December 5, 2025, 7:08 AM
24.9 C
Chennai

அதிமுக., இல்ல விழா பேனர் சரிந்து இளம்பெண் மரணம்; அச்சகத்துக்கு சீல்!

pallikkaranai accident subasri died - 2025

சென்னையில் சாலை நடுவே வைக்கப் பட்டிருந்த பேனர் சரிந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் பேனரை அச்சிட்ட அச்சகத்துக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து, சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேனர் அச்சடித்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சண்முகா Graphics & Stickers பிரிண்டிங் நிறுவனத்திற்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம்…! இதற்கு எந்த ஊர் நியாயம்டா இது என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.

ஆயினும், தற்போதைய புதிய விதிகளின் படி, அச்சகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறுகின்றனர் போலீஸார்.

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து தங்களது வேதனையை வெளிப்படுத்தும் பொதுமக்கள், இந்த விவகாரத்தில் விதிகளை மீறியது யார்..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

சென்னை, கோவிலம்பாக்கம் ஜெ.டி.திருமண மஹாலில் நடைபெற்ற காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் சி.ஜெயகோபால் மகன் திருமண விழாவிற்காக வருகை தரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பேனர் சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்துள்ளார். பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதியுள்ளாராம்.

pallikkaranai accident banner - 2025

திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அவர்களை வரவேற்க வைக்கப்பட்ட பேனர் ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது.

கோவையில் ரகு… சென்னையில் சுபஸ்ரீ… இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால், சாலை ஓரங்களில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்படும்..?? என்று மனம் குமுறுகின்றனர் பொதுமக்கள்.

சென்னையில் மனம் பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியபோது…

குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ(வயது 22) கந்தன்சாவடியில் உள்ள, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் (ASV Titaniam Information Service) இருந்து, தனது யமஹா ரே இருசக்கர வாகனத்தில் (வண்டி எண் : TN 11 Q 3760 ) தன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். தலைக்கவசம் அணிந்துள்ளார்.

துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே Ocean Dew அபார்ட்மெண்ட் எதிரில் வரும் போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி (வண்டி எண் : TN 01 AA 6810) நிலை தடுமாறிய சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது.

இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் காயம். அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிறிது நேரத்தில் இறந்து விட்டார். உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது.

சென்னை மெளண்ட் போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறை வழக்குப் பதிவு செய்து (Cr No 297/m1/19 Uls 279, 336, 304 A IPC) விசாரித்து வருகிறார்கள்.

சென்னை, கோவிலம்பாக்கம் ஜெ.டி.திருமண மஹாலில் நடைபெற்ற காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பள்ளிக்கரணை முன்னாள் கவுன்சிலர் சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, துணை முதல்வர் உள்ளிட்ட அஇஅதிமுக பிரமுகர்களை வரவேற்று துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலையின் இருபுறமும், சாலையின் நடுவே தடுப்புச் சுவரிலும் பேனர்கள் வைத்திருந்துள்ளனர். அந்தப் பேனர்தான் சாலையில் சென்ற சுபஸ்ரீயின் மீது விழுந்து உயிரிழப்புக்கும் காரணமென்று கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியின்றி பேனர் வைக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories