Home Blog Page 5843

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் !

 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அதற்காக ரூ. 30 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது ஆண்டாள் கோவில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
 
இதையடுத்து கும்பாபிஷேகம் செய்வதற்காக பணிகள் நடைபெற்றன. அதன்படி கடந்த 16-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வஸ்திரம், பட்டுப் புடவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு சாத்தப்பட்டது.
 
காலை 10.05 மணிக்கு வேதமந்திரங்கள் ஓத ராஜ கோபுரம் மற்றும் ஆண்டாள் தங்க விமானத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர் .கோவிலின் ஆண்டாள் சன்னதி கோபுரம் தங்க தகடு வேய திட்டமிடப்பட்டு இதற்காக ரூ.25 கோடி மதிப்பிலான 78 கிலோ தங்கம் சேகரிக்கப்பட்டு புதிய தங்க விமானம் அமைக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.
 
கும்பாபிஷேகத்தை யொட்டி கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று நடந்தது.நகரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை யொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
 
இந்த விழாவில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் !

 
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .
 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதன்படி காலை 5.30 மணிக்கு 8–ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. 7.15 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும், தீபாராதனைகளும் காட்டப்பட்டன. காலை 10.05 மணிக்கு கோவிலின் 4 கோபுர கலசங்கள் மற்றும் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 4 ரதவீதிகளிலும் கூடி இருந்த பக்தர்கள் ஓம் நவசிவாயா நமஹ என பக்தி கோஷமிட்டனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
 
இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். ராமாயண வரலாற்றோடு தொடர்புடைய இந்த கோவில் காசிக்கு நிகராக கருதப்படுகிறது.
 
இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே 11–ம், தெற்கு ராமேசுவரம் மட்டுமே அமைந்துள்ளது. பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் கடந்த 2001–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
அதன்பின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவுபெற்று ராமேசுவரம் கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
 
இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக புதிதாக 5 நிலைகளுடன் 91 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு பகுதியிலும் 2 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோபுரங்களுக்கும் சேர்த்து இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 16–ந் தேதி அன்று மாலை, முதல்கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 5–வது கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.
4–வது நாளான நேற்று காலை 9 மணியவில் 6வது காலயாக பூஜை நடைபெற்று பகல் 11.30 மணியளவில் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. அதன்பின் மாலை 6 மணியளவில் யாகசாலை மண்டபத்தில் 7–வது கால யாக பூஜையும், இரவு 9 மணியளவில் மகா பூர்ணாகுதி பூஜையும் நடந்தன.
 
கும்பாபிஷேகத்ததையொட்டி ராமேசுவரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வடமாநிலம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி தேர்வில் பிட் அடிக்கும் மாணவர்களுக்கு ரூ20 ஆயிரம் அபராதமும், உதவி செய்பவர்களுக்கு சிறை தண்டனை !

 
பள்ளி பொதுத்தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பீகார்மாநில பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
 
பீகாரில் சென்ற வருடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாண மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு பிட் பேப்பர், புத்தகத்தின் ஒரு சில பகுதிகளை கிழித்தும் ஜன்னல் வழியாக தூக்கி எரிந்தனர். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் பீகாரில் பள்ளி தேர்வுகள் எப்படி நடப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது என பல கேள்விகளை எழுப்பியது. இதனால் இந்த வருடம் 10-ம் பொதுத்தேர்வு நடைபெறும் போது பிட் அடிக்கும் மாணவர்களுக்கு ரூ20 ஆயிரம் அபராதமும், உதவி செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் பீகார் பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
 
மேலும் காப்பியடித்தால் மூன்று வருடங்களுக்கு தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பீகார் பள்ளி கல்வித்துறை தலைவர் லால்கேஷ்வார் பிரசாத் சிங் எச்சரித்துள்ளார். மேலும் தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பீப் … பீப் … ஆபாச பாடல் விவகார வழக்கு : நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

 
பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பீப் … பீப் … ஆபாச பாடல் உருவாக்கியது தொடர்பான வழக்கில், நடிகர் சிம்பு, அனிருத் அனிருத் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
 
நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தினர் திசிம்பு, அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 
மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவினரும் வழக்குப்பதிவு செய்தனர். இதுபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்ட காவல்நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த பாடல் விவகாரத்தில் சென்னை மற்றும் கோவை காவல் நிலையங்களில் சிம்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்த இசையமைப்பாளர் அனிருத் நாடு திரும்பினார். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரத்தில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 2 பக்க விளக்க கடிதத்தை கொடுத்தார்.
 
இதற்கிடையில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாச பீப் பாடல்களை வெளியிட்ட நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு விசாரணை கடந்த 12-ந்தேதி நடந்தது. அப்போது மனு தாக்கல் செய்த இளங்கோவன் மற்றும் அவருடைய நண்பர் சிவாஜி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி விளக்கம் பெற்று பதிவு செய்தார். பின்னர் வழக்கை 19-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை வருகிற மார்ச் மாதம் 21-ந்தேதி நேரில் ஆஜராக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

சாகப் போகும் நேரத்தில் சங்கரா கதையாக ஜெயலலிதா அறிவிக்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின்

 
சாகப்போகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது போல் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு திட்டத்தை அறிவித்ததாக தி.மு.க பொருளார் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
வெளிநடப்பு செய்தது குறித்து மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது :-
 
 
சாகப்போகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றும் ,கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் எனவும் காதில் பூ சுற்றுவது எனக் கூறுவதுண்டு. அதுபோலத்தான் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு வழங்குவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதாவது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைமைச்செயலகம் வந்து செல்கிறார். காணொலி காட்சி மூலமே அரசின் பல்வேறு திட்டங்களும் துவக்கப்படுகின்றன.
 
அ.தி.மு.க. அரசின் இறுதி ஆளுநர் உரையை இங்கே படிக்கின்ற நேரத்தில், நமது மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலை 2011 முதல் படிப்படியாகச் சரிந்து, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மேலும் சரிந்து, சாய்ந்து, தாழ்ந்து புதைகுழிக்குப் போய் விட்ட சூழ்நிலையில், இந்த அவையில் ஆளுநர் உரையாற்றும் போது, நாங்கள் அதற்குப் பார்வையாளர்களாக வீற்றிருக்க விரும்பவில்லை.
 
1-12-2015 அன்று எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியைத் திடீரென்று திறந்து விட்டது தான் சென்னை மாநகர வெள்ளப் பாழுக்குக் காரணம். இந்தப் பேரழிவுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய நீதி விசாரணை வேண்டும் என்று கோரி கருணாநிதி ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார்கள். அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. அதற்கு இதுவரை பதில் இல்லை. கவலைப்படவில்லை.முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110இன் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை ஜெயலலிதாவே இந்த அவையில் படித்தாரே; ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய திட்டங்களுக்கான அந்த அறிவிப்புகளின் கதி என்னவாயிற்று?
 
இந்த ஆட்சியில் இறுதித் தோல்வியாக, தமிழ்ப் பண்பாட்டினை எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்து வதற்கு முறைப்படி முயற்சிக்காமல், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகத் தூங்கி விட்டு, கடைசியாக தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ள முடியாமல், மத்திய அரசுக்கு கடிதம் என்ற பெயரில் பூசி மெழுகிப் பார்த்து, அதிலே பெரும் தோல்வியடைந்து, மக்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கிய அரசு தான் அ.தி.மு.க. அரசு.
 
பிறகு, ஆளுநர் உரை எதற்காக? வெற்று அலங்காரத்துக்காக; வீண் ஆரவாரத்துக்காக! அலங்காரமும், ஆரவாரமும், மக்கள் ஆற்றாது வடிக்கும் கண்ணீரைத் துடைக்காது. எனவே மாநில மக்களின் நலனை ஒதுக்கித் தள்ளி, மக்களைப் பாதுகாத்திடத் தவறி விட்ட பிறகு, சடங்குக்காக ஆற்றப்படும் சம்பிரதாயமான இந்த அரசின் ஆளுநர் உரையைப் புறக்கணித்துத் தி.மு. கழகம் வெளிநடப்பு செய்கிறது என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

 
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
 
திமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மழை நிவாரண நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு விவகாரம், சாதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் மெத்தனபோக்கான அணுகுமுறையைக் கண்டித்து, தமிழக சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.
வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :-
 
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்வதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா மக்களின் காதில் பூ சுற்றுவதா? என்றும் 110த்துக்கு பக்கத்தில் பூஜ்ஜியம் போட்டு ஏமாற்றுகிறார் எனவும், ஜெயலலிதா ஆட்சி சந்தி சிரிப்பதாகவும் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது :-
 
தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யாமல் தூத்துக்குடி மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறது என அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
 
மயிலாடுதுறை, குத்தாலம் அருகேயுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த தலித் தம்பதி குஞ்சம்மாள் – செல்லமுத்து இருவரின் சடலங்களும் பொதுப் பாதையில் எடுத்துச்செல்லப்படுவது ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு பிரச்னையை தமிழக அரசு சரியாகக் கையாளவில்லை என்று கூறியும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

சுற்றுப் பயணம் செல்லும் கருணாநிதி !

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
 
ஜனவரி 25-இல் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்று பேச உள்ளார். ஜனவரி 26-ஆம் தேதி காலை 9 மணி அளவில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்களை கருணாநிதி திறந்து வைக்கிறார்.
 
அன்று மாலை 6 மணிக்கு கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலகக் கட்டடத்தைத் கருணாநிதி திறந்து வைக்க
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைகளை தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 : முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

 
பொதுமக்களின் குறைகளை விரைவாகக் களைந்திடும் வகையில் 24 மணி நேர, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
 
 
தமிழக அரசின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது :-
 
 
அம்மா அழைப்பு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் ஜெயலலிதா தொடங்கினார். அதன்படி, 1100 என்ற எண்ணில் அழைத்து பல்வேறு துறைகள் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம் என்று கூறப்படுள்ளது
முதல்கட்டமாக 138 ஊழியர்களுடன் தினமும் 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில் இந்த மையம் செயல்படும் என்றும், தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
 
அழைப்பவரின் விவரம், அவரது குறை ஆகியவை கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். எந்தத் துறையின் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்கள் குறையைத் தெரிவித்தவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
 
 
பதிவு செய்த குறையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரமும் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முக்கியமாக மதுவிலக்கை பிரச்சினையை தி.மு.க. கிளப்ப திட்டம் !

 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் முக்கியமாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த பிரச்சினையை கிளப்ப தி.மு.க. திட்டம் போட்டுள்ளதாக தெரிகிறது.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு அளித்தார் . அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது :-.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனது அரசியல் விளம்பரம் அல்ல .அது தவறான கருத்து. முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகி வாய்தா வாங்கியதும் அரசியல் லாபமா? கடந்த நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தவறுகள், முறைகேடுகள் நடந்து உள்ளன. இதுபற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடுவதில்லை. மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தி.மு.க. தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார் .

நடிகை அசின் திருமணம்: தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்

புதுதில்லி,

நடிகை அசின் திருமணம் தில்லியில் நடந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்து கொண்டார். இந்து, கிறிஸ்துவ இரு மத முறைப்படியும் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004ல் ஜெயம் ரவியுடன் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ்ப் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். கஜினி, தசாவதாரம், சிவகாசி, வரலாறு, போக்கிரி, காவலன் போன்றவை அசின் நடித்த முக்கிய படங்கள்.

‘கஜினி’ படம் அமீர்கான் நடிக்க இந்தியில் தயாரானபோது கதாநாயகியாக அசின் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி படவாய்ப்புகள் குவிந்தன. சல்மான்கான், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கான் போன்ற பிரபல இந்தி பட நாயகர்களின் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்நிலையில், அக்ஷய்குமார் ஜோடியாக ‘கிலாடி 786’ படத்தில் நடித்தபோது அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலானது. இருவரின் திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது.

இதைஅடுத்து தில்லியில் அசின்–ராகுல் சர்மா திருமணம் நடந்தது. அசின் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் காலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது அசின் வெள்ளை நிறத்தில் கவுன் அணிந்து இருந்தார். திருமணம் முடிந்ததும் 10 அடுக்குகளில் செய்யப்பட்ட கேக்கை இருவரும் வெட்டினார்கள்.

பின்னர் மாலையில் நட்சத்திர ஓட்டலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்கள் கலந்து கொண்டார்கள். திருமண வரவேற்பு, வருகிற 23ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருப்பதால், அசின் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.