were arrested. “They have been booked for murder and assault. Banu had been stabbed multiple times before being set on fire,” Patil said.

Four other accused in the case – Banu’s two elder sisters and two brothers – are absconding, Patil added.

தலித் இளைஞரை மணந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் குடும்பத்தாரால் எரித்துக் கொலை!

girl attack image - 2026

பீஜப்புர்:

கர்நாடகா மாநிலம் பீஜப்புர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு தலித் இளைஞனை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி, கர்ப்பமான சூழலில் வீட்டுக்கு வந்த முஸ்லீம் இளம் பெண்ணை, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம், பீஜப்புர் மாவட்டத்தில் முடேபிஹால் தாலுகாவில் உள்ள குண்டக்கனல கிராமத்தில் வசித்து வந்தவர் சயபன்னா ஷரனப்பா கொன்னுர் (24). இவருக்கும் அந்த கிராமத்தில் வசித்த பானு பேகம்(21) என்ற முஸ்லிம் பெண்ணும் காதல் முளைத்தது

இருவரின் காதல் குறித்து அறிந்த பானுவின் பெற்றோர், இதனை கடுமையாக எதிர்த்தனர். ஜனவரி 22ம் தேதி பானுவின் குடுமத்தினர், சயபன்னாவை கண்மூடித்தனமாகத் தாக்கி மிரட்டியுள்ளனர். மேலும், தங்களது மகள் வயது குறைவானவள் என்றும், சயபன்னா தங்களது மகளை மயக்கி ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காவல்துறையில் புகார் செய்தனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி சயபன்னா-பானு ஜோடி ஊரைவிட்டு வெளியேறி கோவாவுக்குச் சென்றனர். அங்கே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். பின், கடந்த சனிக்கிழமை தமது கிராமத்துக்குத் திரும்பிய அவர்கள், பானுவின் பெற்றோரிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டுவந்திருப்பதாகக் கூறினர். அந்த மகிழ்ச்சியான செய்தி, பானு கர்ப்பமாக இருப்பதுதான் என்று தெரிவித்தனர். ஆனால் பானுவின் பெற்றோர் இதை வரவேற்கவில்லை. மாறாக, பானுவின் தந்தை இந்த உறவை முடித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

அவர்கள் மறுக்கவே, பானுவையும், சயபன்னாவையும் பானுவின் பெற்றோர் கண்மூடித்தனாகத் தாக்கியுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்து தப்பிய சயபன்னா, காவல் நிலையத்தில் சென்று உதவி கோரியுள்ளார். அவரது புகாரின் பேரில் அதிகாரிகள் பானுவின் வீட்டுக்குச் சென்றபோது, பானு அவரது வீட்டாரால் பல முறை கத்திக் குத்துக்கு ஆளாகி, தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டிருந்ததைக் கண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தலிகோட் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிகே படீல், ”பானுவை அவரது பெற்றோர் தீ வைத்து உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டனர். இது தொடர்பாக, பானுவின் அம்மா, சகோதரன், சகோதரி மற்றும் சயபன்னாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார். அவர்கள் மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பானுவின் மூத்த சகோதரிகள் இருவர், இரு சகோதரர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

சினிமா நடிகை ஆகிறார் ’கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் ப்ரியா பவானி!

priyabavani shankar - 2026

சென்னை:

கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானி சங்கர் சினிமா படத்தில் நடிக்க உள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். சின்னத்திரை நடிகை ஆனாலும், பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே டிவி சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர்தான்!

ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, திடீரென திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி சீரியலில் இருந்து விலகினார். தனது காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாகக் கூறினார் ப்ரியா. பரவாயில்லை, திருமணம் செய்து கொண்டால் என்ன, தொடர்ந்து நடிங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், டிவி சீரியலில் ப்ரியா தொடர்ந்து நடிக்க மாட்டாரா என்று ஏங்கிய ரசிகர்களை உற்சாகப் படுத்தும் விதமாக, ப்ரியா தமிழ் சினிமா ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியா எந்தப் படத்தில் யாருடன் நடிக்க உள்ளார் என்ற விவரங்கள். ஆனால் 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி

Avantika Shetty actress - 2026

பெங்களூரு:

சினிமா துறையில் பெண்கள் உண்மையில் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி.

 

கன்னடத்தில் வெளியான ரங்கீதா ரங்கா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அவந்திகா ஷெட்டி. இவரை கன்னட பட அதிபர் கே.சுரேஷ் தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென அவந்திகா ஷெட்டி நீக்கப் பட்டார்.

இது குறித்து பட அதிபர் கே.சுரேஷ் கூறியபோது, “ராஜூ கன்னடா மீடியம் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் தயாரிக்கும் புதிய படத்துக்கு நடிகர் – நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட அனைவரையும் தேர்வு செய்தேன். படத்தில் கதாநாயகியாக நடிக்க அவந்திகா ஷெட்டியை தேர்வு செய்தேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வேண்டும் என்றே படக்குழுவினரிடம் தகராறு செய்கிறார். யாருடைய பேச்சையும் அவர் கேட்பதில்லை. இதனால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார்.

ஆனால், இது குறித்து கன்னட திரைப்பட வர்த்தக சபையில் நடிகை அவந்திகா ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்…

முதல் நாளில் இருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. அவர்கள் என் நடிப்புத் திறமையின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அதை தள்ளிவிட்டு, நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினேன். ஆனால் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காரணங்கள் சொல்லி பிரச்னைகள் முளைத்தன. போட்ட காசோலை திரும்பியது குறித்து கேட்டேன். தயாரிப்பாளரின் பாலியல் தொல்லை. அவரிடம் தகராறில் ஈடுபட்டேன். ஆனால், என் நடிப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி நீக்கியுள்ளார்கள்… என்று கூறியுள்ளார்.

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”

c620bc98 bf32 4dc0 ad61 46bfcf050173 - 2026

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”- ( *காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர
ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன்
அவர்* என்று
கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர்
கண்ணுக்குப்புலப்பட்டன.-(ஜோசியர்)”*விடுங்கோ
மாமா!*” என்ற சிறுவனின் குரலோ, “*என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு…விடு*”
என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை)

(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்)

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு நாள் காலை மகாலட்சுமி *[பெரியவாளின் தாயார்] *கண் விழித்தபோது, பக்கத்தில்
சுவாமிநாதனைக் காணவில்லை.வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம்
துழாவி வந்தாகிவிட்டது.காணோம். “*ஒருவேளை சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?*” என்றுபோய்ப் பார்த்தால்,
முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!

இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப் பட்டது.அந்த
சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து,”*குழந்தைகள் மடத்துக்கு
வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள்.சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச்
சொன்னார். நாலு நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச்
சொன்னார்!*” என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. “*எதற்காக
அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக்குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள
வேண்டும்?*”என்பது
புதிராக இருந்தது.
உண்மை இதுதான். *ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து
காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும்
நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு
கிடைக்கப் போவதில்லையே?*அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக்
கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க
வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம்
என்ற இடத்துக்குப் போய்விட்டார்.

இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே
கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்குசிநேகிதனையும் அழைத்துக்
கொண்டு அங்கே போய் விட்டான்.ஆச்சார்யரோ, “*முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா*
?”என்று கேட்டார். “*இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே
கிளம்பி வந்துட்டேன்.*” என்கிறான் குழந்தை.இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம்.
ஏனெனில், *இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!*

எல்லா தகப்பனாரையும் போல் *தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர
வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார்.* இத்தனை சின்ன வயசில்
இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்? *”இது என்ன
தேறுமா…தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?”*என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே
சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமியினĮ 1; அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார்.அவர்
ஒரு *சிறந்த
ஜோதிடர்*.மேலும்*சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்.*

“*வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு
ஜாதகம் எப்படி இருக்கு?*” என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப்
பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு
பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால்,
“*சுப்ரமண்யா!
நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலை யேபடாதே. நம்மைப்
போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில்
பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே
கொண்டாட வாழப் போகிறான்!*” என்று பெசினார்.

*வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி
வீசினார்!*

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க ஆவல் கொண்ட
ஜோசியர்,அங்கிருந்த சுவாமிநாதனிடம்,”*போ,கால் அலம்பிண்டு வா*” என்று
கட்டளையிட்டார். அலம்பிக் கொண்டு வந்தவனை, நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு
ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே
அலம்பினார்….துடைத்ார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படிேய கெட்டியாய்
பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

“*விடுங்கோ மாமா!*” என்ற சிறுவனின் குரலோ, “*என்ன இது! குழந்தை
காலை பிடிச்சுண்டு…விடு*” என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில்
விழவேயில்லை.அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழமக்கள் க்யூவிலே
நிற்கப்போகிறார்கள என்று நினைத்தார் போலும்.

*காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம
ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர்* என்று கட்டியம் கூறிக்
கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த
வெங்கட் ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்! *விஷ்ணுவுக்கும்
கிடைக்காத பாதத்தை இவர் பார்த்து விட்டார் என்றால், இவர் பாக்கியமே
பாக்கியம்!.*

புனித தாமஸ் எனும் புனை கதை!

8 write down8 - 2026
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது…
பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று

ஒரு டாக்டர்… ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்…
சென்னையைப் பற்றி சொன்னார்…

சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார்
எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்…
திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்… மந்தைவெளி சர்ச்..
பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்…

ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்… ( பிருங்கி மலை பரங்கிமலையாகி, தோமையர் மலையான கதையை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…)
என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது…

எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்…

நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம்? என்று!
வழிவழியாக சொல்லப்படும் கதை, அங்கே அப்படித்தான் எழுதிப் போட்டுள்ளார்கள் என்றார்.
அப்படியானால்… தாமஸ் எந்த வழியில் இந்தியாவுக்கு வந்தார் என்றேன்…
கடல் வழிஎன்றுதான் சொல்கிறார்கள் என்றார்.
அப்படியானால் வாஸ்கோடகாமாவை இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்து எறிந்துவிட வேண்டும் சம்மதமா என்றேன்…
அர்த்தம் புரிந்தவர் போல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்…
மயிலையில் இருந்து கொண்டு, சர்ச்சாகிவிட்ட அந்தக் கபாலியின் கோயிலுக்கு எத்தனை முறை சென்றிருக்கிறேன். தூண்களும் படிகளும் இன்றும் பறை சாற்றுகின்றது. (https://goo.gl/uWRpdV)
பாடப்பட்ட பாடல்களெலாம்… கடற்கரையில் அமர்ந்த ஈசனின் திருக்கோவில் தாள் தொட்டு சாகரத்தில் சங்கமித்த அலைகளைப் பேசுகின்றன…
சம்பந்தரின் சம்பந்தம் பெற்ற இந்தப் பாடல் அதைச் சொல்லும்…
*
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!

1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன் ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு

2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது. (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)

3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.

***
பொய்கள் .. மதசார்பின்மை என்ற நிலைப்பாட்டில் பலராலும் பரப்பப் படுவது இது ஒன்றும் புதிதல்ல!

இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு – துருக்கியர் படையெடுப்புகளும் அதன் மதப் பரவலாக்கமும்!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு – ஐரோபியப் படையெடுப்புகளும் கிறிஸ்துவ மத பரவலாக்கமும்!

வாள் என்று முன்னே நீட்டி, கழுத்தில் கத்தியை வைத்து கதறக் கதறக் கொலைகளைச் செய்த அரேபியராகட்டும்…

ரொட்டித் துண்டை முன்னே நீட்டி கதறக் கதறப் பார்த்திருந்து இயேசுவின் நாமத்தால் நாக்கைச் சப்புக் கொட்ட வைத்த பாதிரிகளாகட்டும்…

எல்லாரும் இந்த இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதியப் பட்டிருக்கிறார்கள்!

அந்த உண்மை வரலாறுகளை தேடிப் படிக்காதது நம் குற்றம்!
***
கோவா இன்க்யுசிஷன் – கோவா நீதி விசாரணை என்பதை கூகுளில் தேடிப் பிடித்துப் படியுங்கள்!
கோவா என்ற அந்த இந்தியப் பிரதேசம் – எப்படி ’அளவு கடந்த அன்பெனும் மகிமை’யால் கிறிஸ்துவமயமானது என்பதை படித்துப் பாருங்கள்!
***

இந்திய மன்னர்களும் சண்டையிட்டார்கள்!
சேரனும் சோழனும் பாண்டியனும்கூட சண்டையிட்டான்.
வாள்களும் ஈட்டிகளும் மோதிக் கொண்டன…
சமணமும் புத்தமும் கூட போட்டியிட்டது
சைவமும் வைணவமும் கூட சண்டையில் ஈடுபட்டன

மதங்களைக் கட்டிக் கொண்ட மன்னர்களால் மதப் பிடிப்புள்ள தத்துவவாதிகள் கொலையுண்டார்கள்…

ஆனால்… மக்கள் மடியவில்லை! கத்தி முனையில் கழுத்தில் கீறப்படவில்லை! மதத்தை முன்னிறுத்தி போர்கள் நிகழவில்லை!
மண்ணாசையே போருக்குக் காரணமானது!

வரலாற்றில் தன்னை முன்னிறுத்தும் பேராசையே வாள்சண்டைக்கு காரணமானது!
வெற்றி பெற்றாலும், வென்ற மண்ணில் மக்களை சமாதானப் படுத்த வெற்றிபெற்றவன் செய்த முதற்காரியம், அந்த மக்களின் மத உணர்வைப் போற்றும் விதமாய் அவர்களின் தெய்வத்துக்கு கோயில்களை எழுப்பியதுதான்! காரணம் அதே தெய்வம் இவனுக்கும் தெய்வமாக இருந்ததே!

ஆனால்….
இந்திய மதங்களை அழிக்கக் கிளம்பிய அன்பு, அகிம்சை பேர் தாங்கிய மதங்களெலாம்
இந்த மண்ணுக்குச் செய்த துரோகங்கள்… கொஞ்ச நஞ்சமல்ல! கொடிய நஞ்சு!

***
இன்றளவும் மாரியம்மனையும் சுடலையப்பனையும் மாடசாமியையும் இன்னும் வெளி உலகை வந்தடையா எண்ணற்ற தெய்வங்களையும் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களைக் காணும்போதெல்லாம்….

எத்தகைய வீரம் விளைந்தவர்கள் என்பதை எண்ணி எண்ணி உள்ளம் சிலிர்க்கும்!

ஆமாம்..

இன்றும் தங்கள் குல வழக்கப்படி, மரபு சார்ந்து, விழா எடுத்து, பொங்கலிட்டு, படையலிட்டு, தங்கள் தெய்வங்களைத் தொழுது கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே…

வீர நெஞ்சினரே…

விலை போனவர்களைப் போலும், வாளுக்கு அஞ்சி வாய் மூடிய கோழைகளைப் போலும் இல்லாது நெஞ்சு நிமிர்த்தி நிற்கின்றார்களே… அதற்காகவே அவர்கள் காலில் விழுந்து வணங்கலாம்! வணங்குகிறேன்!

****
மேலும் படிக்க… சில சுட்டிகள்!
* ஜெயமோஹன் கட்டுரைhttps://www.jeyamohan.in/600#.V1OdUPl97IU
* டோண்டு வலைப்பதிவு: https://dondu.blogspot.in/2008/08/blog-post_12.html
கோவா நீதிவிசாரணைச் சம்பவங்கள்:
* https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition
* https://www.newindianexpress.com/…/…/09/03/article2979630.ece
* https://goo.gl/3VUfFk

விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 19: பிரதமர் மோடி வாழ்த்து

1 5thefullyintegratedgslv mkiii d1carryinggsat 19atthesecondlaunchpad frontview - 2026

புது தில்லி:

இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கனரக கிரையோஜெனிக் இஞ்சினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி -மார்க் 3 ஜிசாட்-19 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஜிசாட்-19ஐ விண்ணில் நிலைநிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

gsat19 - 2026

இந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

மதுக்கடையை அகற்றக்கோரி தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்

tasmak - 2026

தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் இன்று தூக்கு கயிற்றில் தொங்கும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில்
அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி,
திப்-மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி
உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை
காட்டி வருகின்றனர்.

5வது நாளான திங்கள் கிழமை போராட்டக்காரர்கள் தூக்கு கயிற்றில் தொங்கும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தென்காசி தாசில்தார் அனிதா நேரில்
வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடையை
மூடுவதற்கு கால அவகாசம் கேட்ட, தாசில்தாரின் வேண்டுகோளை போராட்டக்காரர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை. கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என
தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு
சென்று நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார் இதற்கிடையே திப்பணம்பட்டி ஊர்
பொதுமக்கள் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
முகாமில் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
அளித்துள்ளனர் .

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி: 124 ரன்னில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்தியா

virat kholi - 2026

பர்மிங்காம்:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 124 ரன் வித்தியாசத்தில் வென்று தனது வெற்றிக் கணக்கைத் துவக்கியது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வெற்றியுடன் துவக்கிய இந்திய அணி இரண்டு புள்ளிகளை முழுமையாக பெற்றது. இந்த வெற்றியை எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முதல் சாமான்ய இந்தியன் வரை விடியவிடிய கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக, முதலில் இந்திய அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால், இரு முறை தடைப்பட்டது. இதை அடுத்து போட்டி 48 ஓவர் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் முதலில் ஆடிய இந்திய அணி 48 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்தது. ரோஹித்சர்மா 91 ரன், கோலி 81 ரன், தவான் 68, யுவராஜ் 53 ரன் குவித்தனர். கோலி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதை அடுத்து பாகிஸ்தான் அணி 320 ரன் இலக்குடன் விளையாடத் தொடங்கியது. அப்போது மழை குறுக்கிட்டதால், இலக்கு மாற்றப்பட்டது. பின்னரும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அணி, 164 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அணியில் அதிகபட்சமாக அசார் 50 ரன் எடுத்தார்.

போட்டி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் கோலி, இது யுவராஜின் அதிரடிக்குக் கிடைத்த வெற்றி என்றார்.

என்டிடிவி பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை

ndtv pranoy roy cbi - 2026

புது தில்லி:

என்டிடிவி., சி.இ.ஓ., மற்றும் இணை நிறுவுனர் பிரணாய் ராயின் தில்லியில் உள்ள வீட்டில் திங்கள் கிழமை இன்று காலை சிபிஐ சோதனை மேற்கொண்டது.

நிதி முறைகேடு, நிதியை மாற்றி அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் என்டிடிவி ஈடுபட்ட விவகாரத்தில், இரு தினங்களுக்கு முன்னர் சிபிஐ சோதனை மேற்கொள்ளக் கூடும் என்று செய்திகள் பரவியிருந்தன.

முன்னதாக, ப்ரணாய் ராய் நடத்தி வரும் என்டிடிவி ப்ராஃபிட்ஸ் எனும் சேனல் ஜூன் 5 இன்று முதல் தன் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த சேனலுக்கு பார்வையாளர்கள் குறைந்ததும், சேனலுக்கான வருவாய் குறைந்து போனதும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

இருப்பினும் எண்டிடிவி 24×7 சேனலில் பங்குச் சந்தைகள் செயல்படும் பிரதான நேரத்தை ஒட்டி, வணிகச் செய்திகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், எண்டிடிவி ப்ராபிட்ஸ் சேனலுக்கான அனைத்து பொருளாதார ஒதுக்கீடுகளும் எண்டிடிவி ப்ரைம் சேனலுக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், எண்டிடிவி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக சில வருடங்களாகவே புகார்கள் தெரிவிக்கப் பட்டு வந்த நிலையில், இன்று சிபிஐ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஐசிஐசிஐ வங்கியில் 48 கோடி ரூபாய் முறைகேடாக இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், ப்ரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.