திருச்செந்தூர் தேரோட்டத்தை தடுக்க சதி? முதல்வர் தலையிட இந்து முன்னணி வேண்டுகோள்!

kadeswara subramanian
kadeswara subramanian

திருச்செந்தூர் தேரோட்டம் தடுத்திட சதி நடப்பதாகவும், தமிழக முதல்வர் தலையிட்டு திருச்செந்தூர் தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது!

இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…

திருச்செந்தூரில் மாசி மக திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்ற, பாரம்பரியமானது ஆகும். இந்த மாசிமகத் திருவிழா தேரோட்டம் பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விழாவாக இருந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகள் பாரம்பரியமாக நடந்து வரக்கூடியது.

இந்தாண்டு, திருச்செந்தூரில் தேரோட்டம் நடைபெறாது என்று அறநிலை துறை அறிவித்து இருக்கிறது. கோவில் இணை ஆணையாளர் அவர்களிடம் இது பற்றி பேசியபோது, திருச்செந்தூர் தேரோடும் ரத வீதியான தெற்கு ரத வீதியில் சாலை போடும் பணி தொடங்கி அரைகுறையாக 8 மாதங்களாக நின்று போயிருக்கிறது. நாங்கள் தேரோட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பேரூராட்சி சாலை போட தயாராக இல்லை எனக் கூறினார்.

எட்டு மாதங்களாக ஒரு ரதவீதி சாலை போட முடியாது போனதற்கு காரணம் அரசின் அலட்சியமான நிர்வாகமா? இல்லை தேர்த்திருவிழா தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அதிகாரிகள் யாரேனும் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி பக்தர்களின் மனங்களில் எழுகிறது.

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு தேரோடும் விதமாக சாலையை செப்பனிட்டு தரவும் துரித கதியில் வேலை நடைபெறவும் உத்தரவிட வேண்டுகிறோம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டாக திருவிழா நின்றிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், திருவிழா நடத்த வேண்டிய தருணத்தில் இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தடைபடுவது வேதனைத் தருகிறது.

இந்த தேர் திருவிழா நின்று போகாமல் நடத்திடவும் தேர் திருவிழா நின்று போனதால் கொதித்துப் போன மக்களின் மனதில் பால் வார்த்திடவும் தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து, திருச்செந்தூர் மாசி தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வேண்டுகிறேன்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories