இடி தாக்கி 150 செம்மறி ஆடுகள் பலியாயின.

Published:

இடி விழுந்ததில் 150 செம்மறி ஆடுகள் பலியாயின.

ஊமைப் பிராணிகள் கூட்டமாக உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குண்டூர் மாவட்டம் பாபட்ல மண்டலம் மத்திப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா, சிவா, முசலய்யா, பாஜி, சீனிவாசராவ் ஆகியவர்களுக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளை ஆடு மேய்ப்பவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி மாலை ரயில்வே ட்ராக் அருகில் இருந்த புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று இரவு இடி மின்னலோடு பெரிய மழை பெய்ய தொடங்கியது. ஒரு பேரிடியில் ஒரே இடத்தில் கூடி இருந்த 150 ஆடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன.

இதன் மூலம் சுமார் 7 லட்ச ரூபாய் நஷ்டமடைந்த ஆட்டு மந்தைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

இரவு முழுவதும் புல்வெளியில் அவைகளை மேய விடுவது வழக்கம். அதே போல் செவ்வாய் இரவு அவற்றை மேயவிட்டு புதன் காலை சென்று பார்க்கையில் மந்தையிலிருந்த ஆடுகள் அனைத்தும் இறந்து கிடந்தன. ஆடுகள் இன்சூர் செய்யப்படாததால் அதற்கான இழப்பை ஈடுகட்ட இயலாமல் சொந்தக்காரர்கள் கலங்கி நிற்கின்றனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இதற்கு முன் கிருஷ்ணா மாவட்டத்தில் அக்டோபர் 3ம் தேதி 55 வயதான விவசாயத் தொழிலாளி நாகேஸ்வரராவ் இடி தாக்கி பலியானார். நாகேஸ்வரராவ் வேலை முடிந்து வீடு திரும்பும்போது பெருமழையோடு கூடிய இடி தாக்கியதால் அங்கேயே விழுந்து இறந்து போனார்.

மேலும் இடி மின்னலோடு கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img