திருச்செந்தூர் தேரோட்டத்தை தடுக்க சதி? முதல்வர் தலையிட இந்து முன்னணி வேண்டுகோள்!

kadeswara subramanian
kadeswara subramanian

திருச்செந்தூர் தேரோட்டம் தடுத்திட சதி நடப்பதாகவும், தமிழக முதல்வர் தலையிட்டு திருச்செந்தூர் தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது!

இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…

திருச்செந்தூரில் மாசி மக திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்ற, பாரம்பரியமானது ஆகும். இந்த மாசிமகத் திருவிழா தேரோட்டம் பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விழாவாக இருந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகள் பாரம்பரியமாக நடந்து வரக்கூடியது.

இந்தாண்டு, திருச்செந்தூரில் தேரோட்டம் நடைபெறாது என்று அறநிலை துறை அறிவித்து இருக்கிறது. கோவில் இணை ஆணையாளர் அவர்களிடம் இது பற்றி பேசியபோது, திருச்செந்தூர் தேரோடும் ரத வீதியான தெற்கு ரத வீதியில் சாலை போடும் பணி தொடங்கி அரைகுறையாக 8 மாதங்களாக நின்று போயிருக்கிறது. நாங்கள் தேரோட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பேரூராட்சி சாலை போட தயாராக இல்லை எனக் கூறினார்.

எட்டு மாதங்களாக ஒரு ரதவீதி சாலை போட முடியாது போனதற்கு காரணம் அரசின் அலட்சியமான நிர்வாகமா? இல்லை தேர்த்திருவிழா தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அதிகாரிகள் யாரேனும் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி பக்தர்களின் மனங்களில் எழுகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு தேரோடும் விதமாக சாலையை செப்பனிட்டு தரவும் துரித கதியில் வேலை நடைபெறவும் உத்தரவிட வேண்டுகிறோம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டாக திருவிழா நின்றிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், திருவிழா நடத்த வேண்டிய தருணத்தில் இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தடைபடுவது வேதனைத் தருகிறது.

இந்த தேர் திருவிழா நின்று போகாமல் நடத்திடவும் தேர் திருவிழா நின்று போனதால் கொதித்துப் போன மக்களின் மனதில் பால் வார்த்திடவும் தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து, திருச்செந்தூர் மாசி தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வேண்டுகிறேன்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories