December 6, 2025, 3:00 AM
24.9 C
Chennai

குருவாயூர் கோவிலில் பினராய்விஜயன் சுவாமி தரிசனம்; பக்தா்கள் அதிர்ச்சி.!

guruvaur - 2025

கேரள முதல்வர் பினராயி விஜயன், முதன்முறையாக குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் அருகே, கட்டப்பட உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்.

தொடர்ந்து கோவிலுக்கு வர வேண்டும் என குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் கே.பி. மோகன்தாஸ் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று, குருவாயூர் கோவிலுக்கு, பினராயி விஜயன் முதன்முறையாக வருகை தந்தார்.

முதல்வரை, கோவில் யானைகளான பத்மநாபன், கேசவன் மற்றும் இந்திர சமன் வரவேற்றன.

guruvaur 2 - 2025

முதல்வர் வருகையின் போது, ” உதய சமஸ்தானா பூஜை” நடந்து கொண்டிருந்தது.

முதல்வருடன், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கே.பி.மோகன்தாஸ் உடன் வந்தனா்.

கோவிலை சுற்றிப் பார்த்த முதல்வர் விஜயன், கோவிலில் நடக்கும் அன்றாட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கோவிலில் செய்யப்பட்டிருந்த பிரகாசமான அலங்காரங்களை பார்த்து, இது தான் கடவுள் கிருஷ்ணரின் சன்னதியா என கேட்டார்.

மேலும் முதல்வர் கூறுகையில், இது போன்ற கோவில்கள் கேரளாவில் அரிதாக உள்ளன.

penaraivijan cpm - 2025

இது போன்ற கோவில்கள் மீது மக்கள் வைத்துள்ள, நம்பிக்கையை பார்த்து, கோவிலுக்கு அதிக பாதுகாப்பு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவில் பக்கத்தில் உள்ள மேல்பத்தூர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் விஜயன் பங்கேற்றார்.

இதனிடையே, கோயிலில், முதல்வர் விஜயனுக்கு யானைகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டதற்கு, விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவில் திருவிழாக்களின் போதே, யானைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு.

ஆனால், முதல்வர் விஜயன் கோவிலுக்கு சென்ற போது, விழாக்கள் ஏதும் நடக்கவில்லை.

இதனால், யானைகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகும்.

இது குறித்து கவர்னர் மற்றும் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆனால், கோயில் நிர்வாகம் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் கடவுள் மறுப்பாளருமான பினராயி, கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தது பலவித விவாதங்களை கேரளாவில் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories