
பாகிஸ்தான் சீக்கிய சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாகிஸ்தான் சீக்கிய சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்களாக காணவில்லை.
இந்த் நிலையில் அவரை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு லாகூரின் நங்கனா சாஹிப் பகுதியில் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறபட்டது.
இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.
அவர் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு சிறுமிக்கு ஆயிஷா என்று பெயரிடப்பட்ட அந்த பெண்ணின் வீடியோவும் வெளிவந்துள்ளது.
பின்னர் நடந்த சம்பவத்தை அந்தி சிறுமியிடம் கேட்டு அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்

மற்றும் வீடியோ மேல்முறையீட்டின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பாகிஸ்தானில், சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் அப்பாவி இந்து, சீக்கிய சிறுமிகள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமையான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் உதவி கோரி பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா ஆகியோரிடமும் சீக்கிய குடும்பத்தினர் முறையிட்டு உள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



