நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு!
விஜய் மல்லையா லண்டனில் கைது
அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கழற்றி விடப்படலாம்!
அன்னிய செலாவணி மோசடி: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம்: தினகரன் முதல் குற்றவாளி!
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயற்சி மேற்கொண்டதாகப் பதியப்பட்ட வழக்கில், டி.டி.வி தினகரன் முதல் குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் IPC Sec 170 and 120(b). Sec 8 of Prevention of Corruption Act. பிரிவுகளின் கீழ் T.T.V தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது தில்லி போலீஸ்.
முன்னதாக அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துதது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியது .
பேச்சைக் குறைங்கப்பா: பாஜக., தலைவர்களுக்கு மோடி அறிவுரை!
புவனேஸ்வர் :
பா.ஜ., தலைவர்கள் பேச்சை குறைப்பது எப்படி என பாடம் கற்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த பா.ஜ., செயற்குழுவின் 2வது நாளில் பேசிய பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் எங்கு, எப்படி அமைதி காக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது, பா.ஜ., தலைவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறினார்.
மேலும், நான் ஒவ்வொரு முறை டிவி பார்க்கும் போதும் யாராவது ஒரு பா.ஜ., தலைவர் பேட்டி கொடுக்கிறார். சில சமயங்களில் அவர்கள் பேசுவது சர்ச்சை ஏற்படுத்தும் விதத்திலேயே உள்ளது. எப்படி அமைதி காப்பது என்பது பற்றி நீங்கள் பாடம் கற்க வேண்டும்.
யார் மைக்கை நீட்டினாலும் எப்போதும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.
சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் பேசுவதை கட்சியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
தலைவர்கள் தங்களின் வாய்க்கு பூட்டு போட கற்றுக் கொண்டு, கட்சி வேலைகளை மட்டும் பார்த்தால் போதும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார்.

