திருச்செந்தூர் தேரோட்டத்தை தடுக்க சதி? முதல்வர் தலையிட இந்து முன்னணி வேண்டுகோள்!

kadeswara subramanian
kadeswara subramanian

திருச்செந்தூர் தேரோட்டம் தடுத்திட சதி நடப்பதாகவும், தமிழக முதல்வர் தலையிட்டு திருச்செந்தூர் தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது!

இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…

திருச்செந்தூரில் மாசி மக திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்ற, பாரம்பரியமானது ஆகும். இந்த மாசிமகத் திருவிழா தேரோட்டம் பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விழாவாக இருந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகள் பாரம்பரியமாக நடந்து வரக்கூடியது.

இந்தாண்டு, திருச்செந்தூரில் தேரோட்டம் நடைபெறாது என்று அறநிலை துறை அறிவித்து இருக்கிறது. கோவில் இணை ஆணையாளர் அவர்களிடம் இது பற்றி பேசியபோது, திருச்செந்தூர் தேரோடும் ரத வீதியான தெற்கு ரத வீதியில் சாலை போடும் பணி தொடங்கி அரைகுறையாக 8 மாதங்களாக நின்று போயிருக்கிறது. நாங்கள் தேரோட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பேரூராட்சி சாலை போட தயாராக இல்லை எனக் கூறினார்.

எட்டு மாதங்களாக ஒரு ரதவீதி சாலை போட முடியாது போனதற்கு காரணம் அரசின் அலட்சியமான நிர்வாகமா? இல்லை தேர்த்திருவிழா தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அதிகாரிகள் யாரேனும் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி பக்தர்களின் மனங்களில் எழுகிறது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு தேரோடும் விதமாக சாலையை செப்பனிட்டு தரவும் துரித கதியில் வேலை நடைபெறவும் உத்தரவிட வேண்டுகிறோம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டாக திருவிழா நின்றிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், திருவிழா நடத்த வேண்டிய தருணத்தில் இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தடைபடுவது வேதனைத் தருகிறது.

இந்த தேர் திருவிழா நின்று போகாமல் நடத்திடவும் தேர் திருவிழா நின்று போனதால் கொதித்துப் போன மக்களின் மனதில் பால் வார்த்திடவும் தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து, திருச்செந்தூர் மாசி தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வேண்டுகிறேன்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories