சாலை உயர்ந்து… வீட்டுக்குள் நீர் புகுந்து.. எப்போ விடியும் எங்க கஷ்டம்?!

Published:

ganapathinagar complaint - 2026

ஐயா,
கோவை, கணபதி மாநகர் 3-வது பிளாக் வீட்டு எண் LD 555 வார்டு எண்41-க்கு உட்பட்ட, வீட்டில் மழை நீர் உட்புகுந்து தொடர்பாக சென்ற முறையே புகார் what app மூலம் அளித்து AC மற்றுமுள்ள அதிகாரிகள் நேரில் வந்து Lorry மூலம் மழைநீர் உரிஞ்சி சென்றனர்.

சாலைகளை 4 அடி முதல் 5 அடி வரை உயர்த்தி விட்டதால் Housing Unit மூலம் கட்டிய வீடுகள் பள்ளத்தில் இருப்பதால் மழைநீர் போக வழியின்றி வீட்டினுள் புகுந்து விடுகிறது. எனவே உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும்.

1998 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 30 ஆணடு காலமாக ஒரே பதில் எதிர் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி சரி செய்யப்படும் என்ற பதிலால் இன்று மழைநீர் வீட்டினுள் புகுந்துவிட்டது.

சென்ற முறை போல் இந்த முறையும் Lorry மூலம் உரிஞ்சி வெளியேற்றிட வேண்டும். 30 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் உள்ள இந்த பிரச்சனைக்கு தீர்வை போர்க் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுகிறோம்.

செயலாளர்,
கணபதி மாநகர் 3-வது பிளாக், கணபதி, கோவை-6.
41-வது வார்டு,
Email ID : tamizhaga10@gamil.com
Cell: 9442735211

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img