திருச்செந்தூர் தேரோட்டத்தை தடுக்க சதி? முதல்வர் தலையிட இந்து முன்னணி வேண்டுகோள்!

kadeswara subramanian
kadeswara subramanian

திருச்செந்தூர் தேரோட்டம் தடுத்திட சதி நடப்பதாகவும், தமிழக முதல்வர் தலையிட்டு திருச்செந்தூர் தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது!

இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில்…

திருச்செந்தூரில் மாசி மக திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்ற, பாரம்பரியமானது ஆகும். இந்த மாசிமகத் திருவிழா தேரோட்டம் பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விழாவாக இருந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகள் பாரம்பரியமாக நடந்து வரக்கூடியது.

இந்தாண்டு, திருச்செந்தூரில் தேரோட்டம் நடைபெறாது என்று அறநிலை துறை அறிவித்து இருக்கிறது. கோவில் இணை ஆணையாளர் அவர்களிடம் இது பற்றி பேசியபோது, திருச்செந்தூர் தேரோடும் ரத வீதியான தெற்கு ரத வீதியில் சாலை போடும் பணி தொடங்கி அரைகுறையாக 8 மாதங்களாக நின்று போயிருக்கிறது. நாங்கள் தேரோட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் பேரூராட்சி சாலை போட தயாராக இல்லை எனக் கூறினார்.

எட்டு மாதங்களாக ஒரு ரதவீதி சாலை போட முடியாது போனதற்கு காரணம் அரசின் அலட்சியமான நிர்வாகமா? இல்லை தேர்த்திருவிழா தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அதிகாரிகள் யாரேனும் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி பக்தர்களின் மனங்களில் எழுகிறது.

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு தேரோடும் விதமாக சாலையை செப்பனிட்டு தரவும் துரித கதியில் வேலை நடைபெறவும் உத்தரவிட வேண்டுகிறோம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டாக திருவிழா நின்றிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும், திருவிழா நடத்த வேண்டிய தருணத்தில் இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தடைபடுவது வேதனைத் தருகிறது.

இந்த தேர் திருவிழா நின்று போகாமல் நடத்திடவும் தேர் திருவிழா நின்று போனதால் கொதித்துப் போன மக்களின் மனதில் பால் வார்த்திடவும் தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து, திருச்செந்தூர் மாசி தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வேண்டுகிறேன்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories