Home Blog Page 5981

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து

தில்லி:

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், அவருடைய உடல் நலனுக்கு தான் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

 

டெங்கு குறித்த செய்திகளால் பீதி அடைய வேண்டாம்: சென்னை மாநகராட்சி

சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக மேயர் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் காலங்களில் பொதுமக்களுக்கு பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும். ஆனால், அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சலை முறையான எலிசா பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும். தற்போது ஜனவரி 2015 முதல் இதுநாள் வரை 93 நபர்களுக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது சென்னை மாநகராட்சி பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மூலம் அனைத்து காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நலக்கல்வி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ரத்த அணுக்கள், ரத்த கூறுகள், ரத்தம் மற்றும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய குடிசைப்பகுதி தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசு உற்பத்திக்கு காரணமான டயர், கொட்டாங்குச்சி மற்றும் தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. தொற்று நோய்களை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு புகை பரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான புகைப்பரப்பும் இயந்திரங்கள், கொசுக்கொல்லி மருந்துகள் சென்னை மாநகராட்சியின் இருப்பில் உள்ளன.

ஓவ்வொரு வட்டாரத்திலும், வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழு தயார் நிலையில் உள்ளது. இக்குழுவானது காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிக்கு சென்று காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது.

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை 1,522 காய்ச்சல் இருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 492 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 34 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறு, மேல்நிலைத்தொட்டி மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களை முறையாக கொசு புகா வண்ணம் மூடியிட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், கொசு முட்டையிட ஏதுவான மழைநீர் தேங்கக் கூடிய தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் இருந்து விலக நேரிடும் : பா.ஜ.க.வுக்கு சிவசேனா எச்சரிக்கை

 

பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

பல வருடங்களாக கூட்டணியிலிருந்த பாஜகவும் சிவசேனா கட்சியும், மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. அந்தத் தேர்தலுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது

இதற்கிடையில், நேற்று ஒரு விழாவில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே “பாஜக தொடர்ந்து அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறது. இது நீடித்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய சிவசேனாவைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே “அரசு எந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. மேலும் சிவசேனா தொண்டர்களையும் நசுக்குகிறது. இதையெல்லாம் இனிமேல் நாங்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…
எந்த நேரத்திலடா
எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?
உன் படைப்புகளின்
ஜனனக் குறிப்பு கண்டு
ஒருவன் சொல்கிறான்…
கர்ப்ப தோஷம்…
ஒருவன் சொல்கிறான்…
சர்ப்ப தோஷம்!
இன்னும்…
எத்தனை எத்தனை தோஷங்கள்?
செவ்வாய் தோஷமாம்..
நாக தோஷமாம்!
மாங்கல்ய தோஷமாம்!
மங்கள தோஷமாம்!
சயன தோஷமாம்
சங்கட தோஷமாம்!
பிதுர் தோஷமாம்…
புத்ர தோஷமாம்!
அட…
இன்னும் சிலரின்
உருவத்தை உருக்குலைத்து
குற்றுயிராய்க் கிடத்துகிறாய்…
தோஷங்கள் இல்லையென்று
சிரித்துச் சொன்ன சோசியன்
பொடிவைத்துச் சொல்கிறான்…
உங்களுக்கு
திருஷ்டி தோஷம்!
அடேய்..
இது திருஷ்டி தோஷம் இல்லையடா..
உன் பார்வைக் குறைபாடு!
உன் படைப்புத் திறனின் குறைபாடு…
எங்கள் பணியில் குறைபாடு இருந்தால்
பணியிடை நீக்கம் செய்து
பழியை விலக்கிக் கொள்ளும்
மேலதிகாரிகள் சிலர் உண்டு!
ஆனால்…
உன் அதிகாரிகளும்
உதவாக்கரையாய்ப்
போய்விட்டார்களோ!?
அடேய் பிரம்ம தேவா..
திருஷ்டி தோஷம்
எமக்கு இல்லையடா..
உமக்கே..!
அது உம்
சிருஷ்டி தோஷம்!
- 2026

இரும்பு மனிதர் வல்லப பாய் படேல்: மோடி பெருமிதம்

தில்லி:

இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேல் தினத்துக்கு மோடி டிவிட்டரில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 

இந்திரா காந்தியின் உயிர்த் தியாகத்தை மறக்க முடியாது: மோடி உருக்கம்

புது தில்லி:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நாட்டுக்காக செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திராவின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற ஒருமைப்பாட்டுக்கான ஓட்டம் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த அவர் ‘இதே நாளில், இந்த நாட்டுக்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் உள்ள இல்லத்தில் கடந்த 31-10-1984 அன்று இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் பாய்ந்த 30 தோட்டாக்களில் 23 உடலை துளைத்து, வெளியேறின. ஏழு தோட்டாக்கள் உடலிலேயே தங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய சமத்துவம்: பேஸ்புக் நிறுவுனருக்கு இணைய ஆர்வலர்கள் கடிதம்

புது தில்லி :

இணைய சமநிலை (நெட் நியூட்ராலிட்டி) குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இணையத்தைக் காப்போம் என்ற அமைப்பின் (savetheinternet.in) ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

டில்லி ஐஐடியில் மாணவர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அண்மையில் கலந்துரையாடினார். அப்போது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாகவே பேஸ்புக் நிறுவனம் இயங்கி வருவதாக ஜூக்கர்பெர்க் கூறியிருந்தார்.

இதை அடுத்து, savetheinternet.in ஆர்வலர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அனைவருக்கும் இலவச இணையதள சேவை வழங்குவதற்காக, பேஸ்புக் துவக்கியுள்ள இன்டர்நெட்.ஓஆர்ஜி (Internet.org)ல், பல்வேறு சேவைகளை பெற தொலைதொடர்பு நிறுவனங்கள் அனுமதி மறுக்கின்றன.

பேஸ்புக் பயனாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவில், பேஸ்புக் வழங்கிவரும் பல்வேறு சலுகைகளை போன்று, இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க நெட் நியூட்ராலிட்டி மற்றும் புதிய கண்டுபிடிப்பிற்கு விரைவில் அனுமதி உள்ளிட்டவைகளை இந்தியாவிலும் வழங்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருஷ்டி தோஷமாம்! சிருஷ்டி தோஷமாம்!

அடேய் பிரம்ம தேவா…
எந்த நேரத்திலடா
எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?
உன் படைப்புகளின்
ஜனனக் குறிப்பு கண்டு
ஒருவன் சொல்கிறான்…
கர்ப்ப தோஷம்…
ஒருவன் சொல்கிறான்…
சர்ப்ப தோஷம்!

இன்னும்…
எத்தனை எத்தனை தோஷங்கள்?
செவ்வாய் தோஷமாம்..
நாக தோஷமாம்!
மாங்கல்ய தோஷமாம்!
மங்கள தோஷமாம்!
சயன தோஷமாம்
சங்கட தோஷமாம்!
பிதுர் தோஷமாம்…
புத்ர தோஷமாம்!

அட…
இன்னும் சிலரின்
உருவத்தை உருக்குலைத்து
குற்றுயிராய்க் கிடத்துகிறாய்…

தோஷங்கள் இல்லையென்று
சிரித்துச் சொன்ன சோசியன்
பொடிவைத்துச் சொல்கிறான்…
உங்களுக்கு
திருஷ்டி தோஷம்!

அடேய்..
இது திருஷ்டி தோஷம் இல்லையடா..
உன் பார்வைக் குறைபாடு!
உன் படைப்புத் திறனின் குறைபாடு…

எங்கள் பணியில் குறைபாடு இருந்தால்
பணியிடை நீக்கம் செய்து
பழியை விலக்கிக் கொள்ளும்
மேலதிகாரிகள் சிலர் உண்டு!
ஆனால்…
உன் அதிகாரிகளும்
உதவாக்கரையாய்ப்
போய்விட்டார்களோ!?

அடேய் பிரம்ம தேவா..
திருஷ்டி தோஷம்
எமக்கு இல்லையடா..
உமக்கே..!
அது உம்
சிருஷ்டி தோஷம்!

அப்துல் கலாமின் உடைமைகள் ராமேஸ்வரம் வந்தன

ராமேஸ்வரம்:

தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு அந்த பங்களாவை அக்டோபர் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய அரசு அவரின் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பங்களாவில் இருந்த கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் வைக்கப்பட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள் இருந்தது. அந்த பெட்டிகள் 27ம் தேதி ராமேஸ்வரம் வந்தது. பெட்டிகளை பெற்றுக் கொண்டதாக அவரின் உறவினர் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார்.

கலாம் வசித்த பங்களாவை அவரது நினைவிடமாக மாற்றுமாறு எழுந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில் அந்த பங்களா மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

சென்னை:

மது ஒழிப்புக்காக “டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன் திரைப் படத்துக்காக தமக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

“மூடு டாஸ்மாக்கை..!” என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்து வரும் ம.க.இ.க., வின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதில், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு” எனும் பாடலை வெளியிட்டு, திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், இந்தக் குழுவைச் சேர்ந்த கோவனை, திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது..

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அருண்மொழி.

அவரின் இந்த அறிவிப்பு, கோவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக கலைஞர்களிடமிருந்து கிளம்பி உள்ள முதல் எதிர்ப்பு என்று கருதப் படுகிறது. அவரின் இந்த அறிவிப்புக்கு சில எழுத்தாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவன் கைதுக்கு எதிரான போராட்டத்திற்கு இது ஒரு முன்னெடுப்பு என்று பலர் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.