மஞ்சள் நீராட்டு விழாவில் மதுவிருந்து; தாய்மாமன் தாக்கியதில் தந்தையை இழந்த மகள்.!

vao attack - 2026

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மசமுத்திரம் மோட்டுபாளையம் பகுதியை சார்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). இவர் கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு ரோஸி (வயது 35).என்ற மனைவி இந்த தம்பதியினர் மகளிற்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவினை சிறப்பிக்க உறவினர்கள் வந்திருந்த நிலையில்., ரோசியின் அண்ணன் ஜோசப் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தாருடன் தாய்மாமன் சீர்வரிசை செய்ய வந்துள்ளனர்.

தாய்மாமன் சீர்வரிசைக்கு பின்னர் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கும் போது உறவினர்கள் அனைவரும் மோகன்ராஜ் ஏற்பாடு செய்திருந்த மதுவிருந்தில் கலந்து கொண்டு மது அருந்தி உள்ளனா்.

பின்னர் மாலை நேரத்தில் தலைக்கு ஏறிய போதையில் ஒருவரை ஒருவர் கேலி பேசியும் செல்லச்சண்டைகள் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த சமயத்தில்., அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த மோகன்ராஜ் ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தாரை கடுமையாகவும் மிகமிக ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஜோசப் தட்டிக்கேட்ட நிலையில்., இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

இதில் கடும் ஆத்திரமடைந்த ஜோசப் விறகு கட்டையால் மோகன்ராஜை பலமாக அடித்துள்ளார்.

dead bady 10 - 2026

இதனால் மோகன்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில்., நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பதறிப்போன உறவினர்கள் மோகன்ராஜை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே மோகன்ராஜ் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்., மோகனின் மனைவியான ரோஸியும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories