குருவாயூர் கோவிலில் பினராய்விஜயன் சுவாமி தரிசனம்; பக்தா்கள் அதிர்ச்சி.!

guruvaur - 2026

கேரள முதல்வர் பினராயி விஜயன், முதன்முறையாக குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் அருகே, கட்டப்பட உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்.

தொடர்ந்து கோவிலுக்கு வர வேண்டும் என குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் கே.பி. மோகன்தாஸ் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று, குருவாயூர் கோவிலுக்கு, பினராயி விஜயன் முதன்முறையாக வருகை தந்தார்.

முதல்வரை, கோவில் யானைகளான பத்மநாபன், கேசவன் மற்றும் இந்திர சமன் வரவேற்றன.

guruvaur 2 - 2026

முதல்வர் வருகையின் போது, ” உதய சமஸ்தானா பூஜை” நடந்து கொண்டிருந்தது.

முதல்வருடன், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கே.பி.மோகன்தாஸ் உடன் வந்தனா்.

கோவிலை சுற்றிப் பார்த்த முதல்வர் விஜயன், கோவிலில் நடக்கும் அன்றாட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கோவிலில் செய்யப்பட்டிருந்த பிரகாசமான அலங்காரங்களை பார்த்து, இது தான் கடவுள் கிருஷ்ணரின் சன்னதியா என கேட்டார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

மேலும் முதல்வர் கூறுகையில், இது போன்ற கோவில்கள் கேரளாவில் அரிதாக உள்ளன.

penaraivijan cpm - 2026

இது போன்ற கோவில்கள் மீது மக்கள் வைத்துள்ள, நம்பிக்கையை பார்த்து, கோவிலுக்கு அதிக பாதுகாப்பு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவில் பக்கத்தில் உள்ள மேல்பத்தூர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் விஜயன் பங்கேற்றார்.

இதனிடையே, கோயிலில், முதல்வர் விஜயனுக்கு யானைகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டதற்கு, விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவில் திருவிழாக்களின் போதே, யானைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு.

ஆனால், முதல்வர் விஜயன் கோவிலுக்கு சென்ற போது, விழாக்கள் ஏதும் நடக்கவில்லை.

இதனால், யானைகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகும்.

இது குறித்து கவர்னர் மற்றும் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆனால், கோயில் நிர்வாகம் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் கடவுள் மறுப்பாளருமான பினராயி, கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தது பலவித விவாதங்களை கேரளாவில் ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories