டிச.22: தேசிய கணித தினம்; ராமானுஜம் என்ற மாமேதை!

Published:

IMG 20191222 WA0022 - 2026

டிசம்பர் 22 இன்று விமரிசையாக கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் ஜெயந்தி விழா.

டிசம்பர் 22 தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜமனின் 125 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது 2012 இல் மெட்ராஸ் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டிசம்பர் 22 ஐ தேசிய கணித தினமாக அறிவித்தார் .

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 அன்று நாடெங்கிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய தினம் மாணவர்கள் தங்கள் கணித திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்கள்.

இந்திய கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் ஃபெலோ ஆஃப் தி ட்ரின்டி கௌரவம் பெற்ற முதல் இந்தியர்.

IMG 20191222 WA0021 - 2026

ஃபெலோ ஆஃப் தி ராயல் சொசைட்டி கௌரவம் பெற்ற இரண்டாவது இந்தியர் .

இருபதாம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளில் ஒருவராக அடையாளம் காணப் பெற்ற இந்தியர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இவர் ஈரோடு நகரில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் கோமலம்மாள், ஸ்ரீனிவாச ஐயங்கார் தம்பதிகளின் மகனாக 1887 டிசம்பர் 22 ல் பிறந்தார்.

சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணமான திறமையைக் காட்டினார்.

ஓஎஸ் கார் என்ற கணித மேதை படைத்த சினாப்சிஸ் ஆஃப் ப்யூர் மேதமெடிக்ஸ் என்ற புத்தகம் ராமானுஜனிடம் இருந்த மேதமையை வெளிக் கொண்டு வந்தது . அதிலிருந்த அல்ஜிப்ரா, அனாலிடிகல் ஜாமென்ட்ரி போன்றவற்றுக்கு தொடர்பான 6165 தேற்றங்களை நிரூபிப்பதற்கு பெரிய பெரிய பேராசிரியர்களே திக்குமுக்காடிய போது ராமானுஜன் எந்த நூலின் உதவியும் இன்றி எளிதாக அவற்றை நிரூபித்தார்

IMG 20191222 WA0023 - 2026

கணிதமேதை சீனிவாச ராமானுஜனைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசாங்கம் 1962இல் ராமானுஜனின் 75 ஆம் பிறந்த நாளன்று நினைவு தபால் தலை வெளியிட்டது.

1917இல் ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் ராமானுஜன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகத்தை நிறுவியது.

இவர் 1920 ஏப்ரல் 26 இல் இயற்கை எய்தினார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img