கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்றங் கரையில் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ஐயப்பன் முன்னிலையில் நடந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.
இந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
“கணக்கிடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்த பாரத தேசதாருக்கு உலகம் கடன் பட்டுள்ளது. இல்லாவிடில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் முன்னேறி இருக்காது” என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
சுலோகம்:
“யதாசிகா மயூராணாம் நாகானாம் மணயோயதா ததா வேதாங்க சாஸ்த்ராணாம் கணிதம் மூர்தனி ஸ்திதம்” என்ற சுலோகம் கணிதத்திற்கு இருக்கும் சிறப்பைக் கூறுகிறது.
பொருள்: மயிலுக்குத் தோகையைப் போல, சில நாகங்களுக்கு நெற்றியில் இருக்கும் மாணிக்கத்தைப் போல, வேதாங்க சாஸ்திரத்திற்கு கணிதம் முக்கியமானது.
நட்சத்திர, கிரக, கோளங்களின் நகர்வுகள், வானியல் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றுக்கு கணிதம் இன்றியமையாதது. வேத மந்திரங்களில் இருக்கும் கணிதத்தை வெளியில் எடுத்து வந்து அளித்ததே வேத கணிதம். கணிதத்தை எளிமையாகவும், விரைவாகவும் லாகவமாகவும் செய்யும் வழிகளைத் தேடுவதே கணித அறிஞர்களின் பணி. இந்த வகையில் பாரத தேச விஞ்ஞானிகள் செய்த முயற்சிகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பண்டைய வழி முறைகளில் சில, இன்று பள்ளிகளில் கற்றுத் தருபவற்றை விட எளிமையாகவும் விரைவாகவும் செய்யக் கூடியவையாக இருப்பதால், பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு சில அமைப்புகள் ஏற்பட்டு, வேத கணிதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கின. மாணவ, மாணவிகள் இதனால் பயனடைந்து வருகிறார்கள்.
வேத கணிதத்தை நடைமுறையில் எடுத்து வந்த மகநீயர் ‘ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த மகராஜ்’ என்பவர். இவர் ‘வேதிக் மேத்தமெடிக்ஸ்’ என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார். அதில் பதினாறு சமஸ்கிருத சூத்திரங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு கணக்குகளைக் குறைந்த நேரத்தில், குறைந்த முயற்சியோடு செய்வது எப்படி என்று விளக்கியுள்ளார். இவர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று ரிஷிகளின் ஞானத்தை உலகறியச் செய்தார். அனைவரும் இதனை ’மேஜிக் மேத்தமெடிக்ஸ்’ என்று பாராட்டினர்.
‘அற்புதக் கணிதம்’ என்ற பெயரில் ‘திரு கண்டவல்லி அப்பல ராம்மூர்த்தி’ என்ற அறிஞர் 1986 ல் ‘ஆந்திர பிரபா’ வாரப் பத்திரிகையில் வேத கணிதம் பற்றித் தொடர் எழுதினார். பண்டிட் ராம்மூர்த்தி சமஸ்கிருதம், ரசாயனம், பௌதிகம், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணராக விளங்கினார். அவரை ’நடமாடும் கலைக்களஞ்சியம்’ என்றழைத்தனர்.
நிகழ்காலத்தில் டாக்டர் ‘ரேமெள்ள அவதானி’ என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் வேத கணிதத்தை போதித்துப் புகழ் பெற்றுள்ளார். இவர் செய்த சேவைகளுக்கு இவருக்கு ‘நந்தி அவார்டு’ கொடுத்து கௌரவித்தனர். இவர் பாரதிய கணித விஞ்ஞானத்தைப் பற்றி சிறந்த நூல்களை இயற்றியுள்ளார்.
திரு அடல்பிஹாரி வாஜ்பாயி பாரதப் பிரதமராக இருந்தபோது, அப்போதைய மனித வள மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்த திரு முரளிமனோகர் ஜோஷி மூலம் வேத கணிதத்தை பள்ளிகளில் கற்றுத் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேசதுரோக இடது சாரிகள் அதனை ‘காவி மயமாக்கல்’ என்று திரித்துக் கூறி அதனை முளையிலேயே தடுத்து நிறுத்தியது நம் துரதிருஷ்டம்.
எவ்விதமாவது மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா? வேத கணிதம் அந்தப் பயனை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஈடேற்றக் கூடியது. “எனக்கு கணக்குப் பாடம் பிடிக்காது” என்று கூறும் மாணவர்கள் கூட “கணக்கு எனக்குப் பிடிக்கும்” என்று கூறும் நிலைக்கு வருவார்கள்.
வேத கணிதத்தால் பல நன்மைகள் உண்டு. பெரியவர்கள் வாய்க் கணக்காகப் போடும் வழிமுறையைக் கற்றுத் தருவது, ரிஷிகளின் முயற்சி, மேதைமை போன்றவற்றோடு பரிச்சயம் ஏற்படுத்துவது. பாரத தேசத்தின் பழம்பெரும் ஞானத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவது போன்றவை, அதன் மூலம் தேச பக்தி மிகுந்த புதிய தலைமுறை உருவாகும்.
கால்குலேட்டரும், கம்ப்யூட்டரும் புழங்கும் நவீன யுகத்தில் இதன் தேவை என்ன என்று கேட்பவர்கள் உள்ளனர். நுழைவுத் தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கு வேத கணிதம் நிச்சயம் உதவும் என்பதில் ஐயமில்லை.
As organisations recalibrate for an AI-enabled future, the question isn’t just about technology, it’s also about the people leading that change. At TechHR India 2025, Dr. Shashi Tharoor made a compelling case for leadership styles and skilling models that keep pace with a changing world of work.
Addressing an audience of business leaders, HR heads, and technology thinkers at Yashobhoomi, Dr. Tharoor called on India to outgrow its fixation with heroic, centralized leadership and instead focus on collaborative models that empower people.
“India needs a leader who is less demanding. Someone who listens, collaborates, and uplifts,” he said, framing listening, not commanding, as the true currency of effective leadership.
Rethinking Leadership for a New Era
Referencing Ajinkya Rahane’s quiet yet decisive leadership during India’s 2021 Test series in Australia, Tharoor argued that the country must embrace leaders who prioritise collective wins over personal glory. This, he suggested, applies equally to politics and to the boardroom.
In a corporate environment still catching up with new workforce expectations, Tharoor urged HR and business heads to adopt inclusive leadership styles, ones that “make everyone feel included” and help employees see themselves in the organisation’s success.
According to a recent report, leadership development was identified as one of the top talent challenges with business impact, and nearly 1 in 5 HR leaders expressed dissatisfaction with their efforts to upskill mid-level managers for managing multigenerational teams. This underscores Tharoor’s call for rethinking who gets developed and how.
Skilling as India’s Competitive Edge
The conversation moved from leadership to India’s bigger bet, its people. “We have 10 million people entering the job market every year. And we’re not ready,” Tharoor said, pointing to the urgent need for structured, scalable skilling models.
He proposed that companies above a certain size be legally required to operate skilling centres for rural youth and school dropouts. “They could hire the best, and others would leave with a diploma that opens up real opportunity.”
The industry seems to be recognising the gap. According to People Matters’ SHRPA 2025 study, talent development and upskilling ranks among the top three areas where HR leaders plan to increase investment. However, Tharoor noted that investment alone isn’t enough, execution must match ambition.
Beyond Optics: Rebuilding Brand India from Within
On India’s emerging digital identity, Tharoor acknowledged the shift in perception: from snake charmers to UPI. But he warned against relying solely on infrastructure and tech visibility.
“We’ve done a great job with the hardware—airports, convention centres, tech stacks—but we need to fix the software: education, sanitation, drinking water, poverty.”
He urged leaders to think beyond brand optics and invest in long-term capabilities, adding:
“Soft power without hard power is weakness. And hard power without soft power is bullying. India must develop smart power—investing in its people and projecting its values.”
The Real AI Challenge: Enabling People
As AI reshapes industries, Tharoor cautioned against building a future where a few innovate while many are left behind. He emphasised that India’s true edge lies not just in tech adoption, but in people who can drive that change.
“Leadership in India must become less about control and more about enablement,” he concluded. “Our challenge isn’t just infrastructure or AI or branding, it’s making sure the people building this country feel seen, heard, and skilled.”
108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலின் ஜேஸ்டாபிஷேகம் நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை 5ம் தேதி வட திருகாவிரியிலிருந்து ( கொள்ளிடம் ஆறு) தங்கம், வெள்ளிக் குடங்களில் புனித நீர் சுமார் 12 கிமீ எடுத்து செல்லப்பட்டது.
நொச்சியம் பகுதி காவிரிக் கரையில் இருந்து காவிரி புனித தீர்த்தம் எடுத்து வந்து, மண்ணச்சநல்லூர் வழியாக வெள்ளிக் குடத்தை வழியில் எங்கும் கீழே வைக்காமலும் , நிற்காமல் ஓடிக்கொண்டே, குடங்களை மாற்றி மாற்றி சுமந்து வந்து, காலை 9.00 மணி அளவில் திருவெள்ளறையை தீர்த்தம் அடைந்தது.
அங்கிருந்து ஆண்டாள் யானை மீது தங்கக் குடத்தில் புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு, மங்கள இசையுடன் புண்டரீகாட்சப் பெருமாள் சன்னதி சென்றடைந்தது.
பின்னர் ஜேஸ்டாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
‘ தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பிஹாரிகளைச் சேர்க்க, பாஜக தூண்டுதலில் தேர்தல் கமிஷன் சதி செய்கிறது ‘ என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு.
‘ தேர்தல் கமிஷன் வாக்குகளைத் திருடுகிறது ‘ என்ற ராகுலின் குற்றச்சாட்டைப் பின்பற்றி, ப. சிதம்பரம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இப்படி புகார் கூறுகின்றனர்.
பிஹாரிலிருந்து வந்து இங்கே வேலை தேடிக்கொண்டு இங்கேயே செட்டில் ஆனவர்களை இம்மாநில வாக்காளர்களாகத்தான் கருத முடியும். அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அவர்களுக்கு பிஹாரில் சொந்த வீடு இருந்தாலும், இங்கே வாக்குரிமை பெற தடையில்லை.
இந்திய வாக்காளர்கள் இந்தியாவில் எங்கும் வாக்களிக்கலாம். இரண்டு இடத்தில் வாக்களிக்க முடியாது . அவ்வளவுதான்.
தமிழக மக்களும் இதே போல பிற மாநிலங்களில் வாக்களிக்க முடியும்.
குடியுரிமை பெறாத அயல் நாட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும், இந்தியாவில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது- என்றெல்லாம் இஷ்டம் போல பேசுவது முற்றிலும் அரசியலுக்காக மட்டுமே.
தமிழக வாக்காளர் பட்டியலில் பிற மாநிலத்தவர் இடம் பெறுவது, தமிழக வாக்காளர்களின் உரிமையைப் பாதிக்கும், இது மாநில உரிமைக்கு எதிரானது – என்ற வாதம் பொருளற்றது.
மாநில உரிமை என்ற கோஷமே ஒரு மாயை. எல்லா மாநிலங்களும் சமமே தவிர, எந்த மாநிலத்துக்கும் தனி உரிமைகள் இல்லை. அதனால்தான் காஷ்மீரின் சிறப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.
மாநில உரிமை என்பது சரியென்றால், மாவட்ட உரிமை, தாலுகா உரிமை, வார்டு உரிமைகளும் சரியாகி விடும்.
உண்மையில் முக்கியத்துவம் பெறுவது மக்கள் உரிமை மட்டுமே.
விவரம் தெரிந்தவர் என்று கருதப்படும் ப. சிதம்பரம் கூட வேண்டுமென்றே திருமாவளவன் வைகோ லெவலுக்கு இறங்கிப் பேசுவது பரிதாபத்திற்குரியது.
தேர்தல் மோசடி மூலம் மோடி பிரதமராகி விட்டார் என்ற ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.
தேர்தல் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். இப்படியொரு பெரும் மோசடி நடத்துவது சாத்தியமற்றது. அப்படி நடந்திருந்தால், தேர்தல் நடக்கும்போதே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்திய பகுதியில் 2000 சதுர கிலோ மீட்டர் தூரம் சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற ராகுலின் பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.
தோல்வி பயம் வந்தால், முன் எச்சரிக்கையாக தாறுமாறாகப் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய இலக்கணம்.
நம் நாட்டில் பேச்சுரிமை பிதற்றல் உரிமையாகி விட்டது.
‘ஆடி 18’ம் பெருக்கு நாளில், ‘2026’ ஆங்கில புத்தாண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடும் பணிகளில், சிவகாசி காலண்டர் நிறுவனங்கள் சுறுசுறுப்பு…..
வரும் ‘2026’ ஆங்கில புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்களுக்கான ஆல்பம் தயாரிக்கும் இறுதிகட்ட பணிகளில்,சிவகாசி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் அச்சிடுவதால் சிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன.
காலண்டர்களின் வகைகள்,ரகங்கள், புதிய டிசைன்கள், விலை விவரங்கள் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றினைத்து முதலில் ஆல்பங்களாக தயாரிப்பார்கள். தயாரிக்கப்பட்ட ஆல்பங்களை ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி 18’ம் பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் செய்து வெளியிடுவது வழக்கம்.
காலண்டர் ஆல்பங்களை முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஆடி பெருக்கு நாளில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கும்.
இந்தாண்டிற்க்கான புதுவரவான பொற்காலம், புதுயுகம், வழிகாட்டி,VIP காலண்டர் என அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இது குறித்து காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெயசங்கர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் சித்திரை மாதம் பிறந்து, பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தொடங்கப்படும்.
வழக்கமான காலண்டர்களுடன் புதிய ரகங்களும் அறிமுகம் செய்யப்படும். அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ‘ஆடி 18’ம் பெருக்கு நாளான இன்று சிறப்பு பூஜைகளுடன் காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட உள்ளன.
மூலப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வகைகளால், புத்தாண்டு தினசரி காலண்டர்களின் விலை கடந்தாண்டை விட இந்தாண்டு 7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் உயரும் நிலை உள்ளது என்று கூறினார்.
“இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது!” – ராகுல் காந்தி குதூகலம்
— ஆர். வி. ஆர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு உள்ள அதிகாரமும் முக்கியத்துவமும் அவரது வலிமையான நாடு அளித்தது. வாய்க் கொழுப்பு, அவரது அசட்டுத்தனம் கொடுத்தது – அவரது சமீபத்திய பேச்சு இதற்கு உதாரணம்.
டிரம்பிற்கு ரஷ்யா மீது ஒரு கோபம் உண்டு. காரணம், அவர் தலையிட்டுப் பார்த்தும் ரஷ்யா-உக்ரைன் போரில் அவர் விரும்பிய வழியில் ரஷ்யா போரை நிறுத்த முன்வரவில்லை. அதனால் அமைதிக்கான நோபல் பரிசு வாய்ப்பும் டிரம்பை விட்டு நழுவியது என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது.
இந்தியா மீதும் அதிபர் டிரம்பிற்கு மனக்கசப்பு உண்டு. அதற்குக் காரணம்: மோடியின் தலைமையிலான இந்தியா, டிரம்பின் மானத்தை சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்தது – அதுவும் டிரம்ப் தனக்குத் தானே வாங்கிக் கட்டிக் கொண்டது. எப்படி என்றால், பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, சென்ற மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்களையும் ராணுவக் கட்டமைப்புப் பகுதிகளையும் ஏவுகணைகள் வீசி துவம்சம் செய்தது. பாகிஸ்தானும் சோப்ளாங்கியாக நம் மீது எதிர்த் தாக்குதல் செய்தது.
நான்கு நாட்கள் நடந்த அதிவேகப் போரில் ‘முடியலை’ என்றாகிவிட்ட பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா போரை நிறுத்தியது. இந்த நேரத்தில் விஷமக்கார டிரம்ப் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.
“இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடனான உங்கள் வர்த்தகம் நின்றுபோகும்” என்று இரு நாடுகளையும் தனது அரசு எச்சரித்ததால் அவை போரை நிறுத்தின என்று டிரம்ப் கூசாமல் புளுகினார். “இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே போர் பெரிதாகாமல் நான் தடுத்தேன்” என்றும் சவடாலாகப் பேசினார். அவரது நோபல் பரிசுக் கனவு மங்கவில்லை.
சக்தி மிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புளுகை அழுத்தமாக நேரடியாக மறுக்காமல், அதே சமயம் உலகம் நன்றாகப் புரிந்துகொள்ளூம் வகையில், இந்தியா ஒன்றைத் தெளிவு படுத்தியது. அதாவது, பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவை அணுகிக் கேட்டதாலும், ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பெரிதும் நிறைவேறி விட்டதாலும், இந்தியா போரை நிறுத்தச் சம்மதித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு அதுதான் காரணம், வேறு எந்த மூன்றாம் நாடும் அதற்குக் காரணம் அல்ல என்பதை உலகம் நம்புமாறு இந்தியா எடுத்துச் சொன்னது. இருந்தாலும் டிரம்ப் புளுகியபடி இருந்தார்.
சென்ற ஜூன் மாத நடுவில், டிரம்புடன் போனில் பேசிய மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நான்கு-நாள் போர், அந்த இரு நாடுகளுக்குமான ராணுவத் தொடர்பு வழிகள் மூலமாக, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டபடி, நிறுத்தப் பட்டது. இதில் மற்ற மத்தியஸ்தம் ஏதும் நடக்கவில்லை என்றும் டிரம்பிடமே தெரிவித்தார் – இதை இந்தியாவின் வெளி விவகாரத்துறை செயலரும் ஒரு அறிக்கை மூலம் அப்போது தெரியப் படுத்தினார்.
தன் மூக்குடைந்தாலும் டிரம்ப் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இப்போது, ‘என் மானத்தை வாங்கிய இந்தியாவே, உன்னை விட்டேனா பார்!’ என்பதற்காகவும் சேர்த்து, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25% வரி விதித்திருக்கிறார். அது போக, நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் நமது நாட்டுப் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதியானால் அதற்கு ஒரு அபராதமும் போட்டிருக்கிறார்.
புதிய வரி மற்றும் அபராதம் விதித்ததுடன் டிரம்ப் நிற்கவில்லை. அவற்றைத் தொடர்ந்து, “ரஷ்யப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் ‘செத்த பொருளாதாரங்கள்’ (dead economies). அவை எப்படியும் போகட்டும்” என்று தத்துப் பித்தென்று சென்ற ஜூலை 31-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
வாய்க் கொழுப்பில் டிரம்ப்பிற்குச் சளைக்காத அரசியல் தலைவர், அவரையும் மிஞ்சக் கூடிய தலைவர், உலகில் ஒரு மனிதர்தான் உண்டு. ராகுல் காந்திதான் அவர். இந்தியாவை எதிர்த்து, அதுவும் மோடியை எப்படியாவது சங்கடப் படுத்தும், பேச்சை யார் பேசினாலும் அதை ராகுல் காந்தி வரவேற்பார். அதன்படி, டிரம்பின் ‘செத்த பொருளாதார’ அறிக்கை வந்த அதே நாள் ராகுல் காந்தி அதைக் கொண்டாடிப் பேசினார்.
ராகுல் பேசிய வார்த்தைகள் இவை: “டிரம்ப் சொல்வது சரிதான். இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்பது, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் இந்த உண்மையைக் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” அடுத்து, தனது X தளத்திலும் “இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது. அதைக் கொன்றவர் மோடி” என்று ராகுல் காந்தி பதிவிட்டார்.
இந்தியா ஒரு செத்த பொருளாதாரம் என்பதை ராகுல் காந்தி நிஜமாகவே நம்புகிறாரா? இல்லை, “டிரம்பை ஒரு பொய்யர் என்று மோடி அறிவிக்கத் தயாரா?” என்று தான் சமீபத்தில் வெட்டிக் கேள்வி கேட்டோமே, அது ராகுல் காந்தியே டிரம்பை இடிப்பது போல் தொனிக்கிறதே, அது டிரம்பிற்கு வருத்தம் தருமே என்று ராகுல் இப்போது யோசிக்கிறாரா? அதனால் ‘டிரம்பை ஒருவிதத்தில் சமாதானம் செய்வோம்’ என்று எண்ணி டிரம்பின் ‘செத்த பொருளாதாரக்’ கருத்தை வரவேற்று அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் வளைந்து பணிந்து பேசி இருக்கிறாரா ராகுல்? ராகுலின் பித்துக்குளிப் பேச்சுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்.
தான் வெறுக்கும் மோடி நிர்வகிக்கும் நாட்டை டிரம்போ வேறு யாரோ மட்டம் தட்டி இழித்துப் பேசினால், ராகுல் காந்தியின் அற்ப சந்தோஷத்திற்கு அளவு கிடையாது. இதுவும் ராகுல் பேச்சுக்கு ஒரு காரணம்.
என்ன பேசுகிறார் ராகுல் காந்தி? நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோஹன் சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் நம் பிரதமர்களாகப் பதவி வகித்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் துடிப்புடன் ஜிகுஜிகுவென்று ஜொலித்ததா? பிறகு 2014-ம் வருடம் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான நாள் முதற்கொண்டு தான் நமது பொருளாதாரம் சோகை அடைந்து செத்துவிட்டதா?
ஒரு நாட்டின் பொருளாதாரமே மடிந்து போவது அந்த நாட்டிற்கான பெரும் கேடு, பெரும் துயரம். மோடி பிரதமரான முதல் ஐந்து ஆண்டுகள் சென்றபின் நடந்த 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் லோக் சபா தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது, இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது, அதற்குக் காரணம் மோடி தலைமையிலான மத்திய ஆட்சி என்று ராகுல் காந்தி மக்களிடம் சொன்னாரா? இல்லை. ஏனென்றால் ஒரு அமெரிக்க அதிபர் மதிகெட்டு அவ்வாறு முன்னதாக அறிவிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் அப்போது அந்த அளவு புத்தி கோளாறாக வேலை செய்யவில்லை.
இன்னொன்று. தொழிலதிபர் அதானியை எதிர்த்தும், பிரதமர் மோடி அந்தத் தொழிலதிபருக்குச் சாதகமாக முடிவுகள் எடுப்பதாகவும், ராகுல் காந்தி அடிக்கடி சொல்லி வருகிறார். செத்துப்போன ஒரு பொருளாதாரத்தில் ஒரு தொழிலதிபர் ராகுல் காந்தியின் கவனம் பெறும் அளவிற்கு வளர்ந்து தொழில் செய்ய முடியுமானால் அவர் பெரிய தொழில் மேதையாக இருக்கவேண்டுமே? இதை ராகுல் காந்தி ஒப்புக் கொள்கிறாரா? பாவம் ராகுல் காந்தி. தன் பிதற்றல் தன்னை எப்படியெல்லாம் அம்பலப் படுத்தும் என்பதை அவர் உணரவில்லை.
டிரம்பிற்கும் ராகுல் காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தியா இழிக்கப் பட்டாலும், இந்தியா எக்கேடு கெட்டாலும் – அப்படிக் கெட்டதாக ஒரு அபத்தப் புரளியை யார் கிளப்பினாலும் – டிரம்பிற்குக் கவலை இல்லை. தன் சுயலாபம் மட்டுமே அவருக்குக் குறி. ராகுல் காந்தியும் அப்படித்தானே?
Author: R. Veera Raghavan (Advocate, Chennai)
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com
மதுரை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் 800-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் அனுசரித்து வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
இவ்விழாவில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.
வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா ஸ்போர்ட்ஸ் அகடமி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடனர். இதில் சுருள்வாள் பிரிவில் 7 முதலாம் பரிசும். ஒற்றை கம்பு 8 முதலாம் பரிசும், நான்கு 2 பரிசும் 2 மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பரிசுகளை உலக சிலம்பம் விளையாட்டுச் சங்க தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். சுதாகரன், , விருதுநகர் மேயர் சங்கீதா இன்பமும் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த சாதனை மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசான் கே கணேசன் ஆகியோரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
அலங்காநல்லூரில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம், 11ஆம், 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முக்குலத்தோர் நல சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் சோணைமுத்து, செயலாளர் ஆதி முத்துக்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்குலத்தோர் நல சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வரவேற்றார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் சௌத்ரிதேவர், வல்லப்பா கல்வி குழும நிறுவனர் வல்லப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில், பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே , குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுலா சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, குறவன்குளம் விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி சிறப்பு அபிஷேகம்!
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி நரசிம்மர், கருடாழ்வார், வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. இக் கோயிலில் உள்ள நரசிம்மர், கருடாழ்வாருக்கு, ஆடி சுவாதியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு, வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதே போல, மதுரை வைகை காலனி, கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை, கோயில் பட்டர் கோபால கிருஷ்ணன் செய்தார்.
அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.
அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது எனவும், அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.