December 5, 2025, 6:07 PM
26.7 C
Chennai

இன்று முதல் பப்ஜி கட்..! ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

pubg-banned1
pubg-banned1

செப்.2ஆம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது. மத்திய அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்கள், சில நாட்களுக்குள் பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து எடுக்கப் பட்டன. 

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

இந்தியாவில் இளைஞர்கள் பலரை தன் வசம் சுண்டி இழுத்து அடிமைப்படுத்தி வைத்திருந்த பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு பிரபலமாக இருந்தது ஆனால் பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு.

அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் தக்க வைக்க, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுவித்துக் கொண்டு, தாமே முழு பொறுப்பையும் ஏற்பதாகவும் அறிவித்திருந்தது.

pubg-banned
pubg-banned

எனினும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்தன. நாட்டின் இளைய தலைமுறை இவ்வாறு மொபைல் ஆப் விளையாட்டின் மீதே கவனம் கொண்டு எதிர்காலத்தைத் தொலைப்பது மிகவும் அபாயகரமானது என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர் 

பப்ஜி விளையாட்டு: மனமுடைந்த கல்லூரி மாணவன் தற்கொலை!

மீண்டும் ஒரு உயிரை குடித்த பப்ஜி! 16 வயது சிறுவன் பரிதாப மரணம்!

அதிர்ச்சி பப்ஜி கேம் மோகம்! தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்த சிறுவன்!

இந்நிலையில் பப்ஜி விளையாட்டின் விபரீதங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பப்ஜி விளையாட்டையும் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது 

மீண்டும் அதிரடி! பப்ஜி உள்பட 118 மொபைல் ஆப்களுக்கு தடை!

இந்நிலையில் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிமானோர் விளையாடி வந்தனர். ஆனால் தற்போது ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் அக்டோபர் 30 முதல் இயங்காது என நிரந்தர தடை விதித்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து பப்ஜி நிறுவனம் கூறுகையில், ”சீன நிறுவனமான டென்சென்டுடனான எங்கள் உறவை முடித்துக் கொள்வதன் மூலம் இந்தியாவில் இந்த விளையாட்டை தடையின்றி தொடர விரும்பினோம். பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். 

இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். ஆனால் எங்கள் தனியுரிமைக் கொள்கைப்படி அனைத்துப் பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. இந்தியாவின் இந்த முடிவுக்காக  மிகவும் வருந்துகிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்  நன்றி” என்று தெரிவித்துள்ளது. 

பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories